Wednesday, March 25, 2009

தமிழ் வழி - பகுதி 3

~

பகுதி -1

பகுதி -2


அவன் விரக்தி உணர்வை அவன் உடல் மாற்றத்திலும் ,கண் சிகப்பிலும் புரிந்த இளமதி "ஹே பாரதி வா போலாம்.." என்று அவனை அந்த இடத்தை விட்டு அழைத்து சென்றாள் !

"இல்ல பாரதி இவங்கள் எப்படி சுயலாம இருக்காங்க பாரு ! நம்ம மட்டும் ...அவன் ஆரம்மிக்க !

"அதை விடு ! அங்க பாரு அந்த சின்ன குழந்தைங்க எவ்வளவு ஜாலியா அலையில் விளையாடுறாங்க பாரு " அவனை திசைதிருப்பினாள் !

"பேசாமா குழந்தையாகவே இருந்திருக்கலாம்" என்று பாரதி மறுபடியும் ஆரம்பிக்க... "டேய் புலம்பாதடா ! என்று செல்லமாக அதட்டினாள் ..

"எங்க மாமா ஒரு software கம்பெனியில தான் வேலை பார்க்கிறார் அவர்கிட்ட சொல்லி எதாவது பண்ண முடியுமானு பார்க்கலாம் .. ஆனா அது சின்ன கம்பெனிதான் உன் லெவலுக்கு இல்லைனு வருத்தபடகூடாது "

"ஆமா என் லெவலுனு ! அடப்போ இளா...நானே ஒரு பிச்சை காரன்..என்ன.. B.E படிச்ச பிச்சைகாரன் ! "

"சரி டைம் ஆச்சு நான் கிளம்புறேன் ! நான் உனக்கு கால் பண்ணி சொல்றேன் ..உன் friendக்கு கால் பண்ணினா உங்கிட்ட கொடுப்பான்ல ! ? "

"கொடுப்பான்..கொடுப்பான். சரி பார்த்து போ ! பார்க்கலாம் ! "

சொன்னமாதிரி அடுத்த நாள் போன் பண்ணி அலுவலக முகவரியும் ,அவுங்க மாமா சரவணண் நம்பரையும் கொடுத்தாள் .
அவனும் அவருக்கு போன் பண்ணிட்டு , interview -க்கு prepare பண்ணிட்டு அவரோட அலுவலகத்துக்கு சென்றான்..

"வாங்க பாரதி ..இளா சொன்னா ! நான் HR கிட்ட சொல்லிட்டேன் ! நீங்க written test அட்டன் பண்ணுங்க ! பார்ப்போம் .. அப்புறம் எங்க M.D க்கு relationa இருந்தா கூட இங்க interview clear பண்ணினா தான் வேலை ! so நல்லா பண்ணுங்க ! All the best ! " என்றார் சரவணன்.

பாரதியும் வழக்கம் போல written test clear பண்ணினான்..உற்சாகமோ என்னமோ 97% ல clear பண்ணினான். அடுத்து techinical interview என்று அறிவித்தார் H.R . அவனும் இந்த வாட்டியாவது ஒழுங்கா english பேசனும் என்று மனதிற்குள் வேண்டி கொண்டு interview அறைக்குள் நுழைந்தான் .

இரண்டு பேர் இருந்தனர் ! அவர்கள் தங்களை அறிமுகபடுத்தி கொண்டு ...அமரவைத்து " Tell about yourself " எனறவுடன .பாரதிக்கு லைட்ட உடம்பு நடுங்க ஆரம்பித்தது..இருந்தாலும் கட்டுப்படுத்திகிட்டு ஏற்கனவே மனப்பாடம் பண்ணிவைத்த அந்த பகுதியை அரை குரையா சொல்லி முடித்தான் !

அவன் கொஞ்சம் தடுமாறுவதை கவனித்த interviewer " என்ன பாரதி ஏன் பயப்படிறீங்க ! தைரியமா பேசுங்க ! புல்லா English ல பதில் சொல்ல கஸ்டமா இருந்தா கொஞ்சம் தமிழ் கலந்து பேசுங்க பரவாயில்லை ! " என்றார்..

பாரதி இதை எதிர்பார்க்கவில்லை ! அது அவனுக்கு உற்சாக மூட்டியது..அடுத்த அடுத்த கேள்விகளுக்கு திருப்திகரமான பதிலை தமிழ் கலந்த ஆங்கிலத்தில் அளித்தான் !

" ok barathi ! வெளியில wait பண்ணுங்க ! H.R will get back to you ! " என்றார் interviewer.

பாரதி " என்னடா get back to you -ஆவா இதுவும் ஊத்திக்கிச்சா ! ..ஊத்தன பரவாயில்லை நான் நல்லாதான் பண்ணினேன் ..என்று தன்னை சமாதான படுத்தி கொண்டான் "

சற்று நேரத்தில் H.R வந்து ..." Congrats barathi techincal round clear பண்ணீட்டிங்க ! அடுத்து final personel interview ..usualla சரவணண் தான் பண்ணுவார்..நீங்க அவரோட reference-னால உங்களை எங்க M.D யே interview பண்ணறதாய் சொல்லிருக்கார் " so ஒரு 10 minutes wait பண்ணுங்க ! அவர் ஒரு meetingla இருக்கார் ! வந்ததும் கூப்பிடுறேன் ! " என்றாள்.

என்னடா இது M.D யா.. அவர் IIT ல படித்ததாகவேற சரவணன் சொன்னாரே ! என்ன போட்டு englsihல சாவடிக்க போறாரு . என்று மனதிற்குள் நினைத்து கொண்டான் .. அழைப்பு வந்தவுடன் தயங்கி தயங்கி M.D room க்கு சென்றான் !

M.D நா ஒரு 50 வயது இருக்கும் என்று உள்ளே நுழைந்த பாரதிக்கு ஒரு 29 வயது மதிக்க தக்க இளைஞரை கண்டவுடன் ஒரு வியப்பு ஏற்பட்டது ! அவர் அவனை உள்ளே அமரவைத்து " Tell about yourself " என்றவுடன்.... ஆகா இவரு வேற அதே கேட்கிறாரே! மன்ப்பாடம் பண்ணினது வேற மறந்து போச்சே " என்ற நினைத்து எதோ சொல்ல வாய் திறக்கும் போது " execuse me .." என்று தனக்கு வந்த போன் அட்டண்ட் பண்ணினார் M.D.." அப்பாடே ..தப்பிச்சோம்..போன் போட்ட புண்ணியாவான் வாழ்க ! என்று சொல்லி விட்டு தான் மறந்த " Tell about yourself " நினைவுபடித்தி கொண்டான் .

M.D போன் வைச்சவுடன் கட கட வென சொல்ல ஆரம்மித்தான் ..... M.D பாதிலேயே நிறுத்தினார்..ஆகா முடிந்திருச்சுருடா அவ்வளவு தான் என்று நினைத்தான்.

" நீ தமிழ் மீடியத்தில படிச்சியானு " கேட்டார்.

அவர் வாயிலிருந்து தமிழ் வந்ததும்...முக்கியமா அவனோட ஆங்கில பலகீனத்தை பற்றி அவர் கேட்டதும் பாரதிக்கு கிட்ட தட்ட கண்ணிலிருந்து தண்ணி வந்து விட்டது .

இதை கவனித்த M.D " O.K ஓகே.. சரவணன் உன்னை பத்தி சொன்னாரு..உன்னோட இண்டெர்வியு ரிசல்ட் எல்லாம் நல்லா இருக்கு ! உன்னொட school records எல்லாம் சூப்பர் ! காலேஜ்ல் மட்டும் ஏன் கம்மி அதுக்கும் தமிழ் மீடியம் தான் காரணமா ? இல்லை காதல் கீதல் பண்ணினியா ! " என்று M.D casula பேச..பாரதிக்கு தலை கால் புரியல !

"அப்படி யெல்லாம் இல்லை சார் ! " என்று வாய் திறக்க

M.D " சிரித்து கொண்டே ... சரி தமிழ்ல் எப்படி நல்லா பேசுவியா..இல்லை .." என்று இழுத்த போது !

" இல்லை சார் தமிழ் நல்ல பேசுவேன் சார்..பேச்சுபோட்டில prize எல்லாம் வாங்கியிருக்கேன் சார்."

"சரி ! நல்ல தைரியமா பேசனும் ! இப்ப ஆரம்ப நிலைக்கு இந்த ஆங்கிலம் பரவாயில்லை ஆனா வளரும்னா..கண்டிப்பா communication skill வளர்த்துக்கனும். ஆமா resumela obejctive பயங்கரமான ஆங்கிலத்திலே இருக்கே ! எங்க google இருந்து எடுத்தியானு " அவனை கலாய்க்க !

"ஆமாம் சார் " என்று வழிந்தான் பாரதி !

" சரி ! உன்னொட பொழுது போக்கு என்ன ?

" புக்ஸ் படிப்பேன் சார் ! "

"என்ன மாதிரி புக்ஸ் "

" தமிழ் கவிதைகள் ..கட்டுரைகள் "

"ம்...ஆங்கில புக்ஸ்ம் படித்தால் ஆங்கில அறிவு வளரும்லா ! சரி ! உனக்கு பிடித்த கவிதை சொல்லு ! அதை வச்சு தான் உனக்கு வேலை !" என்று மறுபடியும் கலாய்க்க !

" தண்ணீரை கூட சல்லடையால் அள்ளி விடலாம் அது பனிக்கட்டி ஆகும் வரை காத்திருந்தால் " என்று பட்டென்று சொன்னான் ..

"வைரமுத்து கவிதை தானே ..நானும் படித்திருக்கேன் .. சரி Jokes Apart ! we are ready to offer you job of junior programmer ! எங்க கம்பெனி is samll but வளரும் கம்பெனி so.. iniital renumeration (சம்பளம்) " கம்மியாதான் இருக்கும்.. depends on your performance it will be increased every 6 months...OK ? "

" Thank you sir Thank you veru much sir ! ....."

" ok ..Thanks should be in your heart also....you should stay in our company atleast for 2 years ok ? " என்றார் புன்முறுவலடன் !

" Sure Sir ! "

" OK...I will ask HR to send more details. சந்தோசமா வீட்டுக்கு போ ! enjoy your self ..call home and let your parents know that you got a job " என்றார் M.D.

பாரதிக்கு பேச்சு வரவில்லை ...Thank you Thank you .என்று சொல்லி அவரின் அறையை விட்டு வெளியில் வந்தான் !

சரவணனை பார்த்து ..நன்றி சொல்ல ! அவர் பெருமிதத்துடன் .
" நான் ஒன்னும் பண்ணல ! I just forwared your resume ! you got that becuase you have done well in interview and you deserve it " என்றார் .

பாரதிக்கு சந்தோசம் தாங்க முடியல ! ஒடி போய் இளமதிக்கு போன் பண்ணினான்....

"இளா .." என்ற சொன்னவன் அதுக்கு மேல பேசமுடியல ! கண்ணீர் தார தாரயா கொட்டியது.

"பாரதி என்னாச்சு ஏன் அழுகிற..என்னாச்சுடா..அட சொல்லிட்டி அழுடா! ..hey ! "

" I got it I gooooot it ...I got the job..." என்றான்....

" ஆஹா சூப்பர்.டா...சூப்பர்..நாந்தான் சொன்னலே ! ..சூப்பர்டா! ஆனா என்ன software engineeru ஆனா வுடனே ..got it.. got it nu ஆங்கிலத்தால் தான் பேசுறாரு துரை ! ..என்று நக்கலடிக்க !

"சீ போடி ...".

"சரி..வீட்டிற்கு போன் பண்ணி சொல்லு ...அப்பா அம்மா எல்லாம் சந்தோசம படுவாங்க ! ..."

"ம்ம்ம்..இப்ப வேணாம்..முதல் மாதம் சம்பளம் வந்தவுடன் நேரா போய் சொல்லிக்கிறேன் ..என்னாலேயே எனக்கு வேலைகிடைத்ததை நம்பமுடியலை !

"சீ அசடு...சரி Ok...எனக்கு class இருக்கு நான் வைத்திடுறேன் ! " என்று இணைப்பை துண்டித்தாள்....

அன்று முழுவதும் தூக்கம் வரவில்லை பாரதிக்கு மனது முழுவதும் சந்தோசம் !

ஒரு வாரம் கடந்தது ! அலுவலகத்தில் 41வது employee ஆக சேர்ந்தான்.

"EMP # 41. Barathi Dhanabalan "


- தொடரும்


~

No comments:

Post a Comment