Wednesday, March 25, 2009

தமிழ் வழி - பகுதி 3

~

பகுதி -1

பகுதி -2


அவன் விரக்தி உணர்வை அவன் உடல் மாற்றத்திலும் ,கண் சிகப்பிலும் புரிந்த இளமதி "ஹே பாரதி வா போலாம்.." என்று அவனை அந்த இடத்தை விட்டு அழைத்து சென்றாள் !

"இல்ல பாரதி இவங்கள் எப்படி சுயலாம இருக்காங்க பாரு ! நம்ம மட்டும் ...அவன் ஆரம்மிக்க !

"அதை விடு ! அங்க பாரு அந்த சின்ன குழந்தைங்க எவ்வளவு ஜாலியா அலையில் விளையாடுறாங்க பாரு " அவனை திசைதிருப்பினாள் !

"பேசாமா குழந்தையாகவே இருந்திருக்கலாம்" என்று பாரதி மறுபடியும் ஆரம்பிக்க... "டேய் புலம்பாதடா ! என்று செல்லமாக அதட்டினாள் ..

"எங்க மாமா ஒரு software கம்பெனியில தான் வேலை பார்க்கிறார் அவர்கிட்ட சொல்லி எதாவது பண்ண முடியுமானு பார்க்கலாம் .. ஆனா அது சின்ன கம்பெனிதான் உன் லெவலுக்கு இல்லைனு வருத்தபடகூடாது "

"ஆமா என் லெவலுனு ! அடப்போ இளா...நானே ஒரு பிச்சை காரன்..என்ன.. B.E படிச்ச பிச்சைகாரன் ! "

"சரி டைம் ஆச்சு நான் கிளம்புறேன் ! நான் உனக்கு கால் பண்ணி சொல்றேன் ..உன் friendக்கு கால் பண்ணினா உங்கிட்ட கொடுப்பான்ல ! ? "

"கொடுப்பான்..கொடுப்பான். சரி பார்த்து போ ! பார்க்கலாம் ! "

சொன்னமாதிரி அடுத்த நாள் போன் பண்ணி அலுவலக முகவரியும் ,அவுங்க மாமா சரவணண் நம்பரையும் கொடுத்தாள் .
அவனும் அவருக்கு போன் பண்ணிட்டு , interview -க்கு prepare பண்ணிட்டு அவரோட அலுவலகத்துக்கு சென்றான்..

"வாங்க பாரதி ..இளா சொன்னா ! நான் HR கிட்ட சொல்லிட்டேன் ! நீங்க written test அட்டன் பண்ணுங்க ! பார்ப்போம் .. அப்புறம் எங்க M.D க்கு relationa இருந்தா கூட இங்க interview clear பண்ணினா தான் வேலை ! so நல்லா பண்ணுங்க ! All the best ! " என்றார் சரவணன்.

பாரதியும் வழக்கம் போல written test clear பண்ணினான்..உற்சாகமோ என்னமோ 97% ல clear பண்ணினான். அடுத்து techinical interview என்று அறிவித்தார் H.R . அவனும் இந்த வாட்டியாவது ஒழுங்கா english பேசனும் என்று மனதிற்குள் வேண்டி கொண்டு interview அறைக்குள் நுழைந்தான் .

இரண்டு பேர் இருந்தனர் ! அவர்கள் தங்களை அறிமுகபடுத்தி கொண்டு ...அமரவைத்து " Tell about yourself " எனறவுடன .பாரதிக்கு லைட்ட உடம்பு நடுங்க ஆரம்பித்தது..இருந்தாலும் கட்டுப்படுத்திகிட்டு ஏற்கனவே மனப்பாடம் பண்ணிவைத்த அந்த பகுதியை அரை குரையா சொல்லி முடித்தான் !

அவன் கொஞ்சம் தடுமாறுவதை கவனித்த interviewer " என்ன பாரதி ஏன் பயப்படிறீங்க ! தைரியமா பேசுங்க ! புல்லா English ல பதில் சொல்ல கஸ்டமா இருந்தா கொஞ்சம் தமிழ் கலந்து பேசுங்க பரவாயில்லை ! " என்றார்..

பாரதி இதை எதிர்பார்க்கவில்லை ! அது அவனுக்கு உற்சாக மூட்டியது..அடுத்த அடுத்த கேள்விகளுக்கு திருப்திகரமான பதிலை தமிழ் கலந்த ஆங்கிலத்தில் அளித்தான் !

" ok barathi ! வெளியில wait பண்ணுங்க ! H.R will get back to you ! " என்றார் interviewer.

பாரதி " என்னடா get back to you -ஆவா இதுவும் ஊத்திக்கிச்சா ! ..ஊத்தன பரவாயில்லை நான் நல்லாதான் பண்ணினேன் ..என்று தன்னை சமாதான படுத்தி கொண்டான் "

சற்று நேரத்தில் H.R வந்து ..." Congrats barathi techincal round clear பண்ணீட்டிங்க ! அடுத்து final personel interview ..usualla சரவணண் தான் பண்ணுவார்..நீங்க அவரோட reference-னால உங்களை எங்க M.D யே interview பண்ணறதாய் சொல்லிருக்கார் " so ஒரு 10 minutes wait பண்ணுங்க ! அவர் ஒரு meetingla இருக்கார் ! வந்ததும் கூப்பிடுறேன் ! " என்றாள்.

என்னடா இது M.D யா.. அவர் IIT ல படித்ததாகவேற சரவணன் சொன்னாரே ! என்ன போட்டு englsihல சாவடிக்க போறாரு . என்று மனதிற்குள் நினைத்து கொண்டான் .. அழைப்பு வந்தவுடன் தயங்கி தயங்கி M.D room க்கு சென்றான் !

M.D நா ஒரு 50 வயது இருக்கும் என்று உள்ளே நுழைந்த பாரதிக்கு ஒரு 29 வயது மதிக்க தக்க இளைஞரை கண்டவுடன் ஒரு வியப்பு ஏற்பட்டது ! அவர் அவனை உள்ளே அமரவைத்து " Tell about yourself " என்றவுடன்.... ஆகா இவரு வேற அதே கேட்கிறாரே! மன்ப்பாடம் பண்ணினது வேற மறந்து போச்சே " என்ற நினைத்து எதோ சொல்ல வாய் திறக்கும் போது " execuse me .." என்று தனக்கு வந்த போன் அட்டண்ட் பண்ணினார் M.D.." அப்பாடே ..தப்பிச்சோம்..போன் போட்ட புண்ணியாவான் வாழ்க ! என்று சொல்லி விட்டு தான் மறந்த " Tell about yourself " நினைவுபடித்தி கொண்டான் .

M.D போன் வைச்சவுடன் கட கட வென சொல்ல ஆரம்மித்தான் ..... M.D பாதிலேயே நிறுத்தினார்..ஆகா முடிந்திருச்சுருடா அவ்வளவு தான் என்று நினைத்தான்.

" நீ தமிழ் மீடியத்தில படிச்சியானு " கேட்டார்.

அவர் வாயிலிருந்து தமிழ் வந்ததும்...முக்கியமா அவனோட ஆங்கில பலகீனத்தை பற்றி அவர் கேட்டதும் பாரதிக்கு கிட்ட தட்ட கண்ணிலிருந்து தண்ணி வந்து விட்டது .

இதை கவனித்த M.D " O.K ஓகே.. சரவணன் உன்னை பத்தி சொன்னாரு..உன்னோட இண்டெர்வியு ரிசல்ட் எல்லாம் நல்லா இருக்கு ! உன்னொட school records எல்லாம் சூப்பர் ! காலேஜ்ல் மட்டும் ஏன் கம்மி அதுக்கும் தமிழ் மீடியம் தான் காரணமா ? இல்லை காதல் கீதல் பண்ணினியா ! " என்று M.D casula பேச..பாரதிக்கு தலை கால் புரியல !

"அப்படி யெல்லாம் இல்லை சார் ! " என்று வாய் திறக்க

M.D " சிரித்து கொண்டே ... சரி தமிழ்ல் எப்படி நல்லா பேசுவியா..இல்லை .." என்று இழுத்த போது !

" இல்லை சார் தமிழ் நல்ல பேசுவேன் சார்..பேச்சுபோட்டில prize எல்லாம் வாங்கியிருக்கேன் சார்."

"சரி ! நல்ல தைரியமா பேசனும் ! இப்ப ஆரம்ப நிலைக்கு இந்த ஆங்கிலம் பரவாயில்லை ஆனா வளரும்னா..கண்டிப்பா communication skill வளர்த்துக்கனும். ஆமா resumela obejctive பயங்கரமான ஆங்கிலத்திலே இருக்கே ! எங்க google இருந்து எடுத்தியானு " அவனை கலாய்க்க !

"ஆமாம் சார் " என்று வழிந்தான் பாரதி !

" சரி ! உன்னொட பொழுது போக்கு என்ன ?

" புக்ஸ் படிப்பேன் சார் ! "

"என்ன மாதிரி புக்ஸ் "

" தமிழ் கவிதைகள் ..கட்டுரைகள் "

"ம்...ஆங்கில புக்ஸ்ம் படித்தால் ஆங்கில அறிவு வளரும்லா ! சரி ! உனக்கு பிடித்த கவிதை சொல்லு ! அதை வச்சு தான் உனக்கு வேலை !" என்று மறுபடியும் கலாய்க்க !

" தண்ணீரை கூட சல்லடையால் அள்ளி விடலாம் அது பனிக்கட்டி ஆகும் வரை காத்திருந்தால் " என்று பட்டென்று சொன்னான் ..

"வைரமுத்து கவிதை தானே ..நானும் படித்திருக்கேன் .. சரி Jokes Apart ! we are ready to offer you job of junior programmer ! எங்க கம்பெனி is samll but வளரும் கம்பெனி so.. iniital renumeration (சம்பளம்) " கம்மியாதான் இருக்கும்.. depends on your performance it will be increased every 6 months...OK ? "

" Thank you sir Thank you veru much sir ! ....."

" ok ..Thanks should be in your heart also....you should stay in our company atleast for 2 years ok ? " என்றார் புன்முறுவலடன் !

" Sure Sir ! "

" OK...I will ask HR to send more details. சந்தோசமா வீட்டுக்கு போ ! enjoy your self ..call home and let your parents know that you got a job " என்றார் M.D.

பாரதிக்கு பேச்சு வரவில்லை ...Thank you Thank you .என்று சொல்லி அவரின் அறையை விட்டு வெளியில் வந்தான் !

சரவணனை பார்த்து ..நன்றி சொல்ல ! அவர் பெருமிதத்துடன் .
" நான் ஒன்னும் பண்ணல ! I just forwared your resume ! you got that becuase you have done well in interview and you deserve it " என்றார் .

பாரதிக்கு சந்தோசம் தாங்க முடியல ! ஒடி போய் இளமதிக்கு போன் பண்ணினான்....

"இளா .." என்ற சொன்னவன் அதுக்கு மேல பேசமுடியல ! கண்ணீர் தார தாரயா கொட்டியது.

"பாரதி என்னாச்சு ஏன் அழுகிற..என்னாச்சுடா..அட சொல்லிட்டி அழுடா! ..hey ! "

" I got it I gooooot it ...I got the job..." என்றான்....

" ஆஹா சூப்பர்.டா...சூப்பர்..நாந்தான் சொன்னலே ! ..சூப்பர்டா! ஆனா என்ன software engineeru ஆனா வுடனே ..got it.. got it nu ஆங்கிலத்தால் தான் பேசுறாரு துரை ! ..என்று நக்கலடிக்க !

"சீ போடி ...".

"சரி..வீட்டிற்கு போன் பண்ணி சொல்லு ...அப்பா அம்மா எல்லாம் சந்தோசம படுவாங்க ! ..."

"ம்ம்ம்..இப்ப வேணாம்..முதல் மாதம் சம்பளம் வந்தவுடன் நேரா போய் சொல்லிக்கிறேன் ..என்னாலேயே எனக்கு வேலைகிடைத்ததை நம்பமுடியலை !

"சீ அசடு...சரி Ok...எனக்கு class இருக்கு நான் வைத்திடுறேன் ! " என்று இணைப்பை துண்டித்தாள்....

அன்று முழுவதும் தூக்கம் வரவில்லை பாரதிக்கு மனது முழுவதும் சந்தோசம் !

ஒரு வாரம் கடந்தது ! அலுவலகத்தில் 41வது employee ஆக சேர்ந்தான்.

"EMP # 41. Barathi Dhanabalan "


- தொடரும்


~

Tuesday, March 24, 2009

பாட்டி வடை சுட்ட கதை !

~

பாட்டி வடை சுட்ட கதை ! - நன்றி விவேக் !

புழுதி படிந்த ஒரு கிராமத்தில் ....

ஒரு ஜவ்வன கிழவி
வடை சுட்டு விற்று வந்தாள் !
காசு பெற்று வந்தாள் ...

அந்த கந்தக வடையை கவர்ந்து செல்ல
அங்கே வந்தது ஒரு கார்மேக காகம்
பாட்டிக்கு மட்டும் கார்மேக காகத்தின் கள்ள எண்ணம் தெரிந்திருந்தால்
அவளின் கல்லறை பூக்கள் கூட அவளுக்காக கண்ணீர் சிந்தியிருக்காது !

பாட்டி பாராத சமயம் ....பாட்டி பாராத சமயம்
அந்த கார்மேக காகம் சந்தன மின்னல் போல பாய்ந்து
அந்த கந்தக வடையை கவர்ந்து சென்றது..

விதைக்குள் வந்த விருட்சம்
அங்கே வளர்ந்து நின்றது பல வருசம் ..
அதன் சுந்தர கிளைகளில் சென்று அமர்ந்தது
அந்த சொர்ப்பன காகம் !

பூவுக்குள் பூகம்பம் போல் ..புறப்பட்டு வந்தது ஒரு நரி
அந்த நரி நர்த்தக நரி ! நாலடியார் நரி !
நீதி அறிந்து போதி சொல்லும் போதிமரத்து சாதி !

கார்மேகக் காகம் வைந்திருந்த வடையை
அந்த நரி பார்த்தது ! உடல் வேர்த்தது !
அந்த ராஜ வடையை அபகரிக்க
அதன் நந்தனவன மூளை ஒரு நாச வேலை செய்தது !
நரி அதுவாக சென்றது
காகம் இருந்த மரத்தருகே மெதுவாக சென்றது !

ஆனால் அந்த கார்மேக காகமோ
இச்சக அழகியாய் எச்சம் கூட போட மறந்து
அந்த வீரிய வடையை தனது நேரிய விரல்களுக்கடியே வைத்து
அதன் கூர்மையை சோதித்து கொண்டிருந்தது !

நரி பகர்ந்தது ! ஏய் உலக அழகியே ! உள்ளூர் மோனாலிசாவே !
நகராட்சி பூங்காவில் நுழைந்த நமீதாவே !
என் அந்தபுறத்தில் அத்து மீறி நுழைந்த அசினே !
தீவுத்திடலுக்குள் திடும்மென நுழைந்த திரிசாவே !
நீ பார்க்கவே எவ்வளவு அழகு !
நீ மட்டும் உன் கந்தவர் குரலினால் ஒரு கானம் இசைத்தால்
எருதுக்கும் விருது கிடைக்கும் சர்ப்பம் கூட கர்ப்பம் தருக்கும் !
ஏன் நீருக்கும் வேர்க்கும் என்றது !

காகம் பாடும் வடை கீழே விழும் என்று நரி எதிர்பார்த்தது !

இந்த இடத்தில் தான் சரித்திரம் சரிகிறது !
பூகோளம் புரள்கிறது ! தமிழ் தடுமாறுகிறது
நரியின் தேவ எண்ணத்திலே ஈட்டி பாய்ந்தது !

ஏனென்றால் காகம் என்ன பதில் அளித்தது தெரியுமா !
ஏய் நர்த்தக நரியே ! நான் பாட மாட்டேன்
ஏனென்றால் நான் வைரமுத்துவின் வாசலில் வளர்ந்த காகம் !
ஆகவே மெட்டில்லாமல் பாட மாட்டேன்
என்று சொல்லி வடையுடன் பறந்தது

நரி ஏமாந்தது !

~

Tuesday, March 3, 2009

கிராமத்து பூங்குயிலோ !

~

கிராமத்து பூங்குயிலோ ! நகர்புறத்து ரெட்டை சடையோ !
மாநகர நவநாகரீக பெண்ணோ !
தாவணியோ ! சுடிதாரோ ! மாடர்ன் டிரஸ்ஸோ !

பத்தாம் வகுப்பு தாண்டியிருப்பாளோ ! இல்லை பெயருக்கு ஒரு பட்டம் வாங்கி இருப்பாளோ !
பழ்கலைகழக முதல் மாணவியோ ! இல்லை என்னை போல் பத்தோடு பதினொன்னோ !

பாரதி கண்ட புதுமைப் பெண்ணோ ! இல்லை அதிர்ந்த பேசவே அஞ்சுபவளோ !
அமெரிக்கா போய்வந்தவளோ ! இல்லை அடுத்த தெருவை தாண்டாதவளோ !

களை எடுப்பவளோ! நாத்து நடுபவளோ !
பாடம் சொல்லும் ஆசிரியையோ ! கடமை தவறா அரசு அலுவலரோ !
கண்ணியம் காக்கும் காவல்துறை அதிகாரியோ ! வழக்குகளில் ஜொலிக்கும் வழக்கறிஞறோ !
மருந்து எழுதும் மருத்துவரோ ! மருந்து கொடுக்கும் செவிலியோ !
மென்பொருளாலியோ ! பத்திரிக்கைகாரியோ ! தனியார் துறை ஊழியரோ !
இல்லை வேலைக்கு அனுப்பாத வீட்டின் செல்லப் பொண்ணோ !

வெட்டிகதை பேசும் வீட்டு சோம்பேறியோ ! இல்லை குடும்பம் காக்கும் குலமகளோ !
உலக அறிவு அறிந்தவளோ ! இல்லை உள்ளூர் கதை மட்டும் தெரிந்தவளோ !

சமையல் அறிவாளோ ! இல்லை சமையல் புத்தகம் வாங்கிவருவாளோ !
வீட்டு வேலை பாதியாவது செய்வாளோ ! இல்லை ரெண்டு வேலைக்காரி கேட்பாளோ !
சிக்கன் சாப்பிடுவாளோ இல்லை சுத்த சைவம் என்பாளோ !

நல்ல தமிழ் கதைப்பாளோ ! இல்லை தமிங்கிலிஸ் பேசுவாளோ !
சீரியலுக்கு அடிமையோ ! இல்லை Fashin Tv பார்பவளோ !
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு பார்பாளோ ! இல்லை மானாட மயிலாட மட்டும் தானோ !
NDTV , சன் நியுஸ் கேட்பாளோ ,இல்லை செய்திவாசிக்கிறவ நெக்லஸ் நல்லாயிருக்கு என்பாளோ !

விளையாட்டு வீராங்கணையோ ! இல்லை பல்லாங்குழி நல்லா விளையாடுவேன் என்பாளோ ! !
கிரிக்கெட்டு பார்பாளோ ! இல்லை அதெல்லாம் எனக்கு பிடிக்காது என்பாளோ !

தமிழ் சினிமா ரசிப்பாளோ ! "மிரட்டல் அடி" ரசிகையோ !
இல்லை டாம் குர்ஸ், ஹிருத்திக் ரோசன் தான் என் hero என்பாளோ !
பாலா, ராதாமோகன் பிடிக்குமோ ! இல்லை ஸ்டிபன் spel burg என்பாளோ !
இளையராஜா ,ரஹ்மான் இசைப்பிரியரோ ! இல்லை britney spears தான் என் favortie என்பாளோ !

முகத்துக்கு பயித்த மாவு, உடம்புக்கு மஞ்சள் என்பாளோ !
இல்லை பியூட்டி பார்லர் போவாளோ !
தங்க நகை அடிக்கடி வேண்டும் என்பாளோ ! இல்லை என் புன்னகை மட்டும் போதும் என்பாளோ !

கம்யூட்டர் அறிந்தவளோ ! இல்லை இதில் சன் tv வரும்மானு கேட்பவளோ !
பிரபல பதிவரோ ! பின்னோட்டம் போடுபவளோ ! இல்லை பதிவென்றால் என்ன என்பாளோ !
புத்தகப் புழுவோ ! இல்லை புத்தகம் வாங்கி ஏன் செலவு செய்கிறீங்க என்பாளோ !
குமுதம்,விகடனோ ! இல்லை femina , outlook படிப்பவளோ !

சிகரட்டு பிடிப்பாளோ ! சீட்டி அடிப்பாளோ !
நானும் குடிகாரன்னு சீன் போட நண்பன் பார்ட்டிக்கு coke குடிக்க நான் செல்ல
எனக்கு ஒரு ஃபுல் வேணும்பாளோ !

மாமியார் மருமகள் சண்டையிலே என்னை அம்பயர் ஆக்கி
அம்மாவுக்கு அவுட் குடுக்க சொல்லுவாளோ !

நான் அவளுக்கு பிடித்த மாதிரி மாறுவேனா ? !
இல்லை அவள் எனக்கு பிடித்த மாதிரி மாறுவாளா ?
இல்லை இருவருக்கு பிடித்ததும் ஒன்றாக இருக்குமோ ? !

அகம், புறம் இதில் ஒன்று அழகாயிருந்தால் அழகி ..
ரெண்டுமே அழகாய் இருந்தால் பேரழகி !
அவள் அழகியோ இல்லை பேரழகியோ ?

என்று நான் கனவுகளில் நனைந்து கொண்டிருக்கும் போது ....கணீரெண்று என்கிருந்தோ ஒலித்தது ஒரு குரல் !

" அதிக கற்பனை வேண்டாம் மகனே ! கொஞ்சம் அடக்கி வாசி ! :) "


~