Saturday, November 19, 2011

கதம்பம் (லோக்பால் ,ஏழாம் அறிவு,கூடங்குளம்)- Nov 19

 ~

லோக்பால்  - சட்டம் ஊழலை ஒழிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை..இருந்தாலும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
லோகபாலால் ஊழல் ஒழிக்கப்படும் என்று நம்புகிறவர்களுக்கு இதோ பட்டுக்கோட்டையின் பாட்டு. "சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்து கொண்டே இருக்கிறது, ஆனால் திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடி கொண்டே இருக்கிது" .லோக்பால் லஞ்சத்தை பண்ணி என்ன சொல்லுது தெரியல.. லஞ்சம் என்பது வேற ஊழல் என்பது வேற .ஊழலையாவது  ஒழிக்க லோக்பால்  - சட்டம் உதவும் என்று நம்பபடுகிறது. ஆனால் லஞ்சத்தை எந்த சட்டத்தாலும் தடுக்க முடியாது. அதுக்கு e-governance வந்தால் மட்டுமே முடியும்.

வேலாயுதம், ஏழாம் அறிவு - ஏழாம் அறிவு எனக்கு ரொம்ப பிடிந்திருந்தது. இன்னும் என்ன தோழா ஏழாம் அறிவின் ஒரு பாடல் போதும் படம்பிடிக்க காரணம். வேலாயுதம் ஒரு மொக்கை. சந்தானம் காமெடி தவிர. ஏழாம் அறிவு உதயநிதி தயாரிப்பால், அதுக்கு எதிரா எவ்வளவு பரப்புரைகள் தூற்றல்கள் கேள்விகள். வேலாயுதம் என்ற அருத பழசான மசாலா சீன்களின் தொகுப்பை தமிழ் நாட்டில் வெற்றிபடமாக்கிவிட எவ்வளவு முனைப்புகள்.  அரசியலிலும் சரி, சினிமாவில் சரி.  மொத்தத்தில் தழிழர்கள் மசாலா பட ரசிகனாகவே வைத்திருக்க வேண்டும்,சிந்தித்துவிட கூடாது என்றஒரு  கூட்டம் இயங்கி கொண்டே இருக்குது.காலம் மாறும் காட்சிகள் கண்டிப்பாக மாறும்.

கூடங்குளம் அணுமின் நிலை விவகாரத்தில் மக்கள் போராட்ட குழுவாலும், அரசாங்கத்தாலும் ஏமாற்றபடுகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். இதற்கு கண்டிப்பாக எதோ ஒரு சக்தி பின்னால் இயக்குகிறது. பூகம்பம் வந்தா என்னாகும் , பூமீ  இரண்டா பிளந்தா என்னாகும் என்ரறெல்லாம் கேட்கிறார்கள். ஜெர்மனியில் மூடிட்டாங்க அப்படினு மேற்கோள் காட்றாங்க.ஜெர்மனியா நம்ம? சோத்துக்கே வழியில்லாம நாம கிடக்கோம்.. உலகில் 165 அணு உலைகள் இயங்குதே அப்ப அவன் எல்லாம் என்ன கேனப்பயலா.அவ்வளவு ஏன் கல்பாக்கம் அணுமின் நிலையும் இருக்கே, அங்க பூகம்பம் வந்தா மட்டும் நமக்கு பாதிப்பு இருக்காதே. ஊகங்களை கேள்வியாக்கி புரட்டி பண்றோம் போராட்டம் பண்றோம்னு ஒரு நல்ல திட்டத்தை முடக்க இவ்வளவு தீவிரம் ஏன்? . அரசாங்கம் மக்களிடம் இருந்து இடங்களை பிடுங்கிகிட்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த எதுவும் செய்த மாதிரி தெரியல. அப்துல்கலாம் தான் அவர்களின் வாழ்க்கை மேம்படுத்த சில திட்டங்களை சொல்லி இருக்கிறார். அதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும்.விரைவில் அணு உலையில் மின்சார உற்பத்தி தொடங்க வேண்டும்.

~