Monday, February 14, 2011

உந்தன் சொந்த தேசத்தின் குரல் - வைரமுத்து !

~

உந்தன் சொந்த தேசத்தின் குரல்
தொலைதூரத்தில் அதோ செவியில் விழாதா..
சொந்தவீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!

அந்த நாட்களை நினை ! அவை நீங்குமா உனை !
நிழல் போல் வராதா?
அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா

வானம் எங்கும் பறந்தாலும் பறவை எண்ணம் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் எண்ணம் தாய் நாட்டில்
சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அங்கு செல்வமரம் காய்த்தாலும்
உந்தன் உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா?

கங்கை உன்னை அழைக்கிறது யமுனை உன்னை அழைக்கிறது
இமயம் உன்னை அழைக்கிறது பல சம்யம் உன்னை அழைக்கிறது
கண்ணாமமூச்சி ஆட்டம் அழைக்க சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க
தென்னத்தோப்பு துரவுகள் அழைக்க கட்ட காத்த உறவுகள் அழைக்க
நீதான் தின்ன நிலாச்சோறு அழைக்க

உந்தன் சொந்த தேசத்தின் குரல்
தொலைதூரத்தில் அதோ செவியில் விழாதா..

பால் போல வெண்ணிலவு உற்று பார்த்தாலும் சிறு கறை இருக்கும்
மலர்போல உள்ள தாய் நாட்டில் மாறா சிலவலி இருக்கும்
கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்
அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்
இந்த தேசம் வளரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்புதாயின் மடி உன்னை அழைக்குதே

உந்தன் சொந்த தேசத்தின் குரல்

~

Monday, February 7, 2011

அந்த அந்த வயதில் - வைரமுத்து !

~

இருபதுகளில் எழு. உன் கால்களுக்கு சுயமாய் நிற்க சொல்லிக்கொடு.
ஜன்னல்களை திற்ந்து வை.படி எதையும் படி !
வாத்யாசனம் கூட காமம் அல்ல கல்விதான் படி.
பிறகு புத்தகங்களை எல்லாம் உன் பின்னால் எரிந்துவிட்டு வாழ்க்கைக்கு வா !
உன் சட்டைபொத்தான், கடிகாரம், காதல், சிற்றுண்டி, சிற்றின்பம்
எல்லாம் விஞ்ஞானத்தின் மடியில் விழுந்துவிட்டதால் எந்திர அறிவுகொள்.
ஏவாத ஏவுகணையேனும் அடிக்கப்பட்ட ஆணியே பலம்.
மனிதமுகங்களை மனசுக்குள் பதிவுசெய். சப்தங்கள படி.சூழ்ச்சிகள் அறி.
திருடு திருப்பிகொடு. பூமியில் நின்று வானத்தை பார் வானத்தில் நின்று பூமியை பார்.
உன் திசையை தெரிவுசெய். நுரைக்க நுரைக்க காதலி.காதலை சுகி. காதலில் அழு.
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி.
பூமியில் மனிதன் இதுவரை துய்த்த இன்பம் கையளவுதான் மிச்சமெல்லாம் உனக்கு.
வாழ்க்கை என்பது உழைப்பும் துய்ப்பும் என்று உணர்.
உனது அஸ்திவாரத்தை ஆழப்படுத்து !
இன்னும் இன்னும் சூரியகதிர்கள் விலமுடியாத ஆழத்தில்!.

முப்பதுகளில் சுறுசுறுப்பில் தேனியாய் இரு..நிதானத்தில் ஞானியாய் இரு!.
உறங்குதல் சுருக்கு . உழை . நித்தம் கலவிகொல்.
உட்காரமுடியாத ஒருவன் உன் நாற்காலியை ஒழித்து வைத்திருப்பான்,கைப்பற்று.
ஆயதம் தயாரி பயன்படுத்தாதே. எதிரிகளை பேசவிடு ,சிறு நீர் கழிக்கயில் சிரி.
வேர்களை இடி பிழக்காத ஆழ்த்துக்கு அனுப்பு .
கிளைகளை சூரியனுக்கு நிழல் கொடுக்கும் உயரத்துக்கு பரப்பு .
நிலைகொள்..

நாற்பதுகளில் இனிமேல் தான் வாழ்க்கையின் ஆரம்பம்.
செல்வத்தின் பாதியை ,அறிவின் முழுமையை செலவழி.
எதிரிகளை ஒழி ஆயதங்களை மண்டை ஓடுகளில் தீட்டு.
ஒருவனை புதைக்க இன்னொருவனை குழிவெட்ட சொல், அதில் இருவரையும் புதை..
பொருள் சேர். இரு கையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு.பகல் தூக்கம் போடு.
கவனம் இன்னொரு காதல் வரும் புன்னகைவரை போ..புடவை தொடாதே!
இதுவரை இலட்சியம் தானே உனக்கு இலக்கு, இனிமேல் லட்சியத்துக்கு நீதான் இலக்கு.

ஜம்பதுகளில் வாழ்க்கை வழுக்கை இரண்டையும் ரசி. கொழுப்பை குறை.
முட்டையின் வெண்கரு காய்கறி கீரை கொள். கணக்கு பார்.நீ மனிதனா என வாழ்க்கையை கேள்.லட்சியத்தை தொடு . வெற்றியில் மகிழாதே. விழா எடுக்காதே

அறுபதுகளில் இதுவரை வாழ்கைதானே உன்னை வாழ்ந்தது..இனியெனும் வாழ்க்கையை நீ வாழ்ந்துபார்.விதிக்கப்பட்ட வாழ்க்கையை விலக்கிவிடு ..மனிதர்கள் போதும் முயல் வளர்த்துபார்.நாயோடு தூங்கு கிளியோடு பேசு மனைவிக்கு பேன் பார்.
பழைய டைரி எடு இப்போதாவது உண்மை எழுது.

எழுபதுகளில் இந்தியாவில் இது உபரி..சுடுகாடு வரை நடந்துபோக சத்து இருக்கும்போதே செத்து போ .ஜண கண மண !

~