Saturday, January 29, 2011

ஒலிப்பான் தவிர்ப்போம்

~




இந்த பெண்ணோட courage-ஐ நம்ம கண்டிப்பா பாராட்டனும்.. நம்ம எல்லாம் (பெரும்பான்மை) சும்மா குறை சொல்லிட்டுதான் இருப்போம ஒழிய களத்தில இறங்கி போராடமாட்டோம்.. எவனும் கேட்க மாட்டானும் தெரிஞ்சும் போராடுட இந்த மாதிரி சிலபேரால் தான் பாரத வளர்ச்சியின் மீதான நம்பிக்கை இன்னும் கூடுது.இளைய சமுதாயம் எல்லாம் தண்ணி அடிப்பதையும், சினிமா ரசிகனாகவே காட்டும் இந்த மீடியாக்கள் இதை எல்லாம் கண்டுகொள்வதில்லை ஏனோ !

~

Monday, January 24, 2011

அம்மா மேல் கோவம் !

~

உங்களை என்றைழைப்பதை விட உன்னை என்றழைப்பது
மரியாதைக்குறைவா என்ன ? இல்லை அதீத உரிமை !
என்னை நீ வளர்த்தவிதம் சரியில்லை அம்மா இன்று நான் கோவிக்கிறேன்
ஒரு வேளையாவது நீ என்னை பசிக்க விட்டிருந்தால் பசி பொறுக்கும் பழக்கம் வந்திருக்கும்
உணவில் சுவை குறைத்திருந்தால் என் நாக்கு இங்கு உள்ள உணவுக்கு பழக்கப்பட்டிருக்கும்
பழைய சோற்றை கண்ணிலாவது காட்டியிருக்கலாம் ..
இங்கே முந்தா நாள் வைத்த உணவை சாப்பிடும் போது
வரும் வயித்தபிரட்டும் உணர்வு இல்லாமல் இருந்திருக்கும்
என்னை நீ வீட்டு வேலைகளுக்கு உதவிக்காவது அழைத்திருக்க வேண்டும்
பாத்திரம் கழுவவாது நான் பழகி இருப்பேன்

8 மணிக்கு எழுப்பிவிட்டு " காப்பிய குடிச்சுட்டு தூங்கடானு "
நீ சொல்லாமல் இருந்திருக்க வேண்டும்.
இங்கே காப்பி வேண்டாம்
அன்பாய் கூட எழுப்பாமல் அலறுகிறது இந்த அலாரம்.
நீ செல்லம் என்றாய் இங்கே எல்லாம் என்னை சோம்பேறி என்கிறார்கள்.

எத்தனை குறைகள் இருந்தாலும் நீ கற்று தந்த கபடமில்லா அன்பும்,
கண்டிப்பான ஒழுக்கமும்,வைராக்கியமும் தானம்மா
என்னை இன்றும் உயர்த்துகிறது.. Thanks ..I love you ma !

சென்னையில் இருக்கும்போது உணர்ந்தது.. முதல் onsite(2008)-ல் வெட்டியாய் இருக்கும்போது எழுதியது !

Wednesday, January 5, 2011

நித்தம் ஒரு வானம் வேண்டும் - வைரமுத்து !

~

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்கமழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்
வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூவேளை
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்

கடவுளே கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி என்று வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வரவிடு

யுத்தமில்லாத பூமி ஒரு சத்தமில்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம் இந்த மண்ணில் நிலைகொள்ளும் வரம் வேண்டும்
பஞ்சம் பசி போக்கவேண்டும் பாலைவனம் பூக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம் சுகம் சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழவேண்டும்
போனவை அட போகட்டும் வந்தவை இனிவாழட்டும்
தேசத்தின் எல்லைகோடுகள் அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணில் வந்து வாழட்டும்

~