Thursday, September 17, 2009

ஒரு தலை காதலும் சாதீய ஆதிக்கமும் !

~

இது என் கல்லூரு நண்பனின் கதை.சிவா தாழ்த்தப்பட்ட குடிசைப்பகுதியை சார்ந்தவன்.. யாருமே பள்ளி படிப்பை தொடராத அந்த பகுதியில் அவன் மட்டுமே நல்ல படித்ததால் பொறியியல் கல்லூரிக்கு வரமுடிந்தது.நான்கு வருட படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்த நேரம். அவன் வாழ்ந்த பகுதிக்கு அருகே தேவர் சமூகத்தினர் அதிகமாக குடியுருந்தனர். அந்த வகுப்பை சார்ந்த ஒரு பெண் அவனை அடிக்கடி பார்த்து சிரித்திருக்கிறாள். அவன் இதென்னடா வம்பா போச்சுனு அந்த தெரு வழியே செல்வதையே தவிர்த்து வந்தான். ஒரு நாள் எதார்த்தமாக அந்த வழியே செல்ல அந்த பெண் அவன் கிட்ட அவ இவனை காதலிப்பதாக கூறி கடிதம் ஒன்ரையும் கொடுத்திருக்கிறாள். அதை என் கிட்ட அவன் காமிச்சான். நான் அப்பவே சொன்னேன், இதை பெரியவங்கள்கிட்டு காமிச்சு உன் மேல எந்த தப்பு இல்லனு ஆரம்பத்திலே கிள்ளி எறிந்திடலாமுனு. அவன் தான் அந்த பொண்ணுக்கு இன்னும் பக்குகவம் இல்லை சின்ன பொண்ணு எதோஆர்வத்தில எழுதிடுச்சு.இது அவங்க வீட்ல தெரிஞ்சா கொன்னு போட்டுடுவானுங்கானு இரக்கப்பட்டான்.

அவன் அமைதியை பொண்ணு என்ன நினைச்சதோ தெரியல. இன்னோரு கடிதம் எழுதிருக்கு. அதை அவங்க அண்ணன் ( சின்ன பையன் தான்.என்ன ஒரு 20 வயது இருக்கும். அந்த பொண்ணுக்கு அப்பா கிடையாதுனு நினைக்கிறென்.குடும்பலும் வசதி எல்லாம் கிடையாது. அவங்க சொந்தகாரங்கதான் வசதியா இருக்கானுங்கனு ). உடனே அவன் ரவுடி ஆயிட்டேன். (செந்தில் கவுண்டரை பார்த்து சொல்ற மாதிரிதான் கத்தி எடுத்தவன் எல்லா ரவுடிங்கிறான்). அந்த பொண்ணை லைட்டா கண்டிச்சு விட்டிட்டு..இவனை புடிச்சு சாதிய வைத்து இழுவு படுத்தி பத்து பேர் (எல்லா அவங்க சமூகத்து பசங்க ) அடிச்சு பிட்டாங்கே. அவன் எவ்வளோ சொல்லியும், அவனுங்க சொல்றது அது சின்ன பொண்ணு . (வாயில் விரலை வைத்த கூட கடிக்க தெரியாது ) இவன் தான் அது மனதை கெடுத்துட்டான். அப்படினு அவன் தங்கச்சி சொக்கதங்கம் மாறி பில்டப் பண்ணிட்டானுங்க. அப்புறம் பஞ்சாயத்து பண்ணி, அவன் அந்த தெரு பக்கட்டே போகாம, வேற சுத்து வழியா போய் வந்துகிட்டுருந்தான்.

அப்புறம் ஒருவழியா வெளி நாட்டில் வேலைகிடைச்சு போய்ட்டான். அப்புறம் 2 வருசம் கழிச்சு லீவில் வந்தான். பொண்ணுபார்த்து கல்யாணம் பண்ணிடலாம்னு அவனை பார்க்க போனப்ப வீட்ல பேசிட்டு இருந்தாங்க. அப்பதைக்குனு பார்த்து அந்த பொண்ணுக்கு கல்யாணவரன் பார்த்திறாங்க.ஆனா அந்த பொண்ணு கல்யாணம் பண்ணினா சிவாவதான் பண்ணுவேன் சொன்னாதாம் இவன் வந்திருக்குறதை எப்படியோ தெரிந்துகிட்டு ( என்னா வில்லத்தனம் ) . மறுபடியும் அவங்க அண்ணன் லூசு கத்தி எடுத்துகிட்டு பத்து பேறோடா சிவா வீட்டுக்கு போய் அவனை குத்த முயற்சி செய்திருக்காங்க. அதில் அவன் நண்பனுக்கு அடிபட்டுச்சு சிவா எப்படியோ தப்பிச்சு ஓடிட்டான். போலீஸ்ல சொல்லவேண்டியதானட கேட்டேன்.இன்னைக்கு சொல்லாம்டா.நம்ம தெருவை சுத்தி அவனுங்கதான் இருக்கானுங்க. போலிஸ் எப்போதுமே இங்க இருக்க முடியாதுனு அவங்க அண்ணன் சொன்னதாக சொன்னான்.( உண்மைதான்). அப்புறம் மறுபடியும் பஞ்சாயத்து அப்பவும் ஒருதலை பட்சமாகவே எல்லாரும் பேசினாங்க. அவன் மறுபடியும் இந்த ஊரே வேணாம்டா மறுபடியும் வெளி நாட்டுக்கே போய்ட்டான்.
அப்புறம் கடந்த மாதம் அவனும்மு திருமணம் எங்க ஊரில் ஒருத்தருக்கு கூட சொல்லல. பொண்ணு வீட்ல வத்து கல்யாணம் பண்ணிட்டு இப்ப சேலத்துல் குடும்பத்தோடா இருக்கான். ஏண்டா ஊரில் யாருக்கு சொல்லனா, அந்த பொண்ணுக்கு தெரிந்த எதாவது பண்ணிகுடுச்சான் அதுக்கு நான் தான் காரணம்னு உயிர எடுப்பானுங்க.அதான் ஊரில் யாருக்கும்
சொல்லலைனான்.

ஒரு பொண்ணாலயும் ,இந்த சாதி வெறினாலும் ஒருபாவமும் அறியாத சிவா பாதிக்கபட்டான். இந்த மாதிரி எத்தனொயோ சம்பவங்கள் எல்லா ஊரிலையும் நடக்குது. நிறைய பேர் தீண்டாமைக்கும் , சாதிய இகழ்வலுக்கு பார்பணர்கள் காரணமும் என்று அவர்களையே திட்டி தீர்க்கிறார்கள். எனக்கென்னமோ அவர்களாய் திட்டுவது சுலபம் என்பதால் தான் அவர்களை திட்டுவதாக நினைக்கிறென். தமிழ்னாட்டில் நடக்கும் சாதிய இகழ்வளுக்கு பெரும்பாலும் யார் காரணம் ?? பதில் உங்க மனசாட்சிக்கு தெரியும் அது பார்பணர் அல்லாத பிற மேல்சாதி வகுப்பை சார்ந்தவர்கள் தான் என்று.

~

Tuesday, September 1, 2009

தமிழ் நாட்டு மக்களை இழிவு படுத்தாதீர்கள் !

~

காசு வாங்கிட்டு ஓட்டு போடுவாங்க, அல்லது சினிமாக்காரனுக்கு தான் ஓட்டு போடுவாங்க தமிழ் மக்கள் என்ற மாயை பத்திரிக்கைகளாலும், ஒளி ஊடகங்களாலும் ஏன் நிறைய பேரின் பதிவின் மூலமாகவும் உருவாக்கபடுகிறது. இது எல்லா தமிழ் நாட்டு மக்களையும் இழிவு படுத்தும் செயல்.

ஓட்டு போட்ட அனைவரும் பணத்துக்காகதான் ஓட்டு போட்டாங்கனு என்பதை நான் ஒத்து கொள்ளாமாட்டான்.
இவங்க பணம் வாங்காட்டியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அவருக்கு தான் போட்டுறாப்பாங்க!
எதையுமோ சும்மா கொடுத்தா பெரும்பான்மையான மக்கள் வாங்கதான் செய்வார்கள் ( அது மாற இன்னும் சில தலைமுறைகள் ஆகும்).
அப்ப பணம் சும்மா கொடுத்த வாங்காமாலா இருப்பார்கள். பணம் வாங்கியதற்காக அவனுக்கு ஓட்டு போடனும் நினைப்பவர்கள் சதவீதத்தில் குறைவு !
முடிவு அவங்களுக்கு சாதகமா வந்தால் மார்தட்டி கொள்வதும், இல்லாட்டி காசு கொடுத்தாட்டாங்கே என்றும், மெசின் கோளாறு என்று சொல்வது சின்ன பிள்ளை தனமா இல்லை ? எதிர்கட்சி ஜெயித்தா தமிழ் நாட்டு மக்கள் கூலிக்கு வோட்டு போடுபவர்களா? அப்படி சொல்லுவர்கள் வாழ் நாள் முழுசாசொல்லிட்டே இருக்க வேண்டியதுதான் !

ராகுல் காந்தியின் மாஸ்டர் பிளான் உத்திரபிரதேசத்துக்கு தொழிற்சாலைகளை உருவாக்குவது , ஆனா தமிழ் நாட்டிற்கு விஜய்யை காங்கிரசில் சேர்ப்பது..
இதில் இருந்து என்ன தெரியுது ? தமிழ் நாட்டு மக்கள் எல்லாம் கேனப்பயலுங்க ! விஜய் வந்து "அண்ணா காங்கிரஸ்க்கு வோட்டு போடுங்கனா .." என்ற சொன்னவுடன் அலை அலையா போய் கை சின்னத்துல வோட்டு கொத்துவாங்கிடுவானுங்க என்ற நினைப்புதானே !
இதை மார்தட்டி மாஸ்டர் பிளானு வேற சொல்லுபவர்கள் மூஞ்சில் காரி துப்பலமா கூடாதா ?

~