Tuesday, July 28, 2009

சாவுங்கடா ! நான் தான் அடுத்த முதலமைச்சர் சொல்கிறார் மக்கள் இயக்கம் தொடங்கிய விஜய்

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார். புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த மக்கள் இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் விஜய் பேசுகையில்,

என்னிடம் உள்ள சமூக சிந்தனை ரசிகர்களாகிய உங்களிடம் உள்ளது. உங்களிடம் உள்ள சமூக கண்ணோட்டம் என்னிடம் உள்ளது. நான் 50 ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் நீங்கள் 5 ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறீர்கள்.
நான் 100 ஏழை குழந்தைகளுக்கு மோதிரம் போட்டால் நீங்கள் 10 குழந்தைகளுக்கு போடுகிறீர்கள். அதே போல் பள்ளி மாணவர்களை படிக்க வைக்கிறீர்கள்.

ஏழை மாணவ, மாணவிகள் பயில இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை திறந்து வைக்கிறீர்கள். நீங்கள் செய்யும் நல்ல காரியத்தால் எனக்கும் நல்ல பெயர் வாங்கி கொடுக்கிறீர்கள்.

எனது அப்பா லேசான கோடு கிழித்து ஒத்தையடி பாதை காட்டினார். நான் அதை தார் ரோடாக மாற்றினேன். பின்பு அதனை ஹைவே ரோடாக மாற்றினேன். மீண்டும் உழைத்து அதை 6 வழி சாலையாக மாற்றி உழைத்து வருகிறேன்
இந்த இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும், ஒரு லட்சம் உறுப்பினர்களையும், நகர, வட்டங்கள் சார்பில் 50 ஆயிரம் உறுப்பினர்களையும், கிளை மன்றங்களின் சார்பில் 5 ஆயிரம் உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும்.

இந்த இயக்கம் எப்படி வரும். எப்படி நடக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாது. நீங்கள் மனது வைத்தால் இந்த இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும். அப்போது என் குடும்பம் என் தொழிலை விட இந்த கட்சியை பெரிதாக எண்ணி உழைப்பேன். அது உங்கள் கையில் தான் உள்ளது என்றார்.

எனக்கு தெரிந்த விஜய் ரசிகர் மன்றத்தை உதராணாமா வைத்துதான் இதை எழுதுகிறேன்.சில ஒழுக்க சீலர்கள் இருந்தால் மன்னிக்கவும் ! ஒக்கா மக்கா ஆனா ஊனா நலத்திட்ட உதவிகள் ஏண்டா இப்படி எத்தனை நாளைக்குடா செய்தித்தாள செய்திவர்ரதுக்காக சீன் போடுவீங்க !

இப்படிதான் கோடையில் தண்ணீர் பந்தல் பயங்கர செலவு பண்ணி , சீன் போட்டு ஆரம்பிச்சானுங்க ! ஆரம்பிச்ச நாள் அன்று செலவு செய்ததை வைத்து ஊருக்கே கோடையில் தண்ணீர் கொடுத்திருக்கலாம்..ஆனா ஆரம்பிச்சா 1 வாரத்துக்கு அப்புறம் பராமரிக்க ஆள் இல்லை ! இப்படித்தான் நடக்குது இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம்..3 மண்குடம் வச்சு தண்ணீ ஊத்த 1 லட்சம் செல்வு பண்றாங்க ! எல்லாம் பேப்பர்ல நியுஸ் வர்ர வரைக்கும் தான் ..ஏண்டா உங்களுக்கு எல்லாம் எங்கிருந்துடா காசு வருது ! அதை உருப்படியா செலவு பண்ணலாம்ல !

இலங்கை மக்களுக்காக 1 லட்சம் கொடுத்து புட்டு , லாரன்சே 10 லட்சம் கொடுத்தார், மேடையில் எதோ இவரை பற்றி எதோ சொல்ல அந்த image சரிவை சரி செய்ய காசு செலவு பண்ணாம ஒரு நாள் சாப்பாடை மட்டும் விட்டு கொடுத்துட்டு உண்ணாவிரதங்கிற பேர்ல உன் பாட்டை போட்டு டான்ஸ் ஆடுன கூட்டம் தானடா நீங்க ! இதுல வேற வாங்கின பிரியாணி பத்தலனா மேடையிலே உங்க அப்பன் சொன்னார்..உண்ணாவிரதம் ரொம்ப சந்தோசமாய் இருந்த்து நீங்க சொன்னப்ப எனக்கு வந்த ஆத்திரத்துக்கு தொலைக்காட்சி உடைத்திடலாம் போல இருந்தது !

இவர் அப்பா ஒத்தையடி பாதைய காண்பித்தார் , இவர் தார் ரோடா மாத்தினாராம்..இதை படிக்கும் போது இவர் ஆரம்ப காலத்தில நடித்த ரசிகன் ..போன்ற மிகச்சிறந்த படங்களும், சங்கவி இவங்க கிட்ட பட்ட பாடும் தான் நாபகம் வருது !

விஜய் அரசியலுக்கு வரவேண்டும்..காசை எல்லாம் விட வேண்டும்..வாடி மாப்ள இருக்குடி உனக்கு !

விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பேசுகையில்,

நான் பல புரட்சி படங்களை தயாரித்துள்ளேன். அதில் அநியாயங்களை தட்டி கேட்கும் கதை அதிகமாக இருக்கும். இதனால் நாடு மாறவில்லை. இதற்காக யாரும் என்னை பாராட்டியதும் இல்லை. இது என் மனதில் எழுச்சியாக இருந்தது.

இதனால் என் மகனை நடிக்க வைத்து அதன் மூலம் எழுச்சியை கொண்டு வந்தேன். இதற்காக ஒரு அமைப்பை ஆரம்பித்தேன். அது மக்கள் இயக்கமாக மாறி உள்ளது.

உறுப்பினர்களை சேர்ப்பதை பொறுத்து தான் உங்களின் கனவு நினைவாகும். உண்மையான உணர்வு உள்ளவர்கள் மட்டும் இதில் சேரலாம் என்றார்.

இவர் ஆதி போன்ற புரட்சி படங்களை தயாரித்து இருக்கிறார்..ஆனால் பாவம் பாருங்க இவர யாருமே பாரட்டல ! விஜய் TV ல போக்கிரி படத்தைவிட அதிகம் வரவேற்பு பெற்ற பேக்கிரி லொள்ளுசபாவுக்காக அவர்களை மிரட்டி அப்புறம் அவர்களே விஜய் பிறந்த நாள் கொண்டாடவைத்தவர் ! அதில் ஒருத்தன் பாண்டிசேரிலிருந்து, சென்னை வரைக்கும் பின்னாடியே நடந்த வந்தான்..விஜய் ரசிகனாம்..அப்பா எப்பேர் பட்ட பெருமையை தேடி கொடுத்திருக்கிறார் அவங்க பெற்றோர்களுக்கு ! மக்களே இந்த கொடுமை எல்லாம் தமிழ் நாட்டில் இருந்தா பார்த்துதான் ஆகனும் வேறவழியில்லை !

மகனை நடிக்க வச்சு எழுச்சியை கொண்டுவந்தாராம். முடிலடா சாமி ! ...உங்களுக்கு எல்லாம் மன்சாட்சி இல்லையா ~ கனவு நினைவாகுமா..என்ன கனவுடா ? முன்னாடியாச்சும் ஒரு பேச்சுகாவது மக்களுக்கு நல்ல செய்வோம்னு சொல்வாங்க ! இப்ப எல்லாம் அது கூட இல்லை !

நீங்க வாங்க அரசியலலுக்கு ! இப்ப தமிழ் நாட்டு மக்கள் உசாருடி ! விவேக் ஒரு படத்தில் லெஃப்ட ல இண்டிகேட்டர் போட்டுட்டு ,ரைட்ல கைய போட்டு, நேரா போய்டே இருப்போம்னு சொல்றமாதிரி ஒருத்தனே பத்து கட்சில உறுப்பினரா இருப்போம்..எவன் ஆட்சில இருக்காணோ அவன் கரை வேட்டி கட்டிப்போம்..உங்களுக்கு தான் வோட்டுனு காசு கொடுக்கிறவங்க எல்லாட் கிட்டயும் வாங்க்கிட்டி, எங்க விருப்படி ஓட்டு குத்துவோம் !
வாடி மாப்ள் வா !

Thursday, July 9, 2009

கரணம் தப்பினால் மரணம் - அந்நியன் !

~

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை சர்க்கஸ்லயோ , இல்ல எதோ சாதனை நிகழ்ச்சிகளிலோ அல்ல..நம்ம சென்னை வாழ் வாகன ஓட்டிகளுக்குதான் .(குறிப்பா இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், ஷேர் ஆட்டோவில் புட் போர்டு அடிக்கரவர்களுக்கு தான்..பஸ்ஸில்தான் அப்படினா , ஷேர் ஆட்டோவிலுமா? ) வேகம் ,விதி மீறல்கள், ஹார்ன் என்று இவர்கள் செய்யும் அட்டூழியும் இருக்கே தாங்க முடியல ! நடைபாதை மேடா இருந்தால் கூட அதில் பைக்கை ஏத்தி ஓட்றாங்க ! இதில் வேற நடைபாதையில் போறவங்களை தன் பைக்கு வழிவிட சொல்லி ஹார்ன் அடிக்கிறாங்க ! கேட்டா அவசரம்..அவசரம்.எனக்கு இப்படி நடந்தது..வேற எங்கேயும் இல்லைங்க படித்த மக்கள் அதிகமாக் வாகனம் ஓட்டும் டைடல் பார்க் அருகாமையில். நான் அப்படியே திரும்பி பார்த்து, அங்கேயே நின்று அவரை முறைத்து பார்த்து பிறகு நடைபாதயில் இருந்து இறக்கி சாலையில் ஓட்டி சென்றார்.ஆனால் இந்த முரைப்பு எல்லாம் எத்தனை பேரு கிட்ட வேலைக்கு ஆகும்னு தெரியல !.

இதே மாதிரி எல்னெட்/டைடல் பார்க் வழியா வண்டிகள் செம வேகமா போகும். இவங்களாய் சாமளித்து உள்ளே போறதக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். நான் போய் tidel and elnet secutiry roomla சொன்னேன் இங்க speed braker போடுங்கனு. அவர் தலை தலையா ஆட்டுனார். அதுக்கு அப்புறம் நான் ஒரு வருடம் வெளி நாடு சென்றுவிட்டென். போன வாரம் அங்கு போன போது speed braker இருந்தது. நான் பரவாயில்லையேனு என நண்பங்கிட்ட சொன்னபோது, அவன் சொன்னா இரண்டு மூனு தடவை விபத்து நடந்திருச்சு அதனால் தாண்டா போட்டாங்கனு.. இப்படி எதாவது நடந்தாதான் நம்மாளுங்க விழிக்கிறாங்க !

இதே மாதிரி cross junction singnalஅ ரெட் விழுந்தா கூட, எதிர்தரப்பில் வண்டி நெருங்கும் வரை சாலையை கடக்கிறாங்க..சிலபேர் கடைசி நொடி வரை முயற்சி செஞ்சிட்டு முடியல எனும் போது அப்படியே சாலை நடுவுல "பெப்பரே பேனு" நிற்பான் பாருங்க ! போறவன் வர்ரவன் எல்லாரும் அவனை திட்டுவான்..திட்டி புட்டு அடுத்த சிக்னல்ல அவனும் அதேதான் செய்வான் .

சாலையில் எல்லாரும் ரேஸ் ஓட்டுற மாதிரிதான் ஓட்றாங்க ..அதிலயும் சிக்னல் போட்டவுடன் பாருங்க ! ஏண்டா இவ்வளு வேகாம ஓட்றீங்கனு கேட்ட எனக்கு பின்னாடி வர்றவன் வேகமா வர்றான் அதனால் நான் வேகாம போறேன் சொல்றாங்க எனக்கு நெருங்கிய நண்பர்கள் ! வேகாம போய் குப்பறக்கு அடிச்சு விழுந்து உறுப்புகளை இழந்தவங்க எத்தனை பேர். இரண்டு மூனு வருசத்துக்கு முன்னாடி காந்தி நகர்ல் வேலை பார்த்துகிட்டிருந்தேன். ஒரு நாள் பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன், அப்போ வண்டியில் வேகாம போனவன் வழியில் என்ன குறுக்கிட்டிச்சு தெரியல், தீடிர்னு பிரேக் போட்டு கிழே விழுந்தான். நல்லவேளை அவன் மண்ணில் விழுந்ததாலும், தலைகவசம் அணிந்திருந்தாலும் சிறு காயங்களுடன் தப்பித்தான். உடன் இருந்தவர்கள் எல்லாம் போய் தூக்கிவிட்டோம். ஒருத்தன் கிழே விழுந்த அறிவுறை சொல்ல ஒரு கும்பல் கூடுவது வழக்கம் என்றாலும் ஒரு ஊனமுன்றவர் சொன்ன வார்த்தை இன்னும் என் காதில் கேட்கிறது. "தம்பி கை, கால் எல்லாம் நம்மளோட விலை மதிக்க முடியாத சொத்து..அதை இழந்திடாதா.. அதோட அருமை இல்லாதங்களுக்கு தான் தெரியும்" .என்பதுதான்.

அப்புறம் பாதசாரிகள் , சிக்னலே இருந்தாலும் சாலை கடக்கிறதுக்குள்ளா செத்தொம் பிழைச்ச கதை தான். வெளி நாட்டில் எல்லாம் பாதசாரிகளுக்கு தான் முன்னுரிமை.ஆனால் நம்ம முதியவரா இருந்தாலும் அவர்களை மதிப்பதே இல்லை. என்னடா இவன் வெளி நாட்டு புகழ் பாடுறானு நினைக்க கூடாது. உண்மையை என்றைக்கு ஒத்துகனும். சும்மா நாங்க மூவாயிரம் வருசத்து முன்னாடியே நாகரீகம் போற்றினோம் கதை எல்லாம் வேலைக்கு ஆகாது. ( இதற்கு எது தமிழ் கலாசாரம்னு தனி பதிவு போடுறேன் )

ஏன்னு இபப்டி பண்றீங்கனு கேட்ட ஒரே பதில் "அவசரம் ,லேட் ஆயிடுச்சு".. தினமுமா லேட் ஆகுது ? அந்நியன் படத்தில விக்ரம் சொல்லும் போது கைதட்டும் நம்ம, நிஜ வாழ்க்கையில் கடைபிடிக்க முடியதா ? ஆனால் வெளி நாட்டுக்கு போன மட்டும் Rules சரியா பின் பற்றுவோம். இதை பத்தி என்னோட வெளி நாட்டு நண்பர் சொன்னார் Volumea face பண்ற அளவுக்கு infrastructure இருந்தா எல்லாரும் கடைபிடிப்பாங்க , அப்புறம் எல்லாரும் சொல்ற மாதிரி "ஊரொடு ஒத்து போ" பழமொழி சொன்னார். இங்க எல்லாரும் கடைபிடிக்கிறாங்க , அதனால்தான் இங்க வர்றவங்களும் கடைபிடிக்கிறாங்க அதுவும் மட்டும் இல்லாமல் அதுக்கு தகுந்த மாதிரி சாலை வசதிகள் மற்றும் infrastructure இருக்கு அப்புறம் Volumeம் கம்மியா இருக்கு, ஆனால் உங்க ஊரில் Volume அதிகம் அதனால் தான் அங்கே கடைபிடிக்கிறதில்லை. இதுவும் யோசிக்க வேண்டியதான் இருக்கு .

இப்படி நம்ம நாட்டில எந்த ஒரு பிரச்சனைக்கு , கடைசியா கடைசியா root cause மக்கள் தொகை அல்லது நம்ம தட்ப வெப்ப நிலை யாதான் இருக்கு.வெளி நாடுகளுக்கு நல்ல குளிரான தட்ப வெப்பனிலை, பரந்த நிலப்பரப்பு, குறைவான் மக்கள் தொகை, நல்ல வளம் என்று கொடுத்திருக்க ஆண்டவன் நம்மளை மட்டும் ஏன் சபிச்சிட்டானு தெரியல!

~