Tuesday, August 31, 2010

நட்பும் காதலும்

Friendship and love defined in single photo

Thursday, August 26, 2010

அனுபவம் என்பதே நான் தான் - கண்ணதாசன்

~


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பென சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்
அறிவனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்
அன்பெனபடுவது யாதெனக் கேட்டேன்
அளித்து பாரென இறைவன் பணித்தான்
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்
பிள்ளை எனபது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
வருமை என்பது யாதெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக்கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்
"அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்?" எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்று அருகி நெருங்கி
"அனுபவம் என்பதே நான் தான்" என்றார்

~

Saturday, August 21, 2010

ஆடிப்பெருக்கு அரைகுடத்தில்



காவிரியை கடக்க ஓடம் வேண்டாம் ஒட்டகம் போதும்

என சொன்ன கவியின் வாக்கு மெய்யானதே

ஆடிப்பெருக்கை அரைகுடம் நீரில் கொண்டாடுகிறது தஞ்சை !

Thursday, August 19, 2010

எனக்காக நான் மட்டுமே !

~

வாழ்க்கை துணையோடு , வருங்கால வாழ்க்கை துணையொடு
காதலியோடு , காதலா நட்பா புரியாமல் சிலர்,பொழுது போக்கிற்காக பலர்
இப்படி தொலைபேசியில் தொலைகிறது நேரம். மற்றவர்களுக்கு
என் நம்பருக்கு நானே எப்படி அழைப்பது...வியக்கிறேன் நான் !

தன்னைவிட என்னை நேசிக்கும் அம்மா இருந்தாலும்,
தான் வீழ்ந்தாலும் மகன் தாழ கூடாது என் நினைக்கும் அப்பா இருந்தாலும்
தனக்கில்லை என்றாலும் தம்பிக்கு வேணும் என் இருக்கும் அண்ணன் இருந்தாலும
மாப்பி ஏண்டா டல்லா யிருக்கே என் உரிமையாய் கேட்க நட்பு இருந்தாலும்
எனக்காக நான் மட்டுமே இருப்பதாகவே உணர்கிறேன்

நான் செய்த நல்ல வேலைக்காக என்னை பாராட்டுகிறார்கள்
ஆனால் என்னால் மகிழ முடியவில்லை..
சில நேரம் என்னை கண்டிக்கிறார்கள் எனக்கு கோபம் வரவில்லை
உதட்டளவில் சிரிக்கிறேன் கோவிக்கிறேன்

ஒரு வேளை திரும்ப சொந்த ஊருக்கே போயிடலாமா ? எண்ணும்போதே
பயமுறுத்துகிறது ஊர் கேலி பேச்சுகள் வேலையில்லாதவன் எனும் பட்டமும்!
ஒரு வேளை வாழ்க்கை துணை என்று ஒருத்தி வந்தால் சரியாகுமோ ?
ஆகலாம் என் நம்பிக்கையின்றி சொல்கிறார்கள் ஆன நட்புகள்

என் செய்வேன் நான் என் கேட்கும் முன்னே குவிகின்றன் அறிவுரைகள்

மனசே ரிலாக்ஸ் ப்ளிஷ் படி சினிமாவுக்கு போலாம்
தண்ணி அடிக்கலாம் மச்சான்..இல்லடா மேட்டர் பார்க்கலாம் இண்டர்னெட்ல
பாரதியின் அச்சமில்லை கவியை முன்னூறு முறை வாசி
மச்சி சுகி சிவம்...

என்னதாண்டா உன் பிரச்சனை அவன் அவன் வேலையில்லாமல் சாப்பாடு இல்லாமல்
ரோட்ல அலையிறான் உனக்கென்னடா கோபத்தில் சில

யார் என்ன சொன்னாலும் ஏனோ புரியவில்லை எனக்காக நான் மட்டுமே இருப்பதாக் உணர்கிறேன்

--- வாழ்க்கையில் பல பேர் இந்த நிலையை கடந்து வந்திருப்பார்கள். நானும்