Sunday, December 20, 2009

சென்னையில் இடம் வேண்டுமா ? கலைஞருக்கு பாராட்டு விழா எடுங்கள் !

~
அவன் அவன் வயித்தை கட்டி வாயை கட்டி ஒரு இடத்தை வாங்கிறதுக்குள்ளே வாயில் நுரை தள்ளி போகுது..
இவர் என்னனா அரசாங்க இடத்தை அதுவும் சென்னையில், இவருக்கு பாராட்டு விழா எடுத்தால் குறைந்த விலைக்கு கூட இல்லை இலவசமா கொடுக்கிறார்...அதுவும் யாருக்கு சினி தொழிலாளர்களுக்கு.. ஏன்னா இவங்க ரொம்ப கஷ்டபடுறாங்களாம்..அப்ப சென்னையில் வேற எவனும் கஷ்ட படுறதில்லை .....விழாவில் நம்ம கஷ்டபடுகிற தொழிளாலர்களுக்காக குத்தாட்ட நடிகைகள் காசு வாங்கிட்டு ஆட்டம் போடுவாங்க. இந்த கஷ்ட படுற தொழிலாளர்களுக்காக அவர்கள் உழைப்பில் கோடி கோடியாக சம்பாதித்த ஸ்டார் நடிகர்கள் மைக்கை பிடித்து இரண்டுவார்த்தை பேசுவாங்கே ! உடனே உடன் பேசவரும் அல்லக்கைகள் ஸ்டார் நடிகர்கள் வந்ததற்காக அவர்களை கடவுள் ரேஞ்சுக்கு புகழ்வார்கள். என்னா அந்த பாராட்டுவிழாவை கலைஞர் டீவியில் போட்டு காசு பார்ப்பாங்கே. நாம வாயில விரல் சப்பிட்டி அதை பார்த்துட்டு இருப்போம். அங்க ஒரு 116 ஏக்கர் இலவசமா அலட்டாம கொல்லாம வாங்கிட்டு போயிட்டானுங்க! பகல் கொள்ளை முதல் அமைச்சர் தாராள மனதுடன். கடைத் தேங்காயை எடுத்து வழிபிள்ளையாருக்கு உடைத்த மாதிரி.... இதை எதிர்த்து வழக்கு போடமுடியாதா ?

இதைவிட கொடுமை நம்ம MLAக்கள் மக்களுக்காகவே உழைத்து ரொம்ப கஷ்ட படுறாங்களாம்..அவங்களுக்கும் பாவம் ஒரு பங்களா கட்டிக்கொள்ள (ஏற்கனவே இருக்கிறதெல்லாம் பினாமி பேர்ல இருக்கும் போல ) சென்னையில் இடம் இலவசமா கொடுக்கனும்னு நம்ம மக்கள் தொண்டன் வேலூர் ஞானசேகரன் போராடுறார்..அதுவும் சோழிங்க நல்லூரில்தான் வேணுமாம்.. (அங்க தான் இப்ப இடம் ஹாட் விலை )..பாவம் இவருடைய நியாயமான மக்களுக்கான கோரிக்கை ஏற்று தலைவர் ஆவண செய்வதாக கூறியிருக்கிறார். எப்படியும் தலைவருக்கும் ஒரு இடம் உண்டு அவரும் MLA தானே. அதுக்கு இன்னும் பாராட்டுவிழா நடத்தல..நடத்தியுடனே கொடுத்துடுவார்.. ஏற்கனவே இருக்கிற 3 star MLA hostel பழான லாட்ஜ் ரேஞ்ச்சுக்குதான் பயன் படுது. அங்க MLA வின் அல்லகைகள் அடிக்கிற கொட்டம் தாங்க முடியல.

பதிவுலக மக்களே நம்மளும் பாராட்டு விழா எடுத்து குறைந்தது ஒரு 5 ஏக்கருக்கு ஏற்பாடு பண்ணலாம் வாங்க. கூட்டத்துக்கு ஒரு 3000 பேரு தலைக்கு 300 வீதம் பேசி கூப்பிட்டுகளாம்..இந்த குத்தாட்டத்திற்கு சினிமாவில் வாய்ப்பு தேடிட்டு இருக்கவங்களாய் குறைந்தவிலைக்கு பேசிக்கலாம்..அரங்கம் அப்படி இப்படினு ஒரு 10 லட்சம் செலவு பண்னா எப்படி ஒரு மினிமம் 5 கோடி இடம் கேரண்டி என்ன சொல்றீங்க ?

~

Sunday, December 6, 2009

உன்னிடம் எனக்கு இரு வேண்டுகோள்கள் !

~

பேரழகி எதிர்ப்பார்பில்லை - என் முகத்தை
தினமும் கண்ணாடியில் பார்பதுண்டு !
செக்க சிவப்பு தேவையில்லை -
நான் தமிழன் ! தமிழச்சியின் நிறம் போதும் !

நீங்கா புன்னகை போதும் , பொன்னகைகள் தேவையில்லை !
தனிமை பிடிக்காது எனக்கு ! எப்போதும் உன் அருகிலே இருப்பேன்
இம்சை தான் ! பதிலுக்கு நீயும் அதையே செய்யலாம் !

நேசமிகுந்தவர்களின் மீது கோபம் வந்தால் மெளன ஆயுதம் ஏந்தி கொள்வேன்
மெளன ஆயுதம் தாங்கும் மெளன கேடயம் இருந்தால் போதும் உன்னிடம்
சமாளித்துவிடலாம் என் கோபத்தை !

புத்தகப் பிரியன் நான் அதனால் சில நேர செய்திகள் தவிர தொலைகாட்சியை நீயே கையாளலாம் !
வருமானம் பரவாயில்லை கைவசம் கணிப்பொறி வேலை !
வேலை போனாலும் உழைப்பாளிகளுக்கு அடுத்த வேலை கிடைக்க அதிக நாள் ஆகாது
அதனால் உன்னை பசிக்க விடமாட்டேன் !

காதல் எனக்கு வாய்பளிக்கவில்லை வாய்ப்பு உருவாகும் சந்தர்ப்பங்களை என் விருப்பத்திற்கு மாறாக நானே தவிர்த்ததுண்டு !
நீண்ட நாட்களாக காதல் என்னுள் சிறைப்பட்டு கிடக்கிறது ..நீ வந்து விடுதலை செய்ய வேண்டியிருக்கும் ~

திருமணத்துக்கு முன்போ/பின்போ நடந்த / நடக்கும் நிகழ்வுகளில் என்னிடம் சொல்ல நினைப்பதை ம்ட்டுமே கேட்க எனக்கு ஆவல்.
தவிர்கக நினைப்பதில் முழு சுதந்திரம் உண்டு உனக்கு !
உன குடும்ப மகிழ்/துக்க தாக்கத்திற்கு மதிப்பளிப்பேன்! உன்னிடம் அதையே எதிர்பாப்பேன் !

உன்னிடம் எனக்கு இரு வேண்டுகோள்கள் !

ஒன்று !
மூட நம்பிக்கைகளில் , பஞ்சாங்க நேரங்களில் எனக்கு நம்பிக்கையில்லை !
ஆனாலும் பெற்றோர் எனக்குள் ஏற்படுத்திய இந்த நம்பிக்கைகள் மீதான் உளவியல் தாக்குதல்
எப்போதாவது எட்டி பார்க்கும் அதை தவிர்க்கவே நினைக்கிறேன்..
கட்டாயம் நாம் நம் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வராமல் பாதுகாக்க வேண்டும்

இரண்டு !
ஆயிரம் சங்கடங்கள் வந்தாலும் என் பெற்றோர் மனம் கலங்கி விடக்கூடாது !
வாழும் இன்னும் சில் வருடங்கள் மகிழ்வோடு வாழவேண்டும் அவர்கள் !
அதற்கான உன் கோபங்களை / சங்கடங்களை பொழிய உனக்கு தடையில்லை நான் இருக்கிறேன் அதற்காக !

~
Note:- கவிஞர் யுகபாரதியின் ஒரு கவிதையை படித்த பாதிப்பில் என் உணர்வுகள் அதே சாயலில் !

~

Tuesday, November 17, 2009

நாராயணா ! இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலடா -2 !


~

Saturday, November 7, 2009

சிநேகிதிகளின் கணவர்கள் ! - மனுஷ்யபுத்திரன்

~
சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
எப்போதும் உருவாகிவிடுகிறது ஒரு சதுரங்க கட்டம் !
ஒரு கலைக்க முடியாத பாவனையின் மர்ம நிழல் !
ஒரு சர்க்கஸ் கோமாளியின் அபாயகாரமான சாகசங்கள் !
ஒரு அபத்த வெளியில் விரிக்கப்பட்ட வலை !

சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
என் சிநேகிதிகளின் கண்களை முற்றாக தவிர்த்துவிடுகிறேன் !
அவளது ஆடையின் வண்ணங்களை
அவளது தேனீரின் ரகசிய பிரியங்களை மறுதளித்துவிடுகிறேன் !
அவளை பற்றிய ஒரு நினைவை வேறோரு சம்பவத்தோடு இணைத்துவிடுகிறேன் !
அவளது கணவனை போலவே அவளது இருப்பை ஒரு விளையாட்டு பொருளாக்குகிறேன் !

சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
நாம் அனுமதிக்கப்படுவது ஒரு கருணை !
அது நம்மிடம் காட்டப்படும் ஒரு பெருந்தன்மை !
சில சமயம் நம் சிநேகிதிகளுக்கு காட்டப்படும் பெருந்தன்மை !
நாம் சந்தேகிக்கப்படவில்லை என்று நம்மை நம்பவைக்கும் ஒரு தந்திரமானா விளையாட்டு !

சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
என் சிநேகிதி எப்போதும் பிசாசுகளின் புதிர்மொழி ஒன்றை பேசுகிறாள் !
உரையாடல்களின் அபாயாகரமான திருப்பங்களை பதற்றத்துடன் லாபகமாக கடந்து செல்கிறாள் !
எதைப் பற்றிய பேச்சிலும் கணவரைப் பற்றிய ஒரு பின்குறிப்பை இணைத்துவிடுகிறாள் !
ஒவ்வொரு சந்திப்பின் முடிவில் மிகவும் ஆயாசம் அடைந்து
கணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது நல்லது என்று யோசிக்க தொடங்குகிறாள் !

சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில் இடையே இருப்பது ஒரு உறவல்ல !
இலக்குகள் ஏதுமற்ற ஒரு பந்தயம் ! ஒரு அன்னியனுக்கு காட்டும் வன்மம் மிகுந்த மரியாதை !
ஒரு சட்டப்பூர்வ உரிமையாளனக்கு எதிராக ஒரு பொறுக்கியின் ரகசிய கலகம் !
தொண்டையில் நிரந்தரமாக தங்கிவிட்ட ஒரு மீன் முள் !

சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
நான் எனது பழக்கவழக்கங்களை மாற்றிகொள்கிறேன் !
அவர்களது எல்லா அக்கறைகளையும் எனது அக்கறைகளாக்கிகொள்கிறேன் !
சிநேகிதிகளுடன் பேச ஒரே ஒரு விசயம் போதுமானதாக இருந்தது !
அவர்களது கணவர்களுடன் பேச ஏராளமான கச்சா பொருள்கள் தேவைப்படுகின்றன !

சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
சிநேகிதிக்கு பதில் சிநேகிதியின் குழந்தைகளை நேசிக்க கற்று கொண்டேன் !
எவ்வளவு குடிக்க வேண்டும் ! ஜோக்குகளை எங்கே நிறுத்த வேண்டும் !
நாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும் !
எந்த கணத்தில் வெளியேற வேண்டும் என எல்லாவற்றையும் பழிகிக்கொண்டேன் !

நான் குழப்பம் அடைவதெல்லாம் சிநேகிதியை பெயர் சொல்லாமால் எப்படி அழைப்பது என்று
அல்லது பெயர்களை எப்படி வெறும் பெயர்களாக மட்டும் எப்படி உச்சரிப்பது என்று
ஒரு சிநேகிதியை சிஸ்டர் என்று அழைக்கும் ஒரு ஆபாச கலாச்சாரத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்று !

~

Sachin Sachin ! - It is the attitude that counts


Monday, October 12, 2009

ரஜினி வீட்டில் தீபாவளி..அப்புறம் எங்க வீட்ல எல்லாம் என்ன பொங்கலா ? !

~

(எல்லா மீடியாகளையும்/பத்திரிக்கைகளையும் சொல்லல. சில் கறுப்பு ஆடுகளை பற்றிதான் இந்த பதிவு.)

இந்த மீடியா தொல்லை தாங்க முடியலப்பா ! .அவர் அங்க ஒண்ணுக்கு போனாரு இவர் இந்த இடத்தில்தான் வாந்தி எடுத்தாறுனு இவனுங்க பண்ற அலும்பு இருக்கே எப்பே ! இப்பதான் மீட்டிங் போட்டு இவனுங்களை காரி காரி துப்புனானுங்க ! என்ன துப்புவாங்கினாலும் இவனுங்க அவங்க பின்னாடிதான் அலைறானுங்க !

சினிமாவில் நல்லவர்கள் இல்லாமல் இல்லை. திறமையை , உழைப்பை மதிக்கலாம், பாராட்டலாம் ஆனால் அதை மிகைபடுத்திகாட்ட வேண்டிய அவசியம் இல்லை..ஏன் இவனுங்க இதை செய்றானுங்க ! சினிமா நடிகனை பத்தி மிகைப்படித்து எழுதி அல்லது காட்டினால்தான் வியாபாரம் என்ற மாயவலை (அல்லது உண்மையான வலையாக கூட இருக்கலாம்) பின்னப்பட்டு இருக்கிறது. அவர்களை புகழ புதுசு புதுசா நிகழ்ச்சி, அவர் போன இடத்துக்கு போறானுங்க அதையே ஒரு பத்துவாட்டி ஒளிபரப்புறானுங்க. எல்லா தமிழன் வீட்ல இந்த நடிகர்கள் எல்லாம் ஒரு அங்கமாம்.. அடி செருப்பால..நான் தமிழன் தான்..எங்க வீட்ல எந்த பித்துக்குளி பயலும் அங்கம் இல்லை !

அதலயும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்ககும் அல்லகைகள் இருக்கே ... லிவிங்ஷ்டன் ஒரு படத்தில் சொல்ற மாதிரி வாங்கின காசைவிட அதிகமா கூவுறாண்டா கொய்யாலே ..அந்தமாதிரிதான். "சார் actaullay we tamil பேச learn பண்ணினது from you sir " ! இதிலிருந்து தெரியல. இவங்க கத்துகிட்டவன் எப்படி தமிழ் பேசுவானு.
நான் ஒன்னும் தமிழ் புலி அல்ல. சொல்கிற வாக்கியத்தின் அர்த்தம் புரிந்தாவது பேசாலாம் அல்லவா. இதைவிட பயங்கர காமெடினா இந்த பாராட்டுவிழா தான்.அப்புறம் சமீபத்திய ஆரம்பம் நேரடியாக தொலைகாட்சியில் பேசி புகழ்வது. ஏண்டா புகழ்வதுக்குனு ஒரு அளவு இல்லைடா.. சார் நீங்கதான் ..சார் நீங்க மட்டும் இல்லாட்டி. இந்த பூமியே ரெண்டா போயிடும்னுகிற லெவலுக்கு இவனுங்க கொடுக்கிற பில்டப் இருக்குறே ! பூமி தாங்காதுடா டேய் ! இவனுங்க ஒரு வேலை தண்ணி போட்டுட்டு பேசுவாங்க போல ! சம்பந்தமே இல்லாம பேசுவானுங்க..சமீபத்திய நிகழ்வு கமல் சார் கிட்ட கரண் சொல்றாரு காந்திய சிந்தனையை உன்னை போல் ஒருவன்ல கமல் மக்கள்கிட்ட அழுத்தமா சொல்லிருக்காராம்..அது மக்களை ரீச் ஆயுடுச்சாம் ..டேய் சாமி நீ ஏன் இன்னும் தேராமா இருக்கேனு இப்பதான் தெரியுது .
actualla நீ ஆர்வளக்கோறா இல்லை உளறுவாயா ? (பசங்க படம் effect) .

மேடையில் காலில் விழுவது அநாகரீகம் இல்லையா? உனக்கு ஆசிர்வாதம் வாங்கனும்னா தனியா போய் விழு ..அதை விட்டுபிட்டு.. ஒருத்தன் விழுந்துட்டா போதும் எங்க நம்ம விழுவாமல் போனா.. ஆப்பு வச்சுவாங்களோனு வரிசையா விழுவானுங்க..இதை எப்ப ஆரம்பிச்சதோ தெரியலா சமீபத்துல் நடக்கிற சூப்பர் சிங்கர் ஜுனியர் வரைக்கு பாதிப்பு இருக்கு ! அளவுக்கு மீறய புகழ்ச்சியை ஊக்கபடுத்துவது தவறல்லவா ? அதைதான் இன்றைய மீடியாக்கல் செய்கின்றன. ஒரு படம் வெளிவந்திறக்கூடாது. அவ்வளதுதான் அதில் நடித்த அல்லக்கை வரைக்கும் நேரடி நிகழ்ச்சிக்கு கூப்பிட்டுறுனுவாங்க ! இல்லாட்டி ஒரு பத்து பேற கும்பலா கூட்டிட்டு வந்துடுனுவாங்க! . படம் காரி துப்புற மாதிரி இருக்கும் ஆனா இவனுங்க பேசுவானுங்க பாருங்க! யாரும் நடிக்கல எல்லாரும் வாழ்ந்து இருக்காங்க..படம் மிகப்பெரிய வெற்றினு நாக்கூசாம சொல்லுவானுங்க ! சமீபத்திய உதாரணம் நேற்றைய இசைஅருவில மதுரை 2 தேனி கும்பல் வந்தாங்க :). படம் செம் பிக்கப்பாம்,ரசிகர்கள் எல்லாம் கைத்தட்டுறாங்கலாம், அழறாங்கலாம் ( அழுவது வேணா உண்மையா இருக்காலாம் ஏண்டா வந்தோம்னு). முடியலடா சாமி.

மீடியா மட்டுமா.. பத்திரிக்கைகள் தரம் இதைவிட குறைந்து கொண்டே வருகிறது. பொய் செய்தி , ஆபாச செய்தி ..அப்புறம் ஓரமா குட்டியா ஒரு வருத்தம்..அவனுங்க மீட்டிங்கல கேட்டது தப்பே இல்ல்..உங்க அம்மாவை பத்தி இப்படி எழுதிட்டு ஒரு ஓரமா வருத்தம் தெரிவிச்ச அப்ப தெரியும். அப்புறம் பாரபட்சமே பார்க்காம் பொய்யா எழுதுறது..இன்றைய ஒரு செய்தி..அனுஷ்காவுக்கு கோவில் கட்ட முயற்சி..இது எந்த விதத்திலும் உண்மையான செய்தியாக இருக்கவே முடியாது என்பது என் திண்ணம். நமக்கு பொதுவாகவே அடுத்துவர்களை திட்டுவது, குறை சொல்வது என்றால் கொள்ள பிரியம். (அது என் மனதிலும் இருக்கு என்பது இந்த பதிவை படிக்கும் போதே உங்களுக்கும் தெரிந்திருக்கும் ). இதை இந்த பத்திரிக்கைகள் இந்த மாதிரி அழுத பழசான நடிகைக்கு கோவில் கட்டுவது என்ற பொய் செய்தியை ( பழைய செய்திகள் உண்மையாக இருக்கலாம்.எனக்கு தெரியாது ) போடுகின்றன. நம்மளும் படிச்சிட்டு பைத்தியக்காரனுங்கனு திட்டி புட்டு சந்தோசமாகிடுவோம்.

சரி தலைப்புக்கும் நீ எழுதிருக்கிற மேட்டருக்கும் என்னடா சம்பந்தனும்னு இன்னேரம் யோசிச்சு இருப்பீங்க ! குங்குமம் இந்த வாரம் "ரஜினி வீட்டில் தீபாவளி.."..
அப்புறம் எங்க வீட்ல என்ன பொங்கலா அப்படினு ஆரம்பிச்சேன்..என்ன என்னமோ எழுதிட்டேன்..இந்த அவலங்களை நினைக்க நினைக்க வார்த்தை கொட்டுது..இதுக்கு மேல் எழுதினா இவ்வளவு பெரிசா இருக்கேனு படிக்காம போயிடுவானுங்கனு நினைக்கும் போது (இப்ப மட்டும் யாரு படிக்கபோரா :) ) வர்ற வார்த்தை கூட நின்றது..

~

Thursday, September 17, 2009

ஒரு தலை காதலும் சாதீய ஆதிக்கமும் !

~

இது என் கல்லூரு நண்பனின் கதை.சிவா தாழ்த்தப்பட்ட குடிசைப்பகுதியை சார்ந்தவன்.. யாருமே பள்ளி படிப்பை தொடராத அந்த பகுதியில் அவன் மட்டுமே நல்ல படித்ததால் பொறியியல் கல்லூரிக்கு வரமுடிந்தது.நான்கு வருட படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்த நேரம். அவன் வாழ்ந்த பகுதிக்கு அருகே தேவர் சமூகத்தினர் அதிகமாக குடியுருந்தனர். அந்த வகுப்பை சார்ந்த ஒரு பெண் அவனை அடிக்கடி பார்த்து சிரித்திருக்கிறாள். அவன் இதென்னடா வம்பா போச்சுனு அந்த தெரு வழியே செல்வதையே தவிர்த்து வந்தான். ஒரு நாள் எதார்த்தமாக அந்த வழியே செல்ல அந்த பெண் அவன் கிட்ட அவ இவனை காதலிப்பதாக கூறி கடிதம் ஒன்ரையும் கொடுத்திருக்கிறாள். அதை என் கிட்ட அவன் காமிச்சான். நான் அப்பவே சொன்னேன், இதை பெரியவங்கள்கிட்டு காமிச்சு உன் மேல எந்த தப்பு இல்லனு ஆரம்பத்திலே கிள்ளி எறிந்திடலாமுனு. அவன் தான் அந்த பொண்ணுக்கு இன்னும் பக்குகவம் இல்லை சின்ன பொண்ணு எதோஆர்வத்தில எழுதிடுச்சு.இது அவங்க வீட்ல தெரிஞ்சா கொன்னு போட்டுடுவானுங்கானு இரக்கப்பட்டான்.

அவன் அமைதியை பொண்ணு என்ன நினைச்சதோ தெரியல. இன்னோரு கடிதம் எழுதிருக்கு. அதை அவங்க அண்ணன் ( சின்ன பையன் தான்.என்ன ஒரு 20 வயது இருக்கும். அந்த பொண்ணுக்கு அப்பா கிடையாதுனு நினைக்கிறென்.குடும்பலும் வசதி எல்லாம் கிடையாது. அவங்க சொந்தகாரங்கதான் வசதியா இருக்கானுங்கனு ). உடனே அவன் ரவுடி ஆயிட்டேன். (செந்தில் கவுண்டரை பார்த்து சொல்ற மாதிரிதான் கத்தி எடுத்தவன் எல்லா ரவுடிங்கிறான்). அந்த பொண்ணை லைட்டா கண்டிச்சு விட்டிட்டு..இவனை புடிச்சு சாதிய வைத்து இழுவு படுத்தி பத்து பேர் (எல்லா அவங்க சமூகத்து பசங்க ) அடிச்சு பிட்டாங்கே. அவன் எவ்வளோ சொல்லியும், அவனுங்க சொல்றது அது சின்ன பொண்ணு . (வாயில் விரலை வைத்த கூட கடிக்க தெரியாது ) இவன் தான் அது மனதை கெடுத்துட்டான். அப்படினு அவன் தங்கச்சி சொக்கதங்கம் மாறி பில்டப் பண்ணிட்டானுங்க. அப்புறம் பஞ்சாயத்து பண்ணி, அவன் அந்த தெரு பக்கட்டே போகாம, வேற சுத்து வழியா போய் வந்துகிட்டுருந்தான்.

அப்புறம் ஒருவழியா வெளி நாட்டில் வேலைகிடைச்சு போய்ட்டான். அப்புறம் 2 வருசம் கழிச்சு லீவில் வந்தான். பொண்ணுபார்த்து கல்யாணம் பண்ணிடலாம்னு அவனை பார்க்க போனப்ப வீட்ல பேசிட்டு இருந்தாங்க. அப்பதைக்குனு பார்த்து அந்த பொண்ணுக்கு கல்யாணவரன் பார்த்திறாங்க.ஆனா அந்த பொண்ணு கல்யாணம் பண்ணினா சிவாவதான் பண்ணுவேன் சொன்னாதாம் இவன் வந்திருக்குறதை எப்படியோ தெரிந்துகிட்டு ( என்னா வில்லத்தனம் ) . மறுபடியும் அவங்க அண்ணன் லூசு கத்தி எடுத்துகிட்டு பத்து பேறோடா சிவா வீட்டுக்கு போய் அவனை குத்த முயற்சி செய்திருக்காங்க. அதில் அவன் நண்பனுக்கு அடிபட்டுச்சு சிவா எப்படியோ தப்பிச்சு ஓடிட்டான். போலீஸ்ல சொல்லவேண்டியதானட கேட்டேன்.இன்னைக்கு சொல்லாம்டா.நம்ம தெருவை சுத்தி அவனுங்கதான் இருக்கானுங்க. போலிஸ் எப்போதுமே இங்க இருக்க முடியாதுனு அவங்க அண்ணன் சொன்னதாக சொன்னான்.( உண்மைதான்). அப்புறம் மறுபடியும் பஞ்சாயத்து அப்பவும் ஒருதலை பட்சமாகவே எல்லாரும் பேசினாங்க. அவன் மறுபடியும் இந்த ஊரே வேணாம்டா மறுபடியும் வெளி நாட்டுக்கே போய்ட்டான்.
அப்புறம் கடந்த மாதம் அவனும்மு திருமணம் எங்க ஊரில் ஒருத்தருக்கு கூட சொல்லல. பொண்ணு வீட்ல வத்து கல்யாணம் பண்ணிட்டு இப்ப சேலத்துல் குடும்பத்தோடா இருக்கான். ஏண்டா ஊரில் யாருக்கு சொல்லனா, அந்த பொண்ணுக்கு தெரிந்த எதாவது பண்ணிகுடுச்சான் அதுக்கு நான் தான் காரணம்னு உயிர எடுப்பானுங்க.அதான் ஊரில் யாருக்கும்
சொல்லலைனான்.

ஒரு பொண்ணாலயும் ,இந்த சாதி வெறினாலும் ஒருபாவமும் அறியாத சிவா பாதிக்கபட்டான். இந்த மாதிரி எத்தனொயோ சம்பவங்கள் எல்லா ஊரிலையும் நடக்குது. நிறைய பேர் தீண்டாமைக்கும் , சாதிய இகழ்வலுக்கு பார்பணர்கள் காரணமும் என்று அவர்களையே திட்டி தீர்க்கிறார்கள். எனக்கென்னமோ அவர்களாய் திட்டுவது சுலபம் என்பதால் தான் அவர்களை திட்டுவதாக நினைக்கிறென். தமிழ்னாட்டில் நடக்கும் சாதிய இகழ்வளுக்கு பெரும்பாலும் யார் காரணம் ?? பதில் உங்க மனசாட்சிக்கு தெரியும் அது பார்பணர் அல்லாத பிற மேல்சாதி வகுப்பை சார்ந்தவர்கள் தான் என்று.

~

Tuesday, September 1, 2009

தமிழ் நாட்டு மக்களை இழிவு படுத்தாதீர்கள் !

~

காசு வாங்கிட்டு ஓட்டு போடுவாங்க, அல்லது சினிமாக்காரனுக்கு தான் ஓட்டு போடுவாங்க தமிழ் மக்கள் என்ற மாயை பத்திரிக்கைகளாலும், ஒளி ஊடகங்களாலும் ஏன் நிறைய பேரின் பதிவின் மூலமாகவும் உருவாக்கபடுகிறது. இது எல்லா தமிழ் நாட்டு மக்களையும் இழிவு படுத்தும் செயல்.

ஓட்டு போட்ட அனைவரும் பணத்துக்காகதான் ஓட்டு போட்டாங்கனு என்பதை நான் ஒத்து கொள்ளாமாட்டான்.
இவங்க பணம் வாங்காட்டியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அவருக்கு தான் போட்டுறாப்பாங்க!
எதையுமோ சும்மா கொடுத்தா பெரும்பான்மையான மக்கள் வாங்கதான் செய்வார்கள் ( அது மாற இன்னும் சில தலைமுறைகள் ஆகும்).
அப்ப பணம் சும்மா கொடுத்த வாங்காமாலா இருப்பார்கள். பணம் வாங்கியதற்காக அவனுக்கு ஓட்டு போடனும் நினைப்பவர்கள் சதவீதத்தில் குறைவு !
முடிவு அவங்களுக்கு சாதகமா வந்தால் மார்தட்டி கொள்வதும், இல்லாட்டி காசு கொடுத்தாட்டாங்கே என்றும், மெசின் கோளாறு என்று சொல்வது சின்ன பிள்ளை தனமா இல்லை ? எதிர்கட்சி ஜெயித்தா தமிழ் நாட்டு மக்கள் கூலிக்கு வோட்டு போடுபவர்களா? அப்படி சொல்லுவர்கள் வாழ் நாள் முழுசாசொல்லிட்டே இருக்க வேண்டியதுதான் !

ராகுல் காந்தியின் மாஸ்டர் பிளான் உத்திரபிரதேசத்துக்கு தொழிற்சாலைகளை உருவாக்குவது , ஆனா தமிழ் நாட்டிற்கு விஜய்யை காங்கிரசில் சேர்ப்பது..
இதில் இருந்து என்ன தெரியுது ? தமிழ் நாட்டு மக்கள் எல்லாம் கேனப்பயலுங்க ! விஜய் வந்து "அண்ணா காங்கிரஸ்க்கு வோட்டு போடுங்கனா .." என்ற சொன்னவுடன் அலை அலையா போய் கை சின்னத்துல வோட்டு கொத்துவாங்கிடுவானுங்க என்ற நினைப்புதானே !
இதை மார்தட்டி மாஸ்டர் பிளானு வேற சொல்லுபவர்கள் மூஞ்சில் காரி துப்பலமா கூடாதா ?

~

Tuesday, August 18, 2009

மாமியார் மருமகள் - நடுவில் மகன்கள் படும் பாடு பாவம்தானே ?

~

உலகத்தில் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கண்டுவிடலாம் போல இதை தீர்க்க எத்தனை பேர் வந்தாலும் முடியாது போல ! இவர்கள் சண்டையில் பெத்த/வளர்த்த அம்மாவையும் கண்டிக்க முடியாமல் , நம்பி வந்த மனைவியயும் கட்டு படுத்த முடியாமல் ஆண்கள் படும் கஷ்டம் இருக்கு பாருங்க ! சொல்லிமாளாது ! மருமகள் பக்கம் பேசினா, பொண்டாட்டிதாசன் என்றும், அம்மாவை கொடுமை படுத்திறான் பிள்ளை என்ற நற்பெயர்களும், அம்மா பக்கம் பேசினா, மருமகளை கொடுமை செய்கிறார்கள் என்றும் கொஞ்சம் அதிகமானால் வரதட்சினை கொடுமை வழக்கையும் சந்திக்க நேரிடுகிறது..

அப்படி இவங்களுக்குள் என்னதான் அப்படி பிரச்சனை என்று பார்த்தால் சின்ன பிரச்சனையாக இருக்கும் அதிய ஊதி பெரிதாக்கி கடைசில வெடிக்கும் சமயத்தில் நம்ம கிட்ட பஞ்சாயத்துக்கு வரும்..நம்மாளுங்களும் வழக்கம் போல தலைய தலைய ஆட்டிட்டு சரி விடும்மா, / சரி விடுடினு ..சொல்லி சமாதான படுத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். மாமியார்களுக்கு, மனதுக்குள் மருமகள் நமக்கு சேவை செய்ய வேண்டும், அல்லது நம்ம மாமியார்கிட்ட இருந்த மாதிரி இவளும் இருக்கனும், அவ மகன் கிட்ட இருந்து தன்னை பிரித்துவிடுவாள் என்ற எண்ணங்கள் உண்டு..அதை சிலபேர் அடக்க தெரிந்திருக்கிறார்கள் .சிலருக்கு அது முடியவில்லை ! இன்னொரு பக்கம் மருமகள் முதலில் கொஞ்சம் பொறுத்து போனாலும் சிறிது காலம் கழித்து அந்த பொறுமை காணாமல் போய்விடுகிறது. இவங்களுக்கு ஏன் நம்ம அடங்கி போகனும்,(அவங்க நல்லதே சொன்னாலும்) இவங்க சொல்றத நாம ஏன் கேட்கனும் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. அப்புறம் மாமியாரை வில்லி போல பாவிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

ஒரு உண்மை சம்பவம். நான் ஈரோட்டில் பக்கத்தில் ஒரு திருமணத்துக்கு சென்று இருந்தேன். ஒரு பஸ்ஸில் ஏறினோம். பஸ்ஸில் முன்பக்கம் கூட்டமாய் இருந்தது. பின்னாடி கடைசி சீட்டில் ஒரே ஒருத்தர் மட்டும் தனியாக உட்கார்ந்திருந்தார். நான் " அட கிருக்க பயலுகலே ..பின்னாடி சீட்டே காலியாக இருக்கும் போது முன்னாடி ஏண்டா போய் நிக்கீறிங்கனு நினைச்சுட்டு " நான் போய் பக்கத்தில் உட்கார்ந்தேன். அவர் தீடீரீனு "அம்மா ஏம்மா இப்படி கத்துற ! மானம் போகுது ..ஏண்டி நீதான் கொஞ்சம் அமைதியா இறேண்டினு " பேச ஆரம்பிச்சார். நான் அவர் செல்போன் மைக்லதான் பேசறார்னு நினைச்சேன்.கொஞ்ச நேரத்தில் "அம்மா அம்மானு" அழ ஆரம்பிச்சிட்டார். அப்புறம் இறங்கனதுக்கு அப்புறம் விசாரிச்சா, அவருக்கு புத்தி சுவாதினம் இல்லையாம்.நல்ல படித்தவராம். இவருக்கு கல்யாணதுக்கு அப்புறம் மாமியார், மருமகள் சண்டையில் ஒரு நாள் அவங்க மனைவி கோபபட்டு அவங்க அப்பா வீட்டுக்கு போய்ட்டாங்களாம். இவர் அவங்க அம்மாவை கண்டிக்க அவங்க அம்மா அன்று இரவு தற்கொலை செய்திட்டாங்களாம். அவங்க அம்மா இவரை கஷ்ட பட்டு வளர்த்தாங்களாம். அவங்க இறந்திருந்ததுக்கு அப்புறம் இவர் இப்படி புத்திசுவாதினல்லாமல் போய்ட்டாராம்..ஒரு குடும்பமே சிதைந்திருச்சு ! யார் மீது குற்றம் இருந்தாலும் இதில் எல்லாருக்குமே நஷ்டம் தான்.அவங்க அம்மா உயிர் போச்சு..அவர் மற்றும் இவரது மனைவின் வாழ்க்கை போச்சு ! இப்படி எத்தனையோ குடும்பங்கள் சிதைந்திருக்கு ! இன்னைக்கு கூட பேப்பரில் மாமியார், மாமனாரை விஷம் வைத்து கொன்றுவிடுவேன் என்று சொன்னதால் மனைவியை கொன்ற மகன் என்று செய்திவந்துருக்கு .

கூட்டு குடும்பத்தில்தான் இந்த பிரச்சனை , தனிக்குடித்தனம்தான் தீர்வு என்றால் வயதான காலத்தில் பெற்றோரை கவனிக்க மாட்றானுங்க அப்படினு அவப் பெயர் அந்த மகன்களுக்கே ! மறுக்க முடியமா யாராலவது ? நீங்க நிறைய வீடுகளில் பார்த்திருப்பீர்கள் ..அப்பாவின் சொந்தங்களோட தொடர்பு கொஞ்சமாத்தான் இருக்கும்..அதுவும் விழாக்கள் போன்றவற்றில்தான் . அம்மாவின் சொந்தத்தில்தான் தொடர்பு அதிகமா இருக்கும் ..அம்மா பெரும்பான்மையா அப்பாவின் சொந்தங்களோட பழகவே விடமாட்டாங்க.. ஏன் இப்படி ? இதுக்கும் மாமியார் மருமகள் பிரச்சனைக்கும் என்ன சம்பந்தனும் நீங்க நினைக்கலாம்..ஆனா எனக்கென்னமோ அதுக்கும் இதுக்கும் தொடர்பு இருக்கிறமாதிரியே தோனுது ? மொத்தத்தில் பார்த்தீங்கனா பாதிக்கபடுறது பாழாப்போன ஆண்வர்க்கம் தானுங்க ! ஏன் இப்படி ? மாமியார் -மருமகள் பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன என்று மூலையில் உட்கார்ந்து யோசிச்சு பின்னோட்டம் போடுங்க !

~

Thursday, August 13, 2009

மாநகராட்சி பூங்கா ! கலாச்சார காவலர்கள் !

~
மாநகராட்சி பூங்கா ! கலாச்சார காவலர்கள் !
நேற்று மாலைப்பொழுதில் உணவருந்த, நண்பனுக்காக அசோக் நகர் பூங்காவிற்கு அருகில் நின்று கொண்டிருந்தேன்.அவன் வருவதற்கு ரொம்ப நேரம் ஆகும் என்று கூறியதால், பக்கத்தில் இருக்கும் அசோக் நகர் பூங்காவிற்கு சென்று அமரலாம் என்று பூங்காவினுள் சென்றேன். 100 அடி ரோட்டில் வாகன சத்தங்களுக்கு இடையே ஓரளவுக்கு நன்று பராமரிக்க பட்ட அமைதியான பூங்கா ! பெரியவர்கள் பூங்காவினுள் அமர்ந்து வேகமாக ஓடும் நகர வாழ்க்கை சற்று மறந்து , தங்கள் கால நினைவுகளை அசை போட்டு கொண்டுருந்தனர். குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர் . உட்கார இடமில்லாவிட்டால் தரையில் உட்கார்ந்து இளசுகள் அரட்டை அடித்து கொண்டுருந்தனர். சில நடுத்தர வயது தம்பதியியனர் அமர்ந்து பட்ஜெட் போட்டு கொண்டிருந்தனர். சில காதலர்கள் கவலைகள் மறந்து கலந்துரையாடிக் கொண்டிருந்தனர் . பூங்கா என்றால் பூக்கள் கூட இல்லாமல் இருக்கும் காதலர்கள் இல்லாமல் இருக்குமா ! நானும் சற்று நடந்து எல்லாரையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த கலாச்சார காவலர் இளம் வயது காவல்துறை அதிகாரி உள்ளே நுழைந்தார். ஜோடியாக அமர்ந்திருந்த சுடிதார் பெண்களை எல்லாட் கிட்ட வந்து இவன் யாரு ! போய் கல்யாணம் பண்ணிட்டு வாங்க ! இல்லை லாட்ஜ்க்கு போங்க இங்கே எல்லாம் வரகூடாது என்று கொஞ்சம் கூட நாகரீகமே இல்லாமல் விரட்டினார். அந்த வழியிலே பார்தாலே ரிச் லுக்ல ஒரு ஜோடி இருந்தது. அந்த போலீஷ் அவர்களை மட்டும் கண்டு கொள்ளவே இல்லை . என் பக்கத்தில் இருந்த ஜோடிக்கு வந்து இந்த பொண்ணு யாருன்னு கேட்டாரா, அவ்வளுதான் அந்த பொண்ணுக்கு வந்துச்சு பாருங்க கோபம் "யாருனு கட்டகிற போற பொண்னு ஏன் கேட்கிறங்க..இங்க என்ன கட்டி பிடிச்சிட்டா இருக்கோம் பேசிட்டுதானே இருக்கும்" அப்படுனு கோபமா சொல்ல அவர் பேயரஞ்ச மாதிரி ஆயிட்டாரு ..அப்புறம் சுதாரித்துகிட்டு , என்னே போலீஷ்கிட்டே திமிரா பேசிறியா வாங்க ரெண்டு பேரும்னு கூட்டிட்டு போய்ட்டாரு ! அந்த பையன் தான் பயந்தான் , ஆனால் அந்த பொண்ணு வாங்க பார்த்திரலாம்னு தைரியமா பேசுனாங்க !
கடைசிக்கு யாரும் மறைவிடத்தில் போய் பேசலாம்.எல்லாரும் பண்பா பெஞ்சில்தான் உட்கார்ந்து பேசனாங்க !அந்த போலிஷ் ஏன் அந்த ரிச் லுக் ஜோடிய மட்டும் எதுவும் கேட்கல .கடைசிக்கு அவங்கதான் கொஞ்சம் நெருக்கமாய் இருந்தார்கள் .
எந்த சட்டத்தில் உட்கார்ந்து பேசுவது தவறு என்று தெரியவில்லை ! சட்ட பூர்வமாக இந்த காவல்துறை அதிகாரிய என்னே செய்யலாம்..
தெரிந்தவர்கள் சொல்லுங்க ! இல்லை இப்படி பட்ட சமயங்களில் இந்த மாதிரி அவமானங்களை, தொல்லைகளை தாங்கிதான் ஆக வேண்டுமா ?

~

Tuesday, July 28, 2009

சாவுங்கடா ! நான் தான் அடுத்த முதலமைச்சர் சொல்கிறார் மக்கள் இயக்கம் தொடங்கிய விஜய்

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார். புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த மக்கள் இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் விஜய் பேசுகையில்,

என்னிடம் உள்ள சமூக சிந்தனை ரசிகர்களாகிய உங்களிடம் உள்ளது. உங்களிடம் உள்ள சமூக கண்ணோட்டம் என்னிடம் உள்ளது. நான் 50 ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் நீங்கள் 5 ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறீர்கள்.
நான் 100 ஏழை குழந்தைகளுக்கு மோதிரம் போட்டால் நீங்கள் 10 குழந்தைகளுக்கு போடுகிறீர்கள். அதே போல் பள்ளி மாணவர்களை படிக்க வைக்கிறீர்கள்.

ஏழை மாணவ, மாணவிகள் பயில இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை திறந்து வைக்கிறீர்கள். நீங்கள் செய்யும் நல்ல காரியத்தால் எனக்கும் நல்ல பெயர் வாங்கி கொடுக்கிறீர்கள்.

எனது அப்பா லேசான கோடு கிழித்து ஒத்தையடி பாதை காட்டினார். நான் அதை தார் ரோடாக மாற்றினேன். பின்பு அதனை ஹைவே ரோடாக மாற்றினேன். மீண்டும் உழைத்து அதை 6 வழி சாலையாக மாற்றி உழைத்து வருகிறேன்
இந்த இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும், ஒரு லட்சம் உறுப்பினர்களையும், நகர, வட்டங்கள் சார்பில் 50 ஆயிரம் உறுப்பினர்களையும், கிளை மன்றங்களின் சார்பில் 5 ஆயிரம் உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும்.

இந்த இயக்கம் எப்படி வரும். எப்படி நடக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாது. நீங்கள் மனது வைத்தால் இந்த இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும். அப்போது என் குடும்பம் என் தொழிலை விட இந்த கட்சியை பெரிதாக எண்ணி உழைப்பேன். அது உங்கள் கையில் தான் உள்ளது என்றார்.

எனக்கு தெரிந்த விஜய் ரசிகர் மன்றத்தை உதராணாமா வைத்துதான் இதை எழுதுகிறேன்.சில ஒழுக்க சீலர்கள் இருந்தால் மன்னிக்கவும் ! ஒக்கா மக்கா ஆனா ஊனா நலத்திட்ட உதவிகள் ஏண்டா இப்படி எத்தனை நாளைக்குடா செய்தித்தாள செய்திவர்ரதுக்காக சீன் போடுவீங்க !

இப்படிதான் கோடையில் தண்ணீர் பந்தல் பயங்கர செலவு பண்ணி , சீன் போட்டு ஆரம்பிச்சானுங்க ! ஆரம்பிச்ச நாள் அன்று செலவு செய்ததை வைத்து ஊருக்கே கோடையில் தண்ணீர் கொடுத்திருக்கலாம்..ஆனா ஆரம்பிச்சா 1 வாரத்துக்கு அப்புறம் பராமரிக்க ஆள் இல்லை ! இப்படித்தான் நடக்குது இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம்..3 மண்குடம் வச்சு தண்ணீ ஊத்த 1 லட்சம் செல்வு பண்றாங்க ! எல்லாம் பேப்பர்ல நியுஸ் வர்ர வரைக்கும் தான் ..ஏண்டா உங்களுக்கு எல்லாம் எங்கிருந்துடா காசு வருது ! அதை உருப்படியா செலவு பண்ணலாம்ல !

இலங்கை மக்களுக்காக 1 லட்சம் கொடுத்து புட்டு , லாரன்சே 10 லட்சம் கொடுத்தார், மேடையில் எதோ இவரை பற்றி எதோ சொல்ல அந்த image சரிவை சரி செய்ய காசு செலவு பண்ணாம ஒரு நாள் சாப்பாடை மட்டும் விட்டு கொடுத்துட்டு உண்ணாவிரதங்கிற பேர்ல உன் பாட்டை போட்டு டான்ஸ் ஆடுன கூட்டம் தானடா நீங்க ! இதுல வேற வாங்கின பிரியாணி பத்தலனா மேடையிலே உங்க அப்பன் சொன்னார்..உண்ணாவிரதம் ரொம்ப சந்தோசமாய் இருந்த்து நீங்க சொன்னப்ப எனக்கு வந்த ஆத்திரத்துக்கு தொலைக்காட்சி உடைத்திடலாம் போல இருந்தது !

இவர் அப்பா ஒத்தையடி பாதைய காண்பித்தார் , இவர் தார் ரோடா மாத்தினாராம்..இதை படிக்கும் போது இவர் ஆரம்ப காலத்தில நடித்த ரசிகன் ..போன்ற மிகச்சிறந்த படங்களும், சங்கவி இவங்க கிட்ட பட்ட பாடும் தான் நாபகம் வருது !

விஜய் அரசியலுக்கு வரவேண்டும்..காசை எல்லாம் விட வேண்டும்..வாடி மாப்ள இருக்குடி உனக்கு !

விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பேசுகையில்,

நான் பல புரட்சி படங்களை தயாரித்துள்ளேன். அதில் அநியாயங்களை தட்டி கேட்கும் கதை அதிகமாக இருக்கும். இதனால் நாடு மாறவில்லை. இதற்காக யாரும் என்னை பாராட்டியதும் இல்லை. இது என் மனதில் எழுச்சியாக இருந்தது.

இதனால் என் மகனை நடிக்க வைத்து அதன் மூலம் எழுச்சியை கொண்டு வந்தேன். இதற்காக ஒரு அமைப்பை ஆரம்பித்தேன். அது மக்கள் இயக்கமாக மாறி உள்ளது.

உறுப்பினர்களை சேர்ப்பதை பொறுத்து தான் உங்களின் கனவு நினைவாகும். உண்மையான உணர்வு உள்ளவர்கள் மட்டும் இதில் சேரலாம் என்றார்.

இவர் ஆதி போன்ற புரட்சி படங்களை தயாரித்து இருக்கிறார்..ஆனால் பாவம் பாருங்க இவர யாருமே பாரட்டல ! விஜய் TV ல போக்கிரி படத்தைவிட அதிகம் வரவேற்பு பெற்ற பேக்கிரி லொள்ளுசபாவுக்காக அவர்களை மிரட்டி அப்புறம் அவர்களே விஜய் பிறந்த நாள் கொண்டாடவைத்தவர் ! அதில் ஒருத்தன் பாண்டிசேரிலிருந்து, சென்னை வரைக்கும் பின்னாடியே நடந்த வந்தான்..விஜய் ரசிகனாம்..அப்பா எப்பேர் பட்ட பெருமையை தேடி கொடுத்திருக்கிறார் அவங்க பெற்றோர்களுக்கு ! மக்களே இந்த கொடுமை எல்லாம் தமிழ் நாட்டில் இருந்தா பார்த்துதான் ஆகனும் வேறவழியில்லை !

மகனை நடிக்க வச்சு எழுச்சியை கொண்டுவந்தாராம். முடிலடா சாமி ! ...உங்களுக்கு எல்லாம் மன்சாட்சி இல்லையா ~ கனவு நினைவாகுமா..என்ன கனவுடா ? முன்னாடியாச்சும் ஒரு பேச்சுகாவது மக்களுக்கு நல்ல செய்வோம்னு சொல்வாங்க ! இப்ப எல்லாம் அது கூட இல்லை !

நீங்க வாங்க அரசியலலுக்கு ! இப்ப தமிழ் நாட்டு மக்கள் உசாருடி ! விவேக் ஒரு படத்தில் லெஃப்ட ல இண்டிகேட்டர் போட்டுட்டு ,ரைட்ல கைய போட்டு, நேரா போய்டே இருப்போம்னு சொல்றமாதிரி ஒருத்தனே பத்து கட்சில உறுப்பினரா இருப்போம்..எவன் ஆட்சில இருக்காணோ அவன் கரை வேட்டி கட்டிப்போம்..உங்களுக்கு தான் வோட்டுனு காசு கொடுக்கிறவங்க எல்லாட் கிட்டயும் வாங்க்கிட்டி, எங்க விருப்படி ஓட்டு குத்துவோம் !
வாடி மாப்ள் வா !

Thursday, July 9, 2009

கரணம் தப்பினால் மரணம் - அந்நியன் !

~

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை சர்க்கஸ்லயோ , இல்ல எதோ சாதனை நிகழ்ச்சிகளிலோ அல்ல..நம்ம சென்னை வாழ் வாகன ஓட்டிகளுக்குதான் .(குறிப்பா இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், ஷேர் ஆட்டோவில் புட் போர்டு அடிக்கரவர்களுக்கு தான்..பஸ்ஸில்தான் அப்படினா , ஷேர் ஆட்டோவிலுமா? ) வேகம் ,விதி மீறல்கள், ஹார்ன் என்று இவர்கள் செய்யும் அட்டூழியும் இருக்கே தாங்க முடியல ! நடைபாதை மேடா இருந்தால் கூட அதில் பைக்கை ஏத்தி ஓட்றாங்க ! இதில் வேற நடைபாதையில் போறவங்களை தன் பைக்கு வழிவிட சொல்லி ஹார்ன் அடிக்கிறாங்க ! கேட்டா அவசரம்..அவசரம்.எனக்கு இப்படி நடந்தது..வேற எங்கேயும் இல்லைங்க படித்த மக்கள் அதிகமாக் வாகனம் ஓட்டும் டைடல் பார்க் அருகாமையில். நான் அப்படியே திரும்பி பார்த்து, அங்கேயே நின்று அவரை முறைத்து பார்த்து பிறகு நடைபாதயில் இருந்து இறக்கி சாலையில் ஓட்டி சென்றார்.ஆனால் இந்த முரைப்பு எல்லாம் எத்தனை பேரு கிட்ட வேலைக்கு ஆகும்னு தெரியல !.

இதே மாதிரி எல்னெட்/டைடல் பார்க் வழியா வண்டிகள் செம வேகமா போகும். இவங்களாய் சாமளித்து உள்ளே போறதக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். நான் போய் tidel and elnet secutiry roomla சொன்னேன் இங்க speed braker போடுங்கனு. அவர் தலை தலையா ஆட்டுனார். அதுக்கு அப்புறம் நான் ஒரு வருடம் வெளி நாடு சென்றுவிட்டென். போன வாரம் அங்கு போன போது speed braker இருந்தது. நான் பரவாயில்லையேனு என நண்பங்கிட்ட சொன்னபோது, அவன் சொன்னா இரண்டு மூனு தடவை விபத்து நடந்திருச்சு அதனால் தாண்டா போட்டாங்கனு.. இப்படி எதாவது நடந்தாதான் நம்மாளுங்க விழிக்கிறாங்க !

இதே மாதிரி cross junction singnalஅ ரெட் விழுந்தா கூட, எதிர்தரப்பில் வண்டி நெருங்கும் வரை சாலையை கடக்கிறாங்க..சிலபேர் கடைசி நொடி வரை முயற்சி செஞ்சிட்டு முடியல எனும் போது அப்படியே சாலை நடுவுல "பெப்பரே பேனு" நிற்பான் பாருங்க ! போறவன் வர்ரவன் எல்லாரும் அவனை திட்டுவான்..திட்டி புட்டு அடுத்த சிக்னல்ல அவனும் அதேதான் செய்வான் .

சாலையில் எல்லாரும் ரேஸ் ஓட்டுற மாதிரிதான் ஓட்றாங்க ..அதிலயும் சிக்னல் போட்டவுடன் பாருங்க ! ஏண்டா இவ்வளு வேகாம ஓட்றீங்கனு கேட்ட எனக்கு பின்னாடி வர்றவன் வேகமா வர்றான் அதனால் நான் வேகாம போறேன் சொல்றாங்க எனக்கு நெருங்கிய நண்பர்கள் ! வேகாம போய் குப்பறக்கு அடிச்சு விழுந்து உறுப்புகளை இழந்தவங்க எத்தனை பேர். இரண்டு மூனு வருசத்துக்கு முன்னாடி காந்தி நகர்ல் வேலை பார்த்துகிட்டிருந்தேன். ஒரு நாள் பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன், அப்போ வண்டியில் வேகாம போனவன் வழியில் என்ன குறுக்கிட்டிச்சு தெரியல், தீடிர்னு பிரேக் போட்டு கிழே விழுந்தான். நல்லவேளை அவன் மண்ணில் விழுந்ததாலும், தலைகவசம் அணிந்திருந்தாலும் சிறு காயங்களுடன் தப்பித்தான். உடன் இருந்தவர்கள் எல்லாம் போய் தூக்கிவிட்டோம். ஒருத்தன் கிழே விழுந்த அறிவுறை சொல்ல ஒரு கும்பல் கூடுவது வழக்கம் என்றாலும் ஒரு ஊனமுன்றவர் சொன்ன வார்த்தை இன்னும் என் காதில் கேட்கிறது. "தம்பி கை, கால் எல்லாம் நம்மளோட விலை மதிக்க முடியாத சொத்து..அதை இழந்திடாதா.. அதோட அருமை இல்லாதங்களுக்கு தான் தெரியும்" .என்பதுதான்.

அப்புறம் பாதசாரிகள் , சிக்னலே இருந்தாலும் சாலை கடக்கிறதுக்குள்ளா செத்தொம் பிழைச்ச கதை தான். வெளி நாட்டில் எல்லாம் பாதசாரிகளுக்கு தான் முன்னுரிமை.ஆனால் நம்ம முதியவரா இருந்தாலும் அவர்களை மதிப்பதே இல்லை. என்னடா இவன் வெளி நாட்டு புகழ் பாடுறானு நினைக்க கூடாது. உண்மையை என்றைக்கு ஒத்துகனும். சும்மா நாங்க மூவாயிரம் வருசத்து முன்னாடியே நாகரீகம் போற்றினோம் கதை எல்லாம் வேலைக்கு ஆகாது. ( இதற்கு எது தமிழ் கலாசாரம்னு தனி பதிவு போடுறேன் )

ஏன்னு இபப்டி பண்றீங்கனு கேட்ட ஒரே பதில் "அவசரம் ,லேட் ஆயிடுச்சு".. தினமுமா லேட் ஆகுது ? அந்நியன் படத்தில விக்ரம் சொல்லும் போது கைதட்டும் நம்ம, நிஜ வாழ்க்கையில் கடைபிடிக்க முடியதா ? ஆனால் வெளி நாட்டுக்கு போன மட்டும் Rules சரியா பின் பற்றுவோம். இதை பத்தி என்னோட வெளி நாட்டு நண்பர் சொன்னார் Volumea face பண்ற அளவுக்கு infrastructure இருந்தா எல்லாரும் கடைபிடிப்பாங்க , அப்புறம் எல்லாரும் சொல்ற மாதிரி "ஊரொடு ஒத்து போ" பழமொழி சொன்னார். இங்க எல்லாரும் கடைபிடிக்கிறாங்க , அதனால்தான் இங்க வர்றவங்களும் கடைபிடிக்கிறாங்க அதுவும் மட்டும் இல்லாமல் அதுக்கு தகுந்த மாதிரி சாலை வசதிகள் மற்றும் infrastructure இருக்கு அப்புறம் Volumeம் கம்மியா இருக்கு, ஆனால் உங்க ஊரில் Volume அதிகம் அதனால் தான் அங்கே கடைபிடிக்கிறதில்லை. இதுவும் யோசிக்க வேண்டியதான் இருக்கு .

இப்படி நம்ம நாட்டில எந்த ஒரு பிரச்சனைக்கு , கடைசியா கடைசியா root cause மக்கள் தொகை அல்லது நம்ம தட்ப வெப்ப நிலை யாதான் இருக்கு.வெளி நாடுகளுக்கு நல்ல குளிரான தட்ப வெப்பனிலை, பரந்த நிலப்பரப்பு, குறைவான் மக்கள் தொகை, நல்ல வளம் என்று கொடுத்திருக்க ஆண்டவன் நம்மளை மட்டும் ஏன் சபிச்சிட்டானு தெரியல!

~

Saturday, June 27, 2009

தேசிய அடையாள அட்டை, ஒரே கல்வி முறை , நலத்திட்டங்கள் மற்றும் ராமதாஸ் !

~

இந்தியா முழுவதும் ஒரே சீரான கல்விமுறை ! - வரவேற்போம் !

கபில் சிபில் ஒரு முன்னோடியான யோசனையை தெரிவித்திருக்கிறார்.. இந்தியா முழுவதுக்கும் ஒரே கல்வி முறை . இது கொஞ்சம் சிரமமான ஆனால் வரவேற்கதக்க யோசனை ...
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொருவிதமான கல்வி முறை, வெவ்வேறு பாடப்பகுதிகளில்.ஒரு சில மாநிலங்களில் +2..இன்னும் சில வற்றில் PUC.. அப்புறம் மெட்ரிக், CBSC..ஏன் இவ்வளவு வேறுபாடுகள் ? கல்வி முறை அனைவருக்கும் சமமாகட்டும், மொழியையும், அவர்கள் வசிக்கும் மாநிலம் சார்ந்த வரலாறு போன்ற பாடபகுதிகளை மட்டும் மாநிலத்திற்கு தக்கவாறு தேர்வு செய்ய மாநில அமைப்பிற்கு அதிகாரம் கொடுக்கலாம்..மற்றபடி அனைத்தையும் சமமாக்குவோம். இதை தமிழ் கட்டாயம் சட்டத்தை எப்படி முதல் வகுப்பிலிருந்து ஆரம்பித்து ஆண்டுக்கு ஒவ்வொரு வகுப்பாக incetementala implement பண்ணாறாங்களோ , அதே மாதிரி பண்ணிணா நடைமுறை சிக்கல்களை தடுக்கலாம்..இப்பவே சில பிற்போக்குவாதிகள் இதை எதிர்க்க ஆரம்பித்து விட்டன். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து, வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள் !


இந்திய அடையாள் அட்டை

இந்தியா முழுவது தேசிய அடையாள் அட்டை ( Smart Card ) அறிமுகப்படுத்த மத்திய அரசு ஒரு நிறுவனத்தை அமைத்துள்ளது..இதற்கு புகழ் பெற்ற இன்போசிஃஸ் நிறுவனத்தின் உயரதிகாரியான் நந்தனை தலைவராக நியமித்துள்ளது . வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள் அவருக்கும், அந்த நிறுவனத்துக்கும். இந்த அடையாள் அட்டையாவது முறைகேடாக பயன்படுத்தா வண்ணம், ஒருவரே பல அட்டைகளை வைத்துக்கொள்ள முடியா வண்ணம் வழங்கிடப்படும் என நம்புகிறேன். பொதுமக்களாகிய நமக்கும் இதை பொறுப்பாக பெற்றுக்கொள்ள , நேர்மையான முறையில் பயன்படுத்த வேண்டிய கடமை உள்ளது. இந்த அடையாள் அட்டையை வைத்துகொண்டு எந்த ஊரில் இருந்தும், நாம் உட்பட்ட தொகுதிக்கு வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டால் வாக்குபதிவு சதவீதம் இன்னும் கூடும்.

நலத்திட்டங்கள் - !

சமீபத்தில் சில மேம்பாலங்கள் மற்றும் சில் நலத்திட்டங்கள் மாநிலம் முழுவது ஆங்காங்கே செயல்படுத்தபடுகின்றன் அல்லது படுகின்றன.நான் நிறைய பேர் இதை பற்றி பேசுவதை கேட்டுருக்கிறேன்..அன்னைவரிடம் இருந்து ஒரே மாதிரியான் வரிகள்.. "ஆமா இந்த் திட்டத்தை வைத்து இவனுங்க எவ்வளவு கொள்ளை அடிச்சாங்களோ ! ( அல்லது கொள்ளை அடிப்பாங்களோ )..."
எனக்கு ஒன்னு புரியல..உங்களுக்கு என்னதாண்டா செய்யனும்..திட்டம் கொண்டுவந்தாலும் திட்றீங்க! வரலாட்டயும் திட்றீங்க ! மொத்தத்தில் நம்மக்கள் அடுத்தவர்களை திட்டுவதில் அதிக ஆனந்தபடுகிறார்கள் இத்தனைக்கும் அவர்கள் எச்சி கைகளால் காக்கா கூட விரட்டமாட்டார்கள் அதுக்கு இரண்டு பருக்கை போய்டும்னு ..பாதி பேர் ஓட்டும் போடுறதில்லை (இப்ப நிலைமை மாறிட்டு இருக்கு..).

ராம்தாஸ் - மீண்டும் சாதி பேரில் தூபம்..

தேர்தல் தோல்விக்கு பிறகு , மீண்டும் சாதி பேரை சொல்லி தூபம் போட்டு இழந்த வாக்கு வங்கியை சரிசெய்ய பார்கிறார்." வன்னியர்களை அழிக்கபார்க்கிறார்காள் வன்னியர்களிக்கு முக்கியத்துவம் இல்லை" என்று வேதாளாம் முருங்கை மரம் ஏறின கதையா மீண்டும் மரவெட்ட தூபம் போடுகிறார்...
"சாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம் " இதை இந்த தமிழ் குடிதாங்கி அய்யா அவர்களுக்கு ஞாபக படுத்துமாறு கேட்டு கொள்கிறேன் !


~~

Friday, June 26, 2009

பேசாம பேசாமாதான் இருந்து - சீமான் !

~

பேசாம பேசாமா இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !

பேசாம பேசாமாதான் இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !

அட தோழா ரொம்ப நாளா
கேட்காம கேட்காமா இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து !
இப்ப போகுதடா கோவணமும் பறந்து !

விதைச்ச பயிரு அறுவடைக்கு விளைஞ்சு கிடக்குது
உணவில்லாமல் உழைத்த வயிறு காய்ஞ்சு கிடக்குது !

அடிக்கும் போது புழுவும் கூட எழுந்து துடிக்குது
அறிவிருந்தும் அடிமைத்தனம் போக மறுக்குது !

அட தோழா ரொம்ப நாளா

பேசாமா பேசாமா இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !

வருசம் நாலு தேர்தலு நாட்டில் நடக்குது அதனால்
நமக்கு இங்கே என்ன கிடைக்குது !


எரிக்கும் போது பிணமும் கூட எழுந்து நிக்குது !
உசிரு இருந்தும் உன் முதுகேன் குனிந்து நிக்குது!

அட தோழா ரொம்ப நாளா

பேசாம பேசாமா இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !
கேட்காம கேட்காமா இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து !
இப்ப போகுதடா கோவணமும் பறந்து !


~

Monday, June 22, 2009

கஷ்டபடாமல் இருக்க கஷ்டபடுங்கள் - சுகி சிவம்

~







~~

Monday, June 15, 2009

கதம்பம் - 45 கோடி ,NDTV மற்றும் பல

~

45 கோடி !
--------------------

கர்நாடாகவை சேர்ந்த அமைச்சர் மற்றும் தொழில் அதிபர் ஒருவர் 45 கோடி மதிப்புள்ள வைர கீரிடத்தை திருப்பதி ஏழு மலையானுக்கு கொடுத்திருக்கிறார்... அடங்க கொக்க மக்கா! 45 கோடி ...
என்னால் அவர் இந்த பணத்தை நேர்மையாக சம்பாதித்திருப்பார் என்று நம்ம முடியலை ! இந்த 45 கோடியை வைத்து அவ்ர் தொகுதிக்கு எத்தனையோ நல்லது செய்திருக்கலாம் ..எத்தனையோ ஏழைகளுக்கு உதவி இருக்கலாம்..ஒன்னும் வேணாம்ங்க..அவர் தொழிற்சாலையில் வேலை செய்யும் நலிவடைந்தவர்களுக்கு உதவி இருக்கலாம்...." ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்"
என்ற பொன் மொழியை கன்னடதில் மொழி பெயர்த்து இவர் காதில் கொஞ்சம் உரக்க சொல்லுங்க!

கடன் தொல்லையால் ஒரு குடும்பம் தற்கொலை அந்த செய்தி வந்த அதே செய்தித்தாளில் வந்தது... என்னத்த சொல்ல !

போதை மருந்தும் தமிழக தொலைகாட்சி சேனல்களும் -
------------------------------------------------------

கமல் பசங்க பட விழாவில் அருமையா சொன்னார்..நம்முடைய முதலாளிகள் ரொம்ப நல்லவர்கள் மக்கள் போதை மருந்து கேட்டாலும் விற்பார்கள் மலிவு விலைக்கு என்று அவரைய்ம் சேர்த்து! அதை அப்படியே செய்கின்றன் சன் மற்றும் முக மற்றும் இதர சேனல்கள் மக்கள் தொலைகாட்சி தவிர ! விஜய் தொலைகாட்சி பரவாயில்லை ஒருசில நல்ல நிகழ்ச்சிகளவது ஒலி பரப்புகிறார்கள்.. ஒரே மாதிரியான் அறிவை மழுங்க செய்யும், பெண்களை , மனிதத்தை தவறாக சித்தரிக்கும் பின்னோக்கிய சிந்தனை உடைய தொடர்கள் , நிகழ்ச்சிகள்..முடியல !

Body Language, Attidude, enery level, chemistry ... இந்த நாலு வார்த்தையே கேட்டாலே ரட்சகன்ல நாகார்ஜீனாக்கு நரம்புல ஏற மாதிரி ஏறுது ! என்னனு கேட்ட மக்கள் இந்த மாதிரிதான் விரும்பி பார்க்கிறார்கள் என்கின்றன் இந்த போதைமருந்து வியாபாரிகள் !

தொலைகாட்சிகள் தங்கள் கருத்துகளை மக்கள் மீது திணிக்கின்றன் செய்திகள் என்ற பெயரில் ! உதாரணத்துக்கு சன் நியுசில் ஒரு செய்தி..மாசில்லாமணி படவந்ததால் மக்கள் ஆரவாரமா இருக்கங்கலாம்..திரையரங்குகளில் ஒரே கும்மாளாமா! ஒளிப்படம் வேற காண்பிக்கிறார்கள் ! அதில இரண்டு அல்ல கைகள் திரையரங்கில் ஆடுது ..முடியலடா சாமி !

ஆனால் நிதர்சன உண்மை என்னவென்றால் சத்தமில்லாமல் இந்த தொலைகாட்சிகள் நம்மை மட்டுமில்லை நம் அடுத்த தலைமுறையையும் சேர்த்து கெடுத்து கொண்டிருக்கின்றன்..! என் அக்கா வீட்டுக்கு போனப்ப , எங்கஅக்கா அது பையனை "மாமாவுக்கு பாட்டு பாடி காமிடா " னு 4 வயது பையங்கிட்ட சொன்னா! அவன் பாடினா பாட்டை கேட்டு அதிர்ந்து போனேன்... "டாடி மம்மி வீட்டில் இல்ல...." அதுதான் அந்த பாட்டு ! இதை பார்த்து என் அக்கா பூரிப்படையது.. அடுத்து அப்படியே ஒரு கேள்வி கேட்டது.." உனக்கு பிடித்த ஹூரோ யாரு சொல்லு மாமாகிட்ட.. அவன் ஒரு பஞ்ச டயலாக்கோடு சொன்னான்..விஜய்னு !

அட மக்கா...நம்ம தாண்டா மண்ணுக்குள்ள தலையவிட்ட நெருப்புகோழி மாதிரி நம் தமிழன் எல்லாம் அப்படி இப்படினு புத்தகங்களை படித்து தவறா புரிந்து கொண்டியிருக்கோம் சமீபத்திய தேர்தலுக்கு முன்னாடி நடந்த கருத்து கணிப்பு மாதிரி. நம்மாளுங்க எல்லாம் திரைப்படத்திற்கும், தொலைகாட்சிக்கும் அடிமையாகிட்டு நமமள உனக்கு ரசனையே இல்லை அப்படிங்கிறான் !

விஜய் அவார்டுஸ் , ஆனந்த விகடன் !
---------------------------------------------------------------------

விஜய் டீவி மேல கொஞ்சம் மரியாதை இருந்தது.ஆனால் நாங்க மட்டும் என்ன அப்படினு காட்டிட்டாங்க ! சிறந்த புதுமுகம் - சாந்தனு .. சிறந்த படம் வாரணம் ஆயிரம்...நடத்துங்க நடத்துங்க !
இந்த வாரம் நயன்தாரா, பிரபு தேவா கல்யாணம் மற்றும் அவர்களின்..... பற்றிய பரபரப்பான் செய்திகள் ! வாழ்க பத்திரிக்கை ..இதே நக்கீரன்ல் போட்ட மஞ்சள் பத்திரிககைனு சொல்றான்...

துணை முதலமைச்சர், அழகிரி , NDTV ,
----------------------------------------------------------------------

ஸடாலின் (துணை) முதலமைச்சர் ஆகியிருக்கிறார் ,அழகிரி மத்திய அமைச்சர் ஆகியிருக்கிறார்.. இருவரையும் அவர்களின் பின்புலங்களை ஆராயாமல் வாழ்த்துவோம்..நிச்சயம் புகழுக்காகவாது இவர்கள் தமிழ் நாட்டில் நல்ல திட்டங்களை செயல்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன் !

ராகுல்காந்தி, சச்சின் பைலட், அகதா சங்மா எல்லாம் அடுத்த தலைமுரை யூத்தாம். படித்தவர்களாம் ..தயாநிதி மாறன் மினிஸ்டர் ஆனது MK's famil business அப்படினு செய்திகள் போடும் NDTV தமிழக மக்களலால் தேர்தெடுக்க பட்டவர்களை அவமானபடுத்துவதாகவே நான் கருதுகிறேன்... சமீபத்தில் நடந்த விவாத்தில் கூட ஒரு பிரபலம் அதே டிவி யில் சொல்கிறார் மம்தா தான் இப்போதுள்ள மந்திரிகளில் இளைய வயது கேபினட் மந்திரியாம்.அப்ப தயாநிதிக்கு என்ன 53 வயதா? ஏன் இந்த தென்னக புறக்கணிப்பு..இப்படிதான் அன்புமணிக்கு எதிராக தொடர் செய்திகளை பரப்பியது. வட இந்தியர்கள் தான் புத்திசாலி என்பது போலவும் , தமிழ் நாட்டில் இருக்கறவன் எல்லாம் கேனப்பயலாட்டம் சித்தரிக்கிறார்கள்..நீங்கள் அமுக்க நினைக்க நினைக்க நாங்கள் உயர்வோம். தமிழ்னாடுனா உடனே சோ, சுப்பிரமணியசாமியை தான் இவங்க கருத்து கேட்பாங்க! "சோ " வாவ்து ஓகே . சென்னை மேல்தட்டு மக்களின் கருத்தாவது அவருடன் ஒத்து போவும். விமர்சகராக "சோ" வை நான் மதிக்கிறேன்.. ஆனால் இந்த சுப்பிரமணியசாமிக்கு எதுக்குதான் போலிசு பாதுகாப்பு கொடுககுதுனு மக்களே உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க !

சென்னை கத்திப்பாரா மற்றும் மெட்ரோ
----------------------------------------------------------------------

சென்னை கத்திபாராவை இரவில் விமானத்தில் இருந்து பார்க்க அருமையா இருந்தது..
அதன் பலன் கத்திபாராவில் தினமும் குறைந்தது 15 நிமிடம் ட்ராபிக்கில் மாட்டிய சென்னைவாழ் மக்களுக்கு நன்கு தெரியும். சென்னை மெட்ரோ பணிகள் ஆரம்பம்மாகிருக்கின்றன்..கண்டிப்பாக இதற்கு இடையூறுகள் வரும் ஆட்சிகள் மாறினால் கிடப்பில் போடப்படலாம்.. ஆனால் இதை எல்லாம் மீறி திட்டம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். திமுக பாலம் மற்றும் இதர திட்டங்களில் கொள்ளை அடிக்கிறார்கள் என்று வருத்தபடும் சில எதிர்கட்சி நணபர்களுக்கு , அவர்களாவது இந்த மாதிரி எதாவது செய்திட்டு அடிக்கிறார்கள்..மற்ற ஆட்சிகளில் ????.


~

Tuesday, June 2, 2009

தேர்தல் என் கருத்துகள்

~~~~

என்னதான் எல்லாரும் பணத்தால் தான் திமுக வெற்றி பெற்றதாக கூறினாலும், பணம் மட்டுமே வெற்றி தந்துவிட முடியாது..வேட்பாளர் தேர்வும், தேர்தல் களப்பணியும் முக்கியம்.இந்த தேர்தலில் திமுகாவிற்கு எதிராக மக்கள் இருக்கிறார்கள் என்ற மாய மப்பில் எதிர்கட்சினர் இருந்தனர். இந்த தேர்தலில் தமிழக மக்கள் சிந்தித்து வாக்களித்திருப்பதாகவே நான் கருதுகிறேன். தோல்வியை ஒப்புகொண்டு , வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு , தவறுகளை ஆராய்ந்து திருத்தி கொள்ளாமல் மெசின் சரியில்லை, பண கொடுத்தாட்டாங்கே என்று சொல்லி கிட்டிருந்தா அடுத்த தேர்தலிலும் இதேதான் சொல்ல வேண்டியிருக்கும். பணத்தால் வெற்றி பெற்றதாக சொல்லும் அனைவரும் தமிழக மக்களை இழிவு படுத்துகிறார்கள் என்றே நான் கருதுகிறேன்..

அதை போல ஈழ பிரச்ச்னையில் தமிழக மக்களுக்கு அக்கறையில்லை என்று இந்த தேர்தல் முடிவுகளை நாம் எடுத்து கொள்ள கூடாது.. இங்கு நடந்த ஈழ போராட்களில் முக வை வசைபாடும் மேடையாகவே எதிர்கட்சினர் பயன்படித்தினர்.. அதை சாமானியன் ரசிக்கவில்லை என்றே நான் கருதுகிறேன்..

திமுக :- வேட்பாளர் தேர்வு , தேர்தல் களப்பணி , மக்களுக்கு நம்பிக்கை தரும் பிரபலமான முகங்களின் பிரச்சாரம், தேமுதிகவின் வாக்கு பிரிப்பு ஆகியவே வெற்றிக்கு காரணம்..பணம் என்று சொல்லுவது முட்டாள்தனம்.எல்லா கட்சிகளும் தான் செலவுசெய்தன...

அதிமுக :- அதிமுகாவை பொருத்தவரை அவர்களுக்கு வெற்றிதான்..9 இடத்தில் வெற்றி . அவர்களின் ஒட்டு மொத்த ஒட்டு சதவீதம் குறையவில்லை..என்ன ஒன்னு திமுக எதிர்ப்பு ஒட்டுகள் கிடைக்கவில்லை..எல்லாம் கருப்பு எம்ஜி ஆர் வந்த விளைவு ..

தேமுதிக :- எல்லா கட்சியினரையும் வசைபாடுவதை தவிர வேற எதுவும் உருப்படியான் திட்டம் எதையும் முன்வைக்காதது.. சொன்னா காப்பி அடித்திடுவாங்கனு சின்னபிள்ளைதனமாய் சொன்னது..அப்படியே காப்பி அடித்தா என்ன ! மக்களுக்கு நல்ல நடந்தால் போதாதா..அதை நீங்க தான் செய்யனுமா..என்ன லாஜிக் இது

காங்கிரஸ் :- singh is king ..இலங்கை பிரச்சனை தவிர , காங்கிரஸின் மீது மக்களுக்கு கோபம் இல்லை இளங்கோவன் தோற்றது தான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி..ஆடியா ஆட்டம் என்ன ...

மதிமுக :- வைகோ தோற்றது அதிர்ச்சி ! நல்ல பேச்சாளர்..நல்ல தலைவனாக இல்லாமல் போய்விட்டார்..இல்லை அப்படி ஆக்கபட்டார். அரசியலில் தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்ததின் விளைவு அம்மாகிட்ட அடைக்கலம் நாடி நிக்கிறார்.வீரவசனங்களை தவிர மக்கள் நெருக்கம் இல்லை..அம்மா பின்னாடியே கை கட்டி நின்னா வேலைக்கு ஆகாது.இதை வைகோ என்னைக்கு புரிந்து கொள்வாரோ ! இவருகு ராமதாஸ் பரவாயில்லை கூட்டணியில் இருந்த போது கூட அடிமையாக இருக்கவில்லை..

பாமக :- அனைவரும் அறிந்ததே ...அகந்தையால் தோற்றுபோனார்கள்.....இலங்கை பிரச்சனையில் முக வையும், காங்கிரசையும் வைத்து text book management style game ஆடி
வின் - வின் சூழ் நிலை உருவாக்கிட்டதா நினைத்தார்..இப்போது புரிந்திருக்கும் அது எல்லாம் கதைக்கு ஆகாது என்று

கம்யூனிஸ்ட் :- காத்து இந்த முறை அடிக்கவில்லை..கணிப்பு பொய்யா போச்சு...தாபாண்டியன் தோல்வி அதிர்ச்சியே..அமெரிக்காவா எதிர்க்கும் அளவுக்கு நம் நாட்டு வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை என்றே நான் கருதிகிறேன்..

கார்த்திக், சமக :- பாவம் பாஜக எத்தனை கோடி இவங்களுக்கு கொடுத்தாங்களோ !

பாஜக :- தமிழக பாஜக அதிமுகா நம்பி இருந்தது கடைசியில் அவமானபடுத்தபட்டது.. இன்னும் பயிற்சி தேவை..மற்றபடி நல்ல தலைவர்கள் அங்கு இல்லாமல் இல்லை..இல.கணேசன், திருநாவுக்கரசர் போன்றோர்கள் தோற்றது பரிதாபமே !

மமக, :- மதவாத கட்சிகள் தனித்து நின்று வெல்வது எல்லாம் கானல் நீர்தான்..இவர்கள் தமிழ்நாடு முழுக்க வாங்கிய ஓட்டுகளை எண்ணினால் கூட 1 லட்சம் தாண்டாதுதான் நினைக்கிறேன்..

கொங்கு கட்சி:- ஜாதிகட்சியும் தனித்து நின்று வெல்வது சாத்தியம் இல்லை இது அவர்களுக்கே தெரியும்.. இந்த தேர்தலில் எப்படி தங்கள் சாதிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று அவர்கள் இன மக்களுக்கு "அன்பு" கட்டளை இட்டார்களே அதை போல கொங்கு மண்டல்த்தில் இன்னும் நடைமுறையில் இருக்கும் கொத்தடிமை, இரட்டை குவளை , தீண்டாமைக்கும் ஒரு கட்டளை இட்டார்களே ஆனால் அவர்களுக்கு கோடி புண்ணியம் ..(எல்லாரையும் குறிப்ப்டவில்லை ஒரு சில இடங்களில் ஒரு சிலரால் மட்டும் இது இன்னமும் இருக்கிறது )

லதிமுக :- அப்படினா ? ..

மொத்தத்தில் இந்த தேர்தல் முடிவுகள் தமிழக மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள் என்றே காட்டுகிறது.ஒரே நாளில் மாற்றம் வராது..இது ஆரம்பம்..தான்


~~~~

Tuesday, May 19, 2009

வெள்ளை பூக்கள் மலரட்டும் ...

இனிமேலாவது அமைதிப்பூக்கள் மலரட்டும்..

இப்போது சாந்தியா ராஜிவ் குடும்பம் மற்றும் காங்கிரஸ்காரர்களே, சுப்பிரமணிசாமி மற்றும் வட நாட்டு தொலைகாட்சி குழுமங்களே..இப்போது சாந்தியா?

தன் மகனை முதலவராக்கலாமா, பிரதமராக்கலாமா என்பவர்களிம் ம்த்தியில் தன் மகனை மாவீரனாக்கிய தலைவன்.

புலிகள் தீவிரவாதிகள், தீவிரவாதிகள் என்று ஒரே காரணத்திற்காக நடந்த இனப்படுகொலைகளை வேடிக்கை பார்த்த உலக தலைவர்க்ளே., இந்திய வல்லரசின் ஆட்சியாளர்களே ...இதோ உங்கள் கண்ணோட்டத்தில் தீவிரவாதிகள் மாவீரர்களாகிவிட்டார்கள்..இனி காரணம் என்று தேடாமல் தமிழர் வாழ்வு சிறக்க உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள்.

தமிழினத்தலைவரே! இனியாவது தமிழ் மக்களுக்காக் குரல் கொடுங்கள். இனியாரும் உங்கள் ஆட்சியை விடுதலைப்புலிகள் பேரை சொல்லி கலைக்க முடியாது. நீங்களும் அவர்களுக்காக ராஜினாமா செய்ய தேவையில்லை.
நீங்கள் தவற இழைத்தாக நான் கூறதேவையிலை.உங்கள் மனசாட்சியை கேளுங்கள்.இனிமேலாவது அதற்கு பிரச்சாயித்தம் தேடுங்கள்.

நடந்தவைகளை மறப்போம். வரலாறு நமக்கு வாழ்வழிக்காது சொந்தங்களே ! நடப்பவைகளை எண்ணுங்கள்.
இன்னும் 33 ஆண்டுகள் வேண்டாம் சொந்தங்களே. மாவீரர்கள் ஆனது போதும். இனிமேல் நம் குழந்தைகள் சமாதானமான் உலகத்தில் வாழட்டும்.

மாவீரர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். வெள்ளை பூக்கள் மலரட்டும் ..

வாழ்க தமிழினம் !

Wednesday, May 6, 2009

நானும் , சென்னை விமான நிலையமும் !

~


சிறு வயதிலிருந்தே மீனம்பாக்கம் போகனும், விமானங்களை பார்க்கனும்னு ரொம்ப ஆசை.. அது 2003ல் தான் நிறைவேறிச்சு.நான் அப்ப சென்னையில் வேலை தேடிகொண்டுருந்தேன்
. எங்க அண்ணன் சிங்கைலிருந்து வரும் அவங்க நண்பரை வரவேறக ஊரில் இருந்து வந்தது. நானும் அண்ணணோடு விமான நிலையத்திற்கு சென்றேன்.

முதல்முறையா கலர் கலரான ஆடைகளில் விமான பணிப்பெண்களை பார்த்ததும் உடம்பு சிலிர்த்தது.. " சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் " என்ற பாட்டில் வரும் கொளதமிக்கு அப்புறம் முழுகாலுறை அணிந்த பெண்களை அப்போதுதான் பார்த்தேன்..அதென்னமோ தெரியல வெளி நாட்டு விமான பணிப்பெண்கள் தான் கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தார்கள் ! :

அந்த நேரத்தில் ஒரு குவைத் விமானத்தில் இருந்து பயணிகள் வெளியில் வந்து கொண்டுருந்தார்கள் ..சொந்தமண்ணுக்கு வரும்போது முகத்தில் வருது பாருங்க ஒரு பூரிப்பு அப்ப அப்ப அது தனி ரகம்..ஒவ்வொருத்தர் மூஞ்சிலும் அவ்வளு சந்தோசம்..அவங்க சொந்தங்களை கண்டதும். ஒரு அம்மா தன் கைகுழந்தையோட நின்னுகிட்டு இருந்தாங்க.காதல் திருமணம்னு நினைக்கிறேன்.அவங்க மட்டும்தான் வந்திருந்தாங்க வேறயாரும் வரலை.அவங்க புருசன் வந்தவுடன் "என்னங்க. " .என்றவர் அதற்கு மேல் பேச்சு வரல..அந்த கைகுழந்தைய..வாங்கிட்டு அவங்க ரெண்டு பேரையும் அவர் அப்படியே அணைத்து கொண்டார்.இருவர் கண்ணிலிருந்தும் தாரை தாரையாக கண்ணீர் ! பாசப்பிணைப்பு..எனக்கு மறபடியும் உடம்பு சிலிர்த்த்து..

அப்புறம் என்பக்கத்தில் ஒரு வயதான பெற்றோர் நின்றனர்..அவர்களில் பெரியவர்." உன் பிள்ளை 5 வருசம் கழித்து வரான்..அவன் இப்ப எப்படி இருக்கானோ எதாவது அடையாளம் சொன்னானா? " அதற்கு அந்த அம்மா " அடப்போங்க எத்தனை வருசம் ஆனாலும் என் பிள்ளை எனக்கு தெரியாதா ! " என்றாள் . அதே மாதிரி கொஞ்ச தூரத்தில் வரும் போதே.."அதோ வந்துட்டான்..தம்பி...ராசா..." என்று ஆனந்த கண்ணீரொடு சத்தம் போட ஆரம்பித்து விட்டார். பெரியவர்.."சும்மா இரு அது வேறயாராவுது இருக்க போவுது.." என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த பையன் ஓடி வந்து "அம்மா" னு அவங்களை கட்டிபிடித்து கொண்டார்....இப்படி நிறைய பாசப் சந்திப்புகள் நடந்து கொண்டுருந்தன....சிங்கை விமானம் தாமதமானதால் நாங்க விமான நிலையத்தை சுத்தி கொண்டுருந்தோம்..

புறப்படும் மையத்திற்கு சென்று வேடிக்கை பார்த்து கொண்டுருந்தேன்.. நான் சோகமான முகபாவம், சந்தோசமான் முகபாவம் பார்த்திருக்கேன்..முதன் முதல சோகம் கலந்த சந்தோசமான முகங்களை அங்கே தான் பார்த்தேன்..குறிப்பா ஒரு பொண்ணுகிட்டே..அந்த பொண்ணு கல்யாண ஆன புதுப்பெண்..அவங்களோட கணவரோட சிங்கைக்கு போறாங்க..அவங்களுக்கு முதல் விமான பயணம்னு நினைக்கிறேன்..அவங்க உறவினர்கள் எல்லாம் கிட்டதட்ட அழறாங்க..அந்த பொண்ணு முகத்தில முதல் முறை விமான பயணம், தனியா தன் புது கணவரோட என்ற சந்தோசமும்,உறவுகளை பிரியும் சோகமும்..அப்பப்பா சான்ஸே இல்லை...

அப்புறம் கொஞ்ச நேரத்தில் நாங்க திரும்ப வருகைக்கான மையத்திற்கு வந்தோம்..அப்ப ஒரு அழுகுரல் கேட்டிச்சு..என்னானு திரும்பி பார்த்தா ஒரு 35 வயது மதிக்க தக்க வாலிபர்.." போச்சே போச்சே இவ்வளு நாள் நாயா உழைத்த எல்லாம் போச்சே...." என்று பரிதாபமாக அழுது கிண்டுருந்தார்..என்னனு போய் விசாரிச்சா..அவர் குவைத்யிலிருந்து அவங்க தங்கை கல்யாணத்திற்காக நகை கொண்டு வைந்திருக்கார் அதை காணோமாம்..பெட்டியிலதான் வந்திருந்தாராம் . எங்க யார் எடுத்தானே தெரியலயாம்..அவங்க குடும்பத்தினர் அவரை சமாதான படுத்திறாங்க..இருந்தாலும் மனம் ஆறாமல் தொடர்ந்து அழுது கிட்டே இருந்தார்.."கல்யாணம் நின்னாலும் பரவாயில்லைனே நீதான் வந்திட்டீல" என்றது ஒரு குரல்..அது அவரது தங்கை என்று நினைக்கிறேன்.. அது வரை விமான நிலையம், பலதரப்பட்ட மக்களின் பாச சந்திப்புகள், பிரிவுகள்னு பார்த்து சந்தோசமாய் இருந்த நான் இந்த நிகழ்வை பார்த்தலிருந்து கிட்ட தட்ட அழுதிட்டேன்..

நம்மாளுங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணத்திற்காக ( பெரும்பான்மை குடும்ப காரணங்களுக்காக) வெளி நாட்டில் போய் எவ்வளவு கஸ்ட படுறாங்க ..இதுக்கெல்லாம் எப்ப விடிவு காலம் வருமோ !

( அடுத்த முறை நான் சென்னை விமான நிலையத்திற்கு சென்றது என் முதல் வெளி நாடு பயணத்திற்காக ..அந்த அனுபவத்தை இன்னொரு பதிவில் எழுதிறேன் ! )



~~~

Wednesday, April 29, 2009

உன்னோடு நான் இருந்த - வைரமுத்து

~

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம்தான்
எண்ணூறு ஆண்டுகளா இதயத்தில் கலக்குதடி !

பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்!
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்!
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும்
முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம் !

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை !
அது இரவா அது பகலா அது பற்றி அறியவில்லை!
யார் தொடங்க யார் முடிக்க ஒரு வழியும் தோன்றவில்லை !
இருவருமே தொடங்கிவிட்டோம் இதுவரைக்கும் கேள்வியில்லை !

அச்சம் களைந்தேன் ஆசையை நீ அணிந்தாய் !
ஆடை களைந்தேன் வெட்கைத்தை நீ அணிந்தாய் !
கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர் கண்ணில் இன்னும் கொட்டுதடி !

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

----------------
வைரமுத்துவின் வைரவரிகள் மரணப்படுக்கையிலும் மறக்காது !


~~~

Wednesday, April 22, 2009

முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா

~


தனிப்பட்ட சோனியாவின் ,ராகுலின் கோபம் நியாயமானது..என் கணவரை, அப்பாவை யார் கொலை செய்திருந்தாலும் எனக்கு கண்டிப்பாக கோபம் வரும். மன்னிப்பது சிரமம்.
ஆனால் ஒரு அரசாங்கத்தை,இந்த காந்தி தேசத்தை கட்டி ஆளூம் சோனியாவிற்கு பக்குவம் வேண்டும்.அதை அவரிடம் எடுத்து சொல்ல ஒரு நாதியில்லையே ! அவரின் அந்த கோவத்திற்கு தூபம் போட்டு அதன் மூலம் ஆதாரம் தேடும் மனிதாப மானம் அற்ற அதிகாரிகளும்,அரசியல்வாதிகளாலும்தான் ஈழத்திற்கு இந்த நிலைமை.

இந்தியா உதவி செய்யாட்டி வேறு நாடுகளில் இருந்து ஆயுதம் வாங்க மாட்டார்களா..இது எல்லா அறிவாளிகளின் கேள்வி. எப்படியும் அவர்கள் கொலைசெய்யபடுவார்கள் அதனால் நானே கொல்றேன் என்று சொல்கிறதா காந்தி தேசம் ? ஒ இதற்கு பெயர்தான் கருணை கொலையா ? மற்றும் ஒரு கேள்வி இந்தியா மட்டும் காஷ்மீர், அஸ்ஸாமில் தீவிரவாதிகளை எதிர்த்துவிட்டு ,திவரவாதிற்கு எதிராக போராடும் இலங்கைய கண்டிக்கலாமா? அடே அறிவாளிகளா காஷ்மீரிலும்,அஸ்ஸாமிலும் இந்தியா குண்டு மழை பொழிகிறதா.. ஒரு 2000 பேரை கொல்ல இரண்டு இலட்சம் பேரை கொன்றதா ? அத்தனை பேர கொன்ற கஸாப்பிற்கு வக்கீல் வத்து வாதாடும் தேசம் இல்லையா இந்தியா ? தமிழனுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு ? ஏன்னா எங்களுக்கு என்று ஒரு நல்ல தலைவன் இல்லை.

IPKF பத்தி எவனும் பேசறதில்லை.காந்திய கொன்றவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை.இந்திராவை கொன்றவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை.ஆனால் ஈழம் என்று வந்தவுடன் ராஜிவை கொன்றவர்கள்..அதனால் விடுதலைப்புலி களோடு மற்ற எல்லாரும் (குழந்தைகள் உட்பட) செத்து மடியட்டும். கேட்டால் இந்திரா, காந்தியை சுட்டவர்களுக்கு தண்டனை கொடுக்கபட்டது.ஆனால் ராஜிவை கொன்றவனுக்கு கொடுக்கபடவில்லை ( அப்போ ராஜிவை கொன்றவர்கள் சிவராசன் எல்லாம் தண்டிக்கபடலையா ? ) . தயவு செய்து பிரபாகரனை கொன்று விடுங்கள். அப்போதாவது எங்கள் ஈழ பிஞ்சுகள் சாகாமல் இருப்பார்களா என்று பார்ப்போம்.எங்கள் இளம் பிஞ்சுகள் காக்கபடும் என்றால் அவர் சந்தோசமாகதான் உயிர் இழப்பார். அவர் ஒன்னும் தமிழ் நாட்டு தலைவர்களை போல பிழைக்க தெரிந்தவர் அல்ல. தமிழ் நாட்டு தலைவர்கள் தான் பதவிக்காக தன்மானத்தை இழந்திருக்கார்கள். ஒரு ராஜிவிற்கு லட்சம் தமிழர்கள்..இன்னும் போதவில்லை..குடிங்க இன்னும் எவ்வளுவு ரத்தம் ராஜிவின் பெயரால்,புத்தரின் பெயரால் குடிக்கனுமோ குடிங்க.

நான் வல்லரசு நான் என்னனாலும் பண்ணுவேன் அப்படிங்கிறா இருமாப்பு. வல்லரசு மும்மையில் என்ன பண்ணிச்சு ? ம...ரை பிடிங்கிட்டு இருந்துச்சா? . ஆயிரம் ஆயிரமாய் தமிழர்கள் கொலைசெய்ய படுகிறார்கள்..ஆனால் அதைப்பற்றி கவலை மட்டும் தெரிவித்துவிட்டு பின்னாடி இலங்கை கிட்ட இன்னும் என்னடா பன்றீங்கனு கேட்கும் தலைவர்களை பெற்றிருக்கிறது காந்தி தேசம்.

இந்திய தொலைகாட்சிகள் எல்லாம் தொலைதூரத்தில் இருக்க எங்கோ ஒரு நாட்டில் ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்தால் அன்று நாள் முழுக்க ஒப்பாரி வைக்க கூட்டத்தை கூட்டும் அவர்களுக்கு அருகில் நடக்கும் இனப்படுகொலை கண்ணுக்கு தெரியவில்லை. இப்பொது தேர்தல் வந்த உடனே எல்லாம் பிராபகரனை மட்டும் தான் ஈழம் போல அவரை பற்றியே பேசுகின்றன.அவர் தீவிரவாதியா,இல்லை பயங்கரவாதியா என்று பட்டிமன்றம் வேற.(இந்த தேர்தல் வராவிட்டால்..அவர்கள் இந்த செய்தியை கூட போட்டிருக்க மாட்டாகள்) அவர்கள் பார்வைக்கு அங்கு செத்துவிழும் பிணங்கள் தெரியவில்லை. விடுதலைப்புலி என்றால் உடனே ராஜீவ் கொன்றவர்கள் என்றுதான் சொல்கிறார்கள் வட இந்திய தொலைகாட்சிகள்.அது எதற்காக உருவாயிற்று ? அவர்களுக்கு தீலிபன் தெரியுமா? எட்டி எட்டி உதைத்தால் கடிக்க தெரியாத நாய் கூட திரும்ப பாயும்.இந்திய ஊடகங்களுக்கு இதயமே இல்லை . நீதி நசுக்க படுகிறது. அதை பார்த்து இந்த மனித நேயமிக்க உலகம் கை கட்டி வாய் பொத்தி மொளனம் காக்கிறது. தேசியபாதுகாப்பு சட்டம உலகம் முழுவதுமா இருக்கு?

ஈழ பிரச்சனையில் இன உணர்வு காட்டதேவையில்லை குறைந்த அளவு மனிதாபமானம் காட்ட முடியாதா காந்தி தேசத்து மக்களே ! . உங்களை சொல்லி குற்றமில்லை. உங்களுக்கு என்று ஆயிரம் பிரச்சனைகள். சிலருக்கு சோத்துக்கே வழியிலை இதுல அவங்களுக்கு நான் என்ன பண்றது என்பது எண்ணம் அவர்கள் பரவாயில்லை . (சில பேருக்கு இலங்கையவிட , IPL ல சென்னை தோற்றதுக்கும், விஜயின் வில்லு படம் ஊத்திகிட்டதுக்கும்தான் அதிகமாக கவலைபடுகிறார்கள்).ஆனால் பெரும்பான்மையான தமிழ் நாட்டு மக்களிடம் ஈழ சோகம் இருப்பது உண்மை. ஆனால் அவர்களின் எண்ணத்தை வெளிபடுத்த தடம் இல்லை. (ஆமா நம்மால என்ன ஆகப்போது.. என்ற மனநிலைதான் நம்முடைய எதிரி. அந்த எதிரியை நாம் ஒரு நாள் வீழ்த்துவோம்). கொடுமையிலும் கொடுமை ஈழ பிரச்சனை வைத்து தமிழ் நாட்டு அரசியல் செய்யும் அரசியல்வாதிகள்..அடப்பாவிகளா அடப்பாவிகளா.. ராஜபக்சே பரவாயில்லை நேருக்கு நேர் மோதுகிறான்..நீங்கள் எல்லாம் முதுகில் குத்துவர்கள் தானே ? தமிழ் நாட்டு தலைவர்களுக்கெல்லாம் கருணாதியை தமிழின எதிரியாக சித்திரிப்பிதால் தான் குறியாக இருக்கின்றவே தவிர வேரு எதுவும் ஆக்க பூர்வமாக செய்வதில்லை.கருணாநிதிக்கு அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதில்தான் நேரம் போகிறது. உண்மையில் பிரிந்து கிடக்கும் தமிழ் நாட்டு தலைகளால் ஒன்றும் செய்ய இயலாது, ஓட்டுக்காக வேண்டுமானால் குரைக்கலாம்.

நாயாக இரு நக்கி பிழை ..இதுதான் உலகத்தார் தமிழனுக்கு சொல்லுவது .சக தமிழன் சாகும் போது எதுவுமே செய்யாமல் சகதமிழனுக்காக அழ மட்டுமே செய்யும் கோழை நான் என்று வெட்கி தலை குனிந்து ஒத்து கொள்கிறேன்.முதன் முறையா இந்தியாவில் அதுவும் தமிழனா பிறந்ததற்கு வெட்கபடுறேன். வேதனைபடுகிறேன். .. யாரையும் சொல்லியும் குற்றமில்லை நாம் அடிமையாக பிறந்ததுதான் குற்றம்... அடிமையாக இருப்பது நமக்கு ஒன்னும் புதிது இல்லையே ! கடவுளின் பெயரால் நம்மை ஏமாற்றவனுக்கும், ரசிகனாக சினிமா நட்சத்திரங்களும் , வருவாய் காரணமாக coraporate கம்பெனிகளுக்கும் , ஊழல் செய்யுபவரை தட்டி கேட்க வக்கில்லாதவராகவும் , எவன் எக்கேடு கெட்டுபோனா நமக்கென்னா என்று கிரிகெட்டுக்கும் அடிமையாகத்தான் இருக்கோம் நாம்.அடிமையாக இருப்பதில் கூட உயர்ந்த சாதி அடிமை, தாழ்ந்த சாதி அடிமை என்று வேறுபாடு வேர.. இந்த அடிமை தாழ்ந்தபட்ட அடிமை என்று நமக்குள் சண்டை வேறு ! சக அடிமைகளே இனிமேல் யாரும் தமிழன் பெருமை பேசாதீர்கள் !

நான் இந்த பதிவை எழுதுவதால் ஒன்றும் இலங்கையில் என் இனம் அழிக்கவடுதை தடுத்து விட முடியாது ..என் மனசாந்திக்காக எழுதுகிறேன். பாரதியின் சொன்ன வார்த்தைகளை (முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா ) பாதியை நான் பின்பற்றினேன். ராஜபக்சே, சரத் பொன்சேகா , கருணா , நாராயணன் , சிவசங்கர் மேனன், தினமலர், கருணாநிதி, ஜெயலலிதா, சுப்பிரமணியசாமி, பிரணாப் முகர்ஜி, தங்கபாலு, இளங்கோவன்,ராமதாஸ் மற்றும் என்னையும் (இந்திய தேசத்து அடிமை) நினைத்து என் வாயில் எச்சில் வற்றும்வறை காரி காரி உமிழ்ந்தேன் கழிவறையில்.


~

Saturday, April 18, 2009

இது நம்ம தேசம்! - கவிஞர் ராசை. கண்மணி ராசா

~


இது நம்ம தேசம்!
=================

எலிகூட கிடைக்காமல்
இறந்துகொண்டிருக்கும் தேசம் - மறுபுறம்
மொழியின் சிறப்புகளை
முழக்கமிட்டுப் பேசும்!

பாலின்றி சேயும் கூழின்றி தாயும்
பரிதவித்துச் சாகும் தேசம் - மறுபுறம்
பாதாம் பருப்பில் பாயசம் என
சமையல் குறிப்புகள் பேசும்!

வேலையின்றி இளைஞர் கூட்டம்
வெந்து சாகும் தேசம் - மறுபுறம்
பெப்சி உமாவுடன் பேசுங்கள்
பிறகென்ன? என சேனல்கள் பேசும்!

குடிக்க நீரின்றி
குடங்களுடன் அலையும் தேசம் - மறுபுறம்
கோகோ கோலா ஐந்து ரூபாய்தானென
விளம்பரங்கள் வக்கணையாய்ப் பேசும்!

படுக்க இடமின்றி மக்கள்
பாதையோரம் கிடக்கும் தேசம் - மறுபுறம்
"அகண்ட பாரதத்தில் உகாண்டா" என
அடாவடியாய்ப் பேசும்!

மனுக்களை அனுப்பி
மன்றாடிக் கொண்டிருக்கும் தேசம் - மறுபுறம்
மாண்புமிகுகளோ மப்புடன்
மனுதர்மம் பற்றிப் பேசும்!

ஏர்தொட்ட கரங்களை
தேர்தொட விடாத தேசம் - மறுபுறம்
எல்லோரும் இந்நாட்டு மன்னரென
இலக்கியம் பேசும்!

எல்லாவற்றையும் சகிக்கும் தேசம்
என்றாவது எதிர்த்துப் பேசும்
அன்று அதன் பேச்சு உங்கள்
செவியில் மட்டுமல்ல
செவிட்டிலும் விழும்!

- கவிஞர் ராசை. கண்மணி ராசா
இராசபாளையம், தமிழ்நாடு.

(அவரது "கவிதையாவது....கழுதையாவது!" -கவிதைநூலில் )

சிறப்பான கவிதை ..செவிட்டில் விழப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை..

~

Saturday, April 11, 2009

கல்லூரி கலாட்டா !

~


காத்தூர் from கமலகண்ணன் !
-----------------------------------------------------------

இடம் : வகுப்பறை
நேரம் : மதிய உணவு முடிந்தபிறகு வரும் முதல்வகுப்பு! உண்ட களைப்பு பாதி உறக்கத்தில் கமல்..அவனருகில் நான்..

புதியதாய் வந்த maths ஆசிரியர் எல்லாரையும் அறிமுகப்படுத்திக்க சொல்ல நம்ம தோழர்கள் எல்லாம் அவர் அவர் பேர் , ஊரை சொல்லி அறிமுகப்படுத்தி கொண்டிருந்தார்கள்...என் வரிசை வரும்போது கமல் சற்று ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான். நான் சொல்லி முடித்த பிறகு அவனை தூக்கத்தில் இருந்து ஒரு அடி அடித்துவிட்டு நான் அமர்ந்தேன்....தூக்கத்தில் எழுந்து அவரத்தில் அவன்

I am காத்தூர் from கமலகண்ணன் சார்...( வகுப்பி ....கொள்.....சிரிப்பு)

ஆசிரியர் : உட்காருங்க காத்தூர்....

அடுத்த நாள் அதே ஆசிரியர் அதே நேரம் அதே வகுப்பு அதே உண்ட களைப்பு பாதி உறக்கத்தில் கமல்..அவனருகில் நான்..

ஆசிரியர் : கமல் அந்த formula சொல்லுங்க !

நான்: அவனை அடித்து எழுப்ப ..matter என்னானு அவன் கண்ணால எங்கிட்ட கேட்க ..நான் அவனை கலாய்க்க " காத்தூர் from கமலகண்ணன்" என்று மெதுவான குரலில் சொல்ல ....இந்த முறை சுதாரிப்பதாய் கருதிகொண்டு.. " I am கமலகண்ணன் from காத்தூர் சார்."..( வகுப்பி ....கொள்.....சிரிப்பு)

ஆசிரியர் : useless felllow .....

கமல் : (என்னை பார்த்து அப்பாவியாய் ) ஏண்டா correct-a தானே சொன்னேன் ! ! ! ....

அன்று முதல் அவனை எல்லாரும் காத்தூர் என்று தான் கூப்பிடுவோம்...கமல் என்றால் நிறைய பேருக்கு தெரியாது..காத்தூர் என்றால் தான் தெரியும்...

இழித்தவாயன் :
---------------------------------------------

நான், பாசு,தனா, அப்புறம் நம்ம சிவாஜி...

நான் : சிவாஜி வாட மாப்ள தாபாவில் போய் சாப்பிடலாம் ஹாஸ்டலில் இன்னைக்கு தயிர்சாதம் டா..
பாசு,தனா: ஆமாம் டா சிவாஜி வாடா போகலாம் ....
சிவாஜி : என்னாட இன்னைக்கு பாசம் பொங்குது..காசு இல்லையேடா..
நான் : வாடா..தாபாவில் எப்படியும் நிரையே பேரு இருப்பானுங்க..நமக்குனு ஒரு இழித்தவாயன் கிடைக்காமலா போயிடுவான் வாடா பார்த்துகலாம்..
சிவாஜி : சரி போலாம்..எவன் மாட்ட போறோனா அய்யோ அய்யோ ....
பாசு,தனா : ஹி ஹி அய்யோ அய்யோ ....

நல்ல சாப்பிட்டு முடியும் தருவாயில்

நான் : என்ன மச்சி ..நீ ஆல் கிளியர் பண்ணிருக்க ..treat ellaam கிடையாதா....
சிவாஜி : என்னடா உங்களுக்கு இல்லாததா...காசு இல்லடா...(தன்னிடம் காசு இல்லைங்கிறத உறுதி படுத்தி கொண்டு..) பாரு இப்ப காசு இருந்தா நான் pay பண்ணியிருக்க மாட்டேன்..
தனா : ..மாப்ள ..நான் முந்தா நாள் உங்கிட்ட 200 ரூபா வாங்கினல்ல....இந்தடா..கடன் வாங்கினதிலிருந்து மன தே சரியில்ல ( கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் ரேஞ்சுகுகு ஒரு டயலாக் )
சிவாஜி: ..! ! ! ! .வாயில் ஈ ஆடல....
நான்,பாசு : மாப்ள பில் 190 ரூபாடா.. ....தாபாவில் தெரிந்தவன் யாரும் இல்லைட...நீதான் treat தரேன் சொன்னியே ,....:):):)

வேரு வழி இல்லாம பில்லை கட்டிட்டு சிவந்த கண்ணோடு எங்களை பார்த்தான்..

நான்,பாசு,தனா: thanks for the treat da !

சிவாஜி: ..இழித்தவாயன் கிடைக்காமலா போயிடுவான்னு முரு சொன்னப்ப இந்த ரெண்டு நாய்ங்களும் என்னை ஓரக்கண்ணால பார்த்தானுங்க..அப்பவே நான் சுதாரிச்சிருக்கனும்...நம்பி வந்தேன்..இருங்கடா..உங்களுக்கு ஒரு நாள் இருக்கு )

தனா: ரொட்டி தான் கொஞ்சம் சூடா இல்லை இல்லைடா முரு... :):) :)




~

Monday, April 6, 2009

அரசியல்

~


எனக்கு வந்த் Email... இதில் வரும் கருத்துகளுடன் நான் நூறு சதவீதம் ஒத்து போறேன் !
இதை எழுதினவருக்கு என் வழிமொழிதல்கள் !








Wednesday, March 25, 2009

தமிழ் வழி - பகுதி 3

~

பகுதி -1

பகுதி -2


அவன் விரக்தி உணர்வை அவன் உடல் மாற்றத்திலும் ,கண் சிகப்பிலும் புரிந்த இளமதி "ஹே பாரதி வா போலாம்.." என்று அவனை அந்த இடத்தை விட்டு அழைத்து சென்றாள் !

"இல்ல பாரதி இவங்கள் எப்படி சுயலாம இருக்காங்க பாரு ! நம்ம மட்டும் ...அவன் ஆரம்மிக்க !

"அதை விடு ! அங்க பாரு அந்த சின்ன குழந்தைங்க எவ்வளவு ஜாலியா அலையில் விளையாடுறாங்க பாரு " அவனை திசைதிருப்பினாள் !

"பேசாமா குழந்தையாகவே இருந்திருக்கலாம்" என்று பாரதி மறுபடியும் ஆரம்பிக்க... "டேய் புலம்பாதடா ! என்று செல்லமாக அதட்டினாள் ..

"எங்க மாமா ஒரு software கம்பெனியில தான் வேலை பார்க்கிறார் அவர்கிட்ட சொல்லி எதாவது பண்ண முடியுமானு பார்க்கலாம் .. ஆனா அது சின்ன கம்பெனிதான் உன் லெவலுக்கு இல்லைனு வருத்தபடகூடாது "

"ஆமா என் லெவலுனு ! அடப்போ இளா...நானே ஒரு பிச்சை காரன்..என்ன.. B.E படிச்ச பிச்சைகாரன் ! "

"சரி டைம் ஆச்சு நான் கிளம்புறேன் ! நான் உனக்கு கால் பண்ணி சொல்றேன் ..உன் friendக்கு கால் பண்ணினா உங்கிட்ட கொடுப்பான்ல ! ? "

"கொடுப்பான்..கொடுப்பான். சரி பார்த்து போ ! பார்க்கலாம் ! "

சொன்னமாதிரி அடுத்த நாள் போன் பண்ணி அலுவலக முகவரியும் ,அவுங்க மாமா சரவணண் நம்பரையும் கொடுத்தாள் .
அவனும் அவருக்கு போன் பண்ணிட்டு , interview -க்கு prepare பண்ணிட்டு அவரோட அலுவலகத்துக்கு சென்றான்..

"வாங்க பாரதி ..இளா சொன்னா ! நான் HR கிட்ட சொல்லிட்டேன் ! நீங்க written test அட்டன் பண்ணுங்க ! பார்ப்போம் .. அப்புறம் எங்க M.D க்கு relationa இருந்தா கூட இங்க interview clear பண்ணினா தான் வேலை ! so நல்லா பண்ணுங்க ! All the best ! " என்றார் சரவணன்.

பாரதியும் வழக்கம் போல written test clear பண்ணினான்..உற்சாகமோ என்னமோ 97% ல clear பண்ணினான். அடுத்து techinical interview என்று அறிவித்தார் H.R . அவனும் இந்த வாட்டியாவது ஒழுங்கா english பேசனும் என்று மனதிற்குள் வேண்டி கொண்டு interview அறைக்குள் நுழைந்தான் .

இரண்டு பேர் இருந்தனர் ! அவர்கள் தங்களை அறிமுகபடுத்தி கொண்டு ...அமரவைத்து " Tell about yourself " எனறவுடன .பாரதிக்கு லைட்ட உடம்பு நடுங்க ஆரம்பித்தது..இருந்தாலும் கட்டுப்படுத்திகிட்டு ஏற்கனவே மனப்பாடம் பண்ணிவைத்த அந்த பகுதியை அரை குரையா சொல்லி முடித்தான் !

அவன் கொஞ்சம் தடுமாறுவதை கவனித்த interviewer " என்ன பாரதி ஏன் பயப்படிறீங்க ! தைரியமா பேசுங்க ! புல்லா English ல பதில் சொல்ல கஸ்டமா இருந்தா கொஞ்சம் தமிழ் கலந்து பேசுங்க பரவாயில்லை ! " என்றார்..

பாரதி இதை எதிர்பார்க்கவில்லை ! அது அவனுக்கு உற்சாக மூட்டியது..அடுத்த அடுத்த கேள்விகளுக்கு திருப்திகரமான பதிலை தமிழ் கலந்த ஆங்கிலத்தில் அளித்தான் !

" ok barathi ! வெளியில wait பண்ணுங்க ! H.R will get back to you ! " என்றார் interviewer.

பாரதி " என்னடா get back to you -ஆவா இதுவும் ஊத்திக்கிச்சா ! ..ஊத்தன பரவாயில்லை நான் நல்லாதான் பண்ணினேன் ..என்று தன்னை சமாதான படுத்தி கொண்டான் "

சற்று நேரத்தில் H.R வந்து ..." Congrats barathi techincal round clear பண்ணீட்டிங்க ! அடுத்து final personel interview ..usualla சரவணண் தான் பண்ணுவார்..நீங்க அவரோட reference-னால உங்களை எங்க M.D யே interview பண்ணறதாய் சொல்லிருக்கார் " so ஒரு 10 minutes wait பண்ணுங்க ! அவர் ஒரு meetingla இருக்கார் ! வந்ததும் கூப்பிடுறேன் ! " என்றாள்.

என்னடா இது M.D யா.. அவர் IIT ல படித்ததாகவேற சரவணன் சொன்னாரே ! என்ன போட்டு englsihல சாவடிக்க போறாரு . என்று மனதிற்குள் நினைத்து கொண்டான் .. அழைப்பு வந்தவுடன் தயங்கி தயங்கி M.D room க்கு சென்றான் !

M.D நா ஒரு 50 வயது இருக்கும் என்று உள்ளே நுழைந்த பாரதிக்கு ஒரு 29 வயது மதிக்க தக்க இளைஞரை கண்டவுடன் ஒரு வியப்பு ஏற்பட்டது ! அவர் அவனை உள்ளே அமரவைத்து " Tell about yourself " என்றவுடன்.... ஆகா இவரு வேற அதே கேட்கிறாரே! மன்ப்பாடம் பண்ணினது வேற மறந்து போச்சே " என்ற நினைத்து எதோ சொல்ல வாய் திறக்கும் போது " execuse me .." என்று தனக்கு வந்த போன் அட்டண்ட் பண்ணினார் M.D.." அப்பாடே ..தப்பிச்சோம்..போன் போட்ட புண்ணியாவான் வாழ்க ! என்று சொல்லி விட்டு தான் மறந்த " Tell about yourself " நினைவுபடித்தி கொண்டான் .

M.D போன் வைச்சவுடன் கட கட வென சொல்ல ஆரம்மித்தான் ..... M.D பாதிலேயே நிறுத்தினார்..ஆகா முடிந்திருச்சுருடா அவ்வளவு தான் என்று நினைத்தான்.

" நீ தமிழ் மீடியத்தில படிச்சியானு " கேட்டார்.

அவர் வாயிலிருந்து தமிழ் வந்ததும்...முக்கியமா அவனோட ஆங்கில பலகீனத்தை பற்றி அவர் கேட்டதும் பாரதிக்கு கிட்ட தட்ட கண்ணிலிருந்து தண்ணி வந்து விட்டது .

இதை கவனித்த M.D " O.K ஓகே.. சரவணன் உன்னை பத்தி சொன்னாரு..உன்னோட இண்டெர்வியு ரிசல்ட் எல்லாம் நல்லா இருக்கு ! உன்னொட school records எல்லாம் சூப்பர் ! காலேஜ்ல் மட்டும் ஏன் கம்மி அதுக்கும் தமிழ் மீடியம் தான் காரணமா ? இல்லை காதல் கீதல் பண்ணினியா ! " என்று M.D casula பேச..பாரதிக்கு தலை கால் புரியல !

"அப்படி யெல்லாம் இல்லை சார் ! " என்று வாய் திறக்க

M.D " சிரித்து கொண்டே ... சரி தமிழ்ல் எப்படி நல்லா பேசுவியா..இல்லை .." என்று இழுத்த போது !

" இல்லை சார் தமிழ் நல்ல பேசுவேன் சார்..பேச்சுபோட்டில prize எல்லாம் வாங்கியிருக்கேன் சார்."

"சரி ! நல்ல தைரியமா பேசனும் ! இப்ப ஆரம்ப நிலைக்கு இந்த ஆங்கிலம் பரவாயில்லை ஆனா வளரும்னா..கண்டிப்பா communication skill வளர்த்துக்கனும். ஆமா resumela obejctive பயங்கரமான ஆங்கிலத்திலே இருக்கே ! எங்க google இருந்து எடுத்தியானு " அவனை கலாய்க்க !

"ஆமாம் சார் " என்று வழிந்தான் பாரதி !

" சரி ! உன்னொட பொழுது போக்கு என்ன ?

" புக்ஸ் படிப்பேன் சார் ! "

"என்ன மாதிரி புக்ஸ் "

" தமிழ் கவிதைகள் ..கட்டுரைகள் "

"ம்...ஆங்கில புக்ஸ்ம் படித்தால் ஆங்கில அறிவு வளரும்லா ! சரி ! உனக்கு பிடித்த கவிதை சொல்லு ! அதை வச்சு தான் உனக்கு வேலை !" என்று மறுபடியும் கலாய்க்க !

" தண்ணீரை கூட சல்லடையால் அள்ளி விடலாம் அது பனிக்கட்டி ஆகும் வரை காத்திருந்தால் " என்று பட்டென்று சொன்னான் ..

"வைரமுத்து கவிதை தானே ..நானும் படித்திருக்கேன் .. சரி Jokes Apart ! we are ready to offer you job of junior programmer ! எங்க கம்பெனி is samll but வளரும் கம்பெனி so.. iniital renumeration (சம்பளம்) " கம்மியாதான் இருக்கும்.. depends on your performance it will be increased every 6 months...OK ? "

" Thank you sir Thank you veru much sir ! ....."

" ok ..Thanks should be in your heart also....you should stay in our company atleast for 2 years ok ? " என்றார் புன்முறுவலடன் !

" Sure Sir ! "

" OK...I will ask HR to send more details. சந்தோசமா வீட்டுக்கு போ ! enjoy your self ..call home and let your parents know that you got a job " என்றார் M.D.

பாரதிக்கு பேச்சு வரவில்லை ...Thank you Thank you .என்று சொல்லி அவரின் அறையை விட்டு வெளியில் வந்தான் !

சரவணனை பார்த்து ..நன்றி சொல்ல ! அவர் பெருமிதத்துடன் .
" நான் ஒன்னும் பண்ணல ! I just forwared your resume ! you got that becuase you have done well in interview and you deserve it " என்றார் .

பாரதிக்கு சந்தோசம் தாங்க முடியல ! ஒடி போய் இளமதிக்கு போன் பண்ணினான்....

"இளா .." என்ற சொன்னவன் அதுக்கு மேல பேசமுடியல ! கண்ணீர் தார தாரயா கொட்டியது.

"பாரதி என்னாச்சு ஏன் அழுகிற..என்னாச்சுடா..அட சொல்லிட்டி அழுடா! ..hey ! "

" I got it I gooooot it ...I got the job..." என்றான்....

" ஆஹா சூப்பர்.டா...சூப்பர்..நாந்தான் சொன்னலே ! ..சூப்பர்டா! ஆனா என்ன software engineeru ஆனா வுடனே ..got it.. got it nu ஆங்கிலத்தால் தான் பேசுறாரு துரை ! ..என்று நக்கலடிக்க !

"சீ போடி ...".

"சரி..வீட்டிற்கு போன் பண்ணி சொல்லு ...அப்பா அம்மா எல்லாம் சந்தோசம படுவாங்க ! ..."

"ம்ம்ம்..இப்ப வேணாம்..முதல் மாதம் சம்பளம் வந்தவுடன் நேரா போய் சொல்லிக்கிறேன் ..என்னாலேயே எனக்கு வேலைகிடைத்ததை நம்பமுடியலை !

"சீ அசடு...சரி Ok...எனக்கு class இருக்கு நான் வைத்திடுறேன் ! " என்று இணைப்பை துண்டித்தாள்....

அன்று முழுவதும் தூக்கம் வரவில்லை பாரதிக்கு மனது முழுவதும் சந்தோசம் !

ஒரு வாரம் கடந்தது ! அலுவலகத்தில் 41வது employee ஆக சேர்ந்தான்.

"EMP # 41. Barathi Dhanabalan "


- தொடரும்


~

Tuesday, March 24, 2009

பாட்டி வடை சுட்ட கதை !

~

பாட்டி வடை சுட்ட கதை ! - நன்றி விவேக் !

புழுதி படிந்த ஒரு கிராமத்தில் ....

ஒரு ஜவ்வன கிழவி
வடை சுட்டு விற்று வந்தாள் !
காசு பெற்று வந்தாள் ...

அந்த கந்தக வடையை கவர்ந்து செல்ல
அங்கே வந்தது ஒரு கார்மேக காகம்
பாட்டிக்கு மட்டும் கார்மேக காகத்தின் கள்ள எண்ணம் தெரிந்திருந்தால்
அவளின் கல்லறை பூக்கள் கூட அவளுக்காக கண்ணீர் சிந்தியிருக்காது !

பாட்டி பாராத சமயம் ....பாட்டி பாராத சமயம்
அந்த கார்மேக காகம் சந்தன மின்னல் போல பாய்ந்து
அந்த கந்தக வடையை கவர்ந்து சென்றது..

விதைக்குள் வந்த விருட்சம்
அங்கே வளர்ந்து நின்றது பல வருசம் ..
அதன் சுந்தர கிளைகளில் சென்று அமர்ந்தது
அந்த சொர்ப்பன காகம் !

பூவுக்குள் பூகம்பம் போல் ..புறப்பட்டு வந்தது ஒரு நரி
அந்த நரி நர்த்தக நரி ! நாலடியார் நரி !
நீதி அறிந்து போதி சொல்லும் போதிமரத்து சாதி !

கார்மேகக் காகம் வைந்திருந்த வடையை
அந்த நரி பார்த்தது ! உடல் வேர்த்தது !
அந்த ராஜ வடையை அபகரிக்க
அதன் நந்தனவன மூளை ஒரு நாச வேலை செய்தது !
நரி அதுவாக சென்றது
காகம் இருந்த மரத்தருகே மெதுவாக சென்றது !

ஆனால் அந்த கார்மேக காகமோ
இச்சக அழகியாய் எச்சம் கூட போட மறந்து
அந்த வீரிய வடையை தனது நேரிய விரல்களுக்கடியே வைத்து
அதன் கூர்மையை சோதித்து கொண்டிருந்தது !

நரி பகர்ந்தது ! ஏய் உலக அழகியே ! உள்ளூர் மோனாலிசாவே !
நகராட்சி பூங்காவில் நுழைந்த நமீதாவே !
என் அந்தபுறத்தில் அத்து மீறி நுழைந்த அசினே !
தீவுத்திடலுக்குள் திடும்மென நுழைந்த திரிசாவே !
நீ பார்க்கவே எவ்வளவு அழகு !
நீ மட்டும் உன் கந்தவர் குரலினால் ஒரு கானம் இசைத்தால்
எருதுக்கும் விருது கிடைக்கும் சர்ப்பம் கூட கர்ப்பம் தருக்கும் !
ஏன் நீருக்கும் வேர்க்கும் என்றது !

காகம் பாடும் வடை கீழே விழும் என்று நரி எதிர்பார்த்தது !

இந்த இடத்தில் தான் சரித்திரம் சரிகிறது !
பூகோளம் புரள்கிறது ! தமிழ் தடுமாறுகிறது
நரியின் தேவ எண்ணத்திலே ஈட்டி பாய்ந்தது !

ஏனென்றால் காகம் என்ன பதில் அளித்தது தெரியுமா !
ஏய் நர்த்தக நரியே ! நான் பாட மாட்டேன்
ஏனென்றால் நான் வைரமுத்துவின் வாசலில் வளர்ந்த காகம் !
ஆகவே மெட்டில்லாமல் பாட மாட்டேன்
என்று சொல்லி வடையுடன் பறந்தது

நரி ஏமாந்தது !

~

Tuesday, March 3, 2009

கிராமத்து பூங்குயிலோ !

~

கிராமத்து பூங்குயிலோ ! நகர்புறத்து ரெட்டை சடையோ !
மாநகர நவநாகரீக பெண்ணோ !
தாவணியோ ! சுடிதாரோ ! மாடர்ன் டிரஸ்ஸோ !

பத்தாம் வகுப்பு தாண்டியிருப்பாளோ ! இல்லை பெயருக்கு ஒரு பட்டம் வாங்கி இருப்பாளோ !
பழ்கலைகழக முதல் மாணவியோ ! இல்லை என்னை போல் பத்தோடு பதினொன்னோ !

பாரதி கண்ட புதுமைப் பெண்ணோ ! இல்லை அதிர்ந்த பேசவே அஞ்சுபவளோ !
அமெரிக்கா போய்வந்தவளோ ! இல்லை அடுத்த தெருவை தாண்டாதவளோ !

களை எடுப்பவளோ! நாத்து நடுபவளோ !
பாடம் சொல்லும் ஆசிரியையோ ! கடமை தவறா அரசு அலுவலரோ !
கண்ணியம் காக்கும் காவல்துறை அதிகாரியோ ! வழக்குகளில் ஜொலிக்கும் வழக்கறிஞறோ !
மருந்து எழுதும் மருத்துவரோ ! மருந்து கொடுக்கும் செவிலியோ !
மென்பொருளாலியோ ! பத்திரிக்கைகாரியோ ! தனியார் துறை ஊழியரோ !
இல்லை வேலைக்கு அனுப்பாத வீட்டின் செல்லப் பொண்ணோ !

வெட்டிகதை பேசும் வீட்டு சோம்பேறியோ ! இல்லை குடும்பம் காக்கும் குலமகளோ !
உலக அறிவு அறிந்தவளோ ! இல்லை உள்ளூர் கதை மட்டும் தெரிந்தவளோ !

சமையல் அறிவாளோ ! இல்லை சமையல் புத்தகம் வாங்கிவருவாளோ !
வீட்டு வேலை பாதியாவது செய்வாளோ ! இல்லை ரெண்டு வேலைக்காரி கேட்பாளோ !
சிக்கன் சாப்பிடுவாளோ இல்லை சுத்த சைவம் என்பாளோ !

நல்ல தமிழ் கதைப்பாளோ ! இல்லை தமிங்கிலிஸ் பேசுவாளோ !
சீரியலுக்கு அடிமையோ ! இல்லை Fashin Tv பார்பவளோ !
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு பார்பாளோ ! இல்லை மானாட மயிலாட மட்டும் தானோ !
NDTV , சன் நியுஸ் கேட்பாளோ ,இல்லை செய்திவாசிக்கிறவ நெக்லஸ் நல்லாயிருக்கு என்பாளோ !

விளையாட்டு வீராங்கணையோ ! இல்லை பல்லாங்குழி நல்லா விளையாடுவேன் என்பாளோ ! !
கிரிக்கெட்டு பார்பாளோ ! இல்லை அதெல்லாம் எனக்கு பிடிக்காது என்பாளோ !

தமிழ் சினிமா ரசிப்பாளோ ! "மிரட்டல் அடி" ரசிகையோ !
இல்லை டாம் குர்ஸ், ஹிருத்திக் ரோசன் தான் என் hero என்பாளோ !
பாலா, ராதாமோகன் பிடிக்குமோ ! இல்லை ஸ்டிபன் spel burg என்பாளோ !
இளையராஜா ,ரஹ்மான் இசைப்பிரியரோ ! இல்லை britney spears தான் என் favortie என்பாளோ !

முகத்துக்கு பயித்த மாவு, உடம்புக்கு மஞ்சள் என்பாளோ !
இல்லை பியூட்டி பார்லர் போவாளோ !
தங்க நகை அடிக்கடி வேண்டும் என்பாளோ ! இல்லை என் புன்னகை மட்டும் போதும் என்பாளோ !

கம்யூட்டர் அறிந்தவளோ ! இல்லை இதில் சன் tv வரும்மானு கேட்பவளோ !
பிரபல பதிவரோ ! பின்னோட்டம் போடுபவளோ ! இல்லை பதிவென்றால் என்ன என்பாளோ !
புத்தகப் புழுவோ ! இல்லை புத்தகம் வாங்கி ஏன் செலவு செய்கிறீங்க என்பாளோ !
குமுதம்,விகடனோ ! இல்லை femina , outlook படிப்பவளோ !

சிகரட்டு பிடிப்பாளோ ! சீட்டி அடிப்பாளோ !
நானும் குடிகாரன்னு சீன் போட நண்பன் பார்ட்டிக்கு coke குடிக்க நான் செல்ல
எனக்கு ஒரு ஃபுல் வேணும்பாளோ !

மாமியார் மருமகள் சண்டையிலே என்னை அம்பயர் ஆக்கி
அம்மாவுக்கு அவுட் குடுக்க சொல்லுவாளோ !

நான் அவளுக்கு பிடித்த மாதிரி மாறுவேனா ? !
இல்லை அவள் எனக்கு பிடித்த மாதிரி மாறுவாளா ?
இல்லை இருவருக்கு பிடித்ததும் ஒன்றாக இருக்குமோ ? !

அகம், புறம் இதில் ஒன்று அழகாயிருந்தால் அழகி ..
ரெண்டுமே அழகாய் இருந்தால் பேரழகி !
அவள் அழகியோ இல்லை பேரழகியோ ?

என்று நான் கனவுகளில் நனைந்து கொண்டிருக்கும் போது ....கணீரெண்று என்கிருந்தோ ஒலித்தது ஒரு குரல் !

" அதிக கற்பனை வேண்டாம் மகனே ! கொஞ்சம் அடக்கி வாசி ! :) "


~

Monday, February 23, 2009

தமிழ் வழி - பகுதி 2

.

தமிழ் வழி பகுதி - 1


இளமதி தமிழ் ஆசியரின் மகள்.தமிழ் மீது அதீத பற்று கொண்டவள்.தமிழ் கவிதைகளை விரும்பி படிப்பவள்.அவள் தமிழ் படிக்கவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டாள், ஆனால்அவளின் அம்மாவின் கட்டாயத்தால் பொறியியல் சேர நேர்ந்தது.பாவடை தாவணியில் இளமதி பார்த்தவுடன் நம்ம மட்டும் இல்ல ! நமக்கும் ஒரு பட்டிக்காடு company-க்கு இருக்கு என்று மனதில் நினைத்துகொண்டான் பாரதி.வகுப்புகள் தொடங்கின..நாட்கள் நகர்ந்தன.பாரதியும்,இளமதியும் தமிழ் மீடியத்தில் படித்ததால்,ஆங்கிலத்தில் பாடங்களை படிக்கவும்,ஆசிரியர் நடத்துவதை புரிந்து கொள்ளவும் சிரமப்பட்டனர்.அதே அவர்களிடையே நட்பு வளர காரணமாயிருந்தது.இருவரும் தமிழ் ,தமிழ் சார்ந்த புத்தகங்களை பற்றியே அதிகம் பேசிக்கொண்டனர்.

முதல் பருவத்தேர்வு வந்தது.ஆங்கில சிரமத்தால் சில பாடங்களில் இருவரும் தோல்வி கண்டனர்.அவர்கள் கல்வி வாழ்க்கையிலே முதல் தோல்வி அவர்களை பெரிய அளவில் பாதித்தது..ஆசிரியர் ,சக மாணவர்களும் சாதரணமாக பார்த்தாலும் ,அவர்கள் தங்களை கேலியாக பார்ப்பதாக உணர்ந்தனர்.பாரதி இந்த தோல்வியை தாங்க முடியாமல் விடுதியில் போய் தனியே அமர்ந்து அழுதான்.அருகில் கிடந்த செய்தித்தாளில் "ஆங்கிலத்தால் சரியாக படிக்க முடியாததால் மாணவர் தற்கொலை " என்று தமிழ் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நடந்த செய்தி இருந்தது. தானும் அவ்வாறு செய்துகொள்ளலாம் என்று அவன் தனிமை அவனை தூண்டியது.அப்போது அவனை தேடி விடுதிக்கு வந்தான் கதிர்.பாரதி அழுவதை பார்த்து அவனுக்கு ஆறுதில் கூறி, அவனை வெளியில் கூட்டி சென்றான்.

இளமதி தன்னால் தொடர்ந்து படிக்க இயலாது, நான் discontinue பண்ணிட்டு தமிழ் படிக்க போவதாக அவள் அப்பாவிடம் சொன்னாள். Arrears வாங்கிறது எல்லாம் சகஜம் என்று எவ்வளவோ எடுத்து கூறியும் தன் முடிவில் உறுதியாக் இருந்ததனால் வேறு வழியின்றி அவள் விரும்பிய வண்ணம் செய்தார் அவள் அப்பா.இளமதி எல்லா கல்லூரி தோழர்களிடம் விடை பெற்று சென்றாள். பாரதியிடம் மட்டும் தன் வீட்டு தொலைபேசி எண்ணை கொடுத்தாள்.மனதில் ஒரு வித பாரத்துடன் கல்லூரிய வகுப்பை விட்டு நகர்ந்தாள்.

கதிர் பாரதிக்கு தினமும், பாடங்களை சொல்லி கொடுத்தான்..பாரதியும் இரவு, பகலாக படித்தான் கதிரின் துணையோடு. நான்கு ஆண்டுகள் உருண்டோடின. பாரதியின் உழைப்பு அவனை எல்லா தேர்விலும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைய செய்தது.அவன் கல்லூரியின் CAMBUS Interviews வந்தது.. எல்லா company Interviewஸ் யிலும் எழுத்து தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும், ஆங்கில பேச சிரமபட்டதால் ,அவனால் group discussion, direct interivew யில் செலக்ட் ஆக முடியவில்லை.கதிர் ஒரு companyயில் செலக்ட் ஆனான்.

கல்லூரி வாழ்க்கையும் முடிவடைந்தது.கதிரும், பாரதியும் ஊருக்கு சென்றனர்.தனபாலும் ,கஸ்தூரியும் பாரதி வந்த சந்தோசத்தில் இருந்தாலும் பாரதி மட்டும் வேலை தேடும் நினைப்பாகவே ,கிடைக்குமோ கிடைக்காதோ என்று சோகத்துடனே இருந்தான். கடைசி தேர்வின் முடிவுகள் வந்தன.பாரதி தான் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்ததை அவர்களிடம் சொன்னான்.அவர்கள் பூரித்து போனார்கள்.கஸ்தூரியின் கண்ணில் ஆனந்த கண்ணீர்.தங்கை கவிதா ஒடி வந்து வாழ்த்து சொன்னாள். அண்ணே பாசாயிடுச்சு இனிமே நம்ம கஷ்டம் எல்லாம் தீர்ந்திருமா...இந்த வருசம் தீவாபளிக்கு எனக்கு நல்ல சுடிதார் வாங்கி கொடுக்கணும் என அவள் ஆசையெல்லாம் கோரிக்கையெல்லாம் அடுக்க ஆரம்பித்தாள்..பாரதி கண்டிப்பா இவ ஆசையெல்லாம்..நிரைவேற்றனும்.நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிவைக்கனும்னு மனதில் நினைத்து கொண்டான்.

நாட்கள் கடந்தன.Interviews callsக்காக wait பண்ணி சோர்வடைந்த பாரதி அம்மாவிடம் தான் சென்னைக்கு வேலை தேட செல்ல இருப்பதாக கூறினான்.அதை கஸ்தூரி தனபாலிடம் கூற, தன்பால் பாரதியை கூப்பிட்டு "ஏன்யா எங்கிட்ட சொல்லமாட்டுற ! அப்பா இருக்கிற வரைக்கும் நீ எதுக்கும் வருத்தபட கூடாதடா.".என்று கண்கள் கலங்க, தன்னுடைய தீவாபவளி போனஸ் பணத்தை எல்லாம் எடுத்து பாரதிக்கு செலவுக்கு கொடுத்தான்.பாரதிஅதை கணத்த இதயத்துடன் பெற்றுக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டான்.சென்னையில் combus Interviewல் செலக்ட் ஆகாமல் போன சக தோழர்களுடன் தங்கி வேலை தேட தொடங்கினான்.எல்லா இடத்திலும் எழுத்து தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் ,அரை குரை ஆங்கில பேச்சால் எதிர்பார்த்த வேலையை பெற முடியவில்லை.

ஒரு நாள் வேலையை பற்றியே நினைத்து கொண்டு கடற்கரையில் நடந்து கொண்டிருந்தான்..பின்னால் இருந்து ஏதோ ஒரு பெண் குரல் அவனை கூப்பிடுவது போல் இருந்தது. நல்ல பரீட்சதனமான் முகம். "பாரதி எப்படி இருக்கே...என்றது அந்த குரல்..கிட்ட வந்தவுடன் தான் பாரதியால் அடையாளம் காண முடிந்தது...."ஹே.......இளமதி...நீயா நான் எதிர்பார்க்கவே இல்லை...நான் நலம்..நீ எப்படி இருக்கே.." என்று ஆரம்பித்த உரையாடல் பழைய நினைவுகளில் தொடங்கி இன்றைய கதை வரை தொடர்ந்தது..

இளமதி தான் ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்ப்பதாக கூறினாள்.அப்படியே பேசிகொண்டு கடற்கரையில் நடந்து கொண்டிருந்தனர்.அவர்களின் பேச்சை அரசியல் மேடை ஒலி பெருக்கியின் சத்தம் இடைமறித்தது.அந்த அரசியல்வாதி தமிழ் வழி கல்வியை பத்தி பேசிகொண்டிருந்தார்."மக்கள் தன் குழந்தைகளை தமிழ் வழியில் தான் படிக்க வைக்க வேண்டும்..." அவரின் பேச்சு பாரதியின் விரக்திக்கு தூபம் போட்டது.அந்த அரசியல் கூட்டத்தின் நடுவே சென்று "உன் பையன் எங்கடா படிக்கிறான் கான்வென்ட்ல தானே ..உன் பொண்ணை எங்கடா கல்யாண பண்ணி கொடுத்திறக்கிற அமெரிக்காவில்தானே !..ஏண்டா தமிழில படி தமிழல படினு சொல்லி தமிழல படிச்சவனக்கெல்லாம் வேலை கொடுக்காம சாவடிக்கிறீங்க! தமிழ் படித்தவனுக்கெல்லாம் வேலை கிடைத்தா..தமிழை யாரும் வளர்க்க தேவையில்லை..தானா வளரும்" எனறு கத்தனும் போல இருந்தது பாரதிக்கு.

-தொடரும்...


.

Friday, February 20, 2009

அம்மா - ரகசிவ் ஞானியார்.....








என்னை கவர்ந்த கவிதை ! என் மனதில் உள்ளதை அப்படியே சொன்ன கவிதை ..நன்றி ரகசிவ்

பி.கு : எங்கம்மா கிட்ட இந்த கவிதைய பற்றி சொன்னபோது..அவங்க சொன்னது "எல்லாரும் கல்யாணத்துக்கு முன்னாடி இப்படிதாண்டா சொல்வீங்க " :)
.

Tuesday, February 17, 2009

தமிழ் வழி ! - பகுதி 1

.

விவசாயமும் ,விவசாயம் சார்ந்த தொழில்களும் நிறைந்த ஒரு வளர்ந்த கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாய் உள்ள ஓட்டு வீட்டில் ஆட்டுக் கல்லில் மாவாட்டிக் கொண்டுருந்தால் கஸ்தூரி !
அந்த சமயம் மின்சாரம் துண்டிக்க பட்டிருந்ததால் சிம்ளி விளக்கை ஏற்றி வைத்திருந்தாள். அப்போது பள்ளி முடிந்து ,வீட்டிற்கு பாசமாய் "அம்மா" என்று அழைத்த படி உள்ளே நுழைந்தான் பாரதி. "கொல்லை புறத்தில் மாவாட்டிட்டு இருக்கேன்..கை கால் கழுவிட்டு பின் பக்கம் வாயா " என்றாள் கஸ்தூரி.சொன்னபடி வீட்டின் முகப்பில் இருந்த சிமெண்ட் தொட்டில் தண்ணீரில் முகம்,கை கால் கழுவி விட்டு தனது அரையாண்டு தகுதி பட்டியலை எடுத்துகிட்டு அம்மாவிடம் சென்றான் பாரதி.பாரதி வழக்கம் முதல் ரேங்க் வாங்கி இருப்பதை அந்த சிம்ளி வெளிச்சத்தில் சந்தோசமாய் பார்த்தாள் கஸ்தூரி.பிறகு பாரதிக்கு தட்டில் சாப்பாடு போட்டு கொடுத்திட்டு அருகில் அமர செய்துவிட்டு , தனது மாவரைக்கும் பணியை செய்து கொண்டே பள்ளியில் நடந்ததை பற்றி பேச ஆரம்பித்தால் , "ஆமா நம்ம கதிர் எத்தனையாவது ரேங்க் அய்யா ? ." ரெண்டாவது ரேங்க் மா.அவன் விட நான் 5 மார்க அதிகம்மா.. அப்புறம் எங்க Class Teacher எங்கள் ரெண்டு பேரையும் ENGLISH மீடியத்தில் சேர சொல்றாருமா..அடுத்த வருசம் 6 வகுப்புல ENGLISH மீடியத்தில் எங்களை சேர்க்க சொல்லி அப்பா கிட்ட சொல்ல சொன்னாரு..ENGLISH மீடியத்தில் படித்தால் தான் பின்னாடி வேலை கிடைக்குமாம்.." எனறான் பாரதி. "அப்படியா அப்பா மில்லில் இருந்து வரட்டும் சொல்றேன்..உங்க அத்த மக கூட ENGLISH மீடியத்தில் தான் படிக்கிறா போல..அது பெரிய ஸ்கூல்னு உங்க அத்த சொல்லிட்டு இருந்தா..சரி..தங்கச்சி தூங்கிட்டா..நீனும் போய் பக்கத்தில படுத்துகோடா ! அவளை எழுப்பிடாத! " என்றாள் கஸ்தூரி.

நேரம் கடந்தது.அரிசி ஆலையில் இன்றைய கணக்கு வேலைகளை முடித்து முதலாளி கிட்ட கொடுத்துட்டு வீட்டிற்கு வந்தார் தனபால். கஸ்தூரி பள்ளியில் நடந்ததை சொல்லிகிட்டே தன்பாலுக்கு சாப்பாடு போட்டாள். " ENGLISH மீடியத்தில் சேரணும்னா நிறையா பணம் கட்டனும்டி..ப்ரியாவிக்கு என் தங்கச்சி 2 மாசத்துக்கு ஒரு தரவை பணம் கட்றா..நம்ம வசதிக்கு அதெல்லாம் முடியுமா..ஒரு பொட்ட புள்ள வேற இருக்கு..நம்ம பாரதிதான் நல்லா படிக்கிறானே ..அப்புறம் என்ன..நல்ல படித்தா தமிழ் மீடியம் இருந்தா என்ன ENGLISH மீடியமா இருந்தா என்ன அதெல்லாம் வேலை கிடைக்கும்..நான் நாளைக்கு போய் வாத்தியாரை பார்த்துட்டு விவரத்தை சொல்றேன்..." என்றான் தன்பால்.கஸ்தூரி சரினு ஒரு விதமான சோகத்துடன் சொல்லிட்டு பாத்திரங்கள் எல்லாம் கழுவி வச்சிட்டு மீதி இருந்த பழைய சோற சாப்பிட்டு கதிரின் பக்கத்தில் படுத்து கொண்டாள்.

அடுத்த நாள் தன்பால் பாரதியின் பள்ளிக்கு சென்றிருந்தார்.கதிரின் அப்பாவும் வந்திருந்தார். வகுப்பாசிரியர் அவர்களிடம் "பாரதியும்,கதிரும் நல்லா படிக்கிறாங்க..அவங்க ரெண்டு பேரையும் ENGLISH மீடியத்தில் சேருங்க ! அப்பாதான் பின்னாடி நல்ல வேலைக்கு போகலாம்.." .என்றார். கதிரின் அப்பா தன் பிள்ளையை கண்டிப்பா 6 வகுப்புல ENGLISH மீடியத்தில் சேர்ப்பதாக உறுதி அளித்தார்..தனபாலோ தன் நிதி நிலைமையை எடுத்து கூறி , தன்னால் இயலாது என்றும் விளக்கினான். அப்புறம் பாரதியை தன் தங்கச்சி வீட்டு விசேஸத்திற்கு கூட்டி கிட்டு போறாதா சொல்லிட்டு பாரதியை தன் சைக்கிளில் ஏற்றிகிட்டு தன் தங்கச்சி வீடு இருக்கும் பக்கத்து டவுனை நோக்கி பயணிக்க தொடங்கினார்..போகும் வழியில் பிரியா படிக்கும் அந்த பெரிய பள்ளியை காண்பித்தார் பாரதிக்கு.அப்போது ப்ரியாவை அவரது அப்பா தன் ஸ்கூட்டரில் கூட்டி கொண்டு பள்ளியை விட்டு வெளியே வந்தார்.பாரதி அந்த பள்ளியை ஏக்கமாக பார்த்தான்..உள்ளே மாணாக்கர்கள் எல்லாம் டென்னிஸ் , BASKAT Ball-னு வித விதமான விளையாட்டுகளை விளையாடி கொண்டிருந்தனர்..சங்கீத வகுப்பில் இருந்து பிள்ளைகளின் சங்கீதம் கணமாக ஒலித்து கொண்டிருந்தது.பாரதி ப்ரியா வைத்திருந்த டென்னிஸ் பேட்டை ஆர்வமாய் தொட்டு பார்த்து."இது எப்படி விளையாடுவது " என்றான்..இதெல்லாம் விலை அதிகம் நீ எடுத்து உடைத்தடாதடா !..என்று பரியா அதை பிடுங்க ! "மாப்ளா அதை அவ கிட்ட கொடுத்திருங்க அழ போறா..இதெல்லாம் பணக்கார வீட்டு பிள்ளைங்க விளையாடுற விளையாட்டு..உங்களுக்கு வேணாம்" என்று நக்கலாக தனக்கே உரிய பாணியில் சொன்னார் பணக்கார ப்ரியாவின் அப்பா. அப்புறம் அப்படியே தனபாலும், ப்ரியாவின் அப்பாவும் பேசிகிட்டே அவர்கள் வீட்டிற்கு சென்றடைந்தனர்.பாரதி வீடு வரைக்கும் அந்த டென்னிஸ் பேட்டை பார்த்தபடியே வந்தான்..ப்ரியாவோ அதை இறுக்க பிடித்த படி வந்தாள்.
விசேஸம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது "நான் எப்போ அப்பா இந்த மாதிரி விளையாட்டெல்லாம் விளையாடுவது..சங்கீதம் படிப்பது" என்றான் பாரதி..அதற்கு தனபால்..சிரித்து கொண்டே ! "கண்ணு அப்பா ஏழைடா கண்ணு ...அதனால் அப்பாவால உன்னை படிக்கதான் வைக்க முடியும்..நீ நல்லா படித்து வேலைக்கு போய் அப்புறம் விளையாடு..உன் பிள்ளைகளுக்கு இந்த வசதியெல்லாம் பண்ணி கொடு..." எனறான்.

நாட்கள் நகர்ந்தன. பாரதியும் ,கதிரும் +2 தேர்ச்சி அடைந்தனர். இருவரும் எல்லா படத்திலும் , நுழைவு தேர்வுலும் ஒரே மாதிரியான் மதிப்பெண் பெற்றிருந்தனர்..ஆங்கிலம் தவிர.ஆங்கிலத்தில் கதிர் அதிகம் எடுத்திருந்தான்.

கதிர்ன் அப்பா தன்பாலிடம் கதிரை இஞ்சினியரிங்க் சேர்க்க போவதாகவும், பாரதியையும் அங்கே சேருங்க..வங்கி கல்வி கடனுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார்.ஒரு வழியாக பாரதியும்,கதிரும் ஒரே பொறியியல் கல்லூரில் சேர்ந்தனர்..மிகப்பெரிய கல்லூரி, அதிக மாணவர்கள் பெரும்பாலும் வசதி படைத்தவர்கள்.கல்லூரியில் முதல் நாள் வகுப்பு ஆர்வத்துடன் கதிரும், கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையுடனும் பாரதியும் வகுப்பிற்குள் அமர்ந்தனர்..தன் வகுப்பில் அழகு அழகான நாகரீகமான் உடைகளில் சக மாணவிகள் நுழையும் போது எல்லா மாணவர்களையும் போல இருவரும் தங்களை பார்த்து சிரித்து கொண்டனர்.அப்போது பாவாடை தாவணியில் அவர்கள் வகுப்பில் வந்தமர்ந்தாள் இளமதி.

-தொடரும்..



Saturday, February 14, 2009

நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா ! :)





நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா ! :)










இதுவும் எனக்கு வந்த Email தாங்க ! Image மேல click பண்ணுங்க பெரிதாக்க !



காதலர் தின் special- எனக்கு வந்த நகைச்சுவையான email

காதலர் தின் special - எனக்கு வந்த நகைச்சுவையான email... யாரு அந்த எழுத்தாளர்னு தெரியலை.. செம கலாட்டா !


அன்பே!
நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். 'அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்' என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.

சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது 'எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!' என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்.

சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன். வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே...

அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ' தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா... வயசாச்சில்ல...' என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை ' ஒரு கஸாடா' என்ற வார்த்தையில் உடைத்தார். கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. 'தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா' என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

'சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்' என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ' அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச 'ஆனந்த பவனுக்கு' வந்தது நீங்க இல்லையா தம்பி?!' என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். "

"தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க... நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க... அப்ப பேசிக்கலாம்" என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

இப்படிக்கு, இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல் இறையருளால் தப்பித்த உன்னுடைய முன்னாள் காதலன்.

வாழ்க வளமுடன்

Sunday, February 8, 2009

ரஜினி - எல்லாரையும் போல சாதாரண சுயநல மனிதர் தான் ...

ரஜினி - எல்லாரையும் போல சாதாரண சுயநல மனிதர் தான் ...

ரஜினி..ஒரு நல்ல நடிகர் , உழைப்பால் சாதாரண நிலையில் இருந்து பிரபலமான நிலைக்கு உயர்ந்தவர் , ஊடகங்களில் இவர் புகழ் பாட வைத்தவர், சினிமாவில் அதிகம் சம்பாதித்தவர், அவரை வைத்து சிலர் சம்பாதிக்க உதவியவர்..மற்ற படி அவர் சாதாரண எல்லாரையும் போல சுய நல மனிதர் தான்..

அவர் அவர் அரசியலக்கு வர வேண்டும் , என்று சொல்லும் so called ரசிகர்கள் , அவரை வைத்து சம்பாதிக்க நினைப்பவர்களே ! ஒரு சின்ன உதாரணம் .ஒரு ரஜினி ரசிகர் மன்ற தலைவர் "நாங்கள் வேற கட்சிகளில் சேர்ந்திருந்தால் எங்கள் நிலைமை வேற மாதிரி இருந்திருக்கும் ரஜினியை நம்மியதால் இப்படி இருக்கிறோம் ". இதில் இருந்து தெரியல..இவங்க ரஜினிய அரசியலக்கு வர வேண்டும் என்று சொல்லுவது , இவங்க நிலைமை மாறுவதற்கு , மக்களுக்கு சேவை செய்ய இல்லைனு....

ரஜினி சிறந்த வியாபாரிங்க , இவங்களுக்கு இப்ப வறேன் அப்ப வறேன்னு தூபம் போட்டு நல்ல தன் படங்களை வியாபாரம் பண்ணுகிறார். .. பாபா படம்னு நினைக்கிறேன்.. ஜெயா மேடம் சினிமா டிக்கேட் விலை எவ்வளவு வேணாம்னு இருக்கலாம்னு ஒரு சட்ட தளர்ச்சி கொண்டு வந்தாங்க ! அது வரைக்கும் ஜெயா மேடத்திற்கிட்ட பனிப்போரில் இருந்த வரு...உடனே பூங்கொத்து கொடுத்து நன்றி சொன்னாரு....ஏன்னா ,தன் படம் ரிலீஸ் ஆகுது...ஒரே வாரத்துல தமிழ் நாடு so called ரசிகர்கள் பணத்தை லம்பா அள்ளிட்டு இமய மலைக்கு போயிடலாம் தான். .டிக்கெட்டுக்கு எவ்வளவு வேணா செலவு பண்ணி வாங்க இந்த இழித்தவாயர்கள் இருக்கும் போது தனக்கென்ன..என்ற தைரியம் தான்..

இது தெரியாம இந்த இழித்தவாயர்கள் 400,500 என்று டிக்கெட்டுக்கு செலவு பண்ணி அந்த மொக்கை படத்தை பார்த்தானுங்க ! ரஜினி உண்மையிலே ரசிகர்கள் மீது அன்பு வைத்திருந்தால் தான் படத்துக்கு சாதரண ரேட்டிலே,அது கூட வேண்டாம் ஒரு reasonable ரேட்டில் ஆவது தன் ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கலாமே ..அவரை பொறுத்த வரை துட்டு தான் முதல்ல அப்புறம் தான் எல்லாம்...எங்க பக்கத்து டீக் கடையில் வேலை பார்த்த பையன் தன் 10 நாள் சம்பளத்தை சேர்த்து வைத்து 2.5 மணி நேரம் ரஜினி படம் பார்த்தான் 400 ரூபாய் கொடுத்து..அடுத்த நாள் அவன் கிட்ட காசு இல்லாததால் அவன் உடல் நிலை சரி இல்லாத அம்மாவுக்கு என் நண்பன் தான் மருந்து வாங்கி கொடுத்தான். இதே மாதிரி எத்தனை பசங்க அவங்க சம்பாதியத்தை கொடுத்தார்களே....

சிவாஜி பட வெளியீடப்ப ..ரஜினிய வைத்து english TV channels -உம் சம்பாதித்து கொண்டனர்.....அதில ஒருவர் பேட்டி.."நான் flight புடுச்சி வந்து1000 Rs ticket டிக்கெட்டு எடுத்தென் .."எனக்கு அது உண்மையா..இல்லை build up - ஆனு எனக்கு சந்தேகம் இருக்கு. உண்மையா இருந்த அவன் சத்தியமாய் On-Duty la வந்து இருப்பான்...தான் ஏமாறுவது தெரியாமல் பெருமையா பேட்டி வேற ! இழிச்சவாயன்.

அந்த சிவாஜி படம் so called கதை கருப்பு பணத்தை பத்தி...- ஆனா இந்த படத்தை வைத்து, இதில் சம்பந்த பட்டவர்கள் (ரஜினியும் சேர்த்துதான்) எவ்வளவு கருப்பு பணம் சம்பாதித்தார்களோ ! முதல்வர் வேற முதல் வேலையா preview பார்த்துட்டு பக்காவா பேட்டி கொடுப்பாரு..ரசிகர்களின் ஓட்டுக்காக ! 55 வயது நடிகருக்கு 16 வயதிலோ அல்லது உலக அழகி தான் கதா நாயகியாக வேணும்...எந்த நடிகைய போட்டாலும் இவரை சுத்தி சுத்தி காதல் பண்ண போறாங்க..யாரைப் போட்ட என்ன ! இவரோட படத்தில் பொண்ணுங்க அப்படி இருக்கனும்னு இப்படி இருக்கனும்னு ஆணாதிக்க வசனங்கள் நிறைய இருக்கும்....ஆனாலும் அதைப்பத்தி எல்லாம் எந்த பத்திரிக்கையும் விமர்சிக்காது.அவர் படம் நாளே அதிகபடியாக விமர்சனங்கள் எழுதும்...இல்லைனா அவங்க பத்திரிக்கை விற்காதே ! .ரசிகர்கள் இவர் கட் அவுட்ல பாலை ஊத்தி பூஜை பண்ணுவாங்க அவங்களை பொறுத்த வரை அது நாளைய அரசியலுக்கு investment. இவருக்கு இதில் உடன்பாடு இல்லைனா பால் ஊத்தும் ரசிகர்களை மன்றத்தில் இருந்து நீக்க வேண்டியதுதானே ! அது எப்படி இவரொட வியாபாரம் பாதிக்குமே ..இதை முன்மாதிரியா வைச்சு..இப்ப எல்லா ரசிகர்களும் பால் ஊத்துறான்..(சில் நடிகர்கள் இதுக்குனே ஒரு budget போடுறாங்க ! ).

இந்த ஊடகங்கள் ரஜினி பத்தி கொஞ்ச நாள் எந்த செய்தியும் வரலையா ,உடனே எதாவது ஒரு கட்டம் கட்டிஇதோ வரப்போறாரு அதோ வரப்போறானு செய்தி போட்டு ரசிகர்கள் பணத்தை சம்பாதித்து கொள்கின்றன.அவர் புத்திசாலியோ இல்லையோ அவரை சுற்றி உள்ள கூட்டம் புத்திசாலி..அதனால் அவர் கடைசி பட வெளியீடு வரை பிலிம் காட்டிட்டு தான் இருப்பார்..

அப்புறம் நம்ம பாலச்சந்தர் சோத்துக்கு வழியில்லாம போயிட்டாறாம், அதனால் அவருக்கு ரஜினி ஒரு படம் எடுத்து தன் இழித்தவாய் ரசிகர்கள் பணத்தை புடுங்கி கொடுத்தாராம்....கடைத் தேங்காய எடுத்து வழி பிள்ளையாருக்கு கொடுத்த மாதிரி தான்..இதுல என்ன காமெடினா இவர் கொளரவ வேடத்தில் தான் படத்தில வர மாதிரி கதையாம்..ஆனா அதை இயக்குனர் வெளியில சொல்ல வேண்டாம்னாராம்..இவரும் ஒகே சொல்லிட்டாறாரம்..so ரெண்டு பேறும் சேர்ந்து யாரை ஏமாத்தீனீங்க ! நம்ம இழித்தவாயர்களைத்தான் ...இதுல இன்னொரு விசயம் ..இந்த படம் கர்னாடகாவில் ஓடனும் கிரத்துக்காக மன்னிப்பெல்லாம் கேட்டாரு இந்த வாய் சொல் வீரர்...என்னை கேட்டா அவர் பேசிய விதம் தவறு தான். அதற்கு அன்றே அவர் வருத்தம் தெரிவித்திருக்கலாம்..அப்ப பம்மாத்து காட்டியவர்..காசு போகப்போது என்று தெரிந்த உடன் காலில் விழுந்தார்...

ரஜினியை வைத்து ஒரு பொண்ணு latest-a oru book எழுதியிருக்கு அவர் நல்லவரு/ வல்லவருனு ...அவர் ரஜினி எத்தனை முறை சந்தித்திருப்பார் என்று தெரியவில்லை..சும்மாவே அடிச்சு விடுவது..புகழுக்காக !

அடுத்து அவுங்க பொண்ணு கிளம்மி இருக்கு இப்ப ரஜினி பேரை சொல்லி சம்பாதிக்க...அவங்களுக்கு தமிழ் தெரியாதுன்னு நினைக்கிறேன்...english தான் பேட்டி கொடுக்கிறாங்க...நம்ம இழித்தவாயர்கள் சிலர் மொழிபெயர்த்து சொல்ல சொல்லி torture பண்ணியாதக என் நண்பர் சொன்னாரு. அவங்க தான் படித்த Animation-ya சோதித்து பார்க்க நினைத்தது...உடனே அப்பாவோட இழித்தவாயர்கள் இருக்கும் போது எனக்கென்ன கவலை என்று நினைத்து ரஜினியை வைத்து Animation படம் எடக்குது..நம்மாளுங்க கண்டிப்பா அதை வெற்றி படம் ஆக்கிடுவாங்க..அப்புறம் என்ன அவங்க காட்டில மழை தான் !

ஆனா ரஜினியையும் , ரஜினியின் பேர சொல்லி சம்பாதிக்கும் கூட்டத்தையும் , ரஜினி அரசியலக்கு வருவார் சம்பாதிக்கலாம்னு invest பண்ற கூட்டத்தையும் அப்பாவி ரசிகர்களும், மக்களும் அடையாளம் காணும் தூரம் வெகு தொலைவில் இல்லை..

Friday, February 6, 2009

I-T கம்பெனி எதிரே உள்ள டீ கடை

I-T கம்பெனி எதிரே உள்ள டீக்கடை ! ( மீள் பதிவு )

எப்போதும் பரபரப்பாய் இருக்கும் அந்த டீக்கடையில் இன்று மயான அமைதி...டீக்கடை ஊழியர்/உரிமையாளருமான நம்ம அண்ணாச்சி , அந்த டீக்கடை பென்ச்சில் சவாரிக்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ்...அது தவிர வேர ஆள் இல்லை ....அப்ப அந்த டீக்கடைக்கு வந்தார் ஒரு பெரியவர்..

பெரியவர் : தம்பி ஒரு டீ போடுப்பா !

அண்ணாச்சி : ரமேஷ் (ஆட்டோ ஓட்டுனர்) உனக்கு !

ரமேஷ் : சரி போடுங்க !

பெரியவர்: ஏம்பா...இந்த அமெரிக்காவில் பிரச்சனைனால ஆடிக்கிட்டுருந்த I-T பசங்களுக்கு எல்லாம் வேலை காலியாமே..எங்க வீட்ல குடித்தனம் இருந்த பசங்க கூட காலி பண்ணிட்டு முன்பணத்தை கேட்றாங்க...என்னமா ஆட்டம் போட்டாங்க்..1 தேதி வாடகை குடுக்கிறோம்னு திமிரல வீட்ல அது சரி இல்லை இது சரி இல்லை அப்படினுபாங்க..ஒரு நாளைக்கு தண்ணி வரலனா கூட ரொம்ப பேசுவாங்கே! வாடகைக்கு பில் கேட்பாங்கே.. EB பில்லுல வழக்கமா நம்ம ஏரியாவில வாங்கிற மாதிரி மீட்டருக்கு 2 ரூபாய் அதிக வாங்கிட்டு இருந்தேன்..இவனுங்க வந்து அதான் வாடகை அதிகமா தர்றோம்லா அப்புறம் எதுக்கு EB பில்லுலனு தினாவெட்ட பேசினாங்கே ..இன்னைக்கு வச்சாம் பாரு அமெரிக்காவலா..

அண்ணாச்சி : ஆமாங்க..இங்க கூட அப்படி தான். டீ ,வடைய கும்பலா சாப்பிட்டு 100 ரூபா நோட்டா எடுத்தி நீட்டி நான் நீனு போட்டி போட்டிகிட்டு அலம்பல் பண்ணுவாங்கே..சில நேரம் சில்லறை கூட வாங்க மாட்டுனுங்க ...சம்பாதிக்கிற திமிரு..நான் ஒரு சின்ன பையனை நல்ல சம்பளம் குடுத்து வேலைக்கு வச்சிருந்தேன்..அதுக்கு போய் குழந்தை தொழிலாளி அது இதுனு சொல்லி அந்த பையனை ஸ்கூல சேர்ந்து விட்டுட்டாங்கே ....அவங்க கேண்டீனல எல்லாம் அதிக விலை விற்கிறானுங்க...அதனால அதிக சம்பளம் கொடுத்து பெரிய ஆளை வைக்கிறாங்க நம்ம அப்படி பண்ண முடியுமா....

ரமேஷ் : ஆமா அண்ணாச்சி..ஆட்டோவிலும் அப்படிதான் சில பேரு மீட்டர போட சொல்லி தினாவட்ட பேசுவானுங்கே...நம்மகிட்ட அதெல்லாம் நடக்குமா..அப்புறம் பொண்ணுங்க ,பசங்களும் வித்யாசம இல்லாம ஆட்டோவில் உட்கார்த்துட்டு இவனுங்க. அடிக்கிற லூட்டி இருக்கே ! இனிமே ஆடுவானுங்களா ..ஹா ஹா

பெரியவர் : ஆமாங்க அன்னைக்கு அப்படித்தான்..ஒரு பையன் சிக்னல்ல வெள்ளை கோட்ட தாண்டி நின்றுக்கான்..நம்ம ராம்சாமி (போக்குவரத்துத்துறை காவலர்..) பிடித்து அபராதம் கட்டு இலலை கவனிச்சிட்டு போ அப்படினுக்கிறாரு.." அதுக்கு அவன் கையூட்டு எல்லாம் குடுக்க முடியாது...அபராதம் கட்டுறேனு 500 ரூபாய கட்டுட்டு பில்லு வாங்கிட்டு போயிருக்கான்..எல்லாம் உட்காத்துகிட்டே சம்பாதிக்கிற திமிறு....

அண்ணாச்சி : எல்லாரும் இப்ப தான் அடங்கிறானுங்க...எதித்தாப்ல உள்ள கம்பெனியிலா கூட நிரைய பேர தூக்கிட்டானுங்கலாம்...
பெரியவர் : சரி வேலை கிடக்கு..இந்த காசு..50 பைசா கம்மியா இருக்கு ..அப்புறம் தாரேன்..இந்த பசங்க வேற வாடகை குடுக்காம அட்வான்சில் கழிக்க சொல்லிட்டாங்களா.. கையில காசுப் புழக்கமே நின்னுடுச்சுப்பா....( அட்வான்சை வைத்து Computer eng படிக்கிற பையன் கல்லூரி கடைசிவருட fees கட்டியாச்சு..இவனுங்களுக்கு வேற அட்வான்சை ரெடி பண்ணணும்..என்று முனகிய வாறே பெரியவர் நகருகிறார்..)


ரமேஷ் : அண்ணாச்சி காசு அப்புறம் தாரேன்..காலைலேர்ந்து ஒரு சவாரியும் வரலை...இனனைக்கு -T கம்பேனி லீவ் இல்ல அதனால்..

அண்ணாச்சி : ம்ம்ம்..

என்று சலித்து கொண்டே ..பெரியவர் கொடுத்த காசை கல்லாவில் போட்டுட்டு (.கல்லாவில் அதுதான் முதல் காசு...) பால் சட்டியை திறந்தார்..எப்பொதும் இந்த நேரத்தில் பால் முக்கால் வாசி விற்று இருக்கும்.ஆனால் இன்னைக்கு அப்படியே இருக்கு...அமைதியாய் இருந்தது அமெரிக்காவின் labour day க்காக விடுமுறை விடப்பட்ட எதிரே இருந்த I-T கம்பெனி வளாகம்.