~
உந்தன் சொந்த தேசத்தின் குரல்
தொலைதூரத்தில் அதோ செவியில் விழாதா..
சொந்தவீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!
அந்த நாட்களை நினை ! அவை நீங்குமா உனை !
நிழல் போல் வராதா?
அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா
வானம் எங்கும் பறந்தாலும் பறவை எண்ணம் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் எண்ணம் தாய் நாட்டில்
சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அங்கு செல்வமரம் காய்த்தாலும்
உந்தன் உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா?
கங்கை உன்னை அழைக்கிறது யமுனை உன்னை அழைக்கிறது
இமயம் உன்னை அழைக்கிறது பல சம்யம் உன்னை அழைக்கிறது
கண்ணாமமூச்சி ஆட்டம் அழைக்க சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க
தென்னத்தோப்பு துரவுகள் அழைக்க கட்ட காத்த உறவுகள் அழைக்க
நீதான் தின்ன நிலாச்சோறு அழைக்க
உந்தன் சொந்த தேசத்தின் குரல்
தொலைதூரத்தில் அதோ செவியில் விழாதா..
பால் போல வெண்ணிலவு உற்று பார்த்தாலும் சிறு கறை இருக்கும்
மலர்போல உள்ள தாய் நாட்டில் மாறா சிலவலி இருக்கும்
கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்
அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்
இந்த தேசம் வளரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்புதாயின் மடி உன்னை அழைக்குதே
உந்தன் சொந்த தேசத்தின் குரல்
~
Monday, February 14, 2011
Monday, February 7, 2011
அந்த அந்த வயதில் - வைரமுத்து !
~
இருபதுகளில் எழு. உன் கால்களுக்கு சுயமாய் நிற்க சொல்லிக்கொடு.
ஜன்னல்களை திற்ந்து வை.படி எதையும் படி !
வாத்யாசனம் கூட காமம் அல்ல கல்விதான் படி.
பிறகு புத்தகங்களை எல்லாம் உன் பின்னால் எரிந்துவிட்டு வாழ்க்கைக்கு வா !
உன் சட்டைபொத்தான், கடிகாரம், காதல், சிற்றுண்டி, சிற்றின்பம்
எல்லாம் விஞ்ஞானத்தின் மடியில் விழுந்துவிட்டதால் எந்திர அறிவுகொள்.
ஏவாத ஏவுகணையேனும் அடிக்கப்பட்ட ஆணியே பலம்.
மனிதமுகங்களை மனசுக்குள் பதிவுசெய். சப்தங்கள படி.சூழ்ச்சிகள் அறி.
திருடு திருப்பிகொடு. பூமியில் நின்று வானத்தை பார் வானத்தில் நின்று பூமியை பார்.
உன் திசையை தெரிவுசெய். நுரைக்க நுரைக்க காதலி.காதலை சுகி. காதலில் அழு.
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி.
பூமியில் மனிதன் இதுவரை துய்த்த இன்பம் கையளவுதான் மிச்சமெல்லாம் உனக்கு.
வாழ்க்கை என்பது உழைப்பும் துய்ப்பும் என்று உணர்.
உனது அஸ்திவாரத்தை ஆழப்படுத்து !
இன்னும் இன்னும் சூரியகதிர்கள் விலமுடியாத ஆழத்தில்!.
முப்பதுகளில் சுறுசுறுப்பில் தேனியாய் இரு..நிதானத்தில் ஞானியாய் இரு!.
உறங்குதல் சுருக்கு . உழை . நித்தம் கலவிகொல்.
உட்காரமுடியாத ஒருவன் உன் நாற்காலியை ஒழித்து வைத்திருப்பான்,கைப்பற்று.
ஆயதம் தயாரி பயன்படுத்தாதே. எதிரிகளை பேசவிடு ,சிறு நீர் கழிக்கயில் சிரி.
வேர்களை இடி பிழக்காத ஆழ்த்துக்கு அனுப்பு .
கிளைகளை சூரியனுக்கு நிழல் கொடுக்கும் உயரத்துக்கு பரப்பு .
நிலைகொள்..
நாற்பதுகளில் இனிமேல் தான் வாழ்க்கையின் ஆரம்பம்.
செல்வத்தின் பாதியை ,அறிவின் முழுமையை செலவழி.
எதிரிகளை ஒழி ஆயதங்களை மண்டை ஓடுகளில் தீட்டு.
ஒருவனை புதைக்க இன்னொருவனை குழிவெட்ட சொல், அதில் இருவரையும் புதை..
பொருள் சேர். இரு கையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு.பகல் தூக்கம் போடு.
கவனம் இன்னொரு காதல் வரும் புன்னகைவரை போ..புடவை தொடாதே!
இதுவரை இலட்சியம் தானே உனக்கு இலக்கு, இனிமேல் லட்சியத்துக்கு நீதான் இலக்கு.
ஜம்பதுகளில் வாழ்க்கை வழுக்கை இரண்டையும் ரசி. கொழுப்பை குறை.
முட்டையின் வெண்கரு காய்கறி கீரை கொள். கணக்கு பார்.நீ மனிதனா என வாழ்க்கையை கேள்.லட்சியத்தை தொடு . வெற்றியில் மகிழாதே. விழா எடுக்காதே
அறுபதுகளில் இதுவரை வாழ்கைதானே உன்னை வாழ்ந்தது..இனியெனும் வாழ்க்கையை நீ வாழ்ந்துபார்.விதிக்கப்பட்ட வாழ்க்கையை விலக்கிவிடு ..மனிதர்கள் போதும் முயல் வளர்த்துபார்.நாயோடு தூங்கு கிளியோடு பேசு மனைவிக்கு பேன் பார்.
பழைய டைரி எடு இப்போதாவது உண்மை எழுது.
எழுபதுகளில் இந்தியாவில் இது உபரி..சுடுகாடு வரை நடந்துபோக சத்து இருக்கும்போதே செத்து போ .ஜண கண மண !
~
இருபதுகளில் எழு. உன் கால்களுக்கு சுயமாய் நிற்க சொல்லிக்கொடு.
ஜன்னல்களை திற்ந்து வை.படி எதையும் படி !
வாத்யாசனம் கூட காமம் அல்ல கல்விதான் படி.
பிறகு புத்தகங்களை எல்லாம் உன் பின்னால் எரிந்துவிட்டு வாழ்க்கைக்கு வா !
உன் சட்டைபொத்தான், கடிகாரம், காதல், சிற்றுண்டி, சிற்றின்பம்
எல்லாம் விஞ்ஞானத்தின் மடியில் விழுந்துவிட்டதால் எந்திர அறிவுகொள்.
ஏவாத ஏவுகணையேனும் அடிக்கப்பட்ட ஆணியே பலம்.
மனிதமுகங்களை மனசுக்குள் பதிவுசெய். சப்தங்கள படி.சூழ்ச்சிகள் அறி.
திருடு திருப்பிகொடு. பூமியில் நின்று வானத்தை பார் வானத்தில் நின்று பூமியை பார்.
உன் திசையை தெரிவுசெய். நுரைக்க நுரைக்க காதலி.காதலை சுகி. காதலில் அழு.
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி.
பூமியில் மனிதன் இதுவரை துய்த்த இன்பம் கையளவுதான் மிச்சமெல்லாம் உனக்கு.
வாழ்க்கை என்பது உழைப்பும் துய்ப்பும் என்று உணர்.
உனது அஸ்திவாரத்தை ஆழப்படுத்து !
இன்னும் இன்னும் சூரியகதிர்கள் விலமுடியாத ஆழத்தில்!.
முப்பதுகளில் சுறுசுறுப்பில் தேனியாய் இரு..நிதானத்தில் ஞானியாய் இரு!.
உறங்குதல் சுருக்கு . உழை . நித்தம் கலவிகொல்.
உட்காரமுடியாத ஒருவன் உன் நாற்காலியை ஒழித்து வைத்திருப்பான்,கைப்பற்று.
ஆயதம் தயாரி பயன்படுத்தாதே. எதிரிகளை பேசவிடு ,சிறு நீர் கழிக்கயில் சிரி.
வேர்களை இடி பிழக்காத ஆழ்த்துக்கு அனுப்பு .
கிளைகளை சூரியனுக்கு நிழல் கொடுக்கும் உயரத்துக்கு பரப்பு .
நிலைகொள்..
நாற்பதுகளில் இனிமேல் தான் வாழ்க்கையின் ஆரம்பம்.
செல்வத்தின் பாதியை ,அறிவின் முழுமையை செலவழி.
எதிரிகளை ஒழி ஆயதங்களை மண்டை ஓடுகளில் தீட்டு.
ஒருவனை புதைக்க இன்னொருவனை குழிவெட்ட சொல், அதில் இருவரையும் புதை..
பொருள் சேர். இரு கையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு.பகல் தூக்கம் போடு.
கவனம் இன்னொரு காதல் வரும் புன்னகைவரை போ..புடவை தொடாதே!
இதுவரை இலட்சியம் தானே உனக்கு இலக்கு, இனிமேல் லட்சியத்துக்கு நீதான் இலக்கு.
ஜம்பதுகளில் வாழ்க்கை வழுக்கை இரண்டையும் ரசி. கொழுப்பை குறை.
முட்டையின் வெண்கரு காய்கறி கீரை கொள். கணக்கு பார்.நீ மனிதனா என வாழ்க்கையை கேள்.லட்சியத்தை தொடு . வெற்றியில் மகிழாதே. விழா எடுக்காதே
அறுபதுகளில் இதுவரை வாழ்கைதானே உன்னை வாழ்ந்தது..இனியெனும் வாழ்க்கையை நீ வாழ்ந்துபார்.விதிக்கப்பட்ட வாழ்க்கையை விலக்கிவிடு ..மனிதர்கள் போதும் முயல் வளர்த்துபார்.நாயோடு தூங்கு கிளியோடு பேசு மனைவிக்கு பேன் பார்.
பழைய டைரி எடு இப்போதாவது உண்மை எழுது.
எழுபதுகளில் இந்தியாவில் இது உபரி..சுடுகாடு வரை நடந்துபோக சத்து இருக்கும்போதே செத்து போ .ஜண கண மண !
~
Saturday, January 29, 2011
ஒலிப்பான் தவிர்ப்போம்
~
இந்த பெண்ணோட courage-ஐ நம்ம கண்டிப்பா பாராட்டனும்.. நம்ம எல்லாம் (பெரும்பான்மை) சும்மா குறை சொல்லிட்டுதான் இருப்போம ஒழிய களத்தில இறங்கி போராடமாட்டோம்.. எவனும் கேட்க மாட்டானும் தெரிஞ்சும் போராடுட இந்த மாதிரி சிலபேரால் தான் பாரத வளர்ச்சியின் மீதான நம்பிக்கை இன்னும் கூடுது.இளைய சமுதாயம் எல்லாம் தண்ணி அடிப்பதையும், சினிமா ரசிகனாகவே காட்டும் இந்த மீடியாக்கள் இதை எல்லாம் கண்டுகொள்வதில்லை ஏனோ !
~
இந்த பெண்ணோட courage-ஐ நம்ம கண்டிப்பா பாராட்டனும்.. நம்ம எல்லாம் (பெரும்பான்மை) சும்மா குறை சொல்லிட்டுதான் இருப்போம ஒழிய களத்தில இறங்கி போராடமாட்டோம்.. எவனும் கேட்க மாட்டானும் தெரிஞ்சும் போராடுட இந்த மாதிரி சிலபேரால் தான் பாரத வளர்ச்சியின் மீதான நம்பிக்கை இன்னும் கூடுது.இளைய சமுதாயம் எல்லாம் தண்ணி அடிப்பதையும், சினிமா ரசிகனாகவே காட்டும் இந்த மீடியாக்கள் இதை எல்லாம் கண்டுகொள்வதில்லை ஏனோ !
~
Monday, January 24, 2011
அம்மா மேல் கோவம் !
~
உங்களை என்றைழைப்பதை விட உன்னை என்றழைப்பது
மரியாதைக்குறைவா என்ன ? இல்லை அதீத உரிமை !
என்னை நீ வளர்த்தவிதம் சரியில்லை அம்மா இன்று நான் கோவிக்கிறேன்
ஒரு வேளையாவது நீ என்னை பசிக்க விட்டிருந்தால் பசி பொறுக்கும் பழக்கம் வந்திருக்கும்
உணவில் சுவை குறைத்திருந்தால் என் நாக்கு இங்கு உள்ள உணவுக்கு பழக்கப்பட்டிருக்கும்
பழைய சோற்றை கண்ணிலாவது காட்டியிருக்கலாம் ..
இங்கே முந்தா நாள் வைத்த உணவை சாப்பிடும் போது
வரும் வயித்தபிரட்டும் உணர்வு இல்லாமல் இருந்திருக்கும்
என்னை நீ வீட்டு வேலைகளுக்கு உதவிக்காவது அழைத்திருக்க வேண்டும்
பாத்திரம் கழுவவாது நான் பழகி இருப்பேன்
8 மணிக்கு எழுப்பிவிட்டு " காப்பிய குடிச்சுட்டு தூங்கடானு "
நீ சொல்லாமல் இருந்திருக்க வேண்டும்.
இங்கே காப்பி வேண்டாம்
அன்பாய் கூட எழுப்பாமல் அலறுகிறது இந்த அலாரம்.
நீ செல்லம் என்றாய் இங்கே எல்லாம் என்னை சோம்பேறி என்கிறார்கள்.
எத்தனை குறைகள் இருந்தாலும் நீ கற்று தந்த கபடமில்லா அன்பும்,
கண்டிப்பான ஒழுக்கமும்,வைராக்கியமும் தானம்மா
என்னை இன்றும் உயர்த்துகிறது.. Thanks ..I love you ma !
சென்னையில் இருக்கும்போது உணர்ந்தது.. முதல் onsite(2008)-ல் வெட்டியாய் இருக்கும்போது எழுதியது !
உங்களை என்றைழைப்பதை விட உன்னை என்றழைப்பது
மரியாதைக்குறைவா என்ன ? இல்லை அதீத உரிமை !
என்னை நீ வளர்த்தவிதம் சரியில்லை அம்மா இன்று நான் கோவிக்கிறேன்
ஒரு வேளையாவது நீ என்னை பசிக்க விட்டிருந்தால் பசி பொறுக்கும் பழக்கம் வந்திருக்கும்
உணவில் சுவை குறைத்திருந்தால் என் நாக்கு இங்கு உள்ள உணவுக்கு பழக்கப்பட்டிருக்கும்
பழைய சோற்றை கண்ணிலாவது காட்டியிருக்கலாம் ..
இங்கே முந்தா நாள் வைத்த உணவை சாப்பிடும் போது
வரும் வயித்தபிரட்டும் உணர்வு இல்லாமல் இருந்திருக்கும்
என்னை நீ வீட்டு வேலைகளுக்கு உதவிக்காவது அழைத்திருக்க வேண்டும்
பாத்திரம் கழுவவாது நான் பழகி இருப்பேன்
8 மணிக்கு எழுப்பிவிட்டு " காப்பிய குடிச்சுட்டு தூங்கடானு "
நீ சொல்லாமல் இருந்திருக்க வேண்டும்.
இங்கே காப்பி வேண்டாம்
அன்பாய் கூட எழுப்பாமல் அலறுகிறது இந்த அலாரம்.
நீ செல்லம் என்றாய் இங்கே எல்லாம் என்னை சோம்பேறி என்கிறார்கள்.
எத்தனை குறைகள் இருந்தாலும் நீ கற்று தந்த கபடமில்லா அன்பும்,
கண்டிப்பான ஒழுக்கமும்,வைராக்கியமும் தானம்மா
என்னை இன்றும் உயர்த்துகிறது.. Thanks ..I love you ma !
சென்னையில் இருக்கும்போது உணர்ந்தது.. முதல் onsite(2008)-ல் வெட்டியாய் இருக்கும்போது எழுதியது !
Wednesday, January 5, 2011
நித்தம் ஒரு வானம் வேண்டும் - வைரமுத்து !
~
புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்கமழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்
சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்
வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூவேளை
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்
கடவுளே கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி என்று வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வரவிடு
யுத்தமில்லாத பூமி ஒரு சத்தமில்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம் இந்த மண்ணில் நிலைகொள்ளும் வரம் வேண்டும்
பஞ்சம் பசி போக்கவேண்டும் பாலைவனம் பூக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம் சுகம் சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழவேண்டும்
போனவை அட போகட்டும் வந்தவை இனிவாழட்டும்
தேசத்தின் எல்லைகோடுகள் அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணில் வந்து வாழட்டும்
~
புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்கமழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்
சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்
வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூவேளை
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்
கடவுளே கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி என்று வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வரவிடு
யுத்தமில்லாத பூமி ஒரு சத்தமில்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம் இந்த மண்ணில் நிலைகொள்ளும் வரம் வேண்டும்
பஞ்சம் பசி போக்கவேண்டும் பாலைவனம் பூக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம் சுகம் சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழவேண்டும்
போனவை அட போகட்டும் வந்தவை இனிவாழட்டும்
தேசத்தின் எல்லைகோடுகள் அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணில் வந்து வாழட்டும்
~
Tuesday, December 21, 2010
புன்செய் உண்டு நன்செய் உண்டு- புலமைப்பித்தன்
~
புன்செய் உண்டு நன்செய் உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை
எங்கள் பாரத்தின் சோத்து சண்டை தீரவில்லை
வீதிக்கோர் கட்சி உண்டு சாதிக்கோர் சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்லை
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளும் இல்லை
இது நாடா இல்லை வெறும் காடா..இதை கேட்க யாருமில்லை தோழா
வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரு இங்கு கட்டி வைத்து கொடுத்தது
ஊருக்கு பாடுபட்டு உழைத்த கூட்டமோ வீடின்றி வாசலின்றி தவிக்குது
எத்தனை காலம் இப்படி போகும் என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்று இங்கும் மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்தராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு
ஆற்றுக்கு பாதை இங்கு யாரு தந்தது
தானாக பாதை கண்டு நடக்குது
காற்றுக்கு பாட்டு சொல்லி யாரு தந்தது
தானாக பாட்டு ஒன்னு படிக்குது
எண்ணியயாவும் கைகளில் சேர நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போல பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
கங்கையும் தெற்கே பாயாதா? காவேரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா
~
புன்செய் உண்டு நன்செய் உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை
எங்கள் பாரத்தின் சோத்து சண்டை தீரவில்லை
வீதிக்கோர் கட்சி உண்டு சாதிக்கோர் சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்லை
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளும் இல்லை
இது நாடா இல்லை வெறும் காடா..இதை கேட்க யாருமில்லை தோழா
வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரு இங்கு கட்டி வைத்து கொடுத்தது
ஊருக்கு பாடுபட்டு உழைத்த கூட்டமோ வீடின்றி வாசலின்றி தவிக்குது
எத்தனை காலம் இப்படி போகும் என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்று இங்கும் மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்தராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு
ஆற்றுக்கு பாதை இங்கு யாரு தந்தது
தானாக பாதை கண்டு நடக்குது
காற்றுக்கு பாட்டு சொல்லி யாரு தந்தது
தானாக பாட்டு ஒன்னு படிக்குது
எண்ணியயாவும் கைகளில் சேர நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போல பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
கங்கையும் தெற்கே பாயாதா? காவேரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா
~
Sunday, November 14, 2010
விடியாத இரவென்று எதுவும் இல்லை - வைரமுத்து
~
விடியாத இரவென்று எதுவும் இல்லை
முடியாத துயரென்று எதுவும் இல்லை
வடியாத வெள்ளம் என்று எதுவும் இல்லை
வாழாத வாழ்க்கை என்று எதுவும் இல்லை
இனி அச்சம் அச்சமில்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடி போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
காலம் மாறி போச்சு நம் கண்ணீர் மாறி போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
பட்டாம்பூச்சி சுற்றும் அட மனிதன் என்ன மட்டம்
அடி இன்னும் கொஞ்சம் போனால் என்ன வானம் தலையை தட்டும்
வாடி இளைய செல்வியே நம் காலம் சொல்லும் நம்மை வாழ சொல்லியே
அம்மா அழகு கண்ணம்மா இது நம்ம பூமி என்று அழுத்தி சொல்லம்மா !
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்ப பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் எங்கள் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி திறந்து கிடக்கு அட மனித பய மனசு பூட்டி கிடக்கு
இன்ப காற்று வீசட்டும் எட்டு திக்கும் பரவட்டும்
மனித பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் மாறட்டும்
பட்டம் பட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும்
கோழிச் சிறகில் குஞ்சை போலவே பூமிபந்து உறங்கட்டும்
இரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதா விடியட்டும் !
~
விடியாத இரவென்று எதுவும் இல்லை
முடியாத துயரென்று எதுவும் இல்லை
வடியாத வெள்ளம் என்று எதுவும் இல்லை
வாழாத வாழ்க்கை என்று எதுவும் இல்லை
இனி அச்சம் அச்சமில்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடி போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
காலம் மாறி போச்சு நம் கண்ணீர் மாறி போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
பட்டாம்பூச்சி சுற்றும் அட மனிதன் என்ன மட்டம்
அடி இன்னும் கொஞ்சம் போனால் என்ன வானம் தலையை தட்டும்
வாடி இளைய செல்வியே நம் காலம் சொல்லும் நம்மை வாழ சொல்லியே
அம்மா அழகு கண்ணம்மா இது நம்ம பூமி என்று அழுத்தி சொல்லம்மா !
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்ப பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் எங்கள் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி திறந்து கிடக்கு அட மனித பய மனசு பூட்டி கிடக்கு
இன்ப காற்று வீசட்டும் எட்டு திக்கும் பரவட்டும்
மனித பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் மாறட்டும்
பட்டம் பட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும்
கோழிச் சிறகில் குஞ்சை போலவே பூமிபந்து உறங்கட்டும்
இரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதா விடியட்டும் !
~
Subscribe to:
Posts (Atom)

