Monday, February 14, 2011

உந்தன் சொந்த தேசத்தின் குரல் - வைரமுத்து !

~

உந்தன் சொந்த தேசத்தின் குரல்
தொலைதூரத்தில் அதோ செவியில் விழாதா..
சொந்தவீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!

அந்த நாட்களை நினை ! அவை நீங்குமா உனை !
நிழல் போல் வராதா?
அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா

வானம் எங்கும் பறந்தாலும் பறவை எண்ணம் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் எண்ணம் தாய் நாட்டில்
சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அங்கு செல்வமரம் காய்த்தாலும்
உந்தன் உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா?

கங்கை உன்னை அழைக்கிறது யமுனை உன்னை அழைக்கிறது
இமயம் உன்னை அழைக்கிறது பல சம்யம் உன்னை அழைக்கிறது
கண்ணாமமூச்சி ஆட்டம் அழைக்க சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க
தென்னத்தோப்பு துரவுகள் அழைக்க கட்ட காத்த உறவுகள் அழைக்க
நீதான் தின்ன நிலாச்சோறு அழைக்க

உந்தன் சொந்த தேசத்தின் குரல்
தொலைதூரத்தில் அதோ செவியில் விழாதா..

பால் போல வெண்ணிலவு உற்று பார்த்தாலும் சிறு கறை இருக்கும்
மலர்போல உள்ள தாய் நாட்டில் மாறா சிலவலி இருக்கும்
கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்
அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்
இந்த தேசம் வளரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்புதாயின் மடி உன்னை அழைக்குதே

உந்தன் சொந்த தேசத்தின் குரல்

~

No comments:

Post a Comment