Tuesday, December 21, 2010

புன்செய் உண்டு நன்செய் உண்டு- புலமைப்பித்தன்

~

புன்செய் உண்டு நன்செய் உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை
எங்கள் பாரத்தின் சோத்து சண்டை தீரவில்லை

வீதிக்கோர் கட்சி உண்டு சாதிக்கோர் சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்லை
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளும் இல்லை
இது நாடா இல்லை வெறும் காடா..இதை கேட்க யாருமில்லை தோழா

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரு இங்கு கட்டி வைத்து கொடுத்தது
ஊருக்கு பாடுபட்டு உழைத்த கூட்டமோ வீடின்றி வாசலின்றி தவிக்குது
எத்தனை காலம் இப்படி போகும் என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்று இங்கும் மாறும் வேளை வரும்

ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்தராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

ஆற்றுக்கு பாதை இங்கு யாரு தந்தது
தானாக பாதை கண்டு நடக்குது
காற்றுக்கு பாட்டு சொல்லி யாரு தந்தது
தானாக பாட்டு ஒன்னு படிக்குது

எண்ணியயாவும் கைகளில் சேர நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போல பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே

சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
கங்கையும் தெற்கே பாயாதா? காவேரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா


~

No comments:

Post a Comment