Wednesday, January 5, 2011

நித்தம் ஒரு வானம் வேண்டும் - வைரமுத்து !

~

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்கமழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்
வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூவேளை
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்

கடவுளே கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி என்று வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வரவிடு

யுத்தமில்லாத பூமி ஒரு சத்தமில்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம் இந்த மண்ணில் நிலைகொள்ளும் வரம் வேண்டும்
பஞ்சம் பசி போக்கவேண்டும் பாலைவனம் பூக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம் சுகம் சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழவேண்டும்
போனவை அட போகட்டும் வந்தவை இனிவாழட்டும்
தேசத்தின் எல்லைகோடுகள் அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணில் வந்து வாழட்டும்

~

No comments:

Post a Comment