Saturday, June 27, 2009

தேசிய அடையாள அட்டை, ஒரே கல்வி முறை , நலத்திட்டங்கள் மற்றும் ராமதாஸ் !

~

இந்தியா முழுவதும் ஒரே சீரான கல்விமுறை ! - வரவேற்போம் !

கபில் சிபில் ஒரு முன்னோடியான யோசனையை தெரிவித்திருக்கிறார்.. இந்தியா முழுவதுக்கும் ஒரே கல்வி முறை . இது கொஞ்சம் சிரமமான ஆனால் வரவேற்கதக்க யோசனை ...
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொருவிதமான கல்வி முறை, வெவ்வேறு பாடப்பகுதிகளில்.ஒரு சில மாநிலங்களில் +2..இன்னும் சில வற்றில் PUC.. அப்புறம் மெட்ரிக், CBSC..ஏன் இவ்வளவு வேறுபாடுகள் ? கல்வி முறை அனைவருக்கும் சமமாகட்டும், மொழியையும், அவர்கள் வசிக்கும் மாநிலம் சார்ந்த வரலாறு போன்ற பாடபகுதிகளை மட்டும் மாநிலத்திற்கு தக்கவாறு தேர்வு செய்ய மாநில அமைப்பிற்கு அதிகாரம் கொடுக்கலாம்..மற்றபடி அனைத்தையும் சமமாக்குவோம். இதை தமிழ் கட்டாயம் சட்டத்தை எப்படி முதல் வகுப்பிலிருந்து ஆரம்பித்து ஆண்டுக்கு ஒவ்வொரு வகுப்பாக incetementala implement பண்ணாறாங்களோ , அதே மாதிரி பண்ணிணா நடைமுறை சிக்கல்களை தடுக்கலாம்..இப்பவே சில பிற்போக்குவாதிகள் இதை எதிர்க்க ஆரம்பித்து விட்டன். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து, வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள் !


இந்திய அடையாள் அட்டை

இந்தியா முழுவது தேசிய அடையாள் அட்டை ( Smart Card ) அறிமுகப்படுத்த மத்திய அரசு ஒரு நிறுவனத்தை அமைத்துள்ளது..இதற்கு புகழ் பெற்ற இன்போசிஃஸ் நிறுவனத்தின் உயரதிகாரியான் நந்தனை தலைவராக நியமித்துள்ளது . வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள் அவருக்கும், அந்த நிறுவனத்துக்கும். இந்த அடையாள் அட்டையாவது முறைகேடாக பயன்படுத்தா வண்ணம், ஒருவரே பல அட்டைகளை வைத்துக்கொள்ள முடியா வண்ணம் வழங்கிடப்படும் என நம்புகிறேன். பொதுமக்களாகிய நமக்கும் இதை பொறுப்பாக பெற்றுக்கொள்ள , நேர்மையான முறையில் பயன்படுத்த வேண்டிய கடமை உள்ளது. இந்த அடையாள் அட்டையை வைத்துகொண்டு எந்த ஊரில் இருந்தும், நாம் உட்பட்ட தொகுதிக்கு வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டால் வாக்குபதிவு சதவீதம் இன்னும் கூடும்.

நலத்திட்டங்கள் - !

சமீபத்தில் சில மேம்பாலங்கள் மற்றும் சில் நலத்திட்டங்கள் மாநிலம் முழுவது ஆங்காங்கே செயல்படுத்தபடுகின்றன் அல்லது படுகின்றன.நான் நிறைய பேர் இதை பற்றி பேசுவதை கேட்டுருக்கிறேன்..அன்னைவரிடம் இருந்து ஒரே மாதிரியான் வரிகள்.. "ஆமா இந்த் திட்டத்தை வைத்து இவனுங்க எவ்வளவு கொள்ளை அடிச்சாங்களோ ! ( அல்லது கொள்ளை அடிப்பாங்களோ )..."
எனக்கு ஒன்னு புரியல..உங்களுக்கு என்னதாண்டா செய்யனும்..திட்டம் கொண்டுவந்தாலும் திட்றீங்க! வரலாட்டயும் திட்றீங்க ! மொத்தத்தில் நம்மக்கள் அடுத்தவர்களை திட்டுவதில் அதிக ஆனந்தபடுகிறார்கள் இத்தனைக்கும் அவர்கள் எச்சி கைகளால் காக்கா கூட விரட்டமாட்டார்கள் அதுக்கு இரண்டு பருக்கை போய்டும்னு ..பாதி பேர் ஓட்டும் போடுறதில்லை (இப்ப நிலைமை மாறிட்டு இருக்கு..).

ராம்தாஸ் - மீண்டும் சாதி பேரில் தூபம்..

தேர்தல் தோல்விக்கு பிறகு , மீண்டும் சாதி பேரை சொல்லி தூபம் போட்டு இழந்த வாக்கு வங்கியை சரிசெய்ய பார்கிறார்." வன்னியர்களை அழிக்கபார்க்கிறார்காள் வன்னியர்களிக்கு முக்கியத்துவம் இல்லை" என்று வேதாளாம் முருங்கை மரம் ஏறின கதையா மீண்டும் மரவெட்ட தூபம் போடுகிறார்...
"சாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம் " இதை இந்த தமிழ் குடிதாங்கி அய்யா அவர்களுக்கு ஞாபக படுத்துமாறு கேட்டு கொள்கிறேன் !


~~

No comments:

Post a Comment