Tuesday, June 2, 2009

தேர்தல் என் கருத்துகள்

~~~~

என்னதான் எல்லாரும் பணத்தால் தான் திமுக வெற்றி பெற்றதாக கூறினாலும், பணம் மட்டுமே வெற்றி தந்துவிட முடியாது..வேட்பாளர் தேர்வும், தேர்தல் களப்பணியும் முக்கியம்.இந்த தேர்தலில் திமுகாவிற்கு எதிராக மக்கள் இருக்கிறார்கள் என்ற மாய மப்பில் எதிர்கட்சினர் இருந்தனர். இந்த தேர்தலில் தமிழக மக்கள் சிந்தித்து வாக்களித்திருப்பதாகவே நான் கருதுகிறேன். தோல்வியை ஒப்புகொண்டு , வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு , தவறுகளை ஆராய்ந்து திருத்தி கொள்ளாமல் மெசின் சரியில்லை, பண கொடுத்தாட்டாங்கே என்று சொல்லி கிட்டிருந்தா அடுத்த தேர்தலிலும் இதேதான் சொல்ல வேண்டியிருக்கும். பணத்தால் வெற்றி பெற்றதாக சொல்லும் அனைவரும் தமிழக மக்களை இழிவு படுத்துகிறார்கள் என்றே நான் கருதுகிறேன்..

அதை போல ஈழ பிரச்ச்னையில் தமிழக மக்களுக்கு அக்கறையில்லை என்று இந்த தேர்தல் முடிவுகளை நாம் எடுத்து கொள்ள கூடாது.. இங்கு நடந்த ஈழ போராட்களில் முக வை வசைபாடும் மேடையாகவே எதிர்கட்சினர் பயன்படித்தினர்.. அதை சாமானியன் ரசிக்கவில்லை என்றே நான் கருதுகிறேன்..

திமுக :- வேட்பாளர் தேர்வு , தேர்தல் களப்பணி , மக்களுக்கு நம்பிக்கை தரும் பிரபலமான முகங்களின் பிரச்சாரம், தேமுதிகவின் வாக்கு பிரிப்பு ஆகியவே வெற்றிக்கு காரணம்..பணம் என்று சொல்லுவது முட்டாள்தனம்.எல்லா கட்சிகளும் தான் செலவுசெய்தன...

அதிமுக :- அதிமுகாவை பொருத்தவரை அவர்களுக்கு வெற்றிதான்..9 இடத்தில் வெற்றி . அவர்களின் ஒட்டு மொத்த ஒட்டு சதவீதம் குறையவில்லை..என்ன ஒன்னு திமுக எதிர்ப்பு ஒட்டுகள் கிடைக்கவில்லை..எல்லாம் கருப்பு எம்ஜி ஆர் வந்த விளைவு ..

தேமுதிக :- எல்லா கட்சியினரையும் வசைபாடுவதை தவிர வேற எதுவும் உருப்படியான் திட்டம் எதையும் முன்வைக்காதது.. சொன்னா காப்பி அடித்திடுவாங்கனு சின்னபிள்ளைதனமாய் சொன்னது..அப்படியே காப்பி அடித்தா என்ன ! மக்களுக்கு நல்ல நடந்தால் போதாதா..அதை நீங்க தான் செய்யனுமா..என்ன லாஜிக் இது

காங்கிரஸ் :- singh is king ..இலங்கை பிரச்சனை தவிர , காங்கிரஸின் மீது மக்களுக்கு கோபம் இல்லை இளங்கோவன் தோற்றது தான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி..ஆடியா ஆட்டம் என்ன ...

மதிமுக :- வைகோ தோற்றது அதிர்ச்சி ! நல்ல பேச்சாளர்..நல்ல தலைவனாக இல்லாமல் போய்விட்டார்..இல்லை அப்படி ஆக்கபட்டார். அரசியலில் தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்ததின் விளைவு அம்மாகிட்ட அடைக்கலம் நாடி நிக்கிறார்.வீரவசனங்களை தவிர மக்கள் நெருக்கம் இல்லை..அம்மா பின்னாடியே கை கட்டி நின்னா வேலைக்கு ஆகாது.இதை வைகோ என்னைக்கு புரிந்து கொள்வாரோ ! இவருகு ராமதாஸ் பரவாயில்லை கூட்டணியில் இருந்த போது கூட அடிமையாக இருக்கவில்லை..

பாமக :- அனைவரும் அறிந்ததே ...அகந்தையால் தோற்றுபோனார்கள்.....இலங்கை பிரச்சனையில் முக வையும், காங்கிரசையும் வைத்து text book management style game ஆடி
வின் - வின் சூழ் நிலை உருவாக்கிட்டதா நினைத்தார்..இப்போது புரிந்திருக்கும் அது எல்லாம் கதைக்கு ஆகாது என்று

கம்யூனிஸ்ட் :- காத்து இந்த முறை அடிக்கவில்லை..கணிப்பு பொய்யா போச்சு...தாபாண்டியன் தோல்வி அதிர்ச்சியே..அமெரிக்காவா எதிர்க்கும் அளவுக்கு நம் நாட்டு வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை என்றே நான் கருதிகிறேன்..

கார்த்திக், சமக :- பாவம் பாஜக எத்தனை கோடி இவங்களுக்கு கொடுத்தாங்களோ !

பாஜக :- தமிழக பாஜக அதிமுகா நம்பி இருந்தது கடைசியில் அவமானபடுத்தபட்டது.. இன்னும் பயிற்சி தேவை..மற்றபடி நல்ல தலைவர்கள் அங்கு இல்லாமல் இல்லை..இல.கணேசன், திருநாவுக்கரசர் போன்றோர்கள் தோற்றது பரிதாபமே !

மமக, :- மதவாத கட்சிகள் தனித்து நின்று வெல்வது எல்லாம் கானல் நீர்தான்..இவர்கள் தமிழ்நாடு முழுக்க வாங்கிய ஓட்டுகளை எண்ணினால் கூட 1 லட்சம் தாண்டாதுதான் நினைக்கிறேன்..

கொங்கு கட்சி:- ஜாதிகட்சியும் தனித்து நின்று வெல்வது சாத்தியம் இல்லை இது அவர்களுக்கே தெரியும்.. இந்த தேர்தலில் எப்படி தங்கள் சாதிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று அவர்கள் இன மக்களுக்கு "அன்பு" கட்டளை இட்டார்களே அதை போல கொங்கு மண்டல்த்தில் இன்னும் நடைமுறையில் இருக்கும் கொத்தடிமை, இரட்டை குவளை , தீண்டாமைக்கும் ஒரு கட்டளை இட்டார்களே ஆனால் அவர்களுக்கு கோடி புண்ணியம் ..(எல்லாரையும் குறிப்ப்டவில்லை ஒரு சில இடங்களில் ஒரு சிலரால் மட்டும் இது இன்னமும் இருக்கிறது )

லதிமுக :- அப்படினா ? ..

மொத்தத்தில் இந்த தேர்தல் முடிவுகள் தமிழக மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள் என்றே காட்டுகிறது.ஒரே நாளில் மாற்றம் வராது..இது ஆரம்பம்..தான்


~~~~

No comments:

Post a Comment