Monday, June 15, 2009

கதம்பம் - 45 கோடி ,NDTV மற்றும் பல

~

45 கோடி !
--------------------

கர்நாடாகவை சேர்ந்த அமைச்சர் மற்றும் தொழில் அதிபர் ஒருவர் 45 கோடி மதிப்புள்ள வைர கீரிடத்தை திருப்பதி ஏழு மலையானுக்கு கொடுத்திருக்கிறார்... அடங்க கொக்க மக்கா! 45 கோடி ...
என்னால் அவர் இந்த பணத்தை நேர்மையாக சம்பாதித்திருப்பார் என்று நம்ம முடியலை ! இந்த 45 கோடியை வைத்து அவ்ர் தொகுதிக்கு எத்தனையோ நல்லது செய்திருக்கலாம் ..எத்தனையோ ஏழைகளுக்கு உதவி இருக்கலாம்..ஒன்னும் வேணாம்ங்க..அவர் தொழிற்சாலையில் வேலை செய்யும் நலிவடைந்தவர்களுக்கு உதவி இருக்கலாம்...." ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்"
என்ற பொன் மொழியை கன்னடதில் மொழி பெயர்த்து இவர் காதில் கொஞ்சம் உரக்க சொல்லுங்க!

கடன் தொல்லையால் ஒரு குடும்பம் தற்கொலை அந்த செய்தி வந்த அதே செய்தித்தாளில் வந்தது... என்னத்த சொல்ல !

போதை மருந்தும் தமிழக தொலைகாட்சி சேனல்களும் -
------------------------------------------------------

கமல் பசங்க பட விழாவில் அருமையா சொன்னார்..நம்முடைய முதலாளிகள் ரொம்ப நல்லவர்கள் மக்கள் போதை மருந்து கேட்டாலும் விற்பார்கள் மலிவு விலைக்கு என்று அவரைய்ம் சேர்த்து! அதை அப்படியே செய்கின்றன் சன் மற்றும் முக மற்றும் இதர சேனல்கள் மக்கள் தொலைகாட்சி தவிர ! விஜய் தொலைகாட்சி பரவாயில்லை ஒருசில நல்ல நிகழ்ச்சிகளவது ஒலி பரப்புகிறார்கள்.. ஒரே மாதிரியான் அறிவை மழுங்க செய்யும், பெண்களை , மனிதத்தை தவறாக சித்தரிக்கும் பின்னோக்கிய சிந்தனை உடைய தொடர்கள் , நிகழ்ச்சிகள்..முடியல !

Body Language, Attidude, enery level, chemistry ... இந்த நாலு வார்த்தையே கேட்டாலே ரட்சகன்ல நாகார்ஜீனாக்கு நரம்புல ஏற மாதிரி ஏறுது ! என்னனு கேட்ட மக்கள் இந்த மாதிரிதான் விரும்பி பார்க்கிறார்கள் என்கின்றன் இந்த போதைமருந்து வியாபாரிகள் !

தொலைகாட்சிகள் தங்கள் கருத்துகளை மக்கள் மீது திணிக்கின்றன் செய்திகள் என்ற பெயரில் ! உதாரணத்துக்கு சன் நியுசில் ஒரு செய்தி..மாசில்லாமணி படவந்ததால் மக்கள் ஆரவாரமா இருக்கங்கலாம்..திரையரங்குகளில் ஒரே கும்மாளாமா! ஒளிப்படம் வேற காண்பிக்கிறார்கள் ! அதில இரண்டு அல்ல கைகள் திரையரங்கில் ஆடுது ..முடியலடா சாமி !

ஆனால் நிதர்சன உண்மை என்னவென்றால் சத்தமில்லாமல் இந்த தொலைகாட்சிகள் நம்மை மட்டுமில்லை நம் அடுத்த தலைமுறையையும் சேர்த்து கெடுத்து கொண்டிருக்கின்றன்..! என் அக்கா வீட்டுக்கு போனப்ப , எங்கஅக்கா அது பையனை "மாமாவுக்கு பாட்டு பாடி காமிடா " னு 4 வயது பையங்கிட்ட சொன்னா! அவன் பாடினா பாட்டை கேட்டு அதிர்ந்து போனேன்... "டாடி மம்மி வீட்டில் இல்ல...." அதுதான் அந்த பாட்டு ! இதை பார்த்து என் அக்கா பூரிப்படையது.. அடுத்து அப்படியே ஒரு கேள்வி கேட்டது.." உனக்கு பிடித்த ஹூரோ யாரு சொல்லு மாமாகிட்ட.. அவன் ஒரு பஞ்ச டயலாக்கோடு சொன்னான்..விஜய்னு !

அட மக்கா...நம்ம தாண்டா மண்ணுக்குள்ள தலையவிட்ட நெருப்புகோழி மாதிரி நம் தமிழன் எல்லாம் அப்படி இப்படினு புத்தகங்களை படித்து தவறா புரிந்து கொண்டியிருக்கோம் சமீபத்திய தேர்தலுக்கு முன்னாடி நடந்த கருத்து கணிப்பு மாதிரி. நம்மாளுங்க எல்லாம் திரைப்படத்திற்கும், தொலைகாட்சிக்கும் அடிமையாகிட்டு நமமள உனக்கு ரசனையே இல்லை அப்படிங்கிறான் !

விஜய் அவார்டுஸ் , ஆனந்த விகடன் !
---------------------------------------------------------------------

விஜய் டீவி மேல கொஞ்சம் மரியாதை இருந்தது.ஆனால் நாங்க மட்டும் என்ன அப்படினு காட்டிட்டாங்க ! சிறந்த புதுமுகம் - சாந்தனு .. சிறந்த படம் வாரணம் ஆயிரம்...நடத்துங்க நடத்துங்க !
இந்த வாரம் நயன்தாரா, பிரபு தேவா கல்யாணம் மற்றும் அவர்களின்..... பற்றிய பரபரப்பான் செய்திகள் ! வாழ்க பத்திரிக்கை ..இதே நக்கீரன்ல் போட்ட மஞ்சள் பத்திரிககைனு சொல்றான்...

துணை முதலமைச்சர், அழகிரி , NDTV ,
----------------------------------------------------------------------

ஸடாலின் (துணை) முதலமைச்சர் ஆகியிருக்கிறார் ,அழகிரி மத்திய அமைச்சர் ஆகியிருக்கிறார்.. இருவரையும் அவர்களின் பின்புலங்களை ஆராயாமல் வாழ்த்துவோம்..நிச்சயம் புகழுக்காகவாது இவர்கள் தமிழ் நாட்டில் நல்ல திட்டங்களை செயல்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன் !

ராகுல்காந்தி, சச்சின் பைலட், அகதா சங்மா எல்லாம் அடுத்த தலைமுரை யூத்தாம். படித்தவர்களாம் ..தயாநிதி மாறன் மினிஸ்டர் ஆனது MK's famil business அப்படினு செய்திகள் போடும் NDTV தமிழக மக்களலால் தேர்தெடுக்க பட்டவர்களை அவமானபடுத்துவதாகவே நான் கருதுகிறேன்... சமீபத்தில் நடந்த விவாத்தில் கூட ஒரு பிரபலம் அதே டிவி யில் சொல்கிறார் மம்தா தான் இப்போதுள்ள மந்திரிகளில் இளைய வயது கேபினட் மந்திரியாம்.அப்ப தயாநிதிக்கு என்ன 53 வயதா? ஏன் இந்த தென்னக புறக்கணிப்பு..இப்படிதான் அன்புமணிக்கு எதிராக தொடர் செய்திகளை பரப்பியது. வட இந்தியர்கள் தான் புத்திசாலி என்பது போலவும் , தமிழ் நாட்டில் இருக்கறவன் எல்லாம் கேனப்பயலாட்டம் சித்தரிக்கிறார்கள்..நீங்கள் அமுக்க நினைக்க நினைக்க நாங்கள் உயர்வோம். தமிழ்னாடுனா உடனே சோ, சுப்பிரமணியசாமியை தான் இவங்க கருத்து கேட்பாங்க! "சோ " வாவ்து ஓகே . சென்னை மேல்தட்டு மக்களின் கருத்தாவது அவருடன் ஒத்து போவும். விமர்சகராக "சோ" வை நான் மதிக்கிறேன்.. ஆனால் இந்த சுப்பிரமணியசாமிக்கு எதுக்குதான் போலிசு பாதுகாப்பு கொடுககுதுனு மக்களே உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க !

சென்னை கத்திப்பாரா மற்றும் மெட்ரோ
----------------------------------------------------------------------

சென்னை கத்திபாராவை இரவில் விமானத்தில் இருந்து பார்க்க அருமையா இருந்தது..
அதன் பலன் கத்திபாராவில் தினமும் குறைந்தது 15 நிமிடம் ட்ராபிக்கில் மாட்டிய சென்னைவாழ் மக்களுக்கு நன்கு தெரியும். சென்னை மெட்ரோ பணிகள் ஆரம்பம்மாகிருக்கின்றன்..கண்டிப்பாக இதற்கு இடையூறுகள் வரும் ஆட்சிகள் மாறினால் கிடப்பில் போடப்படலாம்.. ஆனால் இதை எல்லாம் மீறி திட்டம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். திமுக பாலம் மற்றும் இதர திட்டங்களில் கொள்ளை அடிக்கிறார்கள் என்று வருத்தபடும் சில எதிர்கட்சி நணபர்களுக்கு , அவர்களாவது இந்த மாதிரி எதாவது செய்திட்டு அடிக்கிறார்கள்..மற்ற ஆட்சிகளில் ????.


~

No comments:

Post a Comment