Friday, June 26, 2009

பேசாம பேசாமாதான் இருந்து - சீமான் !

~

பேசாம பேசாமா இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !

பேசாம பேசாமாதான் இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !

அட தோழா ரொம்ப நாளா
கேட்காம கேட்காமா இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து !
இப்ப போகுதடா கோவணமும் பறந்து !

விதைச்ச பயிரு அறுவடைக்கு விளைஞ்சு கிடக்குது
உணவில்லாமல் உழைத்த வயிறு காய்ஞ்சு கிடக்குது !

அடிக்கும் போது புழுவும் கூட எழுந்து துடிக்குது
அறிவிருந்தும் அடிமைத்தனம் போக மறுக்குது !

அட தோழா ரொம்ப நாளா

பேசாமா பேசாமா இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !

வருசம் நாலு தேர்தலு நாட்டில் நடக்குது அதனால்
நமக்கு இங்கே என்ன கிடைக்குது !


எரிக்கும் போது பிணமும் கூட எழுந்து நிக்குது !
உசிரு இருந்தும் உன் முதுகேன் குனிந்து நிக்குது!

அட தோழா ரொம்ப நாளா

பேசாம பேசாமா இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !
கேட்காம கேட்காமா இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து !
இப்ப போகுதடா கோவணமும் பறந்து !


~

4 comments:

RVRPhoto said...

அருமையான கருத்து உடைய பாடல். சீமனால் பாடப்பட்டது மிகப் பொருத்தமானது.

மதன் said...

தல.. எங்க ரொம்ப நாளா காணோம்..? :)

mvalarpirai said...

வருகைக்கு நன்றி மக்களே !

மதன் நாங்க இங்கதான் இருக்கோம்..நீங்க தான் busy ஆயிட்டீங்க ! கடை பக்கட்டு வரதில்லை ! :)

மதன் said...

என்னங்க பண்றது.. நம்ம தான் மென்பொருள் வித்தகர்களாச்சே.. இடையில எழுத்துப் பணிக்கு நேரம் கொஞ்சம் சிரமப்பட்டாதான் கிடைக்குது..! :)

Post a Comment