Tuesday, May 19, 2009

வெள்ளை பூக்கள் மலரட்டும் ...

இனிமேலாவது அமைதிப்பூக்கள் மலரட்டும்..

இப்போது சாந்தியா ராஜிவ் குடும்பம் மற்றும் காங்கிரஸ்காரர்களே, சுப்பிரமணிசாமி மற்றும் வட நாட்டு தொலைகாட்சி குழுமங்களே..இப்போது சாந்தியா?

தன் மகனை முதலவராக்கலாமா, பிரதமராக்கலாமா என்பவர்களிம் ம்த்தியில் தன் மகனை மாவீரனாக்கிய தலைவன்.

புலிகள் தீவிரவாதிகள், தீவிரவாதிகள் என்று ஒரே காரணத்திற்காக நடந்த இனப்படுகொலைகளை வேடிக்கை பார்த்த உலக தலைவர்க்ளே., இந்திய வல்லரசின் ஆட்சியாளர்களே ...இதோ உங்கள் கண்ணோட்டத்தில் தீவிரவாதிகள் மாவீரர்களாகிவிட்டார்கள்..இனி காரணம் என்று தேடாமல் தமிழர் வாழ்வு சிறக்க உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள்.

தமிழினத்தலைவரே! இனியாவது தமிழ் மக்களுக்காக் குரல் கொடுங்கள். இனியாரும் உங்கள் ஆட்சியை விடுதலைப்புலிகள் பேரை சொல்லி கலைக்க முடியாது. நீங்களும் அவர்களுக்காக ராஜினாமா செய்ய தேவையில்லை.
நீங்கள் தவற இழைத்தாக நான் கூறதேவையிலை.உங்கள் மனசாட்சியை கேளுங்கள்.இனிமேலாவது அதற்கு பிரச்சாயித்தம் தேடுங்கள்.

நடந்தவைகளை மறப்போம். வரலாறு நமக்கு வாழ்வழிக்காது சொந்தங்களே ! நடப்பவைகளை எண்ணுங்கள்.
இன்னும் 33 ஆண்டுகள் வேண்டாம் சொந்தங்களே. மாவீரர்கள் ஆனது போதும். இனிமேல் நம் குழந்தைகள் சமாதானமான் உலகத்தில் வாழட்டும்.

மாவீரர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். வெள்ளை பூக்கள் மலரட்டும் ..

வாழ்க தமிழினம் !

2 comments:

Anonymous said...

எம் தலைவன் இறந்துவிட்டதாக முடிவே பண்ணிட்டிங்களா?!!!

எதையும் எம்மவர்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை இப்படியான (எம் மனதை நோகடிக்கும்) பதிவுகளை தவிர்க்கலாமே?!

தமிழ் said...

நடக்காத ஒன்றுக்கு
எதற்கு இந்த இடுகை நண்பரே

Post a Comment