Sunday, February 8, 2009

ரஜினி - எல்லாரையும் போல சாதாரண சுயநல மனிதர் தான் ...

ரஜினி - எல்லாரையும் போல சாதாரண சுயநல மனிதர் தான் ...

ரஜினி..ஒரு நல்ல நடிகர் , உழைப்பால் சாதாரண நிலையில் இருந்து பிரபலமான நிலைக்கு உயர்ந்தவர் , ஊடகங்களில் இவர் புகழ் பாட வைத்தவர், சினிமாவில் அதிகம் சம்பாதித்தவர், அவரை வைத்து சிலர் சம்பாதிக்க உதவியவர்..மற்ற படி அவர் சாதாரண எல்லாரையும் போல சுய நல மனிதர் தான்..

அவர் அவர் அரசியலக்கு வர வேண்டும் , என்று சொல்லும் so called ரசிகர்கள் , அவரை வைத்து சம்பாதிக்க நினைப்பவர்களே ! ஒரு சின்ன உதாரணம் .ஒரு ரஜினி ரசிகர் மன்ற தலைவர் "நாங்கள் வேற கட்சிகளில் சேர்ந்திருந்தால் எங்கள் நிலைமை வேற மாதிரி இருந்திருக்கும் ரஜினியை நம்மியதால் இப்படி இருக்கிறோம் ". இதில் இருந்து தெரியல..இவங்க ரஜினிய அரசியலக்கு வர வேண்டும் என்று சொல்லுவது , இவங்க நிலைமை மாறுவதற்கு , மக்களுக்கு சேவை செய்ய இல்லைனு....

ரஜினி சிறந்த வியாபாரிங்க , இவங்களுக்கு இப்ப வறேன் அப்ப வறேன்னு தூபம் போட்டு நல்ல தன் படங்களை வியாபாரம் பண்ணுகிறார். .. பாபா படம்னு நினைக்கிறேன்.. ஜெயா மேடம் சினிமா டிக்கேட் விலை எவ்வளவு வேணாம்னு இருக்கலாம்னு ஒரு சட்ட தளர்ச்சி கொண்டு வந்தாங்க ! அது வரைக்கும் ஜெயா மேடத்திற்கிட்ட பனிப்போரில் இருந்த வரு...உடனே பூங்கொத்து கொடுத்து நன்றி சொன்னாரு....ஏன்னா ,தன் படம் ரிலீஸ் ஆகுது...ஒரே வாரத்துல தமிழ் நாடு so called ரசிகர்கள் பணத்தை லம்பா அள்ளிட்டு இமய மலைக்கு போயிடலாம் தான். .டிக்கெட்டுக்கு எவ்வளவு வேணா செலவு பண்ணி வாங்க இந்த இழித்தவாயர்கள் இருக்கும் போது தனக்கென்ன..என்ற தைரியம் தான்..

இது தெரியாம இந்த இழித்தவாயர்கள் 400,500 என்று டிக்கெட்டுக்கு செலவு பண்ணி அந்த மொக்கை படத்தை பார்த்தானுங்க ! ரஜினி உண்மையிலே ரசிகர்கள் மீது அன்பு வைத்திருந்தால் தான் படத்துக்கு சாதரண ரேட்டிலே,அது கூட வேண்டாம் ஒரு reasonable ரேட்டில் ஆவது தன் ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கலாமே ..அவரை பொறுத்த வரை துட்டு தான் முதல்ல அப்புறம் தான் எல்லாம்...எங்க பக்கத்து டீக் கடையில் வேலை பார்த்த பையன் தன் 10 நாள் சம்பளத்தை சேர்த்து வைத்து 2.5 மணி நேரம் ரஜினி படம் பார்த்தான் 400 ரூபாய் கொடுத்து..அடுத்த நாள் அவன் கிட்ட காசு இல்லாததால் அவன் உடல் நிலை சரி இல்லாத அம்மாவுக்கு என் நண்பன் தான் மருந்து வாங்கி கொடுத்தான். இதே மாதிரி எத்தனை பசங்க அவங்க சம்பாதியத்தை கொடுத்தார்களே....

சிவாஜி பட வெளியீடப்ப ..ரஜினிய வைத்து english TV channels -உம் சம்பாதித்து கொண்டனர்.....அதில ஒருவர் பேட்டி.."நான் flight புடுச்சி வந்து1000 Rs ticket டிக்கெட்டு எடுத்தென் .."எனக்கு அது உண்மையா..இல்லை build up - ஆனு எனக்கு சந்தேகம் இருக்கு. உண்மையா இருந்த அவன் சத்தியமாய் On-Duty la வந்து இருப்பான்...தான் ஏமாறுவது தெரியாமல் பெருமையா பேட்டி வேற ! இழிச்சவாயன்.

அந்த சிவாஜி படம் so called கதை கருப்பு பணத்தை பத்தி...- ஆனா இந்த படத்தை வைத்து, இதில் சம்பந்த பட்டவர்கள் (ரஜினியும் சேர்த்துதான்) எவ்வளவு கருப்பு பணம் சம்பாதித்தார்களோ ! முதல்வர் வேற முதல் வேலையா preview பார்த்துட்டு பக்காவா பேட்டி கொடுப்பாரு..ரசிகர்களின் ஓட்டுக்காக ! 55 வயது நடிகருக்கு 16 வயதிலோ அல்லது உலக அழகி தான் கதா நாயகியாக வேணும்...எந்த நடிகைய போட்டாலும் இவரை சுத்தி சுத்தி காதல் பண்ண போறாங்க..யாரைப் போட்ட என்ன ! இவரோட படத்தில் பொண்ணுங்க அப்படி இருக்கனும்னு இப்படி இருக்கனும்னு ஆணாதிக்க வசனங்கள் நிறைய இருக்கும்....ஆனாலும் அதைப்பத்தி எல்லாம் எந்த பத்திரிக்கையும் விமர்சிக்காது.அவர் படம் நாளே அதிகபடியாக விமர்சனங்கள் எழுதும்...இல்லைனா அவங்க பத்திரிக்கை விற்காதே ! .ரசிகர்கள் இவர் கட் அவுட்ல பாலை ஊத்தி பூஜை பண்ணுவாங்க அவங்களை பொறுத்த வரை அது நாளைய அரசியலுக்கு investment. இவருக்கு இதில் உடன்பாடு இல்லைனா பால் ஊத்தும் ரசிகர்களை மன்றத்தில் இருந்து நீக்க வேண்டியதுதானே ! அது எப்படி இவரொட வியாபாரம் பாதிக்குமே ..இதை முன்மாதிரியா வைச்சு..இப்ப எல்லா ரசிகர்களும் பால் ஊத்துறான்..(சில் நடிகர்கள் இதுக்குனே ஒரு budget போடுறாங்க ! ).

இந்த ஊடகங்கள் ரஜினி பத்தி கொஞ்ச நாள் எந்த செய்தியும் வரலையா ,உடனே எதாவது ஒரு கட்டம் கட்டிஇதோ வரப்போறாரு அதோ வரப்போறானு செய்தி போட்டு ரசிகர்கள் பணத்தை சம்பாதித்து கொள்கின்றன.அவர் புத்திசாலியோ இல்லையோ அவரை சுற்றி உள்ள கூட்டம் புத்திசாலி..அதனால் அவர் கடைசி பட வெளியீடு வரை பிலிம் காட்டிட்டு தான் இருப்பார்..

அப்புறம் நம்ம பாலச்சந்தர் சோத்துக்கு வழியில்லாம போயிட்டாறாம், அதனால் அவருக்கு ரஜினி ஒரு படம் எடுத்து தன் இழித்தவாய் ரசிகர்கள் பணத்தை புடுங்கி கொடுத்தாராம்....கடைத் தேங்காய எடுத்து வழி பிள்ளையாருக்கு கொடுத்த மாதிரி தான்..இதுல என்ன காமெடினா இவர் கொளரவ வேடத்தில் தான் படத்தில வர மாதிரி கதையாம்..ஆனா அதை இயக்குனர் வெளியில சொல்ல வேண்டாம்னாராம்..இவரும் ஒகே சொல்லிட்டாறாரம்..so ரெண்டு பேறும் சேர்ந்து யாரை ஏமாத்தீனீங்க ! நம்ம இழித்தவாயர்களைத்தான் ...இதுல இன்னொரு விசயம் ..இந்த படம் கர்னாடகாவில் ஓடனும் கிரத்துக்காக மன்னிப்பெல்லாம் கேட்டாரு இந்த வாய் சொல் வீரர்...என்னை கேட்டா அவர் பேசிய விதம் தவறு தான். அதற்கு அன்றே அவர் வருத்தம் தெரிவித்திருக்கலாம்..அப்ப பம்மாத்து காட்டியவர்..காசு போகப்போது என்று தெரிந்த உடன் காலில் விழுந்தார்...

ரஜினியை வைத்து ஒரு பொண்ணு latest-a oru book எழுதியிருக்கு அவர் நல்லவரு/ வல்லவருனு ...அவர் ரஜினி எத்தனை முறை சந்தித்திருப்பார் என்று தெரியவில்லை..சும்மாவே அடிச்சு விடுவது..புகழுக்காக !

அடுத்து அவுங்க பொண்ணு கிளம்மி இருக்கு இப்ப ரஜினி பேரை சொல்லி சம்பாதிக்க...அவங்களுக்கு தமிழ் தெரியாதுன்னு நினைக்கிறேன்...english தான் பேட்டி கொடுக்கிறாங்க...நம்ம இழித்தவாயர்கள் சிலர் மொழிபெயர்த்து சொல்ல சொல்லி torture பண்ணியாதக என் நண்பர் சொன்னாரு. அவங்க தான் படித்த Animation-ya சோதித்து பார்க்க நினைத்தது...உடனே அப்பாவோட இழித்தவாயர்கள் இருக்கும் போது எனக்கென்ன கவலை என்று நினைத்து ரஜினியை வைத்து Animation படம் எடக்குது..நம்மாளுங்க கண்டிப்பா அதை வெற்றி படம் ஆக்கிடுவாங்க..அப்புறம் என்ன அவங்க காட்டில மழை தான் !

ஆனா ரஜினியையும் , ரஜினியின் பேர சொல்லி சம்பாதிக்கும் கூட்டத்தையும் , ரஜினி அரசியலக்கு வருவார் சம்பாதிக்கலாம்னு invest பண்ற கூட்டத்தையும் அப்பாவி ரசிகர்களும், மக்களும் அடையாளம் காணும் தூரம் வெகு தொலைவில் இல்லை..

No comments:

Post a Comment