Friday, January 2, 2009

எதைப் பற்றி எழுத என் முதல் பதிவில்........

எதைப் பற்றி எழுத என் முதல் பதிவில்........

என் அம்மா - வேண்டாம் அவளை பற்றி எழுத ஆரம்பித்தால் முடிக்க இயலாது....

என் அப்பா - வேண்டாம் நான் அழுது விடுவேன் ..
என் பள்ளி பருவம் - வேண்டாம் அது ஏட்டு சுரைக்காய்
என் கல்லூரி காலம் - வேண்டாம் அதில் நான் நானாக இல்லை ... .
என் நண்பர்கள் - வேண்டாம் சிலர் கோவித்து கொல்லலாம்...உண்மையை சொன்னால் ...
என் வேலை தேடிய அலைந்த காலம் - வேண்டாம் அது நான் தமிழ் மீது கோபபட்ட காலம் ....கொஞ்சம் விரக்தி மிகுந்தது
என் முதல் வேலை - வேண்டாம் அது நான் கொஞ்சம் அச்சப்பட்ட காலம்
என் வேலை தொடர்பான் வெற்றிகள் - வேண்டாம் அதில் என் அளவுக்கு மீறி உழைத்த காலம்...
என் முதல் வெளி நாடு பயணம் - வேண்டாம் அது நான் குண்டு சட்டியில் குதிரை ஓட்டியவன் என என்னை அரைந்து சொன்ன காலம்
என் தமிழ் பற்று - வேண்டாம் ,அது சீமானை விட கம்மி தான்
என் கடவுள் நம்பிக்கை - வேண்டாம் சில நேரங்களில் அதை இழப்பது உண்டு ....
என் நேர்மை - வேண்டாம் ,அது சில இடங்களில் வள்ளுவன் வாக்கிற்கிணங்க தவறி இருக்கிறது !
என் உணர்ச்சிவசம் - வேண்டாம் அது என் பலகீனம்
என் திரோணாட்சாரியார்கள் - வேண்டாம் ,என் கட்டை விரலை கேட்டாலும் கேட்பார்கள்......
என் எதிர் கால வாழ்க்கை துனணவி - வேண்டாம் , அவள் என்ன பாவம் செய்தாலோ என்னை மணக்க !
என் இந்தியா - வேண்டாம் ,அதன் மீது இப்பொது கொஞ்சம் கோபம் இருக்கிறது ...
இஸ்ரேலுக்கு அழுகிறது..ஈழத்திற்கு மௌனம்.
நான் விரும்பும் அரசியல்வாதிகள் - வேண்டாம் அவர்களை சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் !

சொல்லுங்கள் எதைப் பற்றி எழுத என் முதல் பதிவில்........


1 comment:

Rajmohan said...

ennai pathi eludhu da kanna... anyway good da... narayana unakulum oru kavingan irukan da...

Post a Comment