Monday, January 12, 2009

IT - தொழிலாளார்கள் - தொடர்ச்சி

( முதல் பகுதியை படிக்க click here )

சினிமாதான் இப்படி இருக்கிறது என்று சின்னதிரை பக்கம் வந்தால் அங்கேயும் இதே கூத்துதான் !

நீயா நானா என்ற பிரபலமான நிகழ்ச்சி..தலைப்பு IT vs Non-IT Employees!
அதில், ஒருத்தர் சொல்றாரு, ஒபாமா வெற்றி பெற்றவுடன் Outsourcing-i தடை செய்ய இருப்பதாக அறிவித்ததாகவும்,
அதை அவர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாகவும்! அடுத்தவன் கெட கூட இல்லை,கெடுவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது என்ற மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாடியது மனநோயா இல்லையா? இத்தனைக்கும் அந்த அடுத்தவன் எதிர் வரிசையில் அமர்ந்த்திருக்கும் அவரது சகோதரர்....எனக்கென்னமோ அந்த நிகழ்சசியை நடத்திய கோபிக்கும் இந்த கருத்தில் உடன்பட்டது போல தான் இருந்தது ! ஏன்னா அவர் கேட்ட கேள்விகள், நிகழ்ச்சியை நடத்திய விதம் எல்லாமே அப்படிதான் இருந்தது !
நான் சின்ன வயதில 9ம் வகுப்பு வரையில் பெரும்பான்மையான தேர்வில் முதல் ரேங்க் எடுப்பேன் ! ஒன்று இரண்டு முரை தவறவிட்டதுண்டு ! அப்படி ஒரு முறை தவற விட்ட போது,எங்க அப்பா "ஏன்பா இந்த முறை முதல் ரேங்க் எடுக்கல ? " அப்படினு கேட்டாரு..நான் சொன்னேன் , "சிவா (என நண்பன்) மட்டும் என்னோட 5 மார்க் கம்மியா எடுத்திருந்தா நான் தாப்ப இந்த முறையும் முதல் ரேங்க் வாங்கிருப்பேன் " என்று ..அதற்கு எங்கப்பா சொன்ன பதில் இன்னமும் காதில் ஒலிக்கிறது... "கண்ணு நீ மற்றவர்களை விட அதிக மார்க் எடுக்கணும் தான் நினைக்கனும் , அதை விட்டுட்டு அடுத்தவர்கள் உன்னை விட கம்மியா வாங்கனும் நினைக்க கூடாதுடா கண்ணு"..அவர் ரொம்ப படித்தவர் கிடையாது ! அவருக்கு தெரிந்தது, இன்றைய படித்த சிலருக்கு தெரியவில்லை !
ஒரு மனிதன்/மனிதர்கள் ,தன்னை மற்றவர்களோடு compare பண்ணி ,அடுத்தவர்களை எதோ ஒரு காரணத்தை காட்டி அவன் தாழ்ந்தவன் என்றும் ,தான் உயர்ந்தவன் என்றும் காட்டி கொள்ள ஆசைப்படுகிறார்கள் ..அதற்கான் ஒரு காரணம் தான் சாதி ! அதைப் போல ..
IT- employee -என்றாலே , ஊதாரி, பந்தா party, பொண்ணு களோடு ஊரு சுத்தறவன், சமூக அக்கறை இல்லாதவர்கள் என்று முத்திரை குத்தி அவர்கள் தாழ்ந்தவர்கள்..என்று அவர்களை மட்ட படுத்தும் செயல்தான் ,அவர்களை பார்த்து பொறாமைபடுவர்களும், இன்றைய IT employee க்கு எதிராக வரிந்து கட்டி கொண்டு செயல்படுவர்களின் செயல்.
IT employes குருதி கொடை நிகழ்ச்சி, ஏழைகளுக்கு படிப்பதற்கான் உதவிகள், கண் பார்வை இழந்தவர்களுக்காக தேர்வு எழுதுதல் என்று அவர்களால் முடிந்த நிறைய செய்கிறார்கள்..அதற்கு அவர்கள் வருமானம் காரணம் ...ஆனால் இதை எல்லாம் எந்த பத்திரிக்கைளும் சிறிதாக கூட போடுவதில்லை, ஆனால் ECR ரோட்டில் ஏதோ ரெண்டு பன்னாடைகள் ஒன்னா சுத்தினா ! உடனே பெரிசா போட்டு IT - வந்ததால்தான் இப்படி கலாச்சார சீரழிவு ஏற்பட்டதாக சிறப்பு பார்வை போடுகின்றன ! அவர்கள் அதிக வருமானம் ஈட்டுவதால் இப்படி இருக்கிறார்கள் என்று தீர்ப்பு சொல்றாங்க ! என்னத்தை சொல்றது இவங்களை எல்லாம் !
இன்னும் ஒரு பரவாலான் குற்றசாட்டு ! IT -யால IT company இருக்கிற ஏரீயாவில் வாடகை அதிக மாயிடுத்து ! இதை வேனா நான் ஒத்துகிறேன் !
ஆனா ,இதற்கான் அடிப்படை காரணம் ஒழுங்கான சட்டம் இல்லாதுதும், அதை சரியா கடைபிடிக்காததும்தான்...வெளிநாடுகளில் இந்த சட்டம் சரியா கடைபிடிக்க படுது ! IT மட்டும் இல்லை எந்த ஒரு வருமானம் அதிகமாக வரும் துறை சார்ந்த பகுதிகளிலும்/மக்கள் நெருக்கடி நிறைந்த பகுதிகளிலும் இந்த மாதிரி வாடகை அதிகம் தான்.. உதாரணம் மும்பை !
so நீ என்ன தாண்ட முடிவா சொல்லவற? அப்படினு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது ! நான் என்ன சொல்றேனா !

IT - தொழிலாளார்கள் எந்த விதத்திலும் மற்ற துறை சார்ந்த தொழிலாளார்களை விட தாழ்ந்தவர்களும் இல்லை , உயர்ந்தவர்களும் இல்லை ..







1 comment:

Rajmohan said...

ippavavathu pointuku vanthiye!!

Post a Comment