Thursday, August 19, 2010

எனக்காக நான் மட்டுமே !

~

வாழ்க்கை துணையோடு , வருங்கால வாழ்க்கை துணையொடு
காதலியோடு , காதலா நட்பா புரியாமல் சிலர்,பொழுது போக்கிற்காக பலர்
இப்படி தொலைபேசியில் தொலைகிறது நேரம். மற்றவர்களுக்கு
என் நம்பருக்கு நானே எப்படி அழைப்பது...வியக்கிறேன் நான் !

தன்னைவிட என்னை நேசிக்கும் அம்மா இருந்தாலும்,
தான் வீழ்ந்தாலும் மகன் தாழ கூடாது என் நினைக்கும் அப்பா இருந்தாலும்
தனக்கில்லை என்றாலும் தம்பிக்கு வேணும் என் இருக்கும் அண்ணன் இருந்தாலும
மாப்பி ஏண்டா டல்லா யிருக்கே என் உரிமையாய் கேட்க நட்பு இருந்தாலும்
எனக்காக நான் மட்டுமே இருப்பதாகவே உணர்கிறேன்

நான் செய்த நல்ல வேலைக்காக என்னை பாராட்டுகிறார்கள்
ஆனால் என்னால் மகிழ முடியவில்லை..
சில நேரம் என்னை கண்டிக்கிறார்கள் எனக்கு கோபம் வரவில்லை
உதட்டளவில் சிரிக்கிறேன் கோவிக்கிறேன்

ஒரு வேளை திரும்ப சொந்த ஊருக்கே போயிடலாமா ? எண்ணும்போதே
பயமுறுத்துகிறது ஊர் கேலி பேச்சுகள் வேலையில்லாதவன் எனும் பட்டமும்!
ஒரு வேளை வாழ்க்கை துணை என்று ஒருத்தி வந்தால் சரியாகுமோ ?
ஆகலாம் என் நம்பிக்கையின்றி சொல்கிறார்கள் ஆன நட்புகள்

என் செய்வேன் நான் என் கேட்கும் முன்னே குவிகின்றன் அறிவுரைகள்

மனசே ரிலாக்ஸ் ப்ளிஷ் படி சினிமாவுக்கு போலாம்
தண்ணி அடிக்கலாம் மச்சான்..இல்லடா மேட்டர் பார்க்கலாம் இண்டர்னெட்ல
பாரதியின் அச்சமில்லை கவியை முன்னூறு முறை வாசி
மச்சி சுகி சிவம்...

என்னதாண்டா உன் பிரச்சனை அவன் அவன் வேலையில்லாமல் சாப்பாடு இல்லாமல்
ரோட்ல அலையிறான் உனக்கென்னடா கோபத்தில் சில

யார் என்ன சொன்னாலும் ஏனோ புரியவில்லை எனக்காக நான் மட்டுமே இருப்பதாக் உணர்கிறேன்

--- வாழ்க்கையில் பல பேர் இந்த நிலையை கடந்து வந்திருப்பார்கள். நானும்

No comments:

Post a Comment