Tuesday, January 26, 2010

ஆயிரத்தில் ஒருவன்- தூற்றுபவர்கள் தூற்றட்டும் தொடந்து செல்லுங்கள் செல்வா

~

படத்தை பற்றி நிறைய விமர்சனங்கள்..ஆனால் ப்டம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.. இப்படி ஒரு படம் எவனாலும் பண்ண முடியாது என்பதைவிட யாருக்கும் தைரியம் இல்லை.
நாலு பாட்டு வச்சோமா..நாலு சண்டை வச்சோமா..படத்தை சன் மாதிரி மீடியாவில் விளம்பரம் போட்டோமா..காசு கொடுத்து கட் அவுட் வச்சோமா..கலக்சனை பார்த்தோமா என்று இருக்கும் தமிழ் சினிமாவில். டேய் பொ.........டை களா தமிழ் சினிமா இப்படியும் எடுக்கலாம் என்று மார்தட்டி சொல்கிறார் செல்வா.

அறிவு ஜீவிகள் இது ஆங்கில பட காப்பி என்று ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.. அய்யா நான் பாமரன்..எனக்கு இந்த படம் புதுசு..நம்ம தமிழர்களின் பண்டைய கால வாழ்வை கற்பனை கல்ந்து எடுக்கபட்டிருக்கும் படம். (வரலாறு உண்மையா பொய்யா என்பது வேறு சர்ச்சை). சினிமாவா பார்த்தா இது போல் ஒரு தமிழ் படம் வந்ததில்லை இனிமேல் எடுக்க துணிவார்களா என்பது சந்தேகம்..படம் வெளிவர அவர்கள் பட்ட கஷ்டம் ஊருக்கே தெரியும்..

பாடல் வரிகள் அனைத்தும் மிக அருமை. இரண்டாம் பாகத்தில் "தாய் தின்ற மண்ணே..ஒரு பிள்ளையுன் கதறல் ஒரு பேரரசன் புலம்பல்" பாடல் நெஞ்சை பிளிகிறது. "சொல்லாடிய அவை எங்கே" பாடல் அருமை.அந்த பாடல் வரும்போது ஈழ மக்களின் நினைவுகள் வருவது தவிர்க்க முடியாது. வைரமுத்து வைரமுத்து தான். கவிப்பேரரசு வாழ்க !

பார்த்திபன் நடிப்பு அருமை. அவரை போரில் காப்பத்த அவர் மேல் பாதுகாப்புக்காக வீரர்கள விழும் போது , அவர் தற்கொலை செய்ய கத்தி எடுக்கும் போதும் தடுக்கும் மக்கள் காட்சி , " இது என்ன படைக்களம் இதை பற்றி என்னிடம் நீங்கள் விளக்கவே இல்லை அஞ்சிவிடுவோம் என்றா " என்ற வசன காட்சியும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது.
பார்த்திபன் , கார்த்தி இணைந்து ஆடும் நடனம் சூப்பர்.

இசை சான்சே இல்லை. பின்னணி இசையும் சரி, பாடல்களும் சரி அருமையாக பண்ணியிருக்கிறார் பிரகாஷ்.

ரீமாசென்னுக்கு இப்படி ஆழமான் கேரக்டர் எதிர்பார்கவே இல்லை. கவர்ச்சியிலும் சரி, நடிப்பிலும் சரி பட்டைய கிளப்பி இருக்கிறார். ஆண்டிரியாவா தூக்கி சாப்பிட்டி விட்டார் ரீமா.
அழகம் பெருமாள் சரத் பொன்சாகவை நினைவு படுத்துகிறார். கார்த்திக்கு நடிப்பு இயல்பா வருது. Image பார்க்காமல் நடித்திருக்கிறார். சூர்யாவை over take பண்ண போவது உறுதி.

கடைசியில் பார்த்திபன் சாகிறாரா என்பதை தெளிவாக காட்டாதது பிரபாகரனின் மரணத்தை நினைவு படுத்தது. அவர் பையனை தூக்கி கொண்டு கார்த்தி ஓடும் போது " ஓ ..தா...தலைவன் இருக்கிறாண்டா திரும்பி வருவோம்டா " என்று என் பின்னாளில் இருந்த ஒரு ரசிகர் கத்தினார். கிட்ட தட்ட நானும் அதே மன நிலையில் இருத்தேன்.
படத்தின் அனைத்து காட்சிகளை இபப்டி எதோ ஒரு சிறப்பு இருக்கிறது, எல்லாத்தையும் இந்த பதிவில் சொல்லிவட முடியாது

இனி விமர்சனங்களுக்கு வருவோம்...
"இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கிறதாம்" - அப்ப சந்திரமுகில அந்த மாதிரி வசனம் இல்லை. அதை மட்டும் என்ன ம......த்துக்கு பார்த்தீங்க...அவார்டு எல்லா கொடுத்தீங்க..
" "" ரேட் படம் குடும்பத்தோடு பார்க்க சகிக்கலயாம்" -
அப்ப ஆங்கில படத்தில சீன் வரும்போது கண்ணை மூடிப்பீங்களா ? . படம் "A" ரேட் படம் . அப்பறம் எதுக்குடா குடும்பத்தை கூட்டிட்டு போறீங்க. ஒரிஜனல் CD வரும்போது வீட்ல போட்டு பாருங்க.

தமிழன் படம் , தமிழனை பற்றிய படம்.அதனால் இதை சில அறிவி ஜீவி அல்லக்கைகளால் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் எதிர்பார்க்கும் modern day life , நாலு பாட்டு ,நாலு சண்டை, காதல் , அழுவை இதில் இலலை. அதேயே எத்தனை வருசத்துக்குடா பார்ப்பீங்க. அப்படி விரும்பும் ரசிகர்கள் தயவு செய்து வேறு அரங்கம் நோக்கி நகருங்கள்.

3 வருட உழைப்பு காட்சிகளில் தெரிகிறது. வாழ்த்துகள் , பாராட்டுகள் ஆயிரத்தில் ஒருவன் டீம்.... கண்டிப்பா ஆயிரத்தில் ஒருவன்- தமிழ் சினிமாவின் மைல் கல்.
தூற்றுபவர்கள் தூற்றட்டும் தொடந்து செல்லுங்கள் செல்வா.

~

1 comment:

Anonymous said...

நன்றாகச் சொன்னீர்கள்

-நாதன்

Post a Comment