Thursday, September 17, 2009

ஒரு தலை காதலும் சாதீய ஆதிக்கமும் !

~

இது என் கல்லூரு நண்பனின் கதை.சிவா தாழ்த்தப்பட்ட குடிசைப்பகுதியை சார்ந்தவன்.. யாருமே பள்ளி படிப்பை தொடராத அந்த பகுதியில் அவன் மட்டுமே நல்ல படித்ததால் பொறியியல் கல்லூரிக்கு வரமுடிந்தது.நான்கு வருட படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்த நேரம். அவன் வாழ்ந்த பகுதிக்கு அருகே தேவர் சமூகத்தினர் அதிகமாக குடியுருந்தனர். அந்த வகுப்பை சார்ந்த ஒரு பெண் அவனை அடிக்கடி பார்த்து சிரித்திருக்கிறாள். அவன் இதென்னடா வம்பா போச்சுனு அந்த தெரு வழியே செல்வதையே தவிர்த்து வந்தான். ஒரு நாள் எதார்த்தமாக அந்த வழியே செல்ல அந்த பெண் அவன் கிட்ட அவ இவனை காதலிப்பதாக கூறி கடிதம் ஒன்ரையும் கொடுத்திருக்கிறாள். அதை என் கிட்ட அவன் காமிச்சான். நான் அப்பவே சொன்னேன், இதை பெரியவங்கள்கிட்டு காமிச்சு உன் மேல எந்த தப்பு இல்லனு ஆரம்பத்திலே கிள்ளி எறிந்திடலாமுனு. அவன் தான் அந்த பொண்ணுக்கு இன்னும் பக்குகவம் இல்லை சின்ன பொண்ணு எதோஆர்வத்தில எழுதிடுச்சு.இது அவங்க வீட்ல தெரிஞ்சா கொன்னு போட்டுடுவானுங்கானு இரக்கப்பட்டான்.

அவன் அமைதியை பொண்ணு என்ன நினைச்சதோ தெரியல. இன்னோரு கடிதம் எழுதிருக்கு. அதை அவங்க அண்ணன் ( சின்ன பையன் தான்.என்ன ஒரு 20 வயது இருக்கும். அந்த பொண்ணுக்கு அப்பா கிடையாதுனு நினைக்கிறென்.குடும்பலும் வசதி எல்லாம் கிடையாது. அவங்க சொந்தகாரங்கதான் வசதியா இருக்கானுங்கனு ). உடனே அவன் ரவுடி ஆயிட்டேன். (செந்தில் கவுண்டரை பார்த்து சொல்ற மாதிரிதான் கத்தி எடுத்தவன் எல்லா ரவுடிங்கிறான்). அந்த பொண்ணை லைட்டா கண்டிச்சு விட்டிட்டு..இவனை புடிச்சு சாதிய வைத்து இழுவு படுத்தி பத்து பேர் (எல்லா அவங்க சமூகத்து பசங்க ) அடிச்சு பிட்டாங்கே. அவன் எவ்வளோ சொல்லியும், அவனுங்க சொல்றது அது சின்ன பொண்ணு . (வாயில் விரலை வைத்த கூட கடிக்க தெரியாது ) இவன் தான் அது மனதை கெடுத்துட்டான். அப்படினு அவன் தங்கச்சி சொக்கதங்கம் மாறி பில்டப் பண்ணிட்டானுங்க. அப்புறம் பஞ்சாயத்து பண்ணி, அவன் அந்த தெரு பக்கட்டே போகாம, வேற சுத்து வழியா போய் வந்துகிட்டுருந்தான்.

அப்புறம் ஒருவழியா வெளி நாட்டில் வேலைகிடைச்சு போய்ட்டான். அப்புறம் 2 வருசம் கழிச்சு லீவில் வந்தான். பொண்ணுபார்த்து கல்யாணம் பண்ணிடலாம்னு அவனை பார்க்க போனப்ப வீட்ல பேசிட்டு இருந்தாங்க. அப்பதைக்குனு பார்த்து அந்த பொண்ணுக்கு கல்யாணவரன் பார்த்திறாங்க.ஆனா அந்த பொண்ணு கல்யாணம் பண்ணினா சிவாவதான் பண்ணுவேன் சொன்னாதாம் இவன் வந்திருக்குறதை எப்படியோ தெரிந்துகிட்டு ( என்னா வில்லத்தனம் ) . மறுபடியும் அவங்க அண்ணன் லூசு கத்தி எடுத்துகிட்டு பத்து பேறோடா சிவா வீட்டுக்கு போய் அவனை குத்த முயற்சி செய்திருக்காங்க. அதில் அவன் நண்பனுக்கு அடிபட்டுச்சு சிவா எப்படியோ தப்பிச்சு ஓடிட்டான். போலீஸ்ல சொல்லவேண்டியதானட கேட்டேன்.இன்னைக்கு சொல்லாம்டா.நம்ம தெருவை சுத்தி அவனுங்கதான் இருக்கானுங்க. போலிஸ் எப்போதுமே இங்க இருக்க முடியாதுனு அவங்க அண்ணன் சொன்னதாக சொன்னான்.( உண்மைதான்). அப்புறம் மறுபடியும் பஞ்சாயத்து அப்பவும் ஒருதலை பட்சமாகவே எல்லாரும் பேசினாங்க. அவன் மறுபடியும் இந்த ஊரே வேணாம்டா மறுபடியும் வெளி நாட்டுக்கே போய்ட்டான்.
அப்புறம் கடந்த மாதம் அவனும்மு திருமணம் எங்க ஊரில் ஒருத்தருக்கு கூட சொல்லல. பொண்ணு வீட்ல வத்து கல்யாணம் பண்ணிட்டு இப்ப சேலத்துல் குடும்பத்தோடா இருக்கான். ஏண்டா ஊரில் யாருக்கு சொல்லனா, அந்த பொண்ணுக்கு தெரிந்த எதாவது பண்ணிகுடுச்சான் அதுக்கு நான் தான் காரணம்னு உயிர எடுப்பானுங்க.அதான் ஊரில் யாருக்கும்
சொல்லலைனான்.

ஒரு பொண்ணாலயும் ,இந்த சாதி வெறினாலும் ஒருபாவமும் அறியாத சிவா பாதிக்கபட்டான். இந்த மாதிரி எத்தனொயோ சம்பவங்கள் எல்லா ஊரிலையும் நடக்குது. நிறைய பேர் தீண்டாமைக்கும் , சாதிய இகழ்வலுக்கு பார்பணர்கள் காரணமும் என்று அவர்களையே திட்டி தீர்க்கிறார்கள். எனக்கென்னமோ அவர்களாய் திட்டுவது சுலபம் என்பதால் தான் அவர்களை திட்டுவதாக நினைக்கிறென். தமிழ்னாட்டில் நடக்கும் சாதிய இகழ்வளுக்கு பெரும்பாலும் யார் காரணம் ?? பதில் உங்க மனசாட்சிக்கு தெரியும் அது பார்பணர் அல்லாத பிற மேல்சாதி வகுப்பை சார்ந்தவர்கள் தான் என்று.

~

3 comments:

Mukundan said...

நல்ல கதை. உண்மை சம்பவத்திற்கான யதார்தங்கள் குறைவாக இருப்பதால், இது புணைவு கதை என்று நம்புகிறேன். இக்கதையின் மூலம், பிற்படுத்தப்பட்ட ஒரு சாதியை ஆதிக்க சாதி என்று கூறி, முன்னேறிய ஏனைய வகுப்புகளுக்கு இணையாக உயர்த்திப் பிடித்திருக்கிறீரகள். நன்று!

தீண்டாமை என்பது பிராமணீயத்தின் கண்டுபிடிப்பு. அதனைக் கொண்டு இந்த சமுதாயத்தின் மீது அவர்கள் நடத்திய தாக்குதல், உளவியல் ரீதியானது. ஊருக்கு ஒதுங்கி இருக்கும் குடியிருப்பு (குடிசை) பகுதிகள் யாருக்கு உரித்தானது என்று எழுதி வைத்தது யார்? - என்பது ஒரு உதாரணம்.

எல்லாம் செய்து விட்டு ஒன்றும் அறியாத சமர்த்துப் பிள்ளையாய் அமர்ந்திருக்கும் குறும்புக்கார சிறுவனின் வேடம், பிராமணீயத்திற்கு பொருந்தாது.

mvalarpirai said...

முகுந்தன் உண்மை என்றைக்கும் கசக்கும். இவ்வுலகம் சிறியது. எதாவது ஒரு சமயத்தில் உங்களை சந்திக்க நேர்ந்தால் என் நண்பனையும் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். ஒருவர் கண்பிடித்தற்காக , அதை எல்லாரும் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. தென் மாவட்டங்களுக்கு வந்து பாருங்க..அல்லது தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஒரு சர்வே எடுத்துபாருங்க.. நீங்கள் குறிப்படும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எப்படி அவர்களை புறக்கணிக்கிறார்கள் என்று. நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள் 4 தனிதொகுதி கிராம உள்ளாட்சி தேர்தல் யாரால் தடுக்கபட்டது என்று.. நான் ஒன்றும் பிராமணர்களின் தீண்டாமைக்கு வக்காலத்து வாங்கல.ஆனால் அதை அவர்களை காட்டிலும் தீவரமாக அதிக பெரும்பான்மையில் கடைபிடிப்பது யார்.. அது தவறில்லையா? நான் இத்தனை ஆண்டுகளாக கண்டுபிடித்தவனை தான் திட்றொம்..கடைப்பிடுப்பவனை போற்றி புகழ்கிறோம்.... இருவரையும் கண்டிப்பதுதானே முறை.. நீங்கள் தூக்கி பிடிக்கும் இந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பை கண்டிக்க எல்லாரும் பயப்படுவதிலிருந்தே தெரியவில்லையா அவர்களின் ஆதிக்கம்...பெரியார் படம் பார்த்திருப்பீர்கள்.. அதில் ஒரு காட்சி..பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களிடம் நான் சேரிக்கு போகனும்னு பெரியார் கேட்பார். அவர்கள் முகம் சுழிப்பார்கள்..உடனே பெரியார் சொல்வார்.. பிராமணனுக்கு கீழே இருந்தாலும் பரவாயில்லை அரிஜனங்களுக்கு மேலே இருந்தா போதும்னு நினைக்காதீங்கனு.. அதுதானே இங்க நடக்குது...

எப்படியாயினும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமுகுந்தன் !

Mukundan said...

//எனக்கென்னமோ அவர்களாய் திட்டுவது சுலபம் என்பதால் தான் அவர்களை திட்டுவதாக நினைக்கிறென்//

இந்த வாசகம், மறைமுகமாக பிராமணீயத்திற்கு வக்காலத்து வாங்குவதாக எனக்குப் பட்டதால் தான், எனது மறு மொழி.

மேலும், தீண்டாமையை உயர்த்திப் பிடிப்போரில் பேதம் பார்த்தல் கூடாது என்பது என் வாதம். அவர்களில் சிறியோர், பெரியோர் என்பது இல்லை. வேறுபாடு என்பது அணுகுமுறையில் மட்டுமே.

ஹே ராம்! திரைப்பட்டத்தினை பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு காட்சியில், மக்களோடு மக்களாக நின்றிருக்கும் சாகேத ராமன், அவர்களின் குரலாய் காந்தியைப் பார்த்து, வங்கத்தில் நடைப்பெற்ற அவலங்களுக்கு எல்லாம் யார் பொறுப்பு என்று கத்துவான். காந்தியும், வங்காள முதல்வரின் தோள் மீது தயக்கத்துடன் கை வைத்து, தான் எற்பதாக கூறுவார். சுற்றி இருக்கும் மக்கள் ஆரவாரத்துடன் கைத்தட்டி காந்தியைப் பற்றி வெறும் பெருமை பேசி கலைவார்கள் - மூல பிரச்சினையைப் பற்றி கவலைக் கொள்ளமல். அது போல் உள்ளது தங்களின் கருத்து.

மனிதரில் அனைவரும் சமம் என்கிற கருத்தாக்கத்தை நாம் முன் வைக்கலாம். அதனை விடுத்து, யாரை அதிகம் கண்டிக்கிறோம் என்ற ஆராய்ச்சியில் இறங்குவது, நோக்கத்தை திசை திருப்பவே பயன்படும்.

நண்றி!

Post a Comment