Tuesday, September 1, 2009

தமிழ் நாட்டு மக்களை இழிவு படுத்தாதீர்கள் !

~

காசு வாங்கிட்டு ஓட்டு போடுவாங்க, அல்லது சினிமாக்காரனுக்கு தான் ஓட்டு போடுவாங்க தமிழ் மக்கள் என்ற மாயை பத்திரிக்கைகளாலும், ஒளி ஊடகங்களாலும் ஏன் நிறைய பேரின் பதிவின் மூலமாகவும் உருவாக்கபடுகிறது. இது எல்லா தமிழ் நாட்டு மக்களையும் இழிவு படுத்தும் செயல்.

ஓட்டு போட்ட அனைவரும் பணத்துக்காகதான் ஓட்டு போட்டாங்கனு என்பதை நான் ஒத்து கொள்ளாமாட்டான்.
இவங்க பணம் வாங்காட்டியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அவருக்கு தான் போட்டுறாப்பாங்க!
எதையுமோ சும்மா கொடுத்தா பெரும்பான்மையான மக்கள் வாங்கதான் செய்வார்கள் ( அது மாற இன்னும் சில தலைமுறைகள் ஆகும்).
அப்ப பணம் சும்மா கொடுத்த வாங்காமாலா இருப்பார்கள். பணம் வாங்கியதற்காக அவனுக்கு ஓட்டு போடனும் நினைப்பவர்கள் சதவீதத்தில் குறைவு !
முடிவு அவங்களுக்கு சாதகமா வந்தால் மார்தட்டி கொள்வதும், இல்லாட்டி காசு கொடுத்தாட்டாங்கே என்றும், மெசின் கோளாறு என்று சொல்வது சின்ன பிள்ளை தனமா இல்லை ? எதிர்கட்சி ஜெயித்தா தமிழ் நாட்டு மக்கள் கூலிக்கு வோட்டு போடுபவர்களா? அப்படி சொல்லுவர்கள் வாழ் நாள் முழுசாசொல்லிட்டே இருக்க வேண்டியதுதான் !

ராகுல் காந்தியின் மாஸ்டர் பிளான் உத்திரபிரதேசத்துக்கு தொழிற்சாலைகளை உருவாக்குவது , ஆனா தமிழ் நாட்டிற்கு விஜய்யை காங்கிரசில் சேர்ப்பது..
இதில் இருந்து என்ன தெரியுது ? தமிழ் நாட்டு மக்கள் எல்லாம் கேனப்பயலுங்க ! விஜய் வந்து "அண்ணா காங்கிரஸ்க்கு வோட்டு போடுங்கனா .." என்ற சொன்னவுடன் அலை அலையா போய் கை சின்னத்துல வோட்டு கொத்துவாங்கிடுவானுங்க என்ற நினைப்புதானே !
இதை மார்தட்டி மாஸ்டர் பிளானு வேற சொல்லுபவர்கள் மூஞ்சில் காரி துப்பலமா கூடாதா ?

~

No comments:

Post a Comment