Tuesday, July 28, 2009

சாவுங்கடா ! நான் தான் அடுத்த முதலமைச்சர் சொல்கிறார் மக்கள் இயக்கம் தொடங்கிய விஜய்

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார். புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த மக்கள் இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் விஜய் பேசுகையில்,

என்னிடம் உள்ள சமூக சிந்தனை ரசிகர்களாகிய உங்களிடம் உள்ளது. உங்களிடம் உள்ள சமூக கண்ணோட்டம் என்னிடம் உள்ளது. நான் 50 ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் நீங்கள் 5 ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறீர்கள்.
நான் 100 ஏழை குழந்தைகளுக்கு மோதிரம் போட்டால் நீங்கள் 10 குழந்தைகளுக்கு போடுகிறீர்கள். அதே போல் பள்ளி மாணவர்களை படிக்க வைக்கிறீர்கள்.

ஏழை மாணவ, மாணவிகள் பயில இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை திறந்து வைக்கிறீர்கள். நீங்கள் செய்யும் நல்ல காரியத்தால் எனக்கும் நல்ல பெயர் வாங்கி கொடுக்கிறீர்கள்.

எனது அப்பா லேசான கோடு கிழித்து ஒத்தையடி பாதை காட்டினார். நான் அதை தார் ரோடாக மாற்றினேன். பின்பு அதனை ஹைவே ரோடாக மாற்றினேன். மீண்டும் உழைத்து அதை 6 வழி சாலையாக மாற்றி உழைத்து வருகிறேன்
இந்த இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும், ஒரு லட்சம் உறுப்பினர்களையும், நகர, வட்டங்கள் சார்பில் 50 ஆயிரம் உறுப்பினர்களையும், கிளை மன்றங்களின் சார்பில் 5 ஆயிரம் உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும்.

இந்த இயக்கம் எப்படி வரும். எப்படி நடக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாது. நீங்கள் மனது வைத்தால் இந்த இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும். அப்போது என் குடும்பம் என் தொழிலை விட இந்த கட்சியை பெரிதாக எண்ணி உழைப்பேன். அது உங்கள் கையில் தான் உள்ளது என்றார்.

எனக்கு தெரிந்த விஜய் ரசிகர் மன்றத்தை உதராணாமா வைத்துதான் இதை எழுதுகிறேன்.சில ஒழுக்க சீலர்கள் இருந்தால் மன்னிக்கவும் ! ஒக்கா மக்கா ஆனா ஊனா நலத்திட்ட உதவிகள் ஏண்டா இப்படி எத்தனை நாளைக்குடா செய்தித்தாள செய்திவர்ரதுக்காக சீன் போடுவீங்க !

இப்படிதான் கோடையில் தண்ணீர் பந்தல் பயங்கர செலவு பண்ணி , சீன் போட்டு ஆரம்பிச்சானுங்க ! ஆரம்பிச்ச நாள் அன்று செலவு செய்ததை வைத்து ஊருக்கே கோடையில் தண்ணீர் கொடுத்திருக்கலாம்..ஆனா ஆரம்பிச்சா 1 வாரத்துக்கு அப்புறம் பராமரிக்க ஆள் இல்லை ! இப்படித்தான் நடக்குது இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம்..3 மண்குடம் வச்சு தண்ணீ ஊத்த 1 லட்சம் செல்வு பண்றாங்க ! எல்லாம் பேப்பர்ல நியுஸ் வர்ர வரைக்கும் தான் ..ஏண்டா உங்களுக்கு எல்லாம் எங்கிருந்துடா காசு வருது ! அதை உருப்படியா செலவு பண்ணலாம்ல !

இலங்கை மக்களுக்காக 1 லட்சம் கொடுத்து புட்டு , லாரன்சே 10 லட்சம் கொடுத்தார், மேடையில் எதோ இவரை பற்றி எதோ சொல்ல அந்த image சரிவை சரி செய்ய காசு செலவு பண்ணாம ஒரு நாள் சாப்பாடை மட்டும் விட்டு கொடுத்துட்டு உண்ணாவிரதங்கிற பேர்ல உன் பாட்டை போட்டு டான்ஸ் ஆடுன கூட்டம் தானடா நீங்க ! இதுல வேற வாங்கின பிரியாணி பத்தலனா மேடையிலே உங்க அப்பன் சொன்னார்..உண்ணாவிரதம் ரொம்ப சந்தோசமாய் இருந்த்து நீங்க சொன்னப்ப எனக்கு வந்த ஆத்திரத்துக்கு தொலைக்காட்சி உடைத்திடலாம் போல இருந்தது !

இவர் அப்பா ஒத்தையடி பாதைய காண்பித்தார் , இவர் தார் ரோடா மாத்தினாராம்..இதை படிக்கும் போது இவர் ஆரம்ப காலத்தில நடித்த ரசிகன் ..போன்ற மிகச்சிறந்த படங்களும், சங்கவி இவங்க கிட்ட பட்ட பாடும் தான் நாபகம் வருது !

விஜய் அரசியலுக்கு வரவேண்டும்..காசை எல்லாம் விட வேண்டும்..வாடி மாப்ள இருக்குடி உனக்கு !

விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பேசுகையில்,

நான் பல புரட்சி படங்களை தயாரித்துள்ளேன். அதில் அநியாயங்களை தட்டி கேட்கும் கதை அதிகமாக இருக்கும். இதனால் நாடு மாறவில்லை. இதற்காக யாரும் என்னை பாராட்டியதும் இல்லை. இது என் மனதில் எழுச்சியாக இருந்தது.

இதனால் என் மகனை நடிக்க வைத்து அதன் மூலம் எழுச்சியை கொண்டு வந்தேன். இதற்காக ஒரு அமைப்பை ஆரம்பித்தேன். அது மக்கள் இயக்கமாக மாறி உள்ளது.

உறுப்பினர்களை சேர்ப்பதை பொறுத்து தான் உங்களின் கனவு நினைவாகும். உண்மையான உணர்வு உள்ளவர்கள் மட்டும் இதில் சேரலாம் என்றார்.

இவர் ஆதி போன்ற புரட்சி படங்களை தயாரித்து இருக்கிறார்..ஆனால் பாவம் பாருங்க இவர யாருமே பாரட்டல ! விஜய் TV ல போக்கிரி படத்தைவிட அதிகம் வரவேற்பு பெற்ற பேக்கிரி லொள்ளுசபாவுக்காக அவர்களை மிரட்டி அப்புறம் அவர்களே விஜய் பிறந்த நாள் கொண்டாடவைத்தவர் ! அதில் ஒருத்தன் பாண்டிசேரிலிருந்து, சென்னை வரைக்கும் பின்னாடியே நடந்த வந்தான்..விஜய் ரசிகனாம்..அப்பா எப்பேர் பட்ட பெருமையை தேடி கொடுத்திருக்கிறார் அவங்க பெற்றோர்களுக்கு ! மக்களே இந்த கொடுமை எல்லாம் தமிழ் நாட்டில் இருந்தா பார்த்துதான் ஆகனும் வேறவழியில்லை !

மகனை நடிக்க வச்சு எழுச்சியை கொண்டுவந்தாராம். முடிலடா சாமி ! ...உங்களுக்கு எல்லாம் மன்சாட்சி இல்லையா ~ கனவு நினைவாகுமா..என்ன கனவுடா ? முன்னாடியாச்சும் ஒரு பேச்சுகாவது மக்களுக்கு நல்ல செய்வோம்னு சொல்வாங்க ! இப்ப எல்லாம் அது கூட இல்லை !

நீங்க வாங்க அரசியலலுக்கு ! இப்ப தமிழ் நாட்டு மக்கள் உசாருடி ! விவேக் ஒரு படத்தில் லெஃப்ட ல இண்டிகேட்டர் போட்டுட்டு ,ரைட்ல கைய போட்டு, நேரா போய்டே இருப்போம்னு சொல்றமாதிரி ஒருத்தனே பத்து கட்சில உறுப்பினரா இருப்போம்..எவன் ஆட்சில இருக்காணோ அவன் கரை வேட்டி கட்டிப்போம்..உங்களுக்கு தான் வோட்டுனு காசு கொடுக்கிறவங்க எல்லாட் கிட்டயும் வாங்க்கிட்டி, எங்க விருப்படி ஓட்டு குத்துவோம் !
வாடி மாப்ள் வா !

6 comments:

சி.வேல் said...

வணக்கம் , மிக அருமை

nila said...

ஏமாந்த தமிழனின் தலையெழுத்து

mvalarpirai said...

vettipaiyan & nila வருகைக்கு நன்றி !

பாலகுமார் said...

நாட்டல நடக்கிற பல கொடுமைகளில் இதுவும் ஒன்று..உங்க எழுத்து நடை நல்லா இருக்கு.

mvalarpirai said...

நன்றி balakumar!

நட்புடன் ஜமால் said...

ஹையோ ஹையோ

Post a Comment