Saturday, April 11, 2009

கல்லூரி கலாட்டா !

~


காத்தூர் from கமலகண்ணன் !
-----------------------------------------------------------

இடம் : வகுப்பறை
நேரம் : மதிய உணவு முடிந்தபிறகு வரும் முதல்வகுப்பு! உண்ட களைப்பு பாதி உறக்கத்தில் கமல்..அவனருகில் நான்..

புதியதாய் வந்த maths ஆசிரியர் எல்லாரையும் அறிமுகப்படுத்திக்க சொல்ல நம்ம தோழர்கள் எல்லாம் அவர் அவர் பேர் , ஊரை சொல்லி அறிமுகப்படுத்தி கொண்டிருந்தார்கள்...என் வரிசை வரும்போது கமல் சற்று ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான். நான் சொல்லி முடித்த பிறகு அவனை தூக்கத்தில் இருந்து ஒரு அடி அடித்துவிட்டு நான் அமர்ந்தேன்....தூக்கத்தில் எழுந்து அவரத்தில் அவன்

I am காத்தூர் from கமலகண்ணன் சார்...( வகுப்பி ....கொள்.....சிரிப்பு)

ஆசிரியர் : உட்காருங்க காத்தூர்....

அடுத்த நாள் அதே ஆசிரியர் அதே நேரம் அதே வகுப்பு அதே உண்ட களைப்பு பாதி உறக்கத்தில் கமல்..அவனருகில் நான்..

ஆசிரியர் : கமல் அந்த formula சொல்லுங்க !

நான்: அவனை அடித்து எழுப்ப ..matter என்னானு அவன் கண்ணால எங்கிட்ட கேட்க ..நான் அவனை கலாய்க்க " காத்தூர் from கமலகண்ணன்" என்று மெதுவான குரலில் சொல்ல ....இந்த முறை சுதாரிப்பதாய் கருதிகொண்டு.. " I am கமலகண்ணன் from காத்தூர் சார்."..( வகுப்பி ....கொள்.....சிரிப்பு)

ஆசிரியர் : useless felllow .....

கமல் : (என்னை பார்த்து அப்பாவியாய் ) ஏண்டா correct-a தானே சொன்னேன் ! ! ! ....

அன்று முதல் அவனை எல்லாரும் காத்தூர் என்று தான் கூப்பிடுவோம்...கமல் என்றால் நிறைய பேருக்கு தெரியாது..காத்தூர் என்றால் தான் தெரியும்...

இழித்தவாயன் :
---------------------------------------------

நான், பாசு,தனா, அப்புறம் நம்ம சிவாஜி...

நான் : சிவாஜி வாட மாப்ள தாபாவில் போய் சாப்பிடலாம் ஹாஸ்டலில் இன்னைக்கு தயிர்சாதம் டா..
பாசு,தனா: ஆமாம் டா சிவாஜி வாடா போகலாம் ....
சிவாஜி : என்னாட இன்னைக்கு பாசம் பொங்குது..காசு இல்லையேடா..
நான் : வாடா..தாபாவில் எப்படியும் நிரையே பேரு இருப்பானுங்க..நமக்குனு ஒரு இழித்தவாயன் கிடைக்காமலா போயிடுவான் வாடா பார்த்துகலாம்..
சிவாஜி : சரி போலாம்..எவன் மாட்ட போறோனா அய்யோ அய்யோ ....
பாசு,தனா : ஹி ஹி அய்யோ அய்யோ ....

நல்ல சாப்பிட்டு முடியும் தருவாயில்

நான் : என்ன மச்சி ..நீ ஆல் கிளியர் பண்ணிருக்க ..treat ellaam கிடையாதா....
சிவாஜி : என்னடா உங்களுக்கு இல்லாததா...காசு இல்லடா...(தன்னிடம் காசு இல்லைங்கிறத உறுதி படுத்தி கொண்டு..) பாரு இப்ப காசு இருந்தா நான் pay பண்ணியிருக்க மாட்டேன்..
தனா : ..மாப்ள ..நான் முந்தா நாள் உங்கிட்ட 200 ரூபா வாங்கினல்ல....இந்தடா..கடன் வாங்கினதிலிருந்து மன தே சரியில்ல ( கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் ரேஞ்சுகுகு ஒரு டயலாக் )
சிவாஜி: ..! ! ! ! .வாயில் ஈ ஆடல....
நான்,பாசு : மாப்ள பில் 190 ரூபாடா.. ....தாபாவில் தெரிந்தவன் யாரும் இல்லைட...நீதான் treat தரேன் சொன்னியே ,....:):):)

வேரு வழி இல்லாம பில்லை கட்டிட்டு சிவந்த கண்ணோடு எங்களை பார்த்தான்..

நான்,பாசு,தனா: thanks for the treat da !

சிவாஜி: ..இழித்தவாயன் கிடைக்காமலா போயிடுவான்னு முரு சொன்னப்ப இந்த ரெண்டு நாய்ங்களும் என்னை ஓரக்கண்ணால பார்த்தானுங்க..அப்பவே நான் சுதாரிச்சிருக்கனும்...நம்பி வந்தேன்..இருங்கடா..உங்களுக்கு ஒரு நாள் இருக்கு )

தனா: ரொட்டி தான் கொஞ்சம் சூடா இல்லை இல்லைடா முரு... :):) :)




~

1 comment:

Post a Comment