Monday, July 18, 2011

நதியும் பெண்ணும் - வைரமுத்து !

~

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ!
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றாள் தாயல்லோ !

காதலியின் அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவோம் கோடையிலே

வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு!

மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அதுவே நங்கையின் குணமே!

தீங்கனியில் சாராகி பூக்களில் தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே!
தாயருகில் சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே !

பெண்ணும் ஆறும் வடிவமாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள்யாவும் கரைந்து போககூடும்


~

No comments:

Post a Comment