Saturday, May 1, 2010

இரைதேட பறந்தாலும் திசை மாறி பிரிந்தாலும் - வைரமுத்து !

~

இரைதேட பறந்தாலும் திசை மாறி பிரிந்தாலும் கூடு
மக்கா நாமெல்லாம் ஒரு கூடு
செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடைபோடுங்கள் ஞானம் பெறலாம் !
சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் சத்தியம் உங்களை காத்து நிக்கும்
தாய் தந்த அன்பையும் தந்தையின் நல் பண்பையும் நாம்
கொண்டால் பூமாலை காத்திருக்கும்

நெல்லும் விதை போடாமல் நெல்லும்வருமா ?
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப்பணமா ?

வெள்ளைமன இளம் சிட்டுகள் வெற்றி கொடு கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள் விண்ணைத்தொடுங்கள்
பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வியில்லை
ஆனந்தக்கண்ணீரால் அபிஷேகம் தாய் செய்தால்
அதைவிட இன்பம் எதுவுமில்லை!

~

No comments:

Post a Comment