Monday, October 12, 2009

ரஜினி வீட்டில் தீபாவளி..அப்புறம் எங்க வீட்ல எல்லாம் என்ன பொங்கலா ? !

~

(எல்லா மீடியாகளையும்/பத்திரிக்கைகளையும் சொல்லல. சில் கறுப்பு ஆடுகளை பற்றிதான் இந்த பதிவு.)

இந்த மீடியா தொல்லை தாங்க முடியலப்பா ! .அவர் அங்க ஒண்ணுக்கு போனாரு இவர் இந்த இடத்தில்தான் வாந்தி எடுத்தாறுனு இவனுங்க பண்ற அலும்பு இருக்கே எப்பே ! இப்பதான் மீட்டிங் போட்டு இவனுங்களை காரி காரி துப்புனானுங்க ! என்ன துப்புவாங்கினாலும் இவனுங்க அவங்க பின்னாடிதான் அலைறானுங்க !

சினிமாவில் நல்லவர்கள் இல்லாமல் இல்லை. திறமையை , உழைப்பை மதிக்கலாம், பாராட்டலாம் ஆனால் அதை மிகைபடுத்திகாட்ட வேண்டிய அவசியம் இல்லை..ஏன் இவனுங்க இதை செய்றானுங்க ! சினிமா நடிகனை பத்தி மிகைப்படித்து எழுதி அல்லது காட்டினால்தான் வியாபாரம் என்ற மாயவலை (அல்லது உண்மையான வலையாக கூட இருக்கலாம்) பின்னப்பட்டு இருக்கிறது. அவர்களை புகழ புதுசு புதுசா நிகழ்ச்சி, அவர் போன இடத்துக்கு போறானுங்க அதையே ஒரு பத்துவாட்டி ஒளிபரப்புறானுங்க. எல்லா தமிழன் வீட்ல இந்த நடிகர்கள் எல்லாம் ஒரு அங்கமாம்.. அடி செருப்பால..நான் தமிழன் தான்..எங்க வீட்ல எந்த பித்துக்குளி பயலும் அங்கம் இல்லை !

அதலயும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்ககும் அல்லகைகள் இருக்கே ... லிவிங்ஷ்டன் ஒரு படத்தில் சொல்ற மாதிரி வாங்கின காசைவிட அதிகமா கூவுறாண்டா கொய்யாலே ..அந்தமாதிரிதான். "சார் actaullay we tamil பேச learn பண்ணினது from you sir " ! இதிலிருந்து தெரியல. இவங்க கத்துகிட்டவன் எப்படி தமிழ் பேசுவானு.
நான் ஒன்னும் தமிழ் புலி அல்ல. சொல்கிற வாக்கியத்தின் அர்த்தம் புரிந்தாவது பேசாலாம் அல்லவா. இதைவிட பயங்கர காமெடினா இந்த பாராட்டுவிழா தான்.அப்புறம் சமீபத்திய ஆரம்பம் நேரடியாக தொலைகாட்சியில் பேசி புகழ்வது. ஏண்டா புகழ்வதுக்குனு ஒரு அளவு இல்லைடா.. சார் நீங்கதான் ..சார் நீங்க மட்டும் இல்லாட்டி. இந்த பூமியே ரெண்டா போயிடும்னுகிற லெவலுக்கு இவனுங்க கொடுக்கிற பில்டப் இருக்குறே ! பூமி தாங்காதுடா டேய் ! இவனுங்க ஒரு வேலை தண்ணி போட்டுட்டு பேசுவாங்க போல ! சம்பந்தமே இல்லாம பேசுவானுங்க..சமீபத்திய நிகழ்வு கமல் சார் கிட்ட கரண் சொல்றாரு காந்திய சிந்தனையை உன்னை போல் ஒருவன்ல கமல் மக்கள்கிட்ட அழுத்தமா சொல்லிருக்காராம்..அது மக்களை ரீச் ஆயுடுச்சாம் ..டேய் சாமி நீ ஏன் இன்னும் தேராமா இருக்கேனு இப்பதான் தெரியுது .
actualla நீ ஆர்வளக்கோறா இல்லை உளறுவாயா ? (பசங்க படம் effect) .

மேடையில் காலில் விழுவது அநாகரீகம் இல்லையா? உனக்கு ஆசிர்வாதம் வாங்கனும்னா தனியா போய் விழு ..அதை விட்டுபிட்டு.. ஒருத்தன் விழுந்துட்டா போதும் எங்க நம்ம விழுவாமல் போனா.. ஆப்பு வச்சுவாங்களோனு வரிசையா விழுவானுங்க..இதை எப்ப ஆரம்பிச்சதோ தெரியலா சமீபத்துல் நடக்கிற சூப்பர் சிங்கர் ஜுனியர் வரைக்கு பாதிப்பு இருக்கு ! அளவுக்கு மீறய புகழ்ச்சியை ஊக்கபடுத்துவது தவறல்லவா ? அதைதான் இன்றைய மீடியாக்கல் செய்கின்றன. ஒரு படம் வெளிவந்திறக்கூடாது. அவ்வளதுதான் அதில் நடித்த அல்லக்கை வரைக்கும் நேரடி நிகழ்ச்சிக்கு கூப்பிட்டுறுனுவாங்க ! இல்லாட்டி ஒரு பத்து பேற கும்பலா கூட்டிட்டு வந்துடுனுவாங்க! . படம் காரி துப்புற மாதிரி இருக்கும் ஆனா இவனுங்க பேசுவானுங்க பாருங்க! யாரும் நடிக்கல எல்லாரும் வாழ்ந்து இருக்காங்க..படம் மிகப்பெரிய வெற்றினு நாக்கூசாம சொல்லுவானுங்க ! சமீபத்திய உதாரணம் நேற்றைய இசைஅருவில மதுரை 2 தேனி கும்பல் வந்தாங்க :). படம் செம் பிக்கப்பாம்,ரசிகர்கள் எல்லாம் கைத்தட்டுறாங்கலாம், அழறாங்கலாம் ( அழுவது வேணா உண்மையா இருக்காலாம் ஏண்டா வந்தோம்னு). முடியலடா சாமி.

மீடியா மட்டுமா.. பத்திரிக்கைகள் தரம் இதைவிட குறைந்து கொண்டே வருகிறது. பொய் செய்தி , ஆபாச செய்தி ..அப்புறம் ஓரமா குட்டியா ஒரு வருத்தம்..அவனுங்க மீட்டிங்கல கேட்டது தப்பே இல்ல்..உங்க அம்மாவை பத்தி இப்படி எழுதிட்டு ஒரு ஓரமா வருத்தம் தெரிவிச்ச அப்ப தெரியும். அப்புறம் பாரபட்சமே பார்க்காம் பொய்யா எழுதுறது..இன்றைய ஒரு செய்தி..அனுஷ்காவுக்கு கோவில் கட்ட முயற்சி..இது எந்த விதத்திலும் உண்மையான செய்தியாக இருக்கவே முடியாது என்பது என் திண்ணம். நமக்கு பொதுவாகவே அடுத்துவர்களை திட்டுவது, குறை சொல்வது என்றால் கொள்ள பிரியம். (அது என் மனதிலும் இருக்கு என்பது இந்த பதிவை படிக்கும் போதே உங்களுக்கும் தெரிந்திருக்கும் ). இதை இந்த பத்திரிக்கைகள் இந்த மாதிரி அழுத பழசான நடிகைக்கு கோவில் கட்டுவது என்ற பொய் செய்தியை ( பழைய செய்திகள் உண்மையாக இருக்கலாம்.எனக்கு தெரியாது ) போடுகின்றன. நம்மளும் படிச்சிட்டு பைத்தியக்காரனுங்கனு திட்டி புட்டு சந்தோசமாகிடுவோம்.

சரி தலைப்புக்கும் நீ எழுதிருக்கிற மேட்டருக்கும் என்னடா சம்பந்தனும்னு இன்னேரம் யோசிச்சு இருப்பீங்க ! குங்குமம் இந்த வாரம் "ரஜினி வீட்டில் தீபாவளி.."..
அப்புறம் எங்க வீட்ல என்ன பொங்கலா அப்படினு ஆரம்பிச்சேன்..என்ன என்னமோ எழுதிட்டேன்..இந்த அவலங்களை நினைக்க நினைக்க வார்த்தை கொட்டுது..இதுக்கு மேல் எழுதினா இவ்வளவு பெரிசா இருக்கேனு படிக்காம போயிடுவானுங்கனு நினைக்கும் போது (இப்ப மட்டும் யாரு படிக்கபோரா :) ) வர்ற வார்த்தை கூட நின்றது..

~

7 comments:

Anonymous said...

lol..chance-a illa...

a passive blog reader.. :-)

Unknown said...

அருமையான கட்டுரை........

18+ உண்மையாக நடக்க சாத்யகூறுகள் அதிகம்...

நன்றி.

Anonymous said...

நல்லா எழுதி (விளாசி) இருக்கீங்க...

அன்புடன்,
ஒவ்வாக்காசு.

நையாண்டி நைனா said...

ok..present and raittu...

வரதராஜலு .பூ said...

18+ கற்பனை, நிச்சயம் ஒரு நாள் நிஜமாகும்.

சுகுணாதிவாகர் said...
This comment has been removed by the author.
சுகுணாதிவாகர் said...

உங்கள் நடை எனக்கு பிடித்திருக்கிறது.

Post a Comment