~
அவசர மனிதர்கள் கடுகடுத்த முகங்கள்
பேரிரைச்சலாய் எழுந்து பேரிரைச்சலில் அடங்கும் நகரம்
மரியாதை நிமித்தங்களுக்கு நேரமற்ற மொழி.
இருபது வருடம் கழித்து பார்ட்டியில் பார்த்து
என் பக்கத்து வீடா நீங்கள் என வினவும் வாழ்க்கை.
Waiting List டிக்கெட் confirm - ஆனதில் வாழ்வின் மொத்த மகிழ்ச்சியை அடையும் மக்கள்.இதில் வேரறுத்து ஓடிவிடும் கனவோடு நாட்களை நகர்த்தும் மனிதர்கள்.
இந்த அழுக்கிலும் சந்தடியிலும் கரைந்து போகிறது கடந்த காலங்கள்
மாமாவின் மதமாற்றம், தாயின் ஜாதி, தாத்தாவின் சிறைவாசம், தந்தை அறியா பிள்ளை,
செல்போனில் முகம் தொலைத்த மனிதர்களின் ஜோதியில் சரித்திரங்கள் கரைந்தன.
சென்றவாரம் வீட்டிற்கு வந்தவனும் இன்று சினிமாவில் பார்த்தவனும் ஒன்றா சிந்திக்க நேரமில்லை.
சரவணபவனுக்கும் பீட்ஸா கார்னருக்கும் விருது நகருக்கும் இடையே
பிசிறில்லாமல் ஊடாடும் வாழ்வில், இதமாய் ஏந்தும் இந்த சந்தடி மிகுந்த கான்கிரீட் நகரத்துள்
தொலைந்து போகிறேன் கூடு வந்து சேர்ந்த ஒரு சிறு பறவையின் அமைதியுடன்.
~
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Saturday, September 10, 2011
Monday, July 25, 2011
காதல் - எனக்கு பிடித்த வரையரைகள் (Definitions)
~
காதல் என்பது உடலா உணர்வா
காதல் என்பது பரிவா பாசமா
உடல் மட்டுமே காதல் எனில் வினை முடிக்க ஒரு விலைமகள் போதும்
உணர்வு மட்டுமே காதல் எனில் காதல் கொள்ள ஒரு கடவுள் போதும்
பரிவு மட்டுமே காதல் எனில் பழுத்து நரைத்த பாட்டியே போதும்
பாசம் மட்டுமே காதல் எனில் ஒரு பாமரேனியன் நாய் குட்டி போதும்
உடல் கொஞ்சம் உணர்வு கொஞ்சம் பாசம் கொஞ்சம் பரிவு கொஞ்சம்
கொஞ்சம் பகுத்தறிவு நிறைய மூட நம்பிக்கை எல்லா வஸ்தும் ஒன்று திரட்டி
இதயம் என்ற மிக்சியில் அரைப்பது காதல் -வைரமுத்து
காதல் என்பது என்ன..- உடலா உள்ளமா?
உடல் மட்டுமே காதல் என்றால் ஒரு விலைமகள் போதும் காதலிக்க
உள்ளம் மட்டுமே காதல் என்றால் ஒரு பாமரேனியன் நாய் குட்டி போதும் காதலிக்க
உடலும் உள்ளமும் எந்த ஒரு புள்ளியில் சந்திக்கிறதோ அதுதான் காதல் ! - வைரமுத்து !
24 வயதில் இது தான் உலகம் என்று நினைத்த ஒன்று,
42 வயதில் இதற்காகவா இப்படி இருந்தோம் என்று தோன்றும்
அதுதான் காதல் - பத்மஸ்ரீ கமல்ஹாசன்
~
காதல் என்பது உடலா உணர்வா
காதல் என்பது பரிவா பாசமா
உடல் மட்டுமே காதல் எனில் வினை முடிக்க ஒரு விலைமகள் போதும்
உணர்வு மட்டுமே காதல் எனில் காதல் கொள்ள ஒரு கடவுள் போதும்
பரிவு மட்டுமே காதல் எனில் பழுத்து நரைத்த பாட்டியே போதும்
பாசம் மட்டுமே காதல் எனில் ஒரு பாமரேனியன் நாய் குட்டி போதும்
உடல் கொஞ்சம் உணர்வு கொஞ்சம் பாசம் கொஞ்சம் பரிவு கொஞ்சம்
கொஞ்சம் பகுத்தறிவு நிறைய மூட நம்பிக்கை எல்லா வஸ்தும் ஒன்று திரட்டி
இதயம் என்ற மிக்சியில் அரைப்பது காதல் -வைரமுத்து
காதல் என்பது என்ன..- உடலா உள்ளமா?
உடல் மட்டுமே காதல் என்றால் ஒரு விலைமகள் போதும் காதலிக்க
உள்ளம் மட்டுமே காதல் என்றால் ஒரு பாமரேனியன் நாய் குட்டி போதும் காதலிக்க
உடலும் உள்ளமும் எந்த ஒரு புள்ளியில் சந்திக்கிறதோ அதுதான் காதல் ! - வைரமுத்து !
24 வயதில் இது தான் உலகம் என்று நினைத்த ஒன்று,
42 வயதில் இதற்காகவா இப்படி இருந்தோம் என்று தோன்றும்
அதுதான் காதல் - பத்மஸ்ரீ கமல்ஹாசன்
~
Monday, July 18, 2011
நதியும் பெண்ணும் - வைரமுத்து !
~
நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ!
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றாள் தாயல்லோ !
காதலியின் அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவோம் கோடையிலே
வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு!
மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அதுவே நங்கையின் குணமே!
தீங்கனியில் சாராகி பூக்களில் தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே!
தாயருகில் சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே !
பெண்ணும் ஆறும் வடிவமாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள்யாவும் கரைந்து போககூடும்
~
நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ!
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றாள் தாயல்லோ !
காதலியின் அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவோம் கோடையிலே
வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு!
மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அதுவே நங்கையின் குணமே!
தீங்கனியில் சாராகி பூக்களில் தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே!
தாயருகில் சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே !
பெண்ணும் ஆறும் வடிவமாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள்யாவும் கரைந்து போககூடும்
~
Sunday, June 26, 2011
நிம்மதி சூழ்க! - Vairamuthu
நிம்மதி சூழ்க!
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!
ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே
கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.
கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்
பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்
மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!
ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே
கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.
கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்
பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்
மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!
Saturday, September 18, 2010
வெளி நாடு வாழ் மக்கள் புலம்பல்ஷ்- மக்களே why blood?
~
இன்று தினமலர் ஒரு செய்தி வெளி நாட்டில் வசிக்கும் தமிழர்கள் நிம்மதியாக இல்லை என்ற தோனியில் வந்துள்ளது.செய்தி அரைப்பக்கம் தான். ஆனா புலம்பல்ஸ் ஒக்கா மக்கா 30 பாராவிற்கு மேலே.. மக்களே why blood? :):)
செய்தி:
அதிகளவில் சம்பாத்தியம் செய்வதால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தவறானது என்பதை தான் இந்த ஆய்வு நமக்கு காட்டுகிறது. அயல் நாடுகளிலிருந்து வளமான நாடுகளுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலோர் மனச்சோர்வுடன் தான் உள்ளனர். புலம் பெயர்ந்தோர் அதிகளவில் சம்பாதித்தாலும், தங்கள் உறவுகளை அவர்களால் முழுமையாகப் பேணிக் கொள்ள முடிவதில்லை. அதனால், சொந்த நாட்டுக்காரர்களை விட அந்த நாட்டில் குடியேறியவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.
தற்போதைய நிலையை விட அதிகமாகச் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துத் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்றவுடன் மேலும் அதிகமாகச் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலை உருவாவதும் இதற்கு ஒரு காரணம். சம்பாத்தியத்துக்கு ஏற்றாற்போல விருப்பங்களும் அதிகரித்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர், மகிழ்ச்சியை விட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=83216
புலம்பல்ஸ்:
வாசகர் கருத்து (134) . எல்லாத்தையும் போட்டா இந்த பத்தாது..சில குறிப்பட்ட கருத்துகள் கிழே! எனக்கு பிடித்தது கடைசி 2 கருத்து!
AMMIYA - DENHELDER,நெதர்லாந்து
எல்லோரின் கருத்தும் உண்மையே.....பணம், பணம் என்று எத்தனை சொந்தம்,பந்தம் வீடு,என்று எல்லாத்தையும் இழந்து தான் இங்கு இருக்கிறோம். நமது ஊரில்,நல்லது, கெட்டது என்னும் போது, சொந்தங்கள், பந்தங்கள் ஒன்று கூடி ஊரோ, வீடோ களை கட்டும். ஆனால், இங்கே அடுத்த வீட்டில் என்ன நடந்தாலும் வெளி வராத ஜனங்கள்,அதைவிட சொந்தங்கள் கூட,வேலையில் லீவு கிடைக்கவில்லை என்று ஒரு நொண்டிச்சாக்கு.கண்ட சுகம் ம்ம்ம்ம்ம்ம் இல்லவே இல்லை....
சுரேஷ் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
IT துறையில் மேற்கத்திய நாடுகளில் இருப்பவர்கள் தங்கள் வாழ்வை அவர்களே பேராசைக்காக அழித்து கொள்கிறார்கள்.. இந்தியாவில் மாதம் 75 ஆயிரம் ருபாய் 4 வருட பணியில் கிடைக்கிறது.. இதை வைத்துக்குகொண்டு மிகவும் நல்ல வாழ்வு வாழலாம்.. ஆனால் பேராசைக்காக பெற்ற தாய் தந்தையரை விட்டு விட்டு சொந்தங்களை விட்டு விட்டு ஒரு அனாதையை போல வெள்ளைகாரனுக்கு ஜால்ரா போட்டு விட்டு ஒரு போலி கவுரவத்துடன் வாழுகிறோம்.. இது போலி யான வாழ்கை என தெரிய வரும் போது பாதி கிழவனாகி என்ன செய்வது என தெரியாமல் குழம்பி போய் வெளிநாட்டிலேயே தங்கி விட்டு இது போல புலம்புகிறோம்.. இளைஞகர்களே சிந்தித்து பாருங்கள்.. 15 வருடம் இந்தியாவில் கஷ்ட பட்டு வாங்கும் வீட்டில் இருக்கும் சுகம், 5 வருடம் அனைத்தையும் இழந்து வாங்கும் வீட்டில் கிடைக்காது... "கேட்டது எல்லாம் கிடைத்தது.. எல்லாம் உடனுக்குடன் தான் இப்போது.. ஆனால் எதைக்கொண்டு நிரப்புவது அம்மா இல்லாத வீட்டை?" குடும்ப சூழல் காரணமாக 1 வருடம் இங்கு வந்த நான் பேராசை காரணமாக தாயை இழந்து விட்டு தனிமையில் வாடி இப்போது துணைவி குழந்தைகளை பிரிந்து இன்னும் தனிமையில் தான் ஏங்கி கொண்டு இருக்கிறேன்.. போதும் என்ற மனமே நிம்மதி தரும்.....
zain - JEDDAH,இந்தியா
நான் சௌதியில் 18 வருட வாழ்க்கையை இளமையை தொலைத்து விட்டேன். அது திரும்ப கிடைக்குமா? நமக்குப்பின் நமது வருங்கால சந்ததிகளாவது நம் சொந்த நாட்டில் வேலைகள் கிடைக்கப்பெற்று சந்தோசமாக வாழட்டும். எல்லோரும் சொல்லக்கேட்டிருக்கிறேன், கூழோ கஞ்சோ குடித்தாலும் நாட்டில் மனைவி மக்களுடன் சந்தோசமாக வாழ வேண்டும். இது என்ன வாழ்க்கை என நொந்துகொள்ளும் மக்கள் நாடு திரும்ப நினைக்கும் பட்சத்தில் அவர்களின் தேவைகள் அதிகமாகி யோசிக்க வைத்து விடும் என்பதும் உண்மை. மேலும் நண்பர் கருப்பையா சொல்வதும மற்ற சகோதர்கள் சொல்வதும் ஆய்வறிக்கை சொல்வதும் உண்மையே...
பெயர் எதற்கு - bangalore,இந்தியா
இக்கரைக்கு அக்கரை பச்சை. மனித மானம் ஒரு குரங்கு என்பதற்கு வெளி நாட்டு வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு. ஆண்கள் போவதற்கு பொருளாதார காரணங்கள். பெண்கள் போவதற்கு பாரம்பரிய பொறுப்புக்களை தவிர்த்து மனம் போல் வாழ. இஷ்டம் போல் எழுந்து இஷ்டம் போல் வாழ்ந்து யாரையும் மதிக்காத ஒரு வாழ்க்கை வாழ. என்றோ ஒரு நாள் பிறந்த மண்ணிற்கு வந்து நான் இவ்வளவு செல்வாக்குடன் இருக்கின்றேன் என்று காட்டிக்கொண்டு மீதி நாட்களில் மனகுமுறலுடனும் சரியான உணவில்லாமலும் அயல் நாட்டில் அன்றாடும் அவல வாழ்க்கை....
mannuchella - அரபுநாடு,இந்தியா
முற்றிலும் உண்மை. எனக்கு திருமணமான 3 வது மாதத்தில் நான் வெளிநாட்டுக்கு வந்து விட்டேன். பிறகு இங்கு தான் வாழ்க்கை.இப்பொழுது ஒரு குழந்தையும் இருக்கிறாள். அவளுக்கு அம்மா, அப்பா தவிர வேறு யாரையும் தெரியாது. விழாக்களில் கலந்துகொள்ள முடியவில்லை. பண்டிகைகள் சுவடே தெரியாத வண்ணம் உள்ளது. இனி வரும் எங்களது சந்ததியினர் தீபாவளி, பொங்கல் போன்ற எதையும் தெரியாமலே வாழ்கின்றனர். தாய்நாடு தாய்நாடு தான்...
மனசாட்சி - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
நூற்றுக்கு நூறு உண்மை வெளிநாட்டில் சம்பாதிக்க வந்த யாரும் மன நிம்மதியுடன் இல்லை அனைவரும் எதோ ஒரு வகையில் நிம்மதியின்றி தவிப்பது ஊரறிந்த ரகசியம். விதியை நொந்துக்கொண்டு தான் அனைவரும் வாழ்கின்றனர்....
raaj - chennai,இந்தியா
வெறும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மட்டுமா ? வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் எல்லோருக்கும் இந்த நிலைமைதான். எல்லாம் பணம் படுத்தும் பாடு என்று சொல்லிவிட முடியாது. பொறுப்புகளை நிறைவேற்ற தன கனவுகனை விற்கும் அவர்களுக்காக பரிதாப படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?...
தக்பீர் அலி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
இருப்பவனுக்கோ தாய் நாட்டுக்கு வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்றுவிட ஆசை இதோ அயல் தேசத்து ஏழைகளின் கண்ணீர் அழைப்பிதல்!! எங்கள் உடம்பில் பூசிக்கொள்ளும் வாசனை திரவியத்தில் வேண்டுமானால் வாசனைகள் இருக்கலாம் ஆனால் வாழ்கையில்...??? ஒரு தொலைபேசி வாழ்க்கையுடன் தொலைந்துவிடுகிறது எங்கள் குடும்ப நட்பு. எவ்வளவு சம்பாதித்தும் என்ன எங்கள் மனதில் தோன்றுவது அயல் தேசத்து ஏழைகள் என்ற மனகுறைவே. இதயம் தாண்டி பழகியவர்கள் எல்லாம் ஒரு கடலை தாண்டி கண்ணீரிலே கரைந்துவிடுகிறோம். இறுதிநாள் நம்பிக்கையில் தான் இதயம் சமாதனம் ஆகிறது. நாங்கள் பெற்றகுழந்தையின் குரலை கிள்ளசொல்லி அழகேட்கின்றோம் ஆனால் கிள்ளாமலேயே தொலைவில் நாங்கள் அழுகின்ற சப்தம் யாருக்கு கேட்குமோ. அன்புடன் அரபு பாலைவன தேசத்து ஏழை!!...
suganya - Leeds,யுனைடெட் கிங்டம்
அன்பான குடும்பம் , அரவணைக்க அம்மா இருந்தும் வெளிநாடு சென்று படிக்க ஆசை பட்டு இன்று அவதி படுகிறேன்... எனக்கே தெரியல என்னால இனிமேல் இந்தியா மண்ணுக்கு திரும்ப முடியுமான்னு..ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அழுதிடுவேன்..எவ்வளவுதான் காசு பணம் இருந்தாலும் என் தாய் நாட்டுக்கு இணையாகுமா? வருஷத்துல ஒரு தடவ அவங்கள பார்த்துட்டு திரும்பும் போது என் அம்மா கூடவே இருக்க முடியாதான்னு தோணும்...அந்த வலி சாவ விட கொடுமையானது....எங்களுக்கு இந்தியால சரியான வேலை கெடைச்சா நாங்க என் இப்படி இருக்க போறோம்...கடவுள வேண்டுறேன் இனிமேல் வரபோற என் குழந்தைங்கலாவது இந்தியாவ விட்டு வெளிநாட்டுக்கு அனுப்புற நிலைமை வரக்கூடாது......
ஜெய் சங்கு - rak,ஐக்கிய அரபு நாடுகள்
ஆம்... மறந்து போனது என்னவோ சுவையான உணவு...சுதந்திர உணர்வு....அலாரம் (விழிப்பொலி) இல்லாத தூக்கம்...பற்று பாசம் பந்தமுள்ள வாழ்க்கை...தினமும் தொலைபேசியில் தன் அர்த்தமுள்ள வாழ்க்கையை பணத்திற்காக வயதையும் சேர்த்து தொலைத்து, தன் வீட்டில் சந்தோஷ ஒளி ஏற்றுவதற்காக தன் வாழ்க்கையை துறக்கும் மெழுகுவர்த்தியாய் இங்கே...!! தான் பெற்ற குழந்தைகளை பல வருடங்களாக பார்க்காதோர் பலரும் உண்டு, ஏன் ஒரு சிலர் கர்ப்பத்தொடு இருக்கும் மனைவியை விட்டு பிரிந்து பலவருடங்களாக இருக்கின்றனர், சிலர் தன் பெற்றோர் இறந்த செய்தியை காதால் மட்டும் கேட்டு திரும்ப முடியாதோரும் இருக்கின்றனர்...என்னதான் கைநிறைய பணம் சம்பாதித்தாலும் நம் நாட்டில் (வீட்டில்) கிடைக்கும் சந்தோசமும் அனுபவமும் தொலைத்த வயதும் திரும்ப கிடைக்காது... வாழ்க்கை வாழ்வதற்கே..!! பணத்திற்காக அல்ல...!! விரைவில் திரும்புவேன் என் தாய்மண் முகம் காண... நண்றி...!!...
kritcha - singapore,இந்தியா
உண்மைதான். நம் அதிகம் சம்பாதிக்கிறோம் ஆனால் அதைவிட ரொம்ப சந்தோசங்களை இழக்கிறோம் ....
தியாகு - லண்டன்,யுனைடெட் கிங்டம்
உண்மை, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாய் நாட்டை விட்டு இங்கு நாங்கள் படும் வேதனை சொல்லி மாளாது. இதில் நாங்கள் பலவற்றை இழந்து தான் பணம் சம்பதிக்கவேண்டி இருக்கிறது. குடும்பம், உறவினர், நண்பர்கள், இதர்க்கும் மேல் நாங்கள் இழப்பது எங்கள் மன நிம்மதி....
அமிர்த raj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
உண்மை உண்மை நாங்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறோம் என்று யாருக்கும் தெரியாது .பணம் சம்பாதித்தாலும் நிம்மதி என்பது இல்லவே இல்லை ,பெரும்பாலான ஆட்கள் மன வியாதி , தூக்கம் இன்மை , எப்போது நம் நாட்டுக்கு திரும்பி போவோம் என்று தினமும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்...
சாம் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
Really it is True, Money is the route devil. due to the money many of us struggling lot. Real Peace and Joy when we trust God for all things with our families. Even little earnings also can give more Joy. When i was earning 600 rupees per month that time i was very happy man in the world. now earning more but more commitments keep on rising for my families and relatives sides. I am happily suffering to lift family and relatives. God want to change our country Govt to ruling the rights. We all go back to our country, this will give more strength to our family and our country. let all pray for our political parties want to change to Do all fear of God. If One earth quake what is the state of all, Let us fear God and Do right way....
சாமி - திருப்பூர்,இந்தியா
எல்லாம் சரிதான், ஆனால் திறமைக்கும், பொறுமைக்கும் ஒரு அளவு உண்டுதானே. பணம் தேவைதான் எனில் அப்புறம் எதற்கு இந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மற்றும் சிலரும் மட்டும் பணத்தை சேர்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஏழைகளும், நடுதரவாசிகளும் வளர ஏதாவது செய்தார்களா எனில் உங்களுக்கே தெரியும். சொல்ல வேண்டியதில்லை. இலவசம் ஏந்தி நிற்கும் அவலநிலை. அனைவருக்கும் சொந்த ஊரு பிடிக்கும்தான். இல்லை என்று மறுக்க யாருமில்லை. அனால் திருந்தாத மேற்கண்டவர்கள் இருக்கும்வரை மகிழ்ச்சி இன்றி பணத்துடன் வாழ்தலே மேல்....
மீராஷா - london,யுனைடெட் கிங்டம்
பாருங்கள் வெளி நாட்டில் வாழும் இந்தியர்களின் புலம்பலை இளைய சமுதாயமேய்.இனி வரும் காலங்களில் நமது நாட்டிலை இருந்து குறைவாக சம்பாதித்தாலும் நிறைவாக வாழமுடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இதோ என்னுடைய புலம்பல் விடிகாலை எழுந்து கடல்கரை மணலில் நடந்து அந்த இனிமையான காத்தை சுவாசித்து நடக்கும் அலகை தனி.சரியாக ஒன்போது மணிக்கு இட்லி சாம்பார் தோசை என்று சாபிட்டு விட்டு பத்து மணிக்கு வெளியல் செண்டு நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் சுகமை தனி.மதியம் சரியாக ஒருமணிக்கு சுவையான மீன் குழம்பு இரண்டு கூட்டு பொறியல் ரசம் இப்படி சுவையான கெமிகளை இல்லாத சாப்படை சாப்பிட்டு விட்டு .சரியாக மூன்று மணிக்கு ஒரு குட்டி தூக்கம் நான்கு மணியில் இருந்து ஆறுமணிவரை மைதானத்தில் கிரிகெட் விளையாட்டு ஏழு மணியில் இருந்து ஒன்பது மணிவரை மறுபடியும் நண்பர்களுடன் அரட்டை பத்து மணிக்கு ரொட்டியும் குர்மாஉம்.நல்ல தூக்கம் இப்படிபோய் கொண்டிருந்த நமது வாழ்க்கை வெளி நாட்டின் வாழ்க்கை என்பது இயந்திர தனமானது என்பது மறுக்க முடியாத உண்மை.இந்த உலகத்தில் நாம் வாழ்வதை கொஞ்ச காலம் தான் அந்த வாழ்கையை நாம் விரும்பும் படி வாழ்ந்து விட்டு போகவிண்டியது தான். இப்படி ஒரு இயந்திர வாழ்க்கை தேவைதானா ஆசை துன்பத்திற்கு காரணம் என்பது உண்மை...
அருண் bashkar - qatar,இந்தியா
குடும்ப கடமைகளும்,சுமைகளும் , முன்னேற்றமும் எங்களை இந்த பிறவியில் தியாகியாக வாழ செய்கிறது ....
சரண் - ஹாங்காங்,சீனா
திரைகடல் ஓடி திரவியம் தேடினேன் , தேடியது கிடைத்தது, ஏதோ தொலைந்ததாக உள் மனம் அழுதது , மனைவியின் மடித்தூக்கம் , பெற்ற மழலையின் பேரின்ப பரிசம் , அம்மாவின் அரைத்த வெந்ததைய குழம்பு, பணமென்னும் ஓவியத்தை வாங்க , இளமையெனும் கண்களை விற்கிறேன் .....
பாலசுப்ரமணியன் - உடுமலைப்பேட்டை,இந்தியா
ஆனாலும் இன்னமும் வெளிநாட்டு வேலைக்கு ஏங்கும் இளைஞர்கள் எத்தனை பேர்? சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்றான், வந்தவனைக் கேட்டால் சென்றுவிடு என்றான், என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடத்தானேவேண்டியிருக்கிறது. பணம் சம்பாதித்தபின்புதானே நிம்மதியைப் பற்றி நினைக்கிறார்கள். வயிற்றுப் பாட்டிற்கே வழியில்லாதவன் கடல் தாண்டுவதைப் பற்றி தயங்கமாட்டானே. ஓடவேண்டிய வயதில் ஓடவேண்டும், தேவைக்கு சம்பாதித்தபின் ஊர் வந்து சேர்வது தான் உத்தமம். அதிகம் சம்பாதிக்க ஆசைப்படும்போதுதான் அல்லலே ஆரம்பிக்கிறது. இன்றைய நிலையில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் நம் மண்ணுக்கே உரிய பழமையான கலாசாரம், அன்பு, ஆன்மிகம், சித்தாந்தம், மனித நேயம் இவைகள் தான் இவ்வுலகத்தை தழைக்க வைக்கும். நம்ம ஊர் நம்ம ஊர்தான்....
அந்தோ - பாண்டிச்சேரி,இந்தியா
என்ன வாழ்க்கை இது, ஒவ்வரு நாளும் எப்படி முடியும் என்று தான் எதிர்பார்த்துக்கொண்டு இருகிறேன், சொந்தகளை விட்டு காசுக்காக இந்த மண்ணில் அடிமை வாழ்க்கை. குடும்பத்தோடு சீக்கிரம் ஒன்றாக இருக்க இப்போ முடிவு செய்து விட்டேன். நான் இந்த நாட்டில் பதினைந்து வருடங்கள் என் வாழ்கையை தொலைத்துவிட்டேன்..... இனி செத்தாலும் என் மண்ணில் தான் அது போக வேண்டும். பணத்தை தவிர சுவாசிப்பதற்கு இங்கு ஒன்றும் இல்லை. சண்டை, கஷ்டம், மகிழ்ச்சி, துக்கம் எதுவும் இங்கு இல்லை. பள்ளிக்கூடம் போகும் பொது கூட இப்படி வாழ்கை வாழ்ததில்லை, இப்போ தினமும் பள்ளிக்(அடிமை)கூடம் போவது போல் உள்ளது. மனம் விட்டு சிரித்து பலா நாள் ஆகிவிட்டது....
கோபிநாத் - london,யுனைடெட் கிங்டம்
வாழ்க்கை என்பது நம் கையில் இருக்கிறது. ஆனால், திரவியம் தேடி தொலைந்து போனவர்களாக நாம் இன்று எங்கோ நடைபினமாய், போலியாய் சிரித்து, டெலிபோனில் நடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவன், கோபிநாதன். சொந்த மண்ணை தேடும் ஆதவன்....
வெளிநாட்டுக்கு நான் வந்ததால் ஓட்டுவீடு மாடிவீடு ஆனது சைக்கிள் பைக், காரக மாறியது கவிரிங் நகை பவுன் நகையாக ஆனது இப்படி எல்லாமும் வளர்பிறைதான் ஒன்றை(என்னை) தவிர இழந்த என் இளமை , லட்சியம் , ஆசை, நிம்மதி , பாசம் போன்றவைதான் தேய்பிறை. உள்ள குமுறலுடன் நித்தமும் தனிமை ஐ நண்பனாக கொண்ட தன்மானமுள்ள
ப. மாதவன் - சென்னை,இந்தியா
நாம் எதற்காக சம்பாதிக்கிரோம் என்பதை மனிதன் ஒரு நிமிடம் நினைத்தால் அவன் இந்த நிலைக்கு வரமாட்டான். அத்தியாவசியத்திர்காக ஒருவன் சம்பாதித்தால் அதை நல்ல முறையில் அவன் அனுபவிப்பான். அடுத்தக்வர்களுக்காக சம்பாதித்தால் பெருமையாக இருப்பாக இருப்பான். போட்டிக்காக சம்பாதிப்பவன் நிம்மதியாக இருக்க மாட்டன். அன்பினால உண்டாகும் இன்ப நிலை. அது அணைந்திடாத தீபமாகும் பாச வலை. எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே. ஆகையால் எவள்ளவு சம்பாதித்தாலும் குடும்போத்தோடு இருந்தால் தான் அந்த இன்பம் காண முடியும். ப. மாதவன்...
அபுதாகிர் - சவுதிஅரேபியா,இந்தியா
அன்பான வீடு நட்புக்காக எதையும் செய்யும் தோழி அழகான என் குட்டி ராஜாக்களும் & என் செல்ல தேவாதைகளும் பணம் என்ற ஒரு செல்லா காசுக்காக இவை எல்லாவற்றயும் பிரிந்து நீத்தமும் இங்கே நித்திரை இல் கூட அழுது கொண்டு இருகிறோம், காலமெல்லாம்,...
தி Greatest - chennai,இந்தியா
கட்டிய மனைவி ,குழந்தைகள்,தாய்,தந்தை ,மற்றும்உடன் பிறந்தவர்கள்,உறவினர்கள்,....நம் ...தாய்மொழி,தாய்நாடு இவற்றை பிரிந்து வாழ்ந்தால் நிம்மதி ஏது.''நூறுமைல் சென்று நூறு ரூபாய் சம்பாதிப்பதைவிட ...பத்துமயில் சென்று பத்து ரூபாய் சம்பாத்தியம் சந்தோசம் கொடுக்கும்....
barathan - லண்டன்,யுனைடெட் கிங்டம்
திரைக் கடல் ஓடியும் திரவியம் தேடு; தேடுகிறோம்! வசதி வந்தாலும் மனம் என்னவோ "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்ற நினைப்பை அடிக்கடித் தூண்டுகிறது....
இன்று தினமலர் ஒரு செய்தி வெளி நாட்டில் வசிக்கும் தமிழர்கள் நிம்மதியாக இல்லை என்ற தோனியில் வந்துள்ளது.செய்தி அரைப்பக்கம் தான். ஆனா புலம்பல்ஸ் ஒக்கா மக்கா 30 பாராவிற்கு மேலே.. மக்களே why blood? :):)
செய்தி:
அதிகளவில் சம்பாத்தியம் செய்வதால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தவறானது என்பதை தான் இந்த ஆய்வு நமக்கு காட்டுகிறது. அயல் நாடுகளிலிருந்து வளமான நாடுகளுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலோர் மனச்சோர்வுடன் தான் உள்ளனர். புலம் பெயர்ந்தோர் அதிகளவில் சம்பாதித்தாலும், தங்கள் உறவுகளை அவர்களால் முழுமையாகப் பேணிக் கொள்ள முடிவதில்லை. அதனால், சொந்த நாட்டுக்காரர்களை விட அந்த நாட்டில் குடியேறியவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.
தற்போதைய நிலையை விட அதிகமாகச் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துத் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்றவுடன் மேலும் அதிகமாகச் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலை உருவாவதும் இதற்கு ஒரு காரணம். சம்பாத்தியத்துக்கு ஏற்றாற்போல விருப்பங்களும் அதிகரித்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர், மகிழ்ச்சியை விட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=83216
புலம்பல்ஸ்:
வாசகர் கருத்து (134) . எல்லாத்தையும் போட்டா இந்த பத்தாது..சில குறிப்பட்ட கருத்துகள் கிழே! எனக்கு பிடித்தது கடைசி 2 கருத்து!
AMMIYA - DENHELDER,நெதர்லாந்து
எல்லோரின் கருத்தும் உண்மையே.....பணம், பணம் என்று எத்தனை சொந்தம்,பந்தம் வீடு,என்று எல்லாத்தையும் இழந்து தான் இங்கு இருக்கிறோம். நமது ஊரில்,நல்லது, கெட்டது என்னும் போது, சொந்தங்கள், பந்தங்கள் ஒன்று கூடி ஊரோ, வீடோ களை கட்டும். ஆனால், இங்கே அடுத்த வீட்டில் என்ன நடந்தாலும் வெளி வராத ஜனங்கள்,அதைவிட சொந்தங்கள் கூட,வேலையில் லீவு கிடைக்கவில்லை என்று ஒரு நொண்டிச்சாக்கு.கண்ட சுகம் ம்ம்ம்ம்ம்ம் இல்லவே இல்லை....
சுரேஷ் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
IT துறையில் மேற்கத்திய நாடுகளில் இருப்பவர்கள் தங்கள் வாழ்வை அவர்களே பேராசைக்காக அழித்து கொள்கிறார்கள்.. இந்தியாவில் மாதம் 75 ஆயிரம் ருபாய் 4 வருட பணியில் கிடைக்கிறது.. இதை வைத்துக்குகொண்டு மிகவும் நல்ல வாழ்வு வாழலாம்.. ஆனால் பேராசைக்காக பெற்ற தாய் தந்தையரை விட்டு விட்டு சொந்தங்களை விட்டு விட்டு ஒரு அனாதையை போல வெள்ளைகாரனுக்கு ஜால்ரா போட்டு விட்டு ஒரு போலி கவுரவத்துடன் வாழுகிறோம்.. இது போலி யான வாழ்கை என தெரிய வரும் போது பாதி கிழவனாகி என்ன செய்வது என தெரியாமல் குழம்பி போய் வெளிநாட்டிலேயே தங்கி விட்டு இது போல புலம்புகிறோம்.. இளைஞகர்களே சிந்தித்து பாருங்கள்.. 15 வருடம் இந்தியாவில் கஷ்ட பட்டு வாங்கும் வீட்டில் இருக்கும் சுகம், 5 வருடம் அனைத்தையும் இழந்து வாங்கும் வீட்டில் கிடைக்காது... "கேட்டது எல்லாம் கிடைத்தது.. எல்லாம் உடனுக்குடன் தான் இப்போது.. ஆனால் எதைக்கொண்டு நிரப்புவது அம்மா இல்லாத வீட்டை?" குடும்ப சூழல் காரணமாக 1 வருடம் இங்கு வந்த நான் பேராசை காரணமாக தாயை இழந்து விட்டு தனிமையில் வாடி இப்போது துணைவி குழந்தைகளை பிரிந்து இன்னும் தனிமையில் தான் ஏங்கி கொண்டு இருக்கிறேன்.. போதும் என்ற மனமே நிம்மதி தரும்.....
zain - JEDDAH,இந்தியா
நான் சௌதியில் 18 வருட வாழ்க்கையை இளமையை தொலைத்து விட்டேன். அது திரும்ப கிடைக்குமா? நமக்குப்பின் நமது வருங்கால சந்ததிகளாவது நம் சொந்த நாட்டில் வேலைகள் கிடைக்கப்பெற்று சந்தோசமாக வாழட்டும். எல்லோரும் சொல்லக்கேட்டிருக்கிறேன், கூழோ கஞ்சோ குடித்தாலும் நாட்டில் மனைவி மக்களுடன் சந்தோசமாக வாழ வேண்டும். இது என்ன வாழ்க்கை என நொந்துகொள்ளும் மக்கள் நாடு திரும்ப நினைக்கும் பட்சத்தில் அவர்களின் தேவைகள் அதிகமாகி யோசிக்க வைத்து விடும் என்பதும் உண்மை. மேலும் நண்பர் கருப்பையா சொல்வதும மற்ற சகோதர்கள் சொல்வதும் ஆய்வறிக்கை சொல்வதும் உண்மையே...
பெயர் எதற்கு - bangalore,இந்தியா
இக்கரைக்கு அக்கரை பச்சை. மனித மானம் ஒரு குரங்கு என்பதற்கு வெளி நாட்டு வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு. ஆண்கள் போவதற்கு பொருளாதார காரணங்கள். பெண்கள் போவதற்கு பாரம்பரிய பொறுப்புக்களை தவிர்த்து மனம் போல் வாழ. இஷ்டம் போல் எழுந்து இஷ்டம் போல் வாழ்ந்து யாரையும் மதிக்காத ஒரு வாழ்க்கை வாழ. என்றோ ஒரு நாள் பிறந்த மண்ணிற்கு வந்து நான் இவ்வளவு செல்வாக்குடன் இருக்கின்றேன் என்று காட்டிக்கொண்டு மீதி நாட்களில் மனகுமுறலுடனும் சரியான உணவில்லாமலும் அயல் நாட்டில் அன்றாடும் அவல வாழ்க்கை....
mannuchella - அரபுநாடு,இந்தியா
முற்றிலும் உண்மை. எனக்கு திருமணமான 3 வது மாதத்தில் நான் வெளிநாட்டுக்கு வந்து விட்டேன். பிறகு இங்கு தான் வாழ்க்கை.இப்பொழுது ஒரு குழந்தையும் இருக்கிறாள். அவளுக்கு அம்மா, அப்பா தவிர வேறு யாரையும் தெரியாது. விழாக்களில் கலந்துகொள்ள முடியவில்லை. பண்டிகைகள் சுவடே தெரியாத வண்ணம் உள்ளது. இனி வரும் எங்களது சந்ததியினர் தீபாவளி, பொங்கல் போன்ற எதையும் தெரியாமலே வாழ்கின்றனர். தாய்நாடு தாய்நாடு தான்...
மனசாட்சி - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
நூற்றுக்கு நூறு உண்மை வெளிநாட்டில் சம்பாதிக்க வந்த யாரும் மன நிம்மதியுடன் இல்லை அனைவரும் எதோ ஒரு வகையில் நிம்மதியின்றி தவிப்பது ஊரறிந்த ரகசியம். விதியை நொந்துக்கொண்டு தான் அனைவரும் வாழ்கின்றனர்....
raaj - chennai,இந்தியா
வெறும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மட்டுமா ? வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் எல்லோருக்கும் இந்த நிலைமைதான். எல்லாம் பணம் படுத்தும் பாடு என்று சொல்லிவிட முடியாது. பொறுப்புகளை நிறைவேற்ற தன கனவுகனை விற்கும் அவர்களுக்காக பரிதாப படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?...
தக்பீர் அலி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
இருப்பவனுக்கோ தாய் நாட்டுக்கு வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்றுவிட ஆசை இதோ அயல் தேசத்து ஏழைகளின் கண்ணீர் அழைப்பிதல்!! எங்கள் உடம்பில் பூசிக்கொள்ளும் வாசனை திரவியத்தில் வேண்டுமானால் வாசனைகள் இருக்கலாம் ஆனால் வாழ்கையில்...??? ஒரு தொலைபேசி வாழ்க்கையுடன் தொலைந்துவிடுகிறது எங்கள் குடும்ப நட்பு. எவ்வளவு சம்பாதித்தும் என்ன எங்கள் மனதில் தோன்றுவது அயல் தேசத்து ஏழைகள் என்ற மனகுறைவே. இதயம் தாண்டி பழகியவர்கள் எல்லாம் ஒரு கடலை தாண்டி கண்ணீரிலே கரைந்துவிடுகிறோம். இறுதிநாள் நம்பிக்கையில் தான் இதயம் சமாதனம் ஆகிறது. நாங்கள் பெற்றகுழந்தையின் குரலை கிள்ளசொல்லி அழகேட்கின்றோம் ஆனால் கிள்ளாமலேயே தொலைவில் நாங்கள் அழுகின்ற சப்தம் யாருக்கு கேட்குமோ. அன்புடன் அரபு பாலைவன தேசத்து ஏழை!!...
suganya - Leeds,யுனைடெட் கிங்டம்
அன்பான குடும்பம் , அரவணைக்க அம்மா இருந்தும் வெளிநாடு சென்று படிக்க ஆசை பட்டு இன்று அவதி படுகிறேன்... எனக்கே தெரியல என்னால இனிமேல் இந்தியா மண்ணுக்கு திரும்ப முடியுமான்னு..ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அழுதிடுவேன்..எவ்வளவுதான் காசு பணம் இருந்தாலும் என் தாய் நாட்டுக்கு இணையாகுமா? வருஷத்துல ஒரு தடவ அவங்கள பார்த்துட்டு திரும்பும் போது என் அம்மா கூடவே இருக்க முடியாதான்னு தோணும்...அந்த வலி சாவ விட கொடுமையானது....எங்களுக்கு இந்தியால சரியான வேலை கெடைச்சா நாங்க என் இப்படி இருக்க போறோம்...கடவுள வேண்டுறேன் இனிமேல் வரபோற என் குழந்தைங்கலாவது இந்தியாவ விட்டு வெளிநாட்டுக்கு அனுப்புற நிலைமை வரக்கூடாது......
ஜெய் சங்கு - rak,ஐக்கிய அரபு நாடுகள்
ஆம்... மறந்து போனது என்னவோ சுவையான உணவு...சுதந்திர உணர்வு....அலாரம் (விழிப்பொலி) இல்லாத தூக்கம்...பற்று பாசம் பந்தமுள்ள வாழ்க்கை...தினமும் தொலைபேசியில் தன் அர்த்தமுள்ள வாழ்க்கையை பணத்திற்காக வயதையும் சேர்த்து தொலைத்து, தன் வீட்டில் சந்தோஷ ஒளி ஏற்றுவதற்காக தன் வாழ்க்கையை துறக்கும் மெழுகுவர்த்தியாய் இங்கே...!! தான் பெற்ற குழந்தைகளை பல வருடங்களாக பார்க்காதோர் பலரும் உண்டு, ஏன் ஒரு சிலர் கர்ப்பத்தொடு இருக்கும் மனைவியை விட்டு பிரிந்து பலவருடங்களாக இருக்கின்றனர், சிலர் தன் பெற்றோர் இறந்த செய்தியை காதால் மட்டும் கேட்டு திரும்ப முடியாதோரும் இருக்கின்றனர்...என்னதான் கைநிறைய பணம் சம்பாதித்தாலும் நம் நாட்டில் (வீட்டில்) கிடைக்கும் சந்தோசமும் அனுபவமும் தொலைத்த வயதும் திரும்ப கிடைக்காது... வாழ்க்கை வாழ்வதற்கே..!! பணத்திற்காக அல்ல...!! விரைவில் திரும்புவேன் என் தாய்மண் முகம் காண... நண்றி...!!...
kritcha - singapore,இந்தியா
உண்மைதான். நம் அதிகம் சம்பாதிக்கிறோம் ஆனால் அதைவிட ரொம்ப சந்தோசங்களை இழக்கிறோம் ....
தியாகு - லண்டன்,யுனைடெட் கிங்டம்
உண்மை, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாய் நாட்டை விட்டு இங்கு நாங்கள் படும் வேதனை சொல்லி மாளாது. இதில் நாங்கள் பலவற்றை இழந்து தான் பணம் சம்பதிக்கவேண்டி இருக்கிறது. குடும்பம், உறவினர், நண்பர்கள், இதர்க்கும் மேல் நாங்கள் இழப்பது எங்கள் மன நிம்மதி....
அமிர்த raj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
உண்மை உண்மை நாங்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறோம் என்று யாருக்கும் தெரியாது .பணம் சம்பாதித்தாலும் நிம்மதி என்பது இல்லவே இல்லை ,பெரும்பாலான ஆட்கள் மன வியாதி , தூக்கம் இன்மை , எப்போது நம் நாட்டுக்கு திரும்பி போவோம் என்று தினமும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்...
சாம் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
Really it is True, Money is the route devil. due to the money many of us struggling lot. Real Peace and Joy when we trust God for all things with our families. Even little earnings also can give more Joy. When i was earning 600 rupees per month that time i was very happy man in the world. now earning more but more commitments keep on rising for my families and relatives sides. I am happily suffering to lift family and relatives. God want to change our country Govt to ruling the rights. We all go back to our country, this will give more strength to our family and our country. let all pray for our political parties want to change to Do all fear of God. If One earth quake what is the state of all, Let us fear God and Do right way....
சாமி - திருப்பூர்,இந்தியா
எல்லாம் சரிதான், ஆனால் திறமைக்கும், பொறுமைக்கும் ஒரு அளவு உண்டுதானே. பணம் தேவைதான் எனில் அப்புறம் எதற்கு இந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மற்றும் சிலரும் மட்டும் பணத்தை சேர்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஏழைகளும், நடுதரவாசிகளும் வளர ஏதாவது செய்தார்களா எனில் உங்களுக்கே தெரியும். சொல்ல வேண்டியதில்லை. இலவசம் ஏந்தி நிற்கும் அவலநிலை. அனைவருக்கும் சொந்த ஊரு பிடிக்கும்தான். இல்லை என்று மறுக்க யாருமில்லை. அனால் திருந்தாத மேற்கண்டவர்கள் இருக்கும்வரை மகிழ்ச்சி இன்றி பணத்துடன் வாழ்தலே மேல்....
மீராஷா - london,யுனைடெட் கிங்டம்
பாருங்கள் வெளி நாட்டில் வாழும் இந்தியர்களின் புலம்பலை இளைய சமுதாயமேய்.இனி வரும் காலங்களில் நமது நாட்டிலை இருந்து குறைவாக சம்பாதித்தாலும் நிறைவாக வாழமுடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இதோ என்னுடைய புலம்பல் விடிகாலை எழுந்து கடல்கரை மணலில் நடந்து அந்த இனிமையான காத்தை சுவாசித்து நடக்கும் அலகை தனி.சரியாக ஒன்போது மணிக்கு இட்லி சாம்பார் தோசை என்று சாபிட்டு விட்டு பத்து மணிக்கு வெளியல் செண்டு நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் சுகமை தனி.மதியம் சரியாக ஒருமணிக்கு சுவையான மீன் குழம்பு இரண்டு கூட்டு பொறியல் ரசம் இப்படி சுவையான கெமிகளை இல்லாத சாப்படை சாப்பிட்டு விட்டு .சரியாக மூன்று மணிக்கு ஒரு குட்டி தூக்கம் நான்கு மணியில் இருந்து ஆறுமணிவரை மைதானத்தில் கிரிகெட் விளையாட்டு ஏழு மணியில் இருந்து ஒன்பது மணிவரை மறுபடியும் நண்பர்களுடன் அரட்டை பத்து மணிக்கு ரொட்டியும் குர்மாஉம்.நல்ல தூக்கம் இப்படிபோய் கொண்டிருந்த நமது வாழ்க்கை வெளி நாட்டின் வாழ்க்கை என்பது இயந்திர தனமானது என்பது மறுக்க முடியாத உண்மை.இந்த உலகத்தில் நாம் வாழ்வதை கொஞ்ச காலம் தான் அந்த வாழ்கையை நாம் விரும்பும் படி வாழ்ந்து விட்டு போகவிண்டியது தான். இப்படி ஒரு இயந்திர வாழ்க்கை தேவைதானா ஆசை துன்பத்திற்கு காரணம் என்பது உண்மை...
அருண் bashkar - qatar,இந்தியா
குடும்ப கடமைகளும்,சுமைகளும் , முன்னேற்றமும் எங்களை இந்த பிறவியில் தியாகியாக வாழ செய்கிறது ....
சரண் - ஹாங்காங்,சீனா
திரைகடல் ஓடி திரவியம் தேடினேன் , தேடியது கிடைத்தது, ஏதோ தொலைந்ததாக உள் மனம் அழுதது , மனைவியின் மடித்தூக்கம் , பெற்ற மழலையின் பேரின்ப பரிசம் , அம்மாவின் அரைத்த வெந்ததைய குழம்பு, பணமென்னும் ஓவியத்தை வாங்க , இளமையெனும் கண்களை விற்கிறேன் .....
பாலசுப்ரமணியன் - உடுமலைப்பேட்டை,இந்தியா
ஆனாலும் இன்னமும் வெளிநாட்டு வேலைக்கு ஏங்கும் இளைஞர்கள் எத்தனை பேர்? சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்றான், வந்தவனைக் கேட்டால் சென்றுவிடு என்றான், என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடத்தானேவேண்டியிருக்கிறது. பணம் சம்பாதித்தபின்புதானே நிம்மதியைப் பற்றி நினைக்கிறார்கள். வயிற்றுப் பாட்டிற்கே வழியில்லாதவன் கடல் தாண்டுவதைப் பற்றி தயங்கமாட்டானே. ஓடவேண்டிய வயதில் ஓடவேண்டும், தேவைக்கு சம்பாதித்தபின் ஊர் வந்து சேர்வது தான் உத்தமம். அதிகம் சம்பாதிக்க ஆசைப்படும்போதுதான் அல்லலே ஆரம்பிக்கிறது. இன்றைய நிலையில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் நம் மண்ணுக்கே உரிய பழமையான கலாசாரம், அன்பு, ஆன்மிகம், சித்தாந்தம், மனித நேயம் இவைகள் தான் இவ்வுலகத்தை தழைக்க வைக்கும். நம்ம ஊர் நம்ம ஊர்தான்....
அந்தோ - பாண்டிச்சேரி,இந்தியா
என்ன வாழ்க்கை இது, ஒவ்வரு நாளும் எப்படி முடியும் என்று தான் எதிர்பார்த்துக்கொண்டு இருகிறேன், சொந்தகளை விட்டு காசுக்காக இந்த மண்ணில் அடிமை வாழ்க்கை. குடும்பத்தோடு சீக்கிரம் ஒன்றாக இருக்க இப்போ முடிவு செய்து விட்டேன். நான் இந்த நாட்டில் பதினைந்து வருடங்கள் என் வாழ்கையை தொலைத்துவிட்டேன்..... இனி செத்தாலும் என் மண்ணில் தான் அது போக வேண்டும். பணத்தை தவிர சுவாசிப்பதற்கு இங்கு ஒன்றும் இல்லை. சண்டை, கஷ்டம், மகிழ்ச்சி, துக்கம் எதுவும் இங்கு இல்லை. பள்ளிக்கூடம் போகும் பொது கூட இப்படி வாழ்கை வாழ்ததில்லை, இப்போ தினமும் பள்ளிக்(அடிமை)கூடம் போவது போல் உள்ளது. மனம் விட்டு சிரித்து பலா நாள் ஆகிவிட்டது....
கோபிநாத் - london,யுனைடெட் கிங்டம்
வாழ்க்கை என்பது நம் கையில் இருக்கிறது. ஆனால், திரவியம் தேடி தொலைந்து போனவர்களாக நாம் இன்று எங்கோ நடைபினமாய், போலியாய் சிரித்து, டெலிபோனில் நடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவன், கோபிநாதன். சொந்த மண்ணை தேடும் ஆதவன்....
வெளிநாட்டுக்கு நான் வந்ததால் ஓட்டுவீடு மாடிவீடு ஆனது சைக்கிள் பைக், காரக மாறியது கவிரிங் நகை பவுன் நகையாக ஆனது இப்படி எல்லாமும் வளர்பிறைதான் ஒன்றை(என்னை) தவிர இழந்த என் இளமை , லட்சியம் , ஆசை, நிம்மதி , பாசம் போன்றவைதான் தேய்பிறை. உள்ள குமுறலுடன் நித்தமும் தனிமை ஐ நண்பனாக கொண்ட தன்மானமுள்ள
ப. மாதவன் - சென்னை,இந்தியா
நாம் எதற்காக சம்பாதிக்கிரோம் என்பதை மனிதன் ஒரு நிமிடம் நினைத்தால் அவன் இந்த நிலைக்கு வரமாட்டான். அத்தியாவசியத்திர்காக ஒருவன் சம்பாதித்தால் அதை நல்ல முறையில் அவன் அனுபவிப்பான். அடுத்தக்வர்களுக்காக சம்பாதித்தால் பெருமையாக இருப்பாக இருப்பான். போட்டிக்காக சம்பாதிப்பவன் நிம்மதியாக இருக்க மாட்டன். அன்பினால உண்டாகும் இன்ப நிலை. அது அணைந்திடாத தீபமாகும் பாச வலை. எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே. ஆகையால் எவள்ளவு சம்பாதித்தாலும் குடும்போத்தோடு இருந்தால் தான் அந்த இன்பம் காண முடியும். ப. மாதவன்...
அபுதாகிர் - சவுதிஅரேபியா,இந்தியா
அன்பான வீடு நட்புக்காக எதையும் செய்யும் தோழி அழகான என் குட்டி ராஜாக்களும் & என் செல்ல தேவாதைகளும் பணம் என்ற ஒரு செல்லா காசுக்காக இவை எல்லாவற்றயும் பிரிந்து நீத்தமும் இங்கே நித்திரை இல் கூட அழுது கொண்டு இருகிறோம், காலமெல்லாம்,...
தி Greatest - chennai,இந்தியா
கட்டிய மனைவி ,குழந்தைகள்,தாய்,தந்தை ,மற்றும்உடன் பிறந்தவர்கள்,உறவினர்கள்,....நம் ...தாய்மொழி,தாய்நாடு இவற்றை பிரிந்து வாழ்ந்தால் நிம்மதி ஏது.''நூறுமைல் சென்று நூறு ரூபாய் சம்பாதிப்பதைவிட ...பத்துமயில் சென்று பத்து ரூபாய் சம்பாத்தியம் சந்தோசம் கொடுக்கும்....
barathan - லண்டன்,யுனைடெட் கிங்டம்
திரைக் கடல் ஓடியும் திரவியம் தேடு; தேடுகிறோம்! வசதி வந்தாலும் மனம் என்னவோ "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்ற நினைப்பை அடிக்கடித் தூண்டுகிறது....
Tuesday, September 7, 2010
நம்பிக்கை ஊன்றி நட! -- வைரமுத்து !
~
ஏ !
எந்திர மனிதா இன்று முதல்
சிர்க்கப் பழகு !
கண்ணீர் சுண்டிக் கடலில் எறி !
எரிமலைக் குழம்பா இரும்பு காய்ச்சு!
பூகம்பமா பூச்செடிகளை மாற்றி நடு !
தாடி சோகம் இரண்டையும்
ஒரே கத்தியால் மழித்துவிடு !
பத்திரிக்கை முதல் பக்கம் அத்தனையும் ரத்தமா
தலைப்புச் செய்தியில் தேசமே காணோமா?
தேநீர் குடி !
ஓசோன் கூரையில் ஓட்டையா?
குடை பிடி !
எந்தக் காலத்தில் பூமி தலைசுற்றாமல் சுற்றியது !
பல் முளைக்கையில் ஈறு வலிக்கும்
மாற்றம் முளைக்கையில் வாழ்க்கை வலிக்கும்
விலியெடுத்தால் வழிபிறக்கும்
வழிபிறந்தும் வலியிருக்கும்
பூமி பொதுச்சொத்து உன் பங்கு தேடி உடனே எடு !
ஒவ்வொரு மேகத்திலும் உன் துளி உண்டு !
ஒவ்வொரு விடியலிலும் உன் கிரணம் உண்டு
வானம் போலவே வாழ்க்கையும் முடிவதில்லை
முதற்காதல் முற்றும் தோல்வியா?
இன்னொரு காதலி இல்லையா என்ன?
பூமியை நோக்கி அழிவுக்கோளா?
இன்னொரு கிரகம் இல்லையா என்ன ?
சிரி
நம்பிக்கை ஊன்றி நட!
ஆனால் மனிதா அவரசப்படாதே
மண்ணின் பொறுமைதான் மலை
கரியின் பொறுமைதான் வைரம்
தாயின் பொறுமைதான் நீ
நான் காண்டுப் பொறுமைதான் பிப்ரவரிடின் ஒரு நாள் உயர்வு!
ஏ எந்திர மனிதா இன்று முதல் சிரிக்கப் பழகு
இந்த பூமி சிரிப்பவர் சொர்க்கம் அழுபவர் கல்லறை
உன் உதடு கல்லறையா ? சொர்க்கமா?
~
ஏ !
எந்திர மனிதா இன்று முதல்
சிர்க்கப் பழகு !
கண்ணீர் சுண்டிக் கடலில் எறி !
எரிமலைக் குழம்பா இரும்பு காய்ச்சு!
பூகம்பமா பூச்செடிகளை மாற்றி நடு !
தாடி சோகம் இரண்டையும்
ஒரே கத்தியால் மழித்துவிடு !
பத்திரிக்கை முதல் பக்கம் அத்தனையும் ரத்தமா
தலைப்புச் செய்தியில் தேசமே காணோமா?
தேநீர் குடி !
ஓசோன் கூரையில் ஓட்டையா?
குடை பிடி !
எந்தக் காலத்தில் பூமி தலைசுற்றாமல் சுற்றியது !
பல் முளைக்கையில் ஈறு வலிக்கும்
மாற்றம் முளைக்கையில் வாழ்க்கை வலிக்கும்
விலியெடுத்தால் வழிபிறக்கும்
வழிபிறந்தும் வலியிருக்கும்
பூமி பொதுச்சொத்து உன் பங்கு தேடி உடனே எடு !
ஒவ்வொரு மேகத்திலும் உன் துளி உண்டு !
ஒவ்வொரு விடியலிலும் உன் கிரணம் உண்டு
வானம் போலவே வாழ்க்கையும் முடிவதில்லை
முதற்காதல் முற்றும் தோல்வியா?
இன்னொரு காதலி இல்லையா என்ன?
பூமியை நோக்கி அழிவுக்கோளா?
இன்னொரு கிரகம் இல்லையா என்ன ?
சிரி
நம்பிக்கை ஊன்றி நட!
ஆனால் மனிதா அவரசப்படாதே
மண்ணின் பொறுமைதான் மலை
கரியின் பொறுமைதான் வைரம்
தாயின் பொறுமைதான் நீ
நான் காண்டுப் பொறுமைதான் பிப்ரவரிடின் ஒரு நாள் உயர்வு!
ஏ எந்திர மனிதா இன்று முதல் சிரிக்கப் பழகு
இந்த பூமி சிரிப்பவர் சொர்க்கம் அழுபவர் கல்லறை
உன் உதடு கல்லறையா ? சொர்க்கமா?
~
Wednesday, September 1, 2010
தோல்வி நிலை & மனிதா மனிதா
~
தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமை என நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா
உரிமையை இழந்தோம் உடைமையை இழந்தோம்
உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா
விடியலுக்கில்லை தூரம் இருந்தும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
யுத்தங்கள் தோன்றட்டும் இரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா
இரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா
-ஆபாவாணன்
மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்
சில ஆறுகள் மீறுதடா வரலாறுகள் மாறுதடா!
பசியால் பல ஏழைகள் சாவது என்பது தேசியமானதடா!
இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியம் ஆனதடா..
அட சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா!
ஒளி வீசுது சூரியனே யுகம் மாறுது வாலிபவனே
ஒரு தோல்வியில்லா புது வேள்வியினால் இனி சோதனை தீர்ந்துவிடும்
சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றிவிடும்
அட சாமரம் வீசிய பாமர சாதிகள் சாதனை கண்டுவிடும்
-வைரமுத்து
~
தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமை என நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா
உரிமையை இழந்தோம் உடைமையை இழந்தோம்
உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா
விடியலுக்கில்லை தூரம் இருந்தும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
யுத்தங்கள் தோன்றட்டும் இரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா
இரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா
-ஆபாவாணன்
மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்
சில ஆறுகள் மீறுதடா வரலாறுகள் மாறுதடா!
பசியால் பல ஏழைகள் சாவது என்பது தேசியமானதடா!
இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியம் ஆனதடா..
அட சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா!
ஒளி வீசுது சூரியனே யுகம் மாறுது வாலிபவனே
ஒரு தோல்வியில்லா புது வேள்வியினால் இனி சோதனை தீர்ந்துவிடும்
சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றிவிடும்
அட சாமரம் வீசிய பாமர சாதிகள் சாதனை கண்டுவிடும்
-வைரமுத்து
~
Thursday, August 26, 2010
அனுபவம் என்பதே நான் தான் - கண்ணதாசன்
~
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பென சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்
அறிவனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்
அன்பெனபடுவது யாதெனக் கேட்டேன்
அளித்து பாரென இறைவன் பணித்தான்
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்
பிள்ளை எனபது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
வருமை என்பது யாதெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக்கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்
"அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்?" எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்று அருகி நெருங்கி
"அனுபவம் என்பதே நான் தான்" என்றார்
~
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பென சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்
அறிவனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்
அன்பெனபடுவது யாதெனக் கேட்டேன்
அளித்து பாரென இறைவன் பணித்தான்
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்
பிள்ளை எனபது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
வருமை என்பது யாதெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக்கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்
"அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்?" எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்று அருகி நெருங்கி
"அனுபவம் என்பதே நான் தான்" என்றார்
~
Saturday, June 12, 2010
நல்லதோர் வீணை செய்து -பாரதியார்
நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ !
சொல்லடி சிவசக்தி என்னை சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமைதாராயோ இந்த மா நிலம் பயனுற வாழ்வதற்கு
சொல்லடி சிவசக்தி நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ
விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்
நசையறு மணம் கேட்டேன் -நித்தம்
நவமெனஸ் சுடர் தரும் உயிர் கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் -சிவ சக்தியை பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவுறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ ?
சொல்லடி சிவசக்தி என்னை சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமைதாராயோ இந்த மா நிலம் பயனுற வாழ்வதற்கு
சொல்லடி சிவசக்தி நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ
விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்
நசையறு மணம் கேட்டேன் -நித்தம்
நவமெனஸ் சுடர் தரும் உயிர் கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் -சிவ சக்தியை பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவுறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ ?
Saturday, May 1, 2010
இரைதேட பறந்தாலும் திசை மாறி பிரிந்தாலும் - வைரமுத்து !
~
இரைதேட பறந்தாலும் திசை மாறி பிரிந்தாலும் கூடு
மக்கா நாமெல்லாம் ஒரு கூடு
செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடைபோடுங்கள் ஞானம் பெறலாம் !
சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் சத்தியம் உங்களை காத்து நிக்கும்
தாய் தந்த அன்பையும் தந்தையின் நல் பண்பையும் நாம்
கொண்டால் பூமாலை காத்திருக்கும்
நெல்லும் விதை போடாமல் நெல்லும்வருமா ?
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப்பணமா ?
வெள்ளைமன இளம் சிட்டுகள் வெற்றி கொடு கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள் விண்ணைத்தொடுங்கள்
பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வியில்லை
ஆனந்தக்கண்ணீரால் அபிஷேகம் தாய் செய்தால்
அதைவிட இன்பம் எதுவுமில்லை!
~
இரைதேட பறந்தாலும் திசை மாறி பிரிந்தாலும் கூடு
மக்கா நாமெல்லாம் ஒரு கூடு
செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடைபோடுங்கள் ஞானம் பெறலாம் !
சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் சத்தியம் உங்களை காத்து நிக்கும்
தாய் தந்த அன்பையும் தந்தையின் நல் பண்பையும் நாம்
கொண்டால் பூமாலை காத்திருக்கும்
நெல்லும் விதை போடாமல் நெல்லும்வருமா ?
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப்பணமா ?
வெள்ளைமன இளம் சிட்டுகள் வெற்றி கொடு கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள் விண்ணைத்தொடுங்கள்
பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வியில்லை
ஆனந்தக்கண்ணீரால் அபிஷேகம் தாய் செய்தால்
அதைவிட இன்பம் எதுவுமில்லை!
~
Saturday, February 27, 2010
அச்சமில்லை ,மனதிலுறுதி வேண்டும் - பாரதியார்
அச்சமில்லை அமுங்குதலில்லை
நடுங்கதலில்லை நாணுதலில்லை
பாவமில்லை பதுங்கதலில்லை
எது நேரினும் இடர்படமாட்டோம்
அண்டம் சிதறினால் அஞ்ச மாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணு, வாழ்க்கை பெற்று விட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சை வாயிலே கொணர்ந்து நண்ப ரூட்டு போதனும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சை ஊன் இயைந்த வேற்படைகள் வந்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
மனதி லுறுதி வேண்டும்
வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
நடுங்கதலில்லை நாணுதலில்லை
பாவமில்லை பதுங்கதலில்லை
எது நேரினும் இடர்படமாட்டோம்
அண்டம் சிதறினால் அஞ்ச மாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணு, வாழ்க்கை பெற்று விட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சை வாயிலே கொணர்ந்து நண்ப ரூட்டு போதனும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சை ஊன் இயைந்த வேற்படைகள் வந்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
மனதி லுறுதி வேண்டும்
வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
Saturday, February 20, 2010
வேலைக்கும் போகும் பெண் - வைரமுத்து !
~
இந்தியாவிற்கு ஒரு ஆகஸ்ட் 15 வந்து விட்டது
இந்திய பெண்களுக்கு ஆகஸ்ட் 15 எப்போது ?
பொருளாதார விடுதலை கிடைத்துவிட்டால்
பூட்டியிருக்கும் விலங்குகள் நொருங்கிவிடும்
என்று கருதியவள் போன நூற்றாண்டு பெண்
ஆனால் பொருளாதார விடுதலை கூட சில
புதிய விலங்குகளை பூட்டியிருக்கிறது
என இனங்கண்டுகொண்டவள் இந்த நூற்றாண்டு பெண்..
சிறகு இருந்தும் பறக்க முடியவில்லையே என்று விம்மியவள்
வீட்டுக்குள் இருந்த பெண் !
பறப்பதற்கு இரண்டு சிறகுகள் போதவில்லையே என்று
விசும்புகிறவள் வேலைக்கு போகும் பெண்
வேலைக்கு போகும் பெண் தன் வாழ்க்கைக்கு
கொடுக்கும் விலை கொஞ்ச நஞ்சம் அல்ல
போன நூற்றாண்டில் ஒரு காலும் , இந்த
நூற்றாண்டில் ஒரு காலும் பதித்து கொண்டு அடுத்த அடி
எடுத்துவைக்க முடியாமல் திசையிழந்த பெண்மை
திரிசங்கு சொர்க்கத்தில் தவிக்கிறது
அலுவலகம் செல்லும் ஒரு பெண்ணின்
அவரச தாலாட்டுதான் இந்த கவிதை
.இந்த அவரச நூற்றாண்டு மனிதர்களை
இருதயம் துடிக்கும் எந்திரர்களாய் மாற்றிவிட்டது
மனிதன் நெருப்பில் உட்கார்ந்து கொண்டு
வயலின் வாசிக்கிறான்
அடுப்பில் உட்கார்ந்து கொண்டு காதலிக்கிறான்
கணவனும் மனைவியும் இண்டர்காமில்
தாம்பத்தியம் நடத்துகிறார்கள்
குழந்தைக்கு முத்தம் தபாலில் வருகிறது
காதலிக்கு வாங்கிய மல்லிகைப்பூ
டீசல் புகையில் கருப்பாகிவிடுகிறது
இப்படி நிறம் மாறி போன ஒரு வாழ்க்கையில்
தாய்பாடும் ஒரு தாலாட்டு மட்டும்
தடம் மாறி போகாமல் இருக்குமா?
எனவேதான் ஒரு குழந்தைக்கு
முன் இரவில் பாடப்பட வேண்டிய தாலாட்டு
முற்பகலில் பாடும் தாலாட்டாய் முகம் மாறிவிடுகிறது
வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில்
அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது
"சோலைக்கு பிறந்தவளே சுத்தம் உள்ள தாமரையே
வேலைக்கு போகின்றேன் வெண்ணிலவே கண்ணுறங்கு
அலுவலகம் விட்டு அம்மா வரும்வரைக்கும்
கேசட்டில் தாலாட்டு கேட்டபடி கண்ணுறங்கு !
ஒரு மணிக்கு ஒருபாடல் ஒலிபரப்பும் வானொலியில்
விளம்பரங்கள் மத்தியில் விழி சாய்த்து நீ உறங்கு
ஒன்பது மணி ஆனால் உன் அப்பா சொந்தம் இல்லை
ஒன்பது முப்பதுக்கு உன் அம்மா சொந்தம் இல்லை
ஆயாவும் தொலைகாட்சி அசதியிலே தூங்கிவிட்டால்
உனக்கு தூக்கத்தை தவிர துணைக்கு வர ஆளில்லை
இருபதாம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே
இதுதான் கதி என்று இன்னமுதே கண்ணுறங்கு !
தூரத்தில் இருந்தாலும் என் நினைவு
உன் தொட்டில் ஓரத்தில் ஓடிவரும் கண்ணுறங்கு !
பேருந்தில் நசுங்கி பிதுங்குகின்ற வேளையிலும்
எடை கொஞ்சம் குறைந்து இறங்குகின்ற வேளையிலும்
கோப்புக்குள் மூழ்கி குடியிருக்கும் வேளையிலும்
பூபூவாய் உனது முகம் புறப்பட்டுவரும் கண்ணே
தந்தை வந்து கொஞ்சுவதாய்
தாய்மடியில் தூங்குவதாய்
கண்ணான கண்மணியே கனவு கண்டு கண்ணுறங்கு..
புட்டி பால் குறையவில்லை பொம்மைக்கும் பஞ்சமில்லை
தாய்பாலும் தாயுமன்றி தங்கமே உனக்கு என்ன குறை ?
மாலையிலே ஒடிவந்து மல்லிகையே உனை அணைத்தால்
சுரக்காத மார்பும் கூட சுரக்குமடி கண்ணுறங்கு !
தாலாட்டு பாட்டில் தளிரே நீ தூங்கிவிட்டால்
கோலாட்டம் ஆட கொண்டவர்க்கு ஆசை வரும்
உறவுக்கு தடையாக ஓ வென்று அலறாமல்
இரவுக்கு மிச்சம் வைத்து இப்போது நீ உறங்கு
தாய் என்று காட்டுதற்கு தழுவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுகிழமை வரும் நல்லவளே கண்ணுறங்கு !
~
இந்தியாவிற்கு ஒரு ஆகஸ்ட் 15 வந்து விட்டது
இந்திய பெண்களுக்கு ஆகஸ்ட் 15 எப்போது ?
பொருளாதார விடுதலை கிடைத்துவிட்டால்
பூட்டியிருக்கும் விலங்குகள் நொருங்கிவிடும்
என்று கருதியவள் போன நூற்றாண்டு பெண்
ஆனால் பொருளாதார விடுதலை கூட சில
புதிய விலங்குகளை பூட்டியிருக்கிறது
என இனங்கண்டுகொண்டவள் இந்த நூற்றாண்டு பெண்..
சிறகு இருந்தும் பறக்க முடியவில்லையே என்று விம்மியவள்
வீட்டுக்குள் இருந்த பெண் !
பறப்பதற்கு இரண்டு சிறகுகள் போதவில்லையே என்று
விசும்புகிறவள் வேலைக்கு போகும் பெண்
வேலைக்கு போகும் பெண் தன் வாழ்க்கைக்கு
கொடுக்கும் விலை கொஞ்ச நஞ்சம் அல்ல
போன நூற்றாண்டில் ஒரு காலும் , இந்த
நூற்றாண்டில் ஒரு காலும் பதித்து கொண்டு அடுத்த அடி
எடுத்துவைக்க முடியாமல் திசையிழந்த பெண்மை
திரிசங்கு சொர்க்கத்தில் தவிக்கிறது
அலுவலகம் செல்லும் ஒரு பெண்ணின்
அவரச தாலாட்டுதான் இந்த கவிதை
.இந்த அவரச நூற்றாண்டு மனிதர்களை
இருதயம் துடிக்கும் எந்திரர்களாய் மாற்றிவிட்டது
மனிதன் நெருப்பில் உட்கார்ந்து கொண்டு
வயலின் வாசிக்கிறான்
அடுப்பில் உட்கார்ந்து கொண்டு காதலிக்கிறான்
கணவனும் மனைவியும் இண்டர்காமில்
தாம்பத்தியம் நடத்துகிறார்கள்
குழந்தைக்கு முத்தம் தபாலில் வருகிறது
காதலிக்கு வாங்கிய மல்லிகைப்பூ
டீசல் புகையில் கருப்பாகிவிடுகிறது
இப்படி நிறம் மாறி போன ஒரு வாழ்க்கையில்
தாய்பாடும் ஒரு தாலாட்டு மட்டும்
தடம் மாறி போகாமல் இருக்குமா?
எனவேதான் ஒரு குழந்தைக்கு
முன் இரவில் பாடப்பட வேண்டிய தாலாட்டு
முற்பகலில் பாடும் தாலாட்டாய் முகம் மாறிவிடுகிறது
வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில்
அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது
"சோலைக்கு பிறந்தவளே சுத்தம் உள்ள தாமரையே
வேலைக்கு போகின்றேன் வெண்ணிலவே கண்ணுறங்கு
அலுவலகம் விட்டு அம்மா வரும்வரைக்கும்
கேசட்டில் தாலாட்டு கேட்டபடி கண்ணுறங்கு !
ஒரு மணிக்கு ஒருபாடல் ஒலிபரப்பும் வானொலியில்
விளம்பரங்கள் மத்தியில் விழி சாய்த்து நீ உறங்கு
ஒன்பது மணி ஆனால் உன் அப்பா சொந்தம் இல்லை
ஒன்பது முப்பதுக்கு உன் அம்மா சொந்தம் இல்லை
ஆயாவும் தொலைகாட்சி அசதியிலே தூங்கிவிட்டால்
உனக்கு தூக்கத்தை தவிர துணைக்கு வர ஆளில்லை
இருபதாம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே
இதுதான் கதி என்று இன்னமுதே கண்ணுறங்கு !
தூரத்தில் இருந்தாலும் என் நினைவு
உன் தொட்டில் ஓரத்தில் ஓடிவரும் கண்ணுறங்கு !
பேருந்தில் நசுங்கி பிதுங்குகின்ற வேளையிலும்
எடை கொஞ்சம் குறைந்து இறங்குகின்ற வேளையிலும்
கோப்புக்குள் மூழ்கி குடியிருக்கும் வேளையிலும்
பூபூவாய் உனது முகம் புறப்பட்டுவரும் கண்ணே
தந்தை வந்து கொஞ்சுவதாய்
தாய்மடியில் தூங்குவதாய்
கண்ணான கண்மணியே கனவு கண்டு கண்ணுறங்கு..
புட்டி பால் குறையவில்லை பொம்மைக்கும் பஞ்சமில்லை
தாய்பாலும் தாயுமன்றி தங்கமே உனக்கு என்ன குறை ?
மாலையிலே ஒடிவந்து மல்லிகையே உனை அணைத்தால்
சுரக்காத மார்பும் கூட சுரக்குமடி கண்ணுறங்கு !
தாலாட்டு பாட்டில் தளிரே நீ தூங்கிவிட்டால்
கோலாட்டம் ஆட கொண்டவர்க்கு ஆசை வரும்
உறவுக்கு தடையாக ஓ வென்று அலறாமல்
இரவுக்கு மிச்சம் வைத்து இப்போது நீ உறங்கு
தாய் என்று காட்டுதற்கு தழுவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுகிழமை வரும் நல்லவளே கண்ணுறங்கு !
~
Sunday, February 14, 2010
நான் ஜாலியா இருக்கிறேன் -- ஏ.வி .கிரி
~
வருடத்திற்கு ஒரு முறை
ஒரு வாரம் தாய் வீடு போகிறாய் !
பிள்ளைகள் இல்லாமல் களையிழந்து
பொலிவிழந்து பாலைவனமாய் காணப்படுகிறது வீடு
காபி போட அடுப்பில் பால் வைத்தால்
பாதி பொங்கி வழிந்துவிடுகிறது
வீட்டைப் பெருக்கிய இரண்டு நாட்களில்
இடுப்பும் முட்டியும் வலிக்கிறது
செலவுக்குப் பயந்து சமைக்க ஆரம்ப்பித்தால்
உப்பு போட மறந்து விடுகிறது
இரு மடங்கு விலை வைத்தும் சொத்தை காய்கறிகளை பழங்களைத்
தலையில் கட்டி விடுகிறார் வண்டிக்காரர்
முரட்டுதனமாய் அடித்து கசக்கி பிழிந்து துவைத்தால்
கிழிந்தி விடுகிறது துணி
தண்ணீர் மோட்டார், ரேடியோ , டிவி போட்டால்
அணைக்காமல் தூங்கி விடுகிறேன்
கதவைப் பூட்டாமலேயே சமயலறை எரிவாயுவை
அணைக்காமலே அலுவலகம் கிளம்பி விடுகிறேன்
இப்படியாக தனிமையிலே தவித்துப் போனாலும்
நீ வந்தவுடன் கூசாமல் பொய் சொல்கிறேன்
"இன்னும் ஒரு வாரம் இருந்து வரலாமே
நான் ஜாலியா இருக்கிறேன்" என்று
~
வருடத்திற்கு ஒரு முறை
ஒரு வாரம் தாய் வீடு போகிறாய் !
பிள்ளைகள் இல்லாமல் களையிழந்து
பொலிவிழந்து பாலைவனமாய் காணப்படுகிறது வீடு
காபி போட அடுப்பில் பால் வைத்தால்
பாதி பொங்கி வழிந்துவிடுகிறது
வீட்டைப் பெருக்கிய இரண்டு நாட்களில்
இடுப்பும் முட்டியும் வலிக்கிறது
செலவுக்குப் பயந்து சமைக்க ஆரம்ப்பித்தால்
உப்பு போட மறந்து விடுகிறது
இரு மடங்கு விலை வைத்தும் சொத்தை காய்கறிகளை பழங்களைத்
தலையில் கட்டி விடுகிறார் வண்டிக்காரர்
முரட்டுதனமாய் அடித்து கசக்கி பிழிந்து துவைத்தால்
கிழிந்தி விடுகிறது துணி
தண்ணீர் மோட்டார், ரேடியோ , டிவி போட்டால்
அணைக்காமல் தூங்கி விடுகிறேன்
கதவைப் பூட்டாமலேயே சமயலறை எரிவாயுவை
அணைக்காமலே அலுவலகம் கிளம்பி விடுகிறேன்
இப்படியாக தனிமையிலே தவித்துப் போனாலும்
நீ வந்தவுடன் கூசாமல் பொய் சொல்கிறேன்
"இன்னும் ஒரு வாரம் இருந்து வரலாமே
நான் ஜாலியா இருக்கிறேன்" என்று
~
Friday, January 1, 2010
Saturday, November 7, 2009
சிநேகிதிகளின் கணவர்கள் ! - மனுஷ்யபுத்திரன்
~
சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
எப்போதும் உருவாகிவிடுகிறது ஒரு சதுரங்க கட்டம் !
ஒரு கலைக்க முடியாத பாவனையின் மர்ம நிழல் !
ஒரு சர்க்கஸ் கோமாளியின் அபாயகாரமான சாகசங்கள் !
ஒரு அபத்த வெளியில் விரிக்கப்பட்ட வலை !
சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
என் சிநேகிதிகளின் கண்களை முற்றாக தவிர்த்துவிடுகிறேன் !
அவளது ஆடையின் வண்ணங்களை
அவளது தேனீரின் ரகசிய பிரியங்களை மறுதளித்துவிடுகிறேன் !
அவளை பற்றிய ஒரு நினைவை வேறோரு சம்பவத்தோடு இணைத்துவிடுகிறேன் !
அவளது கணவனை போலவே அவளது இருப்பை ஒரு விளையாட்டு பொருளாக்குகிறேன் !
சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
நாம் அனுமதிக்கப்படுவது ஒரு கருணை !
அது நம்மிடம் காட்டப்படும் ஒரு பெருந்தன்மை !
சில சமயம் நம் சிநேகிதிகளுக்கு காட்டப்படும் பெருந்தன்மை !
நாம் சந்தேகிக்கப்படவில்லை என்று நம்மை நம்பவைக்கும் ஒரு தந்திரமானா விளையாட்டு !
சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
என் சிநேகிதி எப்போதும் பிசாசுகளின் புதிர்மொழி ஒன்றை பேசுகிறாள் !
உரையாடல்களின் அபாயாகரமான திருப்பங்களை பதற்றத்துடன் லாபகமாக கடந்து செல்கிறாள் !
எதைப் பற்றிய பேச்சிலும் கணவரைப் பற்றிய ஒரு பின்குறிப்பை இணைத்துவிடுகிறாள் !
ஒவ்வொரு சந்திப்பின் முடிவில் மிகவும் ஆயாசம் அடைந்து
கணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது நல்லது என்று யோசிக்க தொடங்குகிறாள் !
சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில் இடையே இருப்பது ஒரு உறவல்ல !
இலக்குகள் ஏதுமற்ற ஒரு பந்தயம் ! ஒரு அன்னியனுக்கு காட்டும் வன்மம் மிகுந்த மரியாதை !
ஒரு சட்டப்பூர்வ உரிமையாளனக்கு எதிராக ஒரு பொறுக்கியின் ரகசிய கலகம் !
தொண்டையில் நிரந்தரமாக தங்கிவிட்ட ஒரு மீன் முள் !
சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
நான் எனது பழக்கவழக்கங்களை மாற்றிகொள்கிறேன் !
அவர்களது எல்லா அக்கறைகளையும் எனது அக்கறைகளாக்கிகொள்கிறேன் !
சிநேகிதிகளுடன் பேச ஒரே ஒரு விசயம் போதுமானதாக இருந்தது !
அவர்களது கணவர்களுடன் பேச ஏராளமான கச்சா பொருள்கள் தேவைப்படுகின்றன !
சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
சிநேகிதிக்கு பதில் சிநேகிதியின் குழந்தைகளை நேசிக்க கற்று கொண்டேன் !
எவ்வளவு குடிக்க வேண்டும் ! ஜோக்குகளை எங்கே நிறுத்த வேண்டும் !
நாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும் !
எந்த கணத்தில் வெளியேற வேண்டும் என எல்லாவற்றையும் பழிகிக்கொண்டேன் !
நான் குழப்பம் அடைவதெல்லாம் சிநேகிதியை பெயர் சொல்லாமால் எப்படி அழைப்பது என்று
அல்லது பெயர்களை எப்படி வெறும் பெயர்களாக மட்டும் எப்படி உச்சரிப்பது என்று
ஒரு சிநேகிதியை சிஸ்டர் என்று அழைக்கும் ஒரு ஆபாச கலாச்சாரத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்று !
~
சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
எப்போதும் உருவாகிவிடுகிறது ஒரு சதுரங்க கட்டம் !
ஒரு கலைக்க முடியாத பாவனையின் மர்ம நிழல் !
ஒரு சர்க்கஸ் கோமாளியின் அபாயகாரமான சாகசங்கள் !
ஒரு அபத்த வெளியில் விரிக்கப்பட்ட வலை !
சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
என் சிநேகிதிகளின் கண்களை முற்றாக தவிர்த்துவிடுகிறேன் !
அவளது ஆடையின் வண்ணங்களை
அவளது தேனீரின் ரகசிய பிரியங்களை மறுதளித்துவிடுகிறேன் !
அவளை பற்றிய ஒரு நினைவை வேறோரு சம்பவத்தோடு இணைத்துவிடுகிறேன் !
அவளது கணவனை போலவே அவளது இருப்பை ஒரு விளையாட்டு பொருளாக்குகிறேன் !
சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
நாம் அனுமதிக்கப்படுவது ஒரு கருணை !
அது நம்மிடம் காட்டப்படும் ஒரு பெருந்தன்மை !
சில சமயம் நம் சிநேகிதிகளுக்கு காட்டப்படும் பெருந்தன்மை !
நாம் சந்தேகிக்கப்படவில்லை என்று நம்மை நம்பவைக்கும் ஒரு தந்திரமானா விளையாட்டு !
சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
என் சிநேகிதி எப்போதும் பிசாசுகளின் புதிர்மொழி ஒன்றை பேசுகிறாள் !
உரையாடல்களின் அபாயாகரமான திருப்பங்களை பதற்றத்துடன் லாபகமாக கடந்து செல்கிறாள் !
எதைப் பற்றிய பேச்சிலும் கணவரைப் பற்றிய ஒரு பின்குறிப்பை இணைத்துவிடுகிறாள் !
ஒவ்வொரு சந்திப்பின் முடிவில் மிகவும் ஆயாசம் அடைந்து
கணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது நல்லது என்று யோசிக்க தொடங்குகிறாள் !
சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில் இடையே இருப்பது ஒரு உறவல்ல !
இலக்குகள் ஏதுமற்ற ஒரு பந்தயம் ! ஒரு அன்னியனுக்கு காட்டும் வன்மம் மிகுந்த மரியாதை !
ஒரு சட்டப்பூர்வ உரிமையாளனக்கு எதிராக ஒரு பொறுக்கியின் ரகசிய கலகம் !
தொண்டையில் நிரந்தரமாக தங்கிவிட்ட ஒரு மீன் முள் !
சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
நான் எனது பழக்கவழக்கங்களை மாற்றிகொள்கிறேன் !
அவர்களது எல்லா அக்கறைகளையும் எனது அக்கறைகளாக்கிகொள்கிறேன் !
சிநேகிதிகளுடன் பேச ஒரே ஒரு விசயம் போதுமானதாக இருந்தது !
அவர்களது கணவர்களுடன் பேச ஏராளமான கச்சா பொருள்கள் தேவைப்படுகின்றன !
சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
சிநேகிதிக்கு பதில் சிநேகிதியின் குழந்தைகளை நேசிக்க கற்று கொண்டேன் !
எவ்வளவு குடிக்க வேண்டும் ! ஜோக்குகளை எங்கே நிறுத்த வேண்டும் !
நாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும் !
எந்த கணத்தில் வெளியேற வேண்டும் என எல்லாவற்றையும் பழிகிக்கொண்டேன் !
நான் குழப்பம் அடைவதெல்லாம் சிநேகிதியை பெயர் சொல்லாமால் எப்படி அழைப்பது என்று
அல்லது பெயர்களை எப்படி வெறும் பெயர்களாக மட்டும் எப்படி உச்சரிப்பது என்று
ஒரு சிநேகிதியை சிஸ்டர் என்று அழைக்கும் ஒரு ஆபாச கலாச்சாரத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்று !
~
Friday, June 26, 2009
பேசாம பேசாமாதான் இருந்து - சீமான் !
~
பேசாம பேசாமா இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !
பேசாம பேசாமாதான் இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !
அட தோழா ரொம்ப நாளா
கேட்காம கேட்காமா இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து !
இப்ப போகுதடா கோவணமும் பறந்து !
விதைச்ச பயிரு அறுவடைக்கு விளைஞ்சு கிடக்குது
உணவில்லாமல் உழைத்த வயிறு காய்ஞ்சு கிடக்குது !
அடிக்கும் போது புழுவும் கூட எழுந்து துடிக்குது
அறிவிருந்தும் அடிமைத்தனம் போக மறுக்குது !
அட தோழா ரொம்ப நாளா
பேசாமா பேசாமா இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !
வருசம் நாலு தேர்தலு நாட்டில் நடக்குது அதனால்
நமக்கு இங்கே என்ன கிடைக்குது !
எரிக்கும் போது பிணமும் கூட எழுந்து நிக்குது !
உசிரு இருந்தும் உன் முதுகேன் குனிந்து நிக்குது!
அட தோழா ரொம்ப நாளா
பேசாம பேசாமா இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !
கேட்காம கேட்காமா இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து !
இப்ப போகுதடா கோவணமும் பறந்து !
~
பேசாம பேசாமா இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !
பேசாம பேசாமாதான் இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !
அட தோழா ரொம்ப நாளா
கேட்காம கேட்காமா இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து !
இப்ப போகுதடா கோவணமும் பறந்து !
விதைச்ச பயிரு அறுவடைக்கு விளைஞ்சு கிடக்குது
உணவில்லாமல் உழைத்த வயிறு காய்ஞ்சு கிடக்குது !
அடிக்கும் போது புழுவும் கூட எழுந்து துடிக்குது
அறிவிருந்தும் அடிமைத்தனம் போக மறுக்குது !
அட தோழா ரொம்ப நாளா
பேசாமா பேசாமா இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !
வருசம் நாலு தேர்தலு நாட்டில் நடக்குது அதனால்
நமக்கு இங்கே என்ன கிடைக்குது !
எரிக்கும் போது பிணமும் கூட எழுந்து நிக்குது !
உசிரு இருந்தும் உன் முதுகேன் குனிந்து நிக்குது!
அட தோழா ரொம்ப நாளா
பேசாம பேசாமா இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !
கேட்காம கேட்காமா இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து !
இப்ப போகுதடா கோவணமும் பறந்து !
~
Monday, June 22, 2009
Wednesday, April 29, 2009
உன்னோடு நான் இருந்த - வைரமுத்து
~
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே !
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம்தான்
எண்ணூறு ஆண்டுகளா இதயத்தில் கலக்குதடி !
பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்!
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்!
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும்
முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம் !
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே !
எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை !
அது இரவா அது பகலா அது பற்றி அறியவில்லை!
யார் தொடங்க யார் முடிக்க ஒரு வழியும் தோன்றவில்லை !
இருவருமே தொடங்கிவிட்டோம் இதுவரைக்கும் கேள்வியில்லை !
அச்சம் களைந்தேன் ஆசையை நீ அணிந்தாய் !
ஆடை களைந்தேன் வெட்கைத்தை நீ அணிந்தாய் !
கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர் கண்ணில் இன்னும் கொட்டுதடி !
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே !
----------------
வைரமுத்துவின் வைரவரிகள் மரணப்படுக்கையிலும் மறக்காது !
~~~
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே !
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம்தான்
எண்ணூறு ஆண்டுகளா இதயத்தில் கலக்குதடி !
பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்!
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்!
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும்
முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம் !
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே !
எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை !
அது இரவா அது பகலா அது பற்றி அறியவில்லை!
யார் தொடங்க யார் முடிக்க ஒரு வழியும் தோன்றவில்லை !
இருவருமே தொடங்கிவிட்டோம் இதுவரைக்கும் கேள்வியில்லை !
அச்சம் களைந்தேன் ஆசையை நீ அணிந்தாய் !
ஆடை களைந்தேன் வெட்கைத்தை நீ அணிந்தாய் !
கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர் கண்ணில் இன்னும் கொட்டுதடி !
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே !
----------------
வைரமுத்துவின் வைரவரிகள் மரணப்படுக்கையிலும் மறக்காது !
~~~
Saturday, April 18, 2009
இது நம்ம தேசம்! - கவிஞர் ராசை. கண்மணி ராசா
~
இது நம்ம தேசம்!
=================
எலிகூட கிடைக்காமல்
இறந்துகொண்டிருக்கும் தேசம் - மறுபுறம்
மொழியின் சிறப்புகளை
முழக்கமிட்டுப் பேசும்!
பாலின்றி சேயும் கூழின்றி தாயும்
பரிதவித்துச் சாகும் தேசம் - மறுபுறம்
பாதாம் பருப்பில் பாயசம் என
சமையல் குறிப்புகள் பேசும்!
வேலையின்றி இளைஞர் கூட்டம்
வெந்து சாகும் தேசம் - மறுபுறம்
பெப்சி உமாவுடன் பேசுங்கள்
பிறகென்ன? என சேனல்கள் பேசும்!
குடிக்க நீரின்றி
குடங்களுடன் அலையும் தேசம் - மறுபுறம்
கோகோ கோலா ஐந்து ரூபாய்தானென
விளம்பரங்கள் வக்கணையாய்ப் பேசும்!
படுக்க இடமின்றி மக்கள்
பாதையோரம் கிடக்கும் தேசம் - மறுபுறம்
"அகண்ட பாரதத்தில் உகாண்டா" என
அடாவடியாய்ப் பேசும்!
மனுக்களை அனுப்பி
மன்றாடிக் கொண்டிருக்கும் தேசம் - மறுபுறம்
மாண்புமிகுகளோ மப்புடன்
மனுதர்மம் பற்றிப் பேசும்!
ஏர்தொட்ட கரங்களை
தேர்தொட விடாத தேசம் - மறுபுறம்
எல்லோரும் இந்நாட்டு மன்னரென
இலக்கியம் பேசும்!
எல்லாவற்றையும் சகிக்கும் தேசம்
என்றாவது எதிர்த்துப் பேசும்
அன்று அதன் பேச்சு உங்கள்
செவியில் மட்டுமல்ல
செவிட்டிலும் விழும்!
- கவிஞர் ராசை. கண்மணி ராசா
இராசபாளையம், தமிழ்நாடு.
(அவரது "கவிதையாவது....கழுதையாவது!" -கவிதைநூலில் )
சிறப்பான கவிதை ..செவிட்டில் விழப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை..
~
இது நம்ம தேசம்!
=================
எலிகூட கிடைக்காமல்
இறந்துகொண்டிருக்கும் தேசம் - மறுபுறம்
மொழியின் சிறப்புகளை
முழக்கமிட்டுப் பேசும்!
பாலின்றி சேயும் கூழின்றி தாயும்
பரிதவித்துச் சாகும் தேசம் - மறுபுறம்
பாதாம் பருப்பில் பாயசம் என
சமையல் குறிப்புகள் பேசும்!
வேலையின்றி இளைஞர் கூட்டம்
வெந்து சாகும் தேசம் - மறுபுறம்
பெப்சி உமாவுடன் பேசுங்கள்
பிறகென்ன? என சேனல்கள் பேசும்!
குடிக்க நீரின்றி
குடங்களுடன் அலையும் தேசம் - மறுபுறம்
கோகோ கோலா ஐந்து ரூபாய்தானென
விளம்பரங்கள் வக்கணையாய்ப் பேசும்!
படுக்க இடமின்றி மக்கள்
பாதையோரம் கிடக்கும் தேசம் - மறுபுறம்
"அகண்ட பாரதத்தில் உகாண்டா" என
அடாவடியாய்ப் பேசும்!
மனுக்களை அனுப்பி
மன்றாடிக் கொண்டிருக்கும் தேசம் - மறுபுறம்
மாண்புமிகுகளோ மப்புடன்
மனுதர்மம் பற்றிப் பேசும்!
ஏர்தொட்ட கரங்களை
தேர்தொட விடாத தேசம் - மறுபுறம்
எல்லோரும் இந்நாட்டு மன்னரென
இலக்கியம் பேசும்!
எல்லாவற்றையும் சகிக்கும் தேசம்
என்றாவது எதிர்த்துப் பேசும்
அன்று அதன் பேச்சு உங்கள்
செவியில் மட்டுமல்ல
செவிட்டிலும் விழும்!
- கவிஞர் ராசை. கண்மணி ராசா
இராசபாளையம், தமிழ்நாடு.
(அவரது "கவிதையாவது....கழுதையாவது!" -கவிதைநூலில் )
சிறப்பான கவிதை ..செவிட்டில் விழப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை..
~
Monday, April 6, 2009
அரசியல்
Subscribe to:
Posts (Atom)





