Saturday, June 12, 2010

நல்லதோர் வீணை செய்து -பாரதியார்

நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ !
சொல்லடி சிவசக்தி என்னை சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமைதாராயோ இந்த மா நிலம் பயனுற வாழ்வதற்கு
சொல்லடி சிவசக்தி நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்
நசையறு மணம் கேட்டேன் -நித்தம்
நவமெனஸ் சுடர் தரும் உயிர் கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் -சிவ சக்தியை பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவுறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ ?

3 comments:

Vasistan Shakkaravarthi said...

அனைவரும் படித்து புரிந்துகொள்ள வேண்டிய வாசகங்கள். .. .

Unknown said...

என்னை சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமைதாராயோ இந்த மா நிலம் பயனுற வாழ்வதற்கு
சொல்லடி சிவசக்தி நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ.. சொல்லடி சிவசக்தி

sambathkumar said...

வாழ்க்கை பயணங்கள் அர்த்தமில்லாதது....வீண்..!

Post a Comment